திருநீற்றுச் சுவடு
542 views
1 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # வருடம் சித்திரை மாதம் 05ம் நாள் 18-ஏப்ரல்-26, சனிக்கிழமை ஸ்திரவாரம் பந்த பாச வலையில் சிக்கி பூர்வ ஜென்மங்களில் செய்த கர்ம வினைகளால் அவதியுற்று பரம தீனனாய் கடைத்தேற வழி தெரியாமல் தவித்திடும் நம்மை கை தூக்கி இம்மையில் சுகமளித்து பரகதியான தன் பொற்பாதங்களில் இறுதியாக அடைக்கலம் அளித்திட மனம் உருகி பக்தி பெருக்கோடு நெகிழ்ந்து பரமேஸ்வரனின் இடது பாகம் குடிகொண்ட அம்பிகையை போற்றி துதித்து பாடி வாசனை மலரால் பூஜித்து அன்னையின் பொற்பாதம் தலை சூடி வணங்கிடுவோம் வாரீர் தாமரை மலர் பாதங்களில் முத்துக்களை பரல்களாக கொண்ட. சதங்கை, தண்டை அணிந்திருப்பவளே, தங்கம் போல் பிரகாசிக்கும் பீதாம்பரத்தை இடையில் கட்டியவளே தாமரை தண்டு போன்ற கழுத்தில், தங்க வைர மாணிக்க ரத்ன ஆபரணங்கள் அணிந்தவளே, பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியும், கருமேகம் ஒத்த கூந்தலும், குளிர்ந்த நிலவைப் போன்ற தாமரைமலர் போல் விகசிக்கும் முகதத்துடன் நான்கு கைகளிலும்,பாசம்,அங்குசம்,கரும்பு வில், ஐந்து மலரம்புகளை ஏந்தி, இந்திரன் முதலிய தேவர்கள், அவளுடைய கொலுமண்டபத்தில்,சிம்மாஹசனத்தில் அமர்ந்திருக்கும் போது, பணிய அவர்கள் கீரீடங்களால் பிரகாசிக்கும் பாதங்களோடு தரிசனம் தரும் அம்பிகையே பாதம் சரணமம்மா , அபயமம்மா பாதாம் புயத்திற் சிறுசதங்கைப் பணியுஞ் சிலம்புங் கிண்கிணியும் படரபா டகமுந் தண்டையுடன் படியுங் கொலுசுந் தழைத்தருளும் பீதாம் பரமுந் துவள் இடையும் பிரியா தரைஞாண் மாலைகளும் பெருகுந் தரள நவமணியும் புனையுங் குயமும் இருபுயமும் போதா ரமுத வசனமொழி புகலும் வாயும் கயல்விழியும் புண்ட ரீகத் திருநுதலும்பொன் பொற் சடையும் மதிமுகமும் பேரின்ப ரச வதனக் கொடியே உனை அடுத்தேன் மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத்தாயே.பாதம் சரணமம்மா,அபயமம்மா 🪷🪷🪷