Follow
A Mohan Raj
@19106433
4,250
Posts
13,055
Followers
A Mohan Raj
588 views
21 hours ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்* திருநாளைப் போவார் நாயனார் (சைவ சமயத்தில் நந்தனார் என்றும் அழைக்கப்படுபவர்), சிவபெருமானை உருகி வழிபட்ட 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் சோழ நாட்டில் கொள்ளிட நதிக்கரையில் உள்ள ஆதனூர் என்னும் ஊரில் எளிய குலமான புலைப்பாடியில் பிறந்தவர். பிறப்பால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சிவபெருமான் மீது இவர் கொண்ட பக்திக்கு எல்லையே இல்லை. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தில் இவருடைய வாழ்க்கை வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பெயர்க்காரணம்தில்லையில் (சிதம்பரம்) வீற்றிருக்கும் நடராசப் பெருமானை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் நந்தனாருக்கு இருந்தது. ஆனால், அக்கால சமூகக் கட்டுப்பாடுகளையும் தனது எளிய குலத்தையும் நினைத்து ஊருக்குள் செல்லத் தயங்கினார். ஒவ்வொரு நாளும் தில்லைக்குச் செல்ல எண்ணி, தனக்குத்தானே "நாளைப் போவேன்" என்று கூறி நாட்களைக் கடத்தினார். இதனால் இவருக்கு "திருநாளைப் போவார்" என்ற திருநாமம் உண்டாயிற்று. இவருடைய வாழ்வில் நடந்த அற்புதங்கள்திருப்புன்கூர் நந்தி விலகிய அற்புதம்: நந்தனார் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயிலுக்கு வழிபடச் சென்றார். தீண்டாமை காரணமாகக் கோயிலின் வாசலில் நின்று இறைவனைத் தொழ முயன்றார். ஆனால், நேரே இருந்த நந்தி தேவர் மறைத்ததால் சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை. பக்தனின் ஏக்கம் அறிந்த சிவன், "நந்தியைச் சற்றே விலகச் சொல்லி" அவருக்கு நேர்க்காட்சி தந்தார். இன்றும் அத்தலத்தில் நந்தி விலகியே இருப்பதைக் காணலாம். அங்கேயே அவர் ஒரு திருக்குளத்தையும் வெட்டினார். தில்லை தீக்குளிப்பு அற்புதம்: இறுதியாகத் தில்லை எல்லைக்கு வந்த நந்தனாரால் உள்ளே செல்ல இயலவில்லை. இறைவனின் திருவருளால், தில்லை வாழ் அந்தணர்கள் ஒரு தீக்குழியை (வேள்வித் தீ) அமைத்துக் கொடுத்தனர். நந்தனார் சிவனின் திருவடிகளைத் தியானித்துத் தீயினுள் இறங்கி, முப்புரிநூல் அணிந்த முனிவர் வடிவில் பொன்னம்பலத்துள் புகுந்து நடராசப் பெருமானின் திருவடி நிழலில் கலந்தார். பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்* கொச்சகக் கலிப்பா பகர்ந்துலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால் முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும் அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர். 1 நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர் ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச் சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம். 2 நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக் கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப் புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை. 3 பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின் தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின் நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும். 4 வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும் வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினவாம் புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய் அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர். 5 மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப் பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி. 6 கூருகிர் மெல்லடி அளகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும் வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ் கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி. 7 வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல் மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும் புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும். 8 செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக் குறி அளக்க அழைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும். 9 புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும் தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும். 10 இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார். 11 பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால் சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார். 12 ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும் பேரிகையே முதலாய முகக் கருவி பிறவினுக்கும். 13 போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார். 14 இவ் வகையால் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும் செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில். 15 திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார். 16 சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில் நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்பு போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார். 17 சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து சுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல் அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார். 18 வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால் தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார். 19 இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி மெய்த்த திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த சித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப. 20 அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார் நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார். 21 நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப் பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியினின்றும் போய் வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார். 22 செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார். 23 நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார் குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள் ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள். 24 இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல் ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார். 25 இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினொடுந் துயில்வார். 26 இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார். 27 இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என மொழிந்து அப் பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார். 28 தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித் தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார். 29 ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம் வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார் தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார். 30 மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார். 31 கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார் எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப் பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய் மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார். 32 செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார். 33 திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார் பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர். 34 தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி கொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால். 35 அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார் வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்துச் சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார். 36 மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார் தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டர் வினைப் பாசம் அற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம். 37 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.1K views
22 hours ago
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #சிவன் Good Morning🌞🙏 The biggest challenge in life is being yourself… In a world trying to make you like everyone else. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
1K views
3 days ago
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #சிவன் Good Morning 🌞🙏 When life gives you every reason to be negative, think of all the reasons to be positive. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
838 views
4 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்#ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்* *"மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்"* சைவ சமய 63 நாயன்மார்களில், 'வணிகர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். மூர்த்தி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். இவரது காலத்தில், வடுகக் கருநாடக மன்னன் (களப்பிரர்) மதுரையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன் என்பதால், சைவ சமயத்தை ஒடுக்க நினைத்தான். மூர்த்தி நாயனாரின் சிவத்தொண்டை முடக்க எண்ணி, நகரில் எங்கும் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காமல் தடை விதித்தான். சந்தனம் கிடைக்காத நிலையிலும் தன் தொண்டை நிறுத்த விரும்பாத நாயனார், மனம் தளராமல் மதுரை திருவாலவாய்க் கோயிலுக்குச் சென்றார். சந்தனம் அரைக்கும் சானைக் கல்லில், தன் முழங்கையையே வைத்து இரத்தம் வழிய வழியத் தேய்க்கத் தொடங்கினார்.இவரது அசாத்திய பக்தியைக் கண்டு உருகிய சிவபெருமான், "அன்பனே! உன் உடலை வருத்தாதே; உனக்கு இடையூறு செய்த மன்னன் விரைவில் மடிவான்; அதன் பின் நீயே இந்நாட்டின் மன்னனாகிச் சைவத்தை வளர்ப்பாய்" என்று அசரீரியாக அருளினார். அசரீரி ஒலித்தபடியே, மறுநாள் காலையில் கொடுங்கோல் மன்னன் வாரிசு ஏதுமின்றி இறந்தான். அந்நாட்டுக் வழக்கப்படி, அடுத்த அரசனைத் தேர்ந்தெடுக்க ஒரு பட்டத்து யானையின் கண்களைக் கட்டி, கையில் மாலையுடன் ஏவிவிட்டனர். அந்த யானை நேராகத் திருவாலவாய்க் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த மூர்த்தி நாயனாருக்கு மாலை சூட்டி, அவரைத் தன் முதுகில் ஏற்றி அரண்மனைக்கு அழைத்து வந்தது.அமைச்சர்கள் அவரை நாடாளக் கோரியபோது, நாயனார் ஒரு முக்கிய நிபந்தனை விதித்தார்: "சமண மதம் நீங்கி, சைவம் ஓங்குமானால் மட்டுமே நான் அரசாள்வேன்" அதோடு, உலகியல் ஆடம்பரங்களை மறுத்து, ஒரு சிவபக்தராகவே நாடாள முடிவு செய்தார். அதன்படி அவர் சூடிக்கொண்ட மூன்று சின்னங்கள்:திருநீறு – அரச அபிஷேகத்திற்குப் பதிலாகஉருத்திராக்கம் – அரச ஆபரணங்களுக்குப் பதிலாகசடாமுடி – அரச மகுடத்திற்குப் பதிலாக. இதனாலேயே இவர் பெரியபுராணத்தில் "மும்மையால் உலகாண்ட மூர்த்தி" என்று போற்றப்படுகிறார். நெடுங்காலம் தர்மநெறி தவறாமல், சைவ நெறியைப் பரப்பி அரசாட்சி செய்த நாயனார், இறுதியில் சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார். பாடல் வரிகள் : *"மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்"* *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்* ஐந்துசீர் - கலித்துறை சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும் கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்பு நார் மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும் பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு. 1 சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண் வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய வாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம் பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம். 2 மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின் மை வைத்த சோலை மலையந்தர வந்த மந்த மெய் வைத்த காலுந் தரும் ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம். 3 சூழும்இதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள் தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார் யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும். 4 சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பாயப் பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும் சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம். 5 மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற் செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை. 6 மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர் மெய்ம்மைப் பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மை செம்மைப் பொருளுந் தருவார் திருஆலவாயில் எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால். 7 அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச் செப்பத் தகு சீர்க் குடி செய்தவஞ் செய்ய வந்தார் எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள் மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார். 8 நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே கேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம் ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார் மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம். 9 அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில் எந்தைக்கு அணி சந்தனக் காப்பிட என்றும் முட்டா அந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச் சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில். 10 கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல் மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர் சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான். 11 வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம் சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான். 12 வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்து நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான். 13 தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச் சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும் வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான். 14 செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள் முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரை மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் பேர் எக்கர்க்குடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி. 15 அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார் தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார். 16 எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் தள்ளுஞ் செயல் இல்லார் சந்தனக் காப்புத் தேடிக் கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான் தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து. 17 புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும் வன்மைக் கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத நன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மைத் தன்மைப் புவி மன்னரைச் சார்வதென்(று)என்று சார்வார். 18 காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று ஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை சாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில். 19 நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய. 20 கல்லின் புறந் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து மூளை புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரானார் அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு. 21 அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால் வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு முன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப் பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன. 22 இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு செய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம். 23 அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன் தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல. 24 இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான். 25 முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலைப் பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது போத. 26 அவ் வேளையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள் கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே செய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார். 27 தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும் சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி வாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார். 28 வேறு - அறுசீர் விருத்தம் பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் தன் நெடும் குடைக் கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார். 29 இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றக் கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று. 30 வேறு - கலித்துறை செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக் கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார். 31 கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர் மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித் திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின் விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி. 32 நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம் தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப் பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப. 33 வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று வாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரைச் சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்பு தாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே. 34 மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது ஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர். 35 சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும் எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்ல அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின் பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும். 36 வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை அங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத் திங்கட்குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார். 37 மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண் துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர் உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள். 38 வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வன் என்றார். 39 அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும் எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர் செய்வார் பெரியோய் எனச் சேவடி தாழ்ந்து செப்ப. 40 வையம் முறை செய்குவன் ஆகில் வயங்கு நீறே செய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள் ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார். 41 என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும் வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும் நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தை ஒன்றும் அரசாள் உரிமைச் செயலான உய்த்தார். 42 மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச் சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்து நீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார். 43 மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது தன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால் மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி. 44 குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக கலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கி நிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழ உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன. 45 நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம். 46 ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி ஞாலந் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக் காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து. 47 பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின் பேதம் புரியா அருள் பேர் அரசாளப் பெற்று நாதன் கழற் சேவடி நண்ணினர் அண்ணலாரே. 48 அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம் முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப் புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம். 49 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.8K views
4 days ago
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #சிவன் Good Morning🌞🙏 Lucky people get opportunities.... Brave people create opportunities.... But, real Winners are those who convert their problems into opportunities... Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
815 views
4 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்* ஆனாய நாயனார் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள, அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனாரின் புனிதமான வரலாறு ஆகும். இவர் தனது வேய்ங்குழல் (புல்லாங்குழல்) இசையினால் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரமான "ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை" வாசித்து, அதன் மூலம் இறைவனின் திருவருளைப் பெற்று முக்தியடைந்தவர் ஆவார். இசையினால் நிகழ்ந்த அற்புதம்: ஒருநாள், காட்டில் கொன்றை மரத்தின் அடியில் நின்றுகொண்டு ஆனாய நாயனார் தனது புல்லாங்குழலில் பஞ்சாக்ஷர மந்திரத்தை வாசித்தார். அந்த இசையமுதம் காடு முழுவதும் பரவியபோது பெரும் அற்புதங்கள் நிகழ்ந்தன :பகை மறந்த விலங்குகள் இயற்கையிலேயே ஒன்றோடொன்று பகைகொண்ட விலங்குகளான பாம்பும்-மயிலும், சிங்கமும்-யானையும், புலியும்-மானும் தங்களின் பகைமையை மறந்து ஒன்றாக நின்றன.அசைவற்ற இயற்கை: காற்றில் மரங்கள் அசையவில்லை; மலை அருவிகளும் காட்டாறுகளும் ஓடாமல் நின்றன; கடலும் மேகமும் அசைவற்று ஸ்தம்பித்தன. தேவர்கள் வருகை: பாதாள உலக நாகர்களும், விஞ்சையர்களும், தேவர்களும் இந்த இசையைக் கேட்கத் தத்தம் உலகங்களில் இருந்து பூமியை நோக்கி வந்தனர். கைலாச முக்தி: நிறைவாக, உலக உயிர்கள் அனைத்தையும் உருகவைத்த அந்த புல்லாங்குழல் இசை கைலாசத்தில் வீற்றிருந்த சிவபெருமானின் திருச்செவிகளை எட்டியது. இதனால் மகிழ்ந்த சிவபெருமான், உமையம்மையோடு இடப வாகனத்தில் தோன்றி, "மெய்யன்பனே! உன் குழலிசையை எப்போதும் கேட்கும் பொருட்டு இதே நிலையோடு என்னுடன் வா" என்று அருளினார். ஆனாய நாயனாரும் குழல் வாசித்தபடியே சிவபெருமானின் திருவடி நிழலை (கைலாசத்தை) அடைந்தார். பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்* சந்தக் கலிநிலைத்துறை மாடு விரைப் பொலி சோலையின் வான் மதிவந்து ஏறச் சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர் நாடு. 1 நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல் மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரைக் கஞ்சப் பூவில் உறங்குவ நீள் கயல் பூமலி தேமாவின் காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி. 2 வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைப் பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் அன்னம் மருங்குறை தண் துறை வாவி அதன் பாலைக் கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை. 3 பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம் துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடக்கிப் போய்த் தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறிப் பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென. 4 அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும் ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும் மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கோர்பால். 5 கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத் தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடஞ் சாலிப் பண்ணை எழுங்கயல் பாய இருப்பன காயாவின் வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம். 6 பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும் வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம் அங்கது மண்ணின் அருங்கலமாக அதற்கேயோர் மங்கல மானது மங்கலம் ஆகிய வாழ் மூதூர். 7 ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும் செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர். 8 ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார் வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலில் பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார். 9 ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறிக் கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து எங்கும் தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீருண்டு ஊனமில் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார். 10 கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும் புன்றலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும் வென்றி விடைக் குலமோடும் இனந்தொறும் வெவ்வேறே துன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள். 11 ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும் கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார். 12 வேறு - கொச்சகக் கலிப்பா முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய் அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம் வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை அந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து. 13 எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும் தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்துத் தடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள். 14 வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த தேசுடைய சிகழிகையிற் செறி கண்ணித் தொடை செருகிப் பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து காசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்கட்டி. 15 வெண் கோடல் இலைச் சுருளிற் பைந்தோட்டு விரைத் தோன்றித் தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்கத் திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோர் கண் கோடல் நிறைந்தாராக் கவின் விளங்க மிசை அணிந்து. 16 நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச் செறிந்த புனை வடம் தாழத் திரள் தோளின் புடை அலங்கல் அறைந்த சுரும்பு இசை அரும்ப அரையுடுத்த மரவுரியின் புறந்தழையின் மலி தானைப் பூம் பட்டுப் பொலிந்து அசைய. 17 சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும் மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழப் பூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார். 18 வேறு - அறுசீர் விருத்தம் நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக் கொடிப் புறவம் பாடக் கோல வெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட ஆலு மின்னிடைச் சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞால நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள். 19 வேறு - கொச்சகக் கலிப்பா எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடைப் பொதுவர் தம்மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வருந்தலைவர் அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மதுவுண்டு செம்மருந்தண் சுரும்பு சுழல் செழுங் கொன்றை மருங்கு அணைந்தார். 20 சென்றணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என மன்றல் மலர்த்துணர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல் நின்ற நறுங் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார். 21 அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால் வன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம் முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும் என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில். 22 ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத் தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச் சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில் வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத. 23 முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி ஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம் அத்தகைமை யாரோசை அமரோசைகளின் அமைத்தார். 24 மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம் ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக் கூறிய பட்டடைக் குரலாங் கொடிப் பாலையினில் நிறுத்தி. 25 ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற் சேய வொளியிடை அலையத் திருவாளன் எழுத்தஞ்சும் தூய இசைக் கிளை கொள்ளுந் துறையஞ்சின் முறை விளைத்தார். 26 மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கிச் சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண. 27 எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும் வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில் பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார். 28 வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின் உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகியெழு மதுர ஒலி வெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன் தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க. 29 ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயரப் பால் நுரை வாய்த் தாய் முலையில் பற்றும் இளங்கன்று இனமும் தான் உணவு மறந்து ஒழியத் தட மருப்பின் விடைக் குலமும் மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய. 30 ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக ஊடுசெவி இசை நிறைந்த உள்ளமொடு புள்ளினமும் மாடுபடிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் கூடியவண் கோவலரும் குறை வினையின் துறை நின்றார். 31 பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார். 32 சுரமகளிர் கற்பகப் பூஞ்சோலைகளின் மருங்கிருந்து கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் விரவு நறுங்குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறிப் பரவிய ஏழிசை அமுதம் செவி மடுத்துப் பருகினார். 33 நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால் மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும் புலி வாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும். 34 மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர்ச் சினை சலியா கருவரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா இரு விசும்பின் இடை முழங்கா எழுகடலும் இடை துளும்பா. 35 இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய் மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால் மொய்வாச நறுங்கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர் செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க. 36 மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கிப் பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும் ஐயன் தன் திருச் செவியின் அருகணையப் பெருகியதால். 37 ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை தானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து வானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ. 38 திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே அசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும் இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார். 39 முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும் செந்நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும் அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார். 40 விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப் புண்ணியனார் எழுந்து அருளிப் பொற் பொதுவின் இடைப் புக்கார். 41 வேறு - அறுசீர் விருத்தம் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி) தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக் காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்லத் தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்.42 *இத்துடன் இலை மலிந்த சருக்கம் முற்றிற்று* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
870 views
5 days ago
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #சிவன் Good Morning🌞🙏 The Truth about Human Tongue:- It Takes 3 years to Learn how to use it. But, It takes Lifetime to Learn When & where to use it..! Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
918 views
5 days ago
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #சிவன் Good Morning🌞🙏 Always believe in who you are, and where you are going. Be strong in every circumstance and you'll conquer whatever comes in the way. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
1.3K views
7 days ago
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #சிவன் Good Morning🌞🙏 Don't ever be afraid to show who you really are, because as long as you are happy with yourself, no one else's opinion matters. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
790 views
7 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* *மானக்கஞ்சாற நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான சிவபக்தரின் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் வளம் பொருந்திய கஞ்சாறு (தற்போது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனதாண்டவபுரம்) அவதரித்தவர், இவர் சிவபெருமானின் அடியார்கள் மேல் கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாக, தன் மகளின் திருமண நாளன்றே அவளது நீண்ட கூந்தலை அறுத்துத் தானமாக வழங்கிய உன்னத தியாகத்திற்காக அறியப்படுகிறார்.* *மானக்கஞ்சாற நாயனார் தன் மகளை மற்றொரு சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்திருந்தார். திருமண நாளன்று, மணமகன் வீட்டார் கஞ்சாறு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையில், சிவபெருமான் ஒரு முதிய மகா விரதியார் (சிவனடியார்) கோலத்தில் நாயனாரின் இல்லத்திற்கு எழுந்தருளினார்.நாயனார் தனது மகளை அடியாரிடம் ஆசி பெறச் செய்தபோது, “இவளது நீண்ட கூந்தல் எனது பஞ்சவடி (பூணூல் போன்ற ஒரு ஆடை) செய்வதற்கு மிகவும் ஏற்றது” என்று அடியார் கூறினார். பெண்ணின் கூந்தலை வெட்டுவது மங்கலகரமான திருமணத்தில் பெரும் அபசகுனம் என்றும், மணமகன் அவளை நிராகரிக்கக்கூடும் என்றும் தெரிந்தும் நாயனார் சற்றும் தயங்கவில்லை. சிவனடியாரின் வார்த்தையைச் சிவக்கட்டளையாக ஏற்று, மணக்கோலத்தில் இருந்த தன் மகளின் அழகிய நீண்ட கூந்தலைத் தன் கத்தியால் உடனடியாக அறுத்து அவரிடம் சமர்ப்பித்தார்.* *நாயனாரின் ஈடிணையற்ற பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உடனே மறைந்து அன்னை பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இறைவனின் திருவருளால் அந்தப் பெண்ணின் கூந்தல் மீண்டும் பழையபடி அழகாக முளைத்தது. பின்னர் அங்கு வந்த கலிக்காம நாயனார் இந்த அதிசயத்தைக் கேட்டு, இறைவனின் லீலையை நேரில் காண முடியாமல் போனதை எண்ணி உருகி, அந்தப் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது நூலாறு நன்குணர்வோர் தாம்பாடும் நோன்மையது கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும் காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர். 1 கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும் தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும் மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள். 2 புயல்காட்டுங் கூந்தல்சிறு புறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண் முயல்காட்டும் மதிதோற்கும் முகங்காட்டக் கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர்காட்டுந் தடம்பணைகள். 3 சேறணிதண் பழனவயல் செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண் டலையுழவர் தாறரியும் நெடுங்கொடுவாள் அனையவுள தனியிடங்கள். 4 பாங்குமணிப் பலவெயிலும் சுலவெயிலும் உளமாடம் ஞாங்கரணி துகிற்கொடியும் நகிற்கொடியும் உளவரங்கம் ஓங்குநிலைத் தோரணமும் பூரணகும் பமும்உளவால் பூங்கணைவீ தியில்அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு. 5 Go to top மனைசாலும் நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும் வினைசாலும் உழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப் புனைசாயல் மயிலனையார் நடம்புரியப் புகல்முழவங் கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால். 6 அப்பதியிற் குலப்பதியாய் அரசர்சே னாபதியாம் செப்பவருங் குடிவிளங்கத் திருஅவதா ரஞ்செய்தார் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார் விழுமியவே ளாண்குடிமை வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார். 7 பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனிமதியின் அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற தணிவில்பெரும் பேறுடையார் தம்பெருமான் கழல்சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயுந் தொழில்பூண்டார். 8 மாறில்பெருஞ் செல்வத்தின் வளம்பெருக மற்றதெலாம் ஆறுலவுஞ் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம் ஈறில்பெருந் திருவுடையார் உடையாரென் றியாவையுநேர் கூறுவதன் முன்னவர்தம் குறிப்பறிந்து கொடுத்துள்ளார். 9 விரிகடல்சூழ் மண்ணுலகில் விளக்கியஇத் தன்மையராம் பெரியவர்க்கு முன்சிலநாள் பிள்ளைப்பே றின்மையினால் அரியறியா மலர்க்கழல்கள் அறியாமை யறியாதார் வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால் வழுத்தினார். 10 Go to top குழைக்கலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலே மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால் இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல் பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார். 11 பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களிசிறப்பச் சிறந்தநிறை மங்கலதூ ரியம்முழங்கத் தேவர்பிரான் அறந்தலைநின் றவர்க்கெல்லாம் அளவில்வளத் தருள்பெருக்கிப் புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார். 12 காப்பணியும் இளங்குழவிப் பதம்நீங்கிக் கமழ்சுரும்பின் பூப்பயிலும் சுருட்குழலும் பொலங்குழையும் உடன்தாழ யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற் றாடையுடன் கோப்பமைகிண் கிணியசையக் குறுந்தளிர்மெல் லடியொதுங்கி. 13 புனைமலர்மென் கரங்களினால் போற்றியதா தியர்நடுவண் மனையகத்து மணிமுன்றில் மணற்சிற்றில் இழைத்துமணிக் கனைகுரல்நூ புரம்அலையக் கழல்முதலாப் பயின்றுமுலை நனைமுகஞ்செய் முதற்பருவம் நண்ணினள்அப் பெண்ணமுதம். 14 உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை முலைவருத்த முறுவல்புறம் அலராத முகிண்முத்த நகையென்னும் நறுமுகைமென் கொடிமருங்குல் நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்தணைய. 15 Go to top திருமகட்கு மேல்விளங்குஞ் செம்மணியின் தீபமெனும் ஒருமகளை மண்ணுலகில் ஓங்குகுல மரபினராய்க் கருமிடற்று மறையவனார் தமராய கழல்ஏயர் பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர். 16 வந்தமூ தறிவோரை மானக்கஞ் சாறனார் முந்தைமுறை மையின்விரும்பி மொழிந்தமணத் திறங்கேட்டே எந்தமது மரபினுக்குத் தகும்பரிசால் ஏயுமெனச் சிந்தைமகிழ் வுறஉரைத்து மணநேர்ந்து செலவிட்டார். 17 சென்றவருங் கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக் குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிகவிரும்பி நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கும் நேர்வாய மன்றல்வினை மங்கலநாள் மதிநூல்வல் லவர்வகுத்தார். 18 மங்கலமாம் செயல்விரும்பி மகட்பயந்த வள்ளலார் தங்குலநீள் சுற்றமெலாம் தயங்குபெருங் களிசிறப்பப் பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்கள் இடைநெருங்கக் கொங்கலர்தண் பொழில்மூதூர் வதுவைமுகங் கோடித்தார். 19 கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர்குலப் பெருமானும் தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப மஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய. 20 Go to top வள்ளலார் மணமவ்வூர் மருங்கணையா முன்மலர்க்கண் ஒள்ளிழையைப் பயந்தார்தம் திருமனையில் ஒருவழியே தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம் உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் தாமணைவார். 21 முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில் கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி பண்டொருவன் உடலங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்தரளம் எனக்காதின் மிசையசையுங் குண்டலமும். 22 அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும் பைவன்பேர் அரவொழியத் தோளிலிடும் பட்டிகையும் மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச் செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும். 23 ஒருமுன்கைத் தனிமணிகோத் தணிந்தவொளிர் சூத்திரமும் அருமறைநூற் கோவணத்தின் மிசையசையும் திருவுடையும் இருநிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும் திருவடியில் திருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க. 24 பொடிமூடு தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க் கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத் தடிநீடும் மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார். 25 Go to top வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண் டெதிரெழுந்து சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார் எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே யெழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்என் றுருகியஅன் பொடுபணிந்தார். 26 நற்றவராம் பெருமானார் நலமிகும்அன் பரைநோக்கி உற்றசெயல் மங்கலமிங் கொழுகுவதென் எனஅடியேன் பெற்றதொரு பெண்கொடிதன் வதுவையெனப் பெருந்தவரும் மற்றுமக்குச் சோபனம்ஆ குவதென்று வாய்மொழிந்தார். 27 ஞானச்செய் தவரடிமேற் பணிந்துமனை யகம்நண்ணி மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் திருமகளைக் கொண்டணைந்து பானற்கந் தரமறைத்து வருமவரைப் பணிவித்தார். 28 தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறம்நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த் தணங்கிவள்தன் மயிர்நமக்குப் பஞ்சவடிக் காமென்றார் பரவஅடித் தலங்கொடுப்பார். 29 அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனையுருவிப் பொருள்செய்தா மெனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட. 30 Go to top வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம் அவர்மறைந்து பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி ஓங்கியவிண் மிசைவந்தார் ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத் தூங்கியபொன் மலர்மாரி தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார். 31 விழுந்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர் தமக்குமதிக் கொழுந்தலைய விழுங்கங்கை குதித்தசடைக் கூத்தனார் எழும்பரிவு நம்பக்கல் உனக்கிருந்த பரிசிந்தச் செழும்புவனங் களிலேறச் செய்தோமென் றருள்செய்தார். 32 மருங்குபெருங் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள் நெருங்கவிடை மேல்கொண்டு நின்றவர்முன் நின்றவர்தாம் ஒருங்கியநெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற் குவித்தையர் பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு நேர்பெற்றார். 33 தொண்டனார் தமக்கருளிச் சூழ்ந்திமையோர் துதிசெய்ய இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார் வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க மணக்கோலங் கண்டவர்கள் கண்களிப்பக் கலிக்காம னார்புகுந்தார். 34 வந்தணைந்த ஏயர்குல மன்னவனார் மற்றந்தச் சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பால் கேட்டருளிப் புந்தியினில் மிகவுவந்து புனிதனார் அருள்போற்றிச் சிந்தைதளர்ந் தருள்செய்த திருவாக்கின் திறங்கேட்டு. 35 Go to top மனந்தளரும் இடர்நீங்கி வானவர்நா யகரருளால் புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை மணம்புணர்ந்து தனம்பொழிந்து பெருவதுவை உலகெலாந் தலைசிறப்ப இனம்பெருகத் தம்முடைய எயின்மூதூர் சென்றணைந்தார். 36 ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க் கீந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமைஎன் அளவிற் றாமே மருவிய கமரிற் புக்க மாவடு விடேலென் னோசை உரிமையால் கேட்க வல்லார் திறமினி யுரைக்க லுற்றேன். 37 *"மலை மலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏