Follow
A Mohan Raj
@19106433
4,240
Posts
11,895
Followers
A Mohan Raj
689 views
1 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 33. சுத்தாஅசுத்தம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் உள்ள 33-வது அதிகாரம் "சுத்தாஅசுத்தம்" ஆகும். இதில் ஆன்மாவின் தூய்மை (சுத்தம்) மற்றும் மலங்களால் ஏற்படும் தூய்மையின்மை (அசுத்தம்) குறித்த தத்துவங்களை திருமூலர் விளக்குகிறார்*. இந்த அதிகாரத்தில் உள்ள சில முக்கிய கருத்துக்கள்... இறைவனின் இருப்பிடம் : நாசி நுனிக்கு மேலே பன்னிரண்டு அங்குல உயரத்தில் (துவாதசாந்தம்) இறைவன் வீற்றிருப்பதை யாரும் அறிவதில்லை. மாயையின் நீக்கம் : மாயை என்னும் திரை விலகினால் மட்டுமே மறைபொருளாகிய இறைவன் வெளிப்படுவார். மாயையை வென்றவர்களுக்கு உடலோ, மனமோ ஒரு தடையாக இருக்காது. வினைகளின் விளைவு : நாம் செய்யும் கருமங்கள் மற்றும் பிறவிக்குக் காரணமான வினைகளை உணர்ந்து, அவற்றை நீக்கி அன்பினால் இறைவனைப் பற்ற வேண்டும். மௌனத்தின் சிறப்பு : மௌனமாக (சும்மா) இருப்பதும், இறைவனின் திருநாமத்தைச் சிந்திப்பதும், அட்டமா சித்திகளை விட மேலான தூய நெறியாகும். பாடல் வரிகள் : *33. சுத்தாஅசுத்தம்* 2546 நாசி நுனியினின் நான்குமூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாமே. 1 2547 கருமங்கள் ஒன்று கருதுங் கருமத் துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப் கருவினை யாவது கண்டகன் றன்பின் புரிவன கன்மக் கயத்துட் புகுமே. 2 2548 மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானே. 3 2549 மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக் கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில் ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாமே. 4 2550 காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5 2551 ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாமே. 6 2552 ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே. 7 2553 வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே. 8 2554 தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூயனல் தூயவு மாமே. 9 2555 தூயது வாளா வைத்தது தூநெறி தூயது வாளா நாதன் திருநாமம் தூயது வாளா அட்டமா சித்தியும் தூயது வாளா தூயடிச் சொல்லே. 10 2556 பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. 11. 2557 வினையா மசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார் வினையாளார் மிக்க விளைவறி யாரே. 12 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
5K views
1 days ago
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Instead of thinking about what you’re missing, try to thinking about what you have that everyone else is missing. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
8.1K views
2 days ago
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Stop giving other people the power to control your happiness, your mind, and your life. If you don't take control of yourself and your own life, someone else is bound to try. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
2.7K views
3 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 31-வது அதிகாரமாக விளங்குவது "எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை" (அல்லது அஷ்டதள கமல முக்குண அவத்தை) இந்த அதிகாரம் மனித உடலின் இதயத் தானத்தில் உள்ள எட்டிதழ் தாமரையில் (அனாகத சக்கரம்) ஆன்மா அடையும் நிலைகளையும், அங்கு முக்குணங்கள் (சத்துவம், இராசதம், தாமதம்) எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதையும் விளக்குகிறது.* *அதிகாரத்தின் முக்கியக் கருத்துக்கள்* எட்டிதழ் தாமரை : இதயத்தில் உள்ள இந்த எட்டிதழ் தாமரையின் ஒவ்வொரு இதழிலும் ஆன்மா நிலைபெறும்போது வெவ்வேறு உணர்வுகள் அல்லது அவத்தைகள் தோன்றும். திசை தெய்வங்கள் : இதழ்கள் ஒவ்வொன்றிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசன் ஆகிய எண் திசை பாலகர்களின் ஆதிக்கம் இருப்பதை திருமூலர் குறிப்பிடுகிறார். முக்குணங்களின் தாக்கம் : ஆன்மா இந்த இதழ்களில் சஞ்சரிக்கும் போது சத்துவம் (அமைதி/அறிவு), இராசதம் (வேகம்/செயல்), தாமதம் (சோம்பல்/மயக்கம்) ஆகிய குணங்களால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளை (அவத்தைகளை) அடைகிறது. பாடல் வரிகள் : *31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை* 2527 உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. 1 2528 ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 2 2529 மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 3 2530 ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுபொருள் தானே. 4 2531 திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 5 2532 ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானே. 6 2533 பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 7 2534 புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. 8 2535 ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 9 2536 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவடை யோரே. 10 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
724 views
3 days ago
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Nice quote. *LIFE CAN EITHER BE ACCEPTED or CHANGED*. If it is not ACCEPTED, it must be CHANGED. If it cannot be changed, then it must be ACCEPTED. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
2.6K views
4 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 30-வது அதிகாரமாக "புறங்கூறாமை" அமைந்துள்ளது. தன்னை அறியாதவர்கள், பிறரைப் பற்றிப் புறம் பேசுவதில் காலத்தை வீணடிப்பார்கள். மெய்யறிவு பெற்றவர்கள் புறம் பேசுதலைத் தவிர்த்து, அகத்தே இறைவனைத் தேடுவார்கள் என்பது இதன் சாரம்.* பாடல் வரிகள் : *30. புறங்கூறாமை* 2512 பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனக் காண்குற மாட்டார் நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1 2513 கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. 2 2514 கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப ராமே. 3 2515 பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. 4 2516 என்னிலும் என்னுயி ராய இறைவனைப் பொன்னிலும் மாமணி யாய புனிதனை மின்னிய எவ்வுய ராய விகிர் தனை உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே. 5 2517 நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும் வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. 6 2518 நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப் பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்அறி வாளர் விரும்புகின் றாரே. 7 2519 விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக் கண்ணற வுள்ளே கருதிடின் காலையில் எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ பண்ணிடில் தன்மை பராபர னாமே. 8 2520 ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன் பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன் கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே. 9 2521 போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக் காற்றின் விளக்கது காயம் மயக்குறும் அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே. 10 2522 நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண் மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே. 11 2523 ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந் தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண் டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு வானகஞ் செய்யு மறவனு மாமே. 12 2524 மாமதி யாமதி யாய்நின்ற மாதவர் தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந் தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக் காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13 2525 பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச இருளைத் துரந்து மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. 14 2526 சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 15 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
2.5K views
6 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தின் 29-வது அதிகாரமான உபசாந்தம், ஆன்மா மாயை மற்றும் வினைகளிலிருந்து விடுபட்டு அமைதிபெற்று, சிவத்துடன் இரண்டறக் கலக்கும் உன்னத நிலையை விளக்குகிறது.* *உபசாந்தத்தின் இயல்பு: உபசாந்தம் என்பது மனமானது புறப்பற்றுகளைத் துறந்து, துரியாதீத நிலையில் சிவத்துடன் ஒன்றி நிற்கும் பேரமைதி நிலையாகும். இந்த அதிகாரத்தில் உள்ள பாடல்கள், ஒரு சாதகன் எவ்வாறு படிப்படியாகத் தனது தத்துவங்களை நீக்கி, சிவப்பேறு அடைகிறான் என்பதை விவரிக்கின்றன*. பாடல் வரிகள் : *29. உபசாந்தம்* 2506 முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1 2507 காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும் உப சாந்தப் பரிசிதே. 2 2508 அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத் தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. 3 2509 ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4 2510 வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத் தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. 5 2511 பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன் கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. 6 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
656 views
6 days ago
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Success in life will create a crowd for you. Loneliness in life will create space for you, but tough times in life will create the true person in you. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
See other profiles for amazing content