🙏பக்தி போதனைகள்
19K Posts • 118M views
நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும்: . "ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே அடைவதற்காகவே விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை. வேகமோ குறையவில்லை. ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது துன்புறுகிறது. ஆனால் தன் லட்சியத்தை அடையும் வரை மனதின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மெய்ப்பொருளை உணர்ந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிட்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை. தன் மூலத்தை (ஆதி நிலை) அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும் துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (Expiation, Superimposition and Dissolution) என்று கருமப் பதிவுகளைப் (Sins and Imprints) போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன். அவற்றில் கடைசியான தேய்த்தழித்தல் ( Dissolution ) என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும். துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் ( Mind frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை (ஆதி நிலை). துரியாதீத தவத்தால் இந்நிலையில் நிலைத்து பழக்க அறிவு அமைதியைப் பெறுகிறது. . துரியாதீதம்: "தூயப் பெருநிலை துரியாதீதமோ துயர், மகிழ் விரண்டையே துய்த்த என் அறிவை காலம், பருமன், தூரம் விரைவெனும் கணக்கினைக் கடந்து மெய்ப்பொருளோடு இணைத்தது; இனிப் பழிபுரியேன் புரிந்தவை களைந்தேன் இறைநிலை உணர்ந்தேன் இணைந்தேன் நிறைந்தேன் இனி என் உடல் உயிர் ஆற்றலை முறைப்படி இயக்கிக் கடமையை புரிவேன்." . சமாதி நிலை: "உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில் உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து உடலியக்கம்பெற்ற பல பொருள் அழித்து உள அமைதியை இழந்து சோர்ந்தோரேனும் உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு உண்மைகளையறிந்து பயன் அடைய வென்றால் உடலியக்கம் நிற்கும் முன்னே கருதவத்தால் உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் !" . வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ,*-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.* 🚩🕉🪷🙏🏻 #வேதாத்திரி மகரிஷி யோகா #வேதாத்திரி வாஸ்து எனர்ஜி சிஸ்டம்ஸ். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பக்தி போதனைகள் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
21 likes
22 shares
பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் எம்பெருமானுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்...... இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று எம்பெருமானிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்.... அதற்கு எம்பெருமான் ஆத்மாவிடம் சொல்வாராம்..... ஒரு ஜீவனுக்குரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்!.. இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் எம்பெருமான்!.. ஒன்று *ஆத்மா* மற்றொன்று *மனது!* ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், இறைவனை‌ சென்றடையலாம்! மனதை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்! ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ஏழாவது மாதம் வரை‌ ஞாபகத்தில் இருக்குமாம்.. ஏழாவது மாதத்தில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு எல்லாம் ஞாபகம் வந்து அது எம்பெருமானை அழைக்குமாம்... என்னை இனிமேல் பிறக்க வைக்காதே. எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம். அப்பொழுது ஷடம் என்னும் வாயு எம்பெருமானை அழைக்கும். அது ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்! அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம், ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது! சிசு குழந்தையாக பிறந்து, இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும், விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் வந்து பிறந்து விடுகிறோம். வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட சடாரி என்னும் பாதத்தை நம் தலையில் சாற்றுவார்கள்! அது ஏதற்கு என்றால், "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்". "மறதியை கொடுக்காமல் 'ஷடம்' என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும்படி‌ எனக்கு அருள்வாயாக" என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் சாற்றும் தாத்பர்யம்! மேலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாய் இருந்து கொண்டிருக்கிறான். நாம் சிலசமயம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும்பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும், அதுவே அந்தர்யாமியாய் நமக்குள் இருக்கும் எம்பெருமான்! ஏதாவது ஒரு பிறவியில் நாம் திருந்தி, ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து நம்மிடத்தில் வருவான் என்று இறைவன் பல சந்தர்ப்பங்கள் அளிக்கிறானாம்! ஏனெனில் நாம் அவனது சொத்து! 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ மகா விஷ்ணு நமோ நாராயண# #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
10 likes
13 shares
ப்ரஹ்ம வித்யா ரஹசியம்-04. பரமாத்மாவின் ப்ரதி பிம்பம் ஜீவாத்மா… ஜீவாத்மா என்பது பிரம்மத்தின் மாயையினால் கட்டுப்பட்டு, சத்துவ குணம் குறைந்த ஞானத்தையும் சக்தியையும் கொண்ட ஒரு தனிப்பட்ட ஆத்மாவைக் குறிக்கிறது. கட்டுப்படாத பரம்பொருளான பிரம்மத்தின் பிரதிபலிப்பே ஜீவாத்மா, அவித்தையினால் கட்டுப்பட்ட நிலையில் இருப்பது ஜீவனுடைய இயல்பு. -மேலும் விளக்கம்: பிரம்மத்தின் பிரதிபலிப்பு: ஜீவாத்மா என்பது கட்டுப்படாத பிரம்மத்தின் ஒரு கூறு. மாயையின் தாக்கம்: பிரம்மம் மாயையில் படும்போது அல்லது சத்துவ குணம் குறையும்போது ஜீவாத்மா தோன்றுகிறான். -குறைந்த ஞானம் மற்றும் சக்தி: அந்தக்கரணம் அல்லது அவித்தையின் காரணமாக ஜீவாத்மாவுக்கு ஞானமும் சக்தியும் குறைவாகவே இருக்கும். -கட்டுப்பட்ட நிலை: பரம்பொருளான பிரம்மம் கட்டுப்படாத நிலையில் இருக்க, அதற்கு மாறாக ஜீவாத்மா (இந்திரீயங்களுக்கு) கட்டுப்பட்ட நிலையில் இருக்கிறான். எனவே ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் அம்சம். அதற்கான ப்ரமாணம்…(ஆதாரம்) சிவபெருமானால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்ட கீதை. சிவ கீதை - 55. 🌺{அத்தியாயம்-{06 } சிவபெருமானால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்ட கீதை. 🌺 வீபூதி யோகம்.🌺 சிவபெருமானின் வல்லமைகளை ராம்பிரான் கேட்டு அறிந்து கொள்கிறார். ராம உவாச… ஸ்லோகம்-01. பவந்த்ரமேசித்ரம் மஹதேதத்ப்ரஜாயதே / ஸுத்தஸ்படிகஸம்காஶஸ்திணேத்த்ஶ் - -சந்த்ரஶேகர: // ஸ்லோகம்-02. மூர்தஸ்த்வம்பரிச்சிந்நாக்ருதி: புருஷரூபத்ருக் / அம்பயாஸஹிதோத்ரைவரமஸேப்ரமதைஸஸஹ// ஶ்ரீ ராமன் கேட்கிறான்.. கருத்து- ஹே,பகவானே, எனக்கு வியப்பாக இருக்கின்றது, ‘சுத்த ஸ்படிக’நிறத்துடன், மூன்று கண்களுடன், *சந்த்ர சேகரன்* என்ற் பெயருடன்,- -“ஏகதேச மூர்த்தியாக”{ பிண்டப் போருளாக} இருக்கின்றீர்கள்.மேலும்’புருஷ’ உருவங்கொண்டு உமா தேவியுடன்,பிரதம கணங்கள் சூழ இங்கு கணெதிரே நிற்கின்றீர்கள் ஸ்லோகம்-03. த்வம்கதம்பஞ்சபூதாதி ஜகதேதச்சராசரம் / தத்ப்ரூஹிகிரிஜாகாந்த மயிதேநுக்ரஹோயதி // கருத்து- ஹே, பார்வதீநாதா, நீங்களே, பஞ்சபூதங்களாகவும், சராசரமாகிய இந்த ப்ரபஞ்சமாகும் இருக்கின்றீர்கள். அருள் கூர்ந்து எனக்கு கூறுங்கள். ஸ்லோகம்-04. ஶ்ரீஶிவ உவாச… ஶ்ருணுராமமஹாபாக துர்ஜ்ஞெயமரைரபி / தத்ப்ரவக்ஷ்யாமியத்நேந ப்ரஹ்மசர்யேணஸுவ்ரத / பாரம்யாஸ்யஸ்யநாயா- -ஸாத்யேநஸ்ம்ஸாரவாரிதே: // கருத்து- மஹாதேவர் பதில் கூறுகிறார்… தசரத மஹாராஜனின் தவத்தினாலும், புண்ணியங்களின் பலனாகவும், அவதரித்தவனே; தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாததும், அத்தகைய’அத்துவத்’ தன்மையைக் கூறுகிறேன். தர்மங்களையும், நியாங்களையும் அறிந்தவனே, “பிரம்ஹசர்யோத்தோடும்”, ஏகாக்கிரத்த த்தோடும்’ இந்த, இல்லறமென்னும், கடலை எளிதாக கடக்கக் கூடியதைக் கேட்பாயாக. தொகுப்பாசிரியர்-ஆன்மீகம் சந்தானம் மாம்பலம். கச சிவ கீதை - 56 🌺{அத்தியாயம்-{06 } ஸ்லோகம்-05. த்ருஸ்யந்தேபஞ்நபூதாநி யேசலோகாஶ்சதுர்தஶ/ ஸ்லோகம்-06. ஸமுத்ரா: பர்வதாதேவா ராக்ஷஸாருஷயஸ்ததா/ தருஶ்யந்தேயாநிசாந்யாநி ஸ்தாவராணிசராணிச// ஸ்லோகம்-07. கந்தர்வா: ப்ரமதாநாகாஸ்ஸர்வே- -தேமத்விபூயதய: // கருத்து- ஹே, தசரதபுத்ரனே, அறிந்துகொள், பஞ்சபூதங்களும், பதினான்கு உலகங்களும்,கடல்களும்,மலைகளும்,தேவர்களுமுனிவர்களும்,அரக்கர்களும், மற்றுமுள்ள- - ஸ்தாவர ஜங்கங்களும்( அசையும்,அசையாப் பொருட்களும்)கந்தர்வர்களும்,நாகர்களும் என அனைவரும் என் அம்சங்களே ஆகின்றனர். ஸ்லோகம்-07. புராப்ரஹ்மாதயோதேவா: - -த்ரஷ்ட்டுகாமாமமாக்ருதிம்// ஸ்லோகம்-08. மந்த்ரம்ப்ரயயுஸ்ஸர்வே மமப்ரியதர்ங்கரிம்/ ஸ்துத்வாப்ராஞ்ஜலயோதேவா- -மாந்ததாபுரஸ்திதா// கருத்து- பூர்வகாலத்தில் என்னால படைக்கப்பட்ட அனைத்து தேவர்களும் என்னை காண விரும்பி, என்னைத் தேடி,மந்த்ர பர்வதத்தை(மலையை ) அடைந்தனர். மேலும் என்னை துதி செய்து, இரு கைகளையும் கூப்பி, என் முன் நின்றனர். 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள்
12 likes
15 shares