🙏பக்தி போதனைகள்
19K Posts • 118M views
பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் எம்பெருமானுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்...... இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று எம்பெருமானிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்.... அதற்கு எம்பெருமான் ஆத்மாவிடம் சொல்வாராம்..... ஒரு ஜீவனுக்குரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்!.. இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் எம்பெருமான்!.. ஒன்று *ஆத்மா* மற்றொன்று *மனது!* ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், இறைவனை‌ சென்றடையலாம்! மனதை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்! ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ஏழாவது மாதம் வரை‌ ஞாபகத்தில் இருக்குமாம்.. ஏழாவது மாதத்தில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு எல்லாம் ஞாபகம் வந்து அது எம்பெருமானை அழைக்குமாம்... என்னை இனிமேல் பிறக்க வைக்காதே. எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம். அப்பொழுது ஷடம் என்னும் வாயு எம்பெருமானை அழைக்கும். அது ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்! அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம், ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது! சிசு குழந்தையாக பிறந்து, இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும், விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் வந்து பிறந்து விடுகிறோம். வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட சடாரி என்னும் பாதத்தை நம் தலையில் சாற்றுவார்கள்! அது ஏதற்கு என்றால், "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்". "மறதியை கொடுக்காமல் 'ஷடம்' என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும்படி‌ எனக்கு அருள்வாயாக" என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் சாற்றும் தாத்பர்யம்! மேலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாய் இருந்து கொண்டிருக்கிறான். நாம் சிலசமயம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும்பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும், அதுவே அந்தர்யாமியாய் நமக்குள் இருக்கும் எம்பெருமான்! ஏதாவது ஒரு பிறவியில் நாம் திருந்தி, ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து நம்மிடத்தில் வருவான் என்று இறைவன் பல சந்தர்ப்பங்கள் அளிக்கிறானாம்! ஏனெனில் நாம் அவனது சொத்து! 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ மகா விஷ்ணு நமோ நாராயண# #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
10 likes
13 shares
ப்ரஹ்ம வித்யா ரஹசியம்-05. பரமாத்மாவின் ப்ரதி பிம்பம் ஜீவாத்மா… சிவ கீதை - 57. 🌺{அத்தியாயம்-{06 } மேலும் கூறுகிறது…. ஸ்லோகம்-09. தாந்த்ருஷ்டா தமயாதூவாந் லீலாகுலிதசேதஸ: - -தேஷாம் / அபஹ்ருதம்ஜ்ஞாநம்- ப்ரஹ்மாதீநாம்திவௌகஸாம்// கருத்து- எனக்கு வணக்கம் செய்த பாயிறகு அவர்களுக்கே உரிய கேளிக்கை,மற்றும், விளையாட்டுத்தனத்தில் ஈடுபட்டு தேவர்கள்,மதியிழந்து நின்றார்கள். எனவே அவர்களது’ஞானம் என்னால் அபகரிக்கப்பட்டது. ஸ்லோகம்-10. அஸ்தம்ஸ்த்தேஸக்ருதஜ்ஞாநாந் மாமாஹு: - -கோபவாநிதி / அதாப்ரைவஹம்தேவா நஹமேவபுராதந: // ஸ்லோகம்-11. ஆஸம்ப்ரதம்மேவாஹம் வர்தாமிசஸுரேஶ்வரா: / பவிஷ்யாமிசலோகேஸ்மிந்- -மத்தோதாந்யோஸ்திகஶ்சந // கருத்து- ஞானமிழந்த தேவர்கள் சோர்வுடன் அடிக்கடி உட்கார்ந்தார்கள், என்ப் பார்த்து’நீ’ யார் ? என அடிக்கடி கேட்டார்கள். நான் அவர்களைப் பார்த்து கூறினேன், ஹே தேவர்களே, நான் புராதனமானவன், பூர்வகாலத்தில் இருந்தேன்,ஸ்ருஷ்டி {படைக்கத் } தொடங்கும் முன்னும் இருந்தேன்,அதாவது’ப்ரளய காலத்திலும் இருந்தேன், இப்பொழுதும் இருக்கின்றேன், இனியும் இருப்பேன், இந்த ப்ரபஞ்சத்தில் என்னைத் தவர் வேறு எவரும் ப்ரளய கால்த்திற்கு முன்னும் பின்னும் நிகழ்காலத்திலும் யாருமில்ல. குறிப்பு- ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தேன், எனக் கூறியதால், நானே,ப்ரம்மனை தோற்றுவித்து, அவரால் ப்ரபஞ்சங்களை படைக்கவைத்தேன், என மகாதேவன் கூறுகிறார். இருப்பேன் என்பதால், எக்காலத்திலும் அழிவில்லாதவர், காலவரைக்கு உட்படாதவர் என்றும், ஏகாரத் தோற்றத்தால், அவ்வாறு வேறுயாருமில்லை எனவும் என்றார். மேலும்-ஶ்ரீ ருத்ரம்-அநுவாகம் 05- கூறுகிறது.. முதல் இரு மந்திரங்களில், இறைவன் புரியும் ஐந்து தொழில்களும் சொல்லப்படுகிறது. *நமோ பவாய ச ருத்ராய ச நமஸ சர்வாய ச…* 01-நமோ பவாய ச ருத்ராய ச. உலகின் படைப்பிற்கு காரணமான ஈசனை வணங்குகிறேன். 02-நமோ பவாய ச - இவ்வுலகின் காரணமாக, உலகின் முதல்வராக விளங்குகிறார். அவரிடமிருந்தே உலகம் தோன்றியது.அவரே மும் மூர்திகளாகவும் விளங்குகிறார். அவரிடமிருந்தே, இந்திரன் வருணன், போன்ற தேவர்கள் தோன்றினர். 03-ருத்ராய ச - ஈசன் தானும், உயிர்களும் ஒன்று என்பதை, உணர்த்தி, உயிர்களை பிறவித்தளைகளிலிருந்து விடுவிக்கிறார். அவரே மெய்பொருளாக இருக்கிறார் என அறிந்து கொள்வதன் மூலம் மனிதர்களின் துயரங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் “சூர்ய நமஸ்காரம்( அருணம்) இதிலும் அநுவாகம்-23 ம் விரிவாக ஸ்ருஷ்டியை கூறுகின்றது. . சிவ கீதை - 58. 🌺{அத்தியாயம்-{06 } ஸ்லோகம்-12. வ்யதிரிக்தம்சமத்தோஸ்தி- -நாந்யத்கிஞ்சித்ஸுரேஶ்வரா: / நித்யோநித்யோஹமநகோ- -ப்ரஹ்மணீம்ப்ரஹ்மணஸ்பதி // கருத்து- ஹே,மரணமில்லாத வாழ்கையைப் பெற்ற, தேவர்களே,நான் எங்கும் நிறைந்திருப்பவன், நானில்லாமல், மற்ற வேறொன்றும் இல்லை; நித்யனும், அநித்யனும் நான், சுத்தனும், ஸத்யோஜாதம் முதலிய பஞ்சபிரும்ஹங்களுக்கும், பிரும்ஹம் என்ற பெயருக்கு உரியவனும் நானே, இதைப் புரிந்து கொள்ளுங்கள். குறிப்பு-“நித்யனும், அநித்யனும் நான்” எனக் கூறப்படுவது, அவரவர் வினைப் பயன்களுக்கு ஏற்ப, மாயை உண்மை என அதன்பின் ஓடும், ஜீவன்(உயிரினங்கள்),அந்த மாயை கைபற்ற செய்யப்படும் சடங்குகளும் நானே, என ஈசன் கூறுகிறார். ஸ்லோகம்-13. தக்ஷிணாம்சதம்சோஹம் ப்ராஞ்ச: ப்ரத்யஞ்சேவச அதஶ்சோர்த்வஞ்சவிதிஶ: - -திஶ்ஶ்சாஹம்ஸுரேஶ்வர: // கருத்து- சிறப்புகள் மிக்க தேவர்களே,நான்கு திசைகளும், கீழே உள்ள பாதாள உலகமும்,மேலே உள்ள ஆகாயமும் நானே; மேலும் அறிந்து கொள்ளுங்கள்,தென்திசையில் உள்ளவைகளும், வடகிழக்குப் பக்கத்தில் உள்ளவைகளும்,கிழக்கே அமைந்திருப்பவைகளும்,மேற்கு திசையில் உள்ளவைகளும் நானே எனக்கூறுகிறார் சிவபெருமான். குறிப்பு- நான் எங்கும் நிறைந்திருப்பவன்… 💥🌺ஸ்ரீ ருத்ரம் காட்டும் சிவ ஸ்வரூபம்🌺💥 ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும். வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான். அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம். எல்லா உலகமும் ஆகி ("ஜகதாம் பதயே") இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம். அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறான் ("தேவானாம் ஹ்ரிதயேப்ய) . அப்படி இருந்துகொண்டு ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான்(விசின்வத்கேப்யஹா). மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை , சேனாப்ய: சேனா நிப்யச்ச: என்கிறது ருத்ரம். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் (க்ஷத்ருப்ய: ) ,தச்சர் வடிவிலும் (தக்ஷப்ய:) , குயவர் வடிவிலும் (குலாலேப்ய:) கருமார் வேடத்திலும்(கர்மாறேப்ய:) பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும்( புஞ்சிஷ்டேப்ய:) மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும்( நிஷாதேப்ய:) இருக்கிறான். சிவ ச்வரூபமோ தனித்தன்மை வாய்ந்தது. ஆலகால விஷத்தை உண்ட கண்டம் (நீலக்ரீவாய); அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது (சிதிகன்டாய) . ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி (கபர்தினே) இருக்கிறது. மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட (வ்யுப்தகேசாய) தலை. ஆயிரக்கணக்கான கண்கள்(சகஸ்ராக்ஷாய) . குறுகிய வாமன வடிவுடைய (ஹ்ரச்வாய்ச வாமனாய்ச) அவனே , பெரிய வடிவத்துடனும் ( ப்ருஹதே) தோன்றுகிறான். பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான். வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் (ச்துத்யாய) வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும்( அவசான்யாய) விளங்குகிறான். ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, "பப்லுசாய" என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது. சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் " பவச்ய ஹேத்யை " எனப்படுகிறான். பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று "தாவதே" என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா , அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம், "தூதாய ச ப்ரஹி தாய ச " என்று காட்டுகிறது. தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, "ஸஹமானாய " என்ற பதத்தால் உணர்த்துகிறாள். திருக் கருப்பறியலூர் ( தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு அபராத க்ஷமாபநேச்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர். நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், "வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே " என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகிவிடுகிறான். சுவாமியைத் தொட்டு பூஜை பண்ணிய கைகள் அத்தன்மையை அடைந்து விடுவதை, "அயம்மே ஹஸ்தோ பகவான்" என்று சொல்லும் ஸ்ரீ ருத்ரம், அப்படிப் பூஜை செய்யும் வலது கை, நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுவதாகக் கூறுகிறது. 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள்
6 likes
7 shares
ப்ரஹ்ம வித்யா ரஹசியம்-04. பரமாத்மாவின் ப்ரதி பிம்பம் ஜீவாத்மா… ஜீவாத்மா என்பது பிரம்மத்தின் மாயையினால் கட்டுப்பட்டு, சத்துவ குணம் குறைந்த ஞானத்தையும் சக்தியையும் கொண்ட ஒரு தனிப்பட்ட ஆத்மாவைக் குறிக்கிறது. கட்டுப்படாத பரம்பொருளான பிரம்மத்தின் பிரதிபலிப்பே ஜீவாத்மா, அவித்தையினால் கட்டுப்பட்ட நிலையில் இருப்பது ஜீவனுடைய இயல்பு. -மேலும் விளக்கம்: பிரம்மத்தின் பிரதிபலிப்பு: ஜீவாத்மா என்பது கட்டுப்படாத பிரம்மத்தின் ஒரு கூறு. மாயையின் தாக்கம்: பிரம்மம் மாயையில் படும்போது அல்லது சத்துவ குணம் குறையும்போது ஜீவாத்மா தோன்றுகிறான். -குறைந்த ஞானம் மற்றும் சக்தி: அந்தக்கரணம் அல்லது அவித்தையின் காரணமாக ஜீவாத்மாவுக்கு ஞானமும் சக்தியும் குறைவாகவே இருக்கும். -கட்டுப்பட்ட நிலை: பரம்பொருளான பிரம்மம் கட்டுப்படாத நிலையில் இருக்க, அதற்கு மாறாக ஜீவாத்மா (இந்திரீயங்களுக்கு) கட்டுப்பட்ட நிலையில் இருக்கிறான். எனவே ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் அம்சம். அதற்கான ப்ரமாணம்…(ஆதாரம்) சிவபெருமானால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்ட கீதை. சிவ கீதை - 55. 🌺{அத்தியாயம்-{06 } சிவபெருமானால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்ட கீதை. 🌺 வீபூதி யோகம்.🌺 சிவபெருமானின் வல்லமைகளை ராம்பிரான் கேட்டு அறிந்து கொள்கிறார். ராம உவாச… ஸ்லோகம்-01. பவந்த்ரமேசித்ரம் மஹதேதத்ப்ரஜாயதே / ஸுத்தஸ்படிகஸம்காஶஸ்திணேத்த்ஶ் - -சந்த்ரஶேகர: // ஸ்லோகம்-02. மூர்தஸ்த்வம்பரிச்சிந்நாக்ருதி: புருஷரூபத்ருக் / அம்பயாஸஹிதோத்ரைவரமஸேப்ரமதைஸஸஹ// ஶ்ரீ ராமன் கேட்கிறான்.. கருத்து- ஹே,பகவானே, எனக்கு வியப்பாக இருக்கின்றது, ‘சுத்த ஸ்படிக’நிறத்துடன், மூன்று கண்களுடன், *சந்த்ர சேகரன்* என்ற் பெயருடன்,- -“ஏகதேச மூர்த்தியாக”{ பிண்டப் போருளாக} இருக்கின்றீர்கள்.மேலும்’புருஷ’ உருவங்கொண்டு உமா தேவியுடன்,பிரதம கணங்கள் சூழ இங்கு கணெதிரே நிற்கின்றீர்கள் ஸ்லோகம்-03. த்வம்கதம்பஞ்சபூதாதி ஜகதேதச்சராசரம் / தத்ப்ரூஹிகிரிஜாகாந்த மயிதேநுக்ரஹோயதி // கருத்து- ஹே, பார்வதீநாதா, நீங்களே, பஞ்சபூதங்களாகவும், சராசரமாகிய இந்த ப்ரபஞ்சமாகும் இருக்கின்றீர்கள். அருள் கூர்ந்து எனக்கு கூறுங்கள். ஸ்லோகம்-04. ஶ்ரீஶிவ உவாச… ஶ்ருணுராமமஹாபாக துர்ஜ்ஞெயமரைரபி / தத்ப்ரவக்ஷ்யாமியத்நேந ப்ரஹ்மசர்யேணஸுவ்ரத / பாரம்யாஸ்யஸ்யநாயா- -ஸாத்யேநஸ்ம்ஸாரவாரிதே: // கருத்து- மஹாதேவர் பதில் கூறுகிறார்… தசரத மஹாராஜனின் தவத்தினாலும், புண்ணியங்களின் பலனாகவும், அவதரித்தவனே; தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாததும், அத்தகைய’அத்துவத்’ தன்மையைக் கூறுகிறேன். தர்மங்களையும், நியாங்களையும் அறிந்தவனே, “பிரம்ஹசர்யோத்தோடும்”, ஏகாக்கிரத்த த்தோடும்’ இந்த, இல்லறமென்னும், கடலை எளிதாக கடக்கக் கூடியதைக் கேட்பாயாக. தொகுப்பாசிரியர்-ஆன்மீகம் சந்தானம் மாம்பலம். கச சிவ கீதை - 56 🌺{அத்தியாயம்-{06 } ஸ்லோகம்-05. த்ருஸ்யந்தேபஞ்நபூதாநி யேசலோகாஶ்சதுர்தஶ/ ஸ்லோகம்-06. ஸமுத்ரா: பர்வதாதேவா ராக்ஷஸாருஷயஸ்ததா/ தருஶ்யந்தேயாநிசாந்யாநி ஸ்தாவராணிசராணிச// ஸ்லோகம்-07. கந்தர்வா: ப்ரமதாநாகாஸ்ஸர்வே- -தேமத்விபூயதய: // கருத்து- ஹே, தசரதபுத்ரனே, அறிந்துகொள், பஞ்சபூதங்களும், பதினான்கு உலகங்களும்,கடல்களும்,மலைகளும்,தேவர்களுமுனிவர்களும்,அரக்கர்களும், மற்றுமுள்ள- - ஸ்தாவர ஜங்கங்களும்( அசையும்,அசையாப் பொருட்களும்)கந்தர்வர்களும்,நாகர்களும் என அனைவரும் என் அம்சங்களே ஆகின்றனர். ஸ்லோகம்-07. புராப்ரஹ்மாதயோதேவா: - -த்ரஷ்ட்டுகாமாமமாக்ருதிம்// ஸ்லோகம்-08. மந்த்ரம்ப்ரயயுஸ்ஸர்வே மமப்ரியதர்ங்கரிம்/ ஸ்துத்வாப்ராஞ்ஜலயோதேவா- -மாந்ததாபுரஸ்திதா// கருத்து- பூர்வகாலத்தில் என்னால படைக்கப்பட்ட அனைத்து தேவர்களும் என்னை காண விரும்பி, என்னைத் தேடி,மந்த்ர பர்வதத்தை(மலையை ) அடைந்தனர். மேலும் என்னை துதி செய்து, இரு கைகளையும் கூப்பி, என் முன் நின்றனர். 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள்
12 likes
15 shares
ப்ரஹ்ம வித்தை ( இரகசியம்) -04- இனி தைத்ரீய உபநிஷத்-ப்ருகு வல்லீ.- சொல்வதை பார்ப்போம்… இந்த பகுதி-பார்கவீ- வாருணீ வித்யை எனப் படுகிறது- அதை தெரிந்து கொள்வோம். இந்தப் பகுதி வருண மஹரிஷி( முனிவர்) தன் மகன் ப்ருகுவிற்கு உபதேசிப்பதாக அமைந்துள்ளது. அனுவாகம்-01. மந்த்ரம்-01(01). முதல் அனுவாகம்* இறைவன் யார்* (ப்ரஹ்மம் யார் ) என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. வருண முனிவரின் மகன் ப்ருகு தன் தந்தையிடம் சென்று-இறைவன் என்பவர் ?- எனக் கேட்டான்.அவர் பல விளக்கங்களைக் கூறி தவம் செய்து உண்மைகளை அறிந்துகொள் எனவும் பதிலளித்தார். தவம் செய்து படிப் படியாக முன்னேறி உண்மையை உணர்ந்தான். நாம் ஆனந்தவல்லியில்- “ யதோ வாசோ நிவர்த்தந்தே / அப்ராய மனஸா- ஸஹ / எவரை மனதாலும், வாக்கினாலும் அறிய முடியாதவராக இருக்கிறாரோ, அவரே இறைவன்- என படித்தோம். இனி வருண முனிவர் கூறுவதை பார்ப்போம். மந்த்ரம்-0-(01). ப்ருகுர்வை வாருணீ: / வருணம் பிதரமுபஸ்ஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி / தஸ்மா ஏதத் ப்ரோவாச / அன்னம் ப்ராணம் சக்ஷூ:ச்ச்ரோத்ரம் மனோ- -வாசமிதி //. கருத்து- வருண முனிவரின் மகன் தன் தந்தையிடம் சென்று “ தெய்வத்திற்கு சமமானவரே” இறைவன் என்பவர் யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள் என கேட்டான். அவர் உடனே*உணவு, ப்ராணன், கண், காது, மனம்,பேச்சு ஆகிய இவைகளே இறைவன் என பதிலாக கூறினார். தந்தை சொல்லியவாறு தவத்தில் உட்கார்ந்த ப்ருகு முதற்படி உண்மையை தெரிந்து கொண்டான். அந்த் உண்மை என்ன ? இந்த மந்த்ரம் அதை கூறுகிறது. மந்த்ரம்- அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜானாத் / அன்னாத்யேவ கல்விமானி பூதானி ஜாயந்தே / அன்னேன ஜாதானி ஜீவந்தி / அன்னம் ப்ரயந்த்யபிஸம்விசந்தீதி / தத் விஜ்ஞாய / புனரேவ வருணம் பிதரமுபஸ்ஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி / தக்ம் ஹோவாச / தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ /. தபோ ப்ரஹ்மேதி / ஸ தபோsதப்யத / ஸ தபஸ் தப்த்வா //. கருத்து- உணவே இறைவன்,உணவிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன; அவ்வாறு தோன்றியவை உணவினாலேயே வாழ்கின்றன; மரணத்திற்குப் பிறகு உணவிலேயே ஒடுங்குகின்றன, என ப்ருகு தெரிந்து கொண்டான். அதன் பிறகு தன் தந்தை வருண முனிவரிடம் சென்று, தெய்வத்திற்கு சமமானவரே, இறைவன் யார் என்பதை எனக்கு இறைவன் யார் என என்க்கு உபதேசமாக கூறுங்கள் எனவும் கேட்டான். அவர்,” தவமே கடவுள், தவத்தால் அவரை அடைவாயாக” என கூறினார். இதை கேட்டு ப்ருகு மீண்டும் தவத்தில் அமர்ந்தான். தவம் நிறைந்த பிறகு.... குறிப்பு- ப்ருகு தான் உணர்ந்த உண்மையை,உணவே இறைவன் என்பதை தந்தையிடம் கூறியதும் அவர் அதை ஒப்புக் கொண்டாரா ? இல்லையா? அவர் சரி என்றும் சொல்லவில்லை, தவறு என சொல்லவுமில்லை, மேலும் முயற்சி செய் என கூறினார். ஏனெனில் ஆனந்தவல்லியில் அனுவாகம்-04. மந்த்ரம்-02 கூறுகிறது, அன்னாத்வை ப்ரஜா: ப்ரஜாயந்தே / யா: காச்ச ப்ருதிவீக்ம்ச்ரிதா: / அதே அன்னேனவை ஜீவந்தீ / அதைதபியந்த்யத்யந்தத: / அன்னக்ம் ஹி பூதானாம் ஜ்யேஷ்ட்டம்/ ...என தொடர்கிறது. அந்த கருத்தைதான் மேலே ப்ருகு முதல் உண்மையாக அறிந்து கொண்டான். அந்த கருத்து—- கருத்து- உணவிலிருந்தே மக்கள் தோன்றினர். பூமியில் வாழும் எல்லா உயிரினங்களும் உணவிலிருந்தே தோன்றியது. உணவிலேயே வாழ்கின்றன. முடிவில் உணவிலேயே கலக்கின்றன. உணவே உயிர்களின் துவக்கம்.அதனால் உணவே அனைத்திற்கும் மருந்து என சொல்லப்படுகிறது. யார் உணவை தெயவமாக போற்றுகிறார்களோ அவர்கள் உணவை இடையூறு இல்லாமல் பெறுகின்றனர். ஶ்ரீ ருத்ரம்- அனுவாகம்-02. மந்த்ரம்-04. “நமோ பப்லுஶாய விவ்யாதிநேsந்நாநாம் பதயே- -நம: // காளை மாட்டின் மேல் அமர்ந்திருப்பவரை வணங்குகிறேன். தவறு செய்கவர்களை தண்டுப்பவரும்,*அனைத்து உணவுகளுக்கும் தலைவரான இறைவனை வணங்குகிறேன். என கூறுகிறது. உணவில் அனைத்து உயிர்களும் ஒடுங்குகின்றன என்றால் உணவு பூமியிலிருந்து விளைகிறது. அந்த பூமியிலேயே உயிர்கள் ஒடுங்குகின்றன எனப் பொருள். அன்னமே இறைவன் முதல் படியாக தெரிந்து கொண்டாலும்,திருப்தி அடையாத ப்ருகு,தந்தை கூறியது போல், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான். இரண்டாவதாக அவன் அறிந்து கொண்டதை இந்த ஸூக்தம் சொல்கிறது. மந்த்ரம்- ப்ராணோ ப்ரஹ்மேதி வ்யஜானாத் / ப்ராணாத்யேவ கல்விமானி பூதானி ஜாயந்தே / ப்ராணேன ஜாதானி ஜீவந்தி /ப்ராணம் ப்ரயத்ந்பிஸம்விசந்தீதி/ தத்விஜ்ஞாய / புனரேவ வருணம் பிதாமுபஸ்ஸார / ஆதீஹி பகவோ ப்ரஹ்மேதி / தக்ம் ஹோவாச / தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸ தபோsதப்யத/ ஸ தபஸ் தப்த்வா //. கருத்து- ப்ராணனே கடவுள் என அறிந்து கொண்டான். ப்ராணனிலிருந்தே உயிர்கள் தோன்றுகின்றன. அந்த ப்ரணனாலேயே வாழ்கின்றன. மரணத்திற்கு பிறகு அந்த ப்ராணத்திலேயே ஒடுங்குகின்றன. எனவும் அறிந்து கொண்டான். இந்த விடையும் திருப்தியளிக்காதலால், மீண்டும் தந்தை வருண முனிவரை அணுகி, இறைவனுக்கு சமமானவரே, இறைவன் யார் என உபதேசியுங்கள் என கேட்டான். அதற்கு அவர்”தவமே கடவுள், தவத்தால் அவரை அடைவாயாக என பதிலளித்தார். எனவே மீண்டும் அவரது உபதேசத்தை ஆணையாக கொண்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான். தவம் நிறைவு பெற்ற பிறகு... இதற்கும் அடுத்து வரும் ஸூக்தங்களுக்கும் பதவுரை” முந்தைய மந்தரம்,”அன்னம் ப்ரஹ்மேதி- - வ்யஜானாத்” போன்றுதான். சீக்ஷா வல்லியில் இந்த ப்ரபஞ்சத்தை்தை இயக்கும் ப்ராண சக்தியே நமது உடலையும், மனதையும் இயக்கும் சக்தி எனப் படித்தோம். ப்ராணன், அபானன் போன்ற பத்து சக்திகள் நமது உடலையும், மனதையும் இயக்கும் சக்திகள் என தெரிந்து கொண்டோம். அனுவாகம்-01. மந்த்ரம்-01(05). தந்தை சொல்படி மூன்றாவது முறை தவம் செய்ததால், மனமே இறைவன் என அறிந்துகொண்டான் என இந்த ஸூக்தம் சொல்கிறது. மந்த்ரம்- மனோ ப்ரஹ்மேதி வ்யாஜானாத் / மனஸோ ஹ்யேவ கல்மானி பூதானி ஜாயந்தே / மனஸா ஜாதானி ஜீவந்தி / மன:ப்ரயந்த்யபிஸம்விசந்தீதி / தத் விஜ்ஞாய / புனரேவ வருணம் பிதரமுபஸ்ஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி / தக்ம் ஹோவாசா / தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸ்ஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸ தப்போsதப்யத/ஸ தபஸ்தப்த்வா // கருத்து- மனமே இறைவன் எனவும், மனதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன. அவை மனதால் வாழ்கின்றன. மரணத்திற்குப் பிறகு மனதிலேயே ஒடுங்குகின்றன. இவ்வாறு அறிந்து கொண்ட பிறகும் தந்தை வருண முனிவரிடம் சென்னு, தெய்வத்திற்கு சமமானவரே இறைவன் யார் என்பதை உபதேசியுங்கள் என கேட்டான். அவர் தவமே இறைவன் என கூறி தவத்தால் அவரை அடைவாயாக என பதலளித்தார். இந்த உபதேசத்தை ஏற்றுக் கொண்டு, ப்ருகு தவத்தில் அமர்ந்தான். தவம் நிறைவுற்ற பிறகு... 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சித்தர்கள் வாக்கு #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
18 likes
12 shares