ஃபாலோவ்
A Mohan Raj
@19106433
4,204
போஸ்ட்
11,572
பின்தொடர்பவர்கள்
A Mohan Raj
2.2K காட்சிகள்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 14. அறிவுதயம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் உள்ள 14-வது பகுதி அறிவுதயம் (ஞானோதயம்) ஆகும். இது ஆன்மா தனக்குச் சுட்டறிவு இன்றி, சிவ அருளால் எல்லா அறிவும் தன்னிடமே உள்ளது என்பதை உணர்வதைக் குறிக்கிறது*. *சிறப்பம்சங்கள் : ஆன்மா என்பது சிவனோடு ஒன்றி இருக்கும் அறிவாற்றல் உடையது என்ற உண்மையை உணர்த்துவது. மலபரிபாகம் மற்றும் குருவருளால், அறியாமை நீங்கி ஞானம் பிறக்கும் நிலையை விளக்குகிறது. சத்தி நிபாதத்தால் சிவனைத் தன் அகத்தில் உணர்ந்து, தன்னைச் சிவமாகவே கருதி வழிபடச் செய்யும் நிலை*. பாடல் வரிகள் : *14. அறிவுதயம்* 2355 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. 1 2356 அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச் சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப் பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. 2 2357 அறிவு வடிவென்று அறியாத என்னை அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே அறிவு வடிவென்று அருந்திருந் தானே. 3 2358 அறிவுக்கு அழிவில்aல ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே. 4 2359 ஆயு மலரின் அணிமலர் தன்மேலே பாய இதழ்கள் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகியே போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. 5 2360 மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. 6 2361 அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின் அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம் அறிவுஅறி வாக அணிமாதி சித்தி அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே. 7 2362 அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம் அறிவுஅறி யாமை யாரும் அறியார் அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால் அறிவுஅறி யாமை அழகிய வாறே. 8 2363 அறிவுஅறி யாமையை நீவி யவனே பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே. 9 2364 அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. 10 2365 மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும் பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. 11 2366 என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. 12 2367 மாய விளக்கது நின்று மறைந்திடும் தூய விளக்கது நின்று சுடர்விடும் காய விளக்கது நின்று கனன்றிடும் சேய விளக்கினைத் தேடுகின் றேனை. 13 2368 தேடுகின் றேன்திசை எட்டோடு இரண்டையும் நாடுகின் றேன்நல மேஉடை யானடி பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக் கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. 14 2369 முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன் மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. 15 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.4K காட்சிகள்
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Your biggest competitor should always be yourself. Self-motivation is key. You won't be successful without it. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
716 காட்சிகள்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 13. நின்மல அவத்தை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் பதினோராவது பகுதியான "பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்", ஆன்மாவின் உயர்நிலை அனுபவங்களை விளக்குகிறது. துவாதச கலைகளில் 11-வது கலை (சமனை) மற்றும் பன்னிரண்டாம் நிலை (உன்மனை) சார்ந்த நிலைகளை ஆன்மா அடையும்போது ஏற்படும் ஆனந்தம், ஓங்காரம், உடல் சார்ந்த மாற்றங்கள் மற்றும் பராவத்தை நிலையை இப்பாடல்கள் விவரிக்கின்றன*. *எட்டாம் தந்திரத்தில் 13-வது அதிகாரமாக "நின்மல அவத்தை" "நின்மல" என்பது மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) நீங்கிய நிலையைக் குறிக்கும். ஆன்மா சிவத்தைச் சார்ந்து, தனது முனைப்பைக் கைவிட்டு, தன்னை மறந்து இறைவனோடு இரண்டறக் கலந்து விரிந்து நிற்கும் நிலையே நின்மல அவத்தை எனப்படும்*. *மல நீக்கம் : மலம் தன் வலிமை இழந்த நிலையில் ஆன்மா அடையும் பரிசுத்த நிலை இது*. *ஐந்து நிலைகள் : பொதுவாகக் கூறப்படும் சாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு) போன்ற நிலைகள் மலத்தோடு தொடர்புடையவை. ஆனால், நின்மல அவத்தையில் இவை இறை உணர்வோடு கூடிய சுத்த நிலைகளாக மாறுகின்றன*. *முத்தி நிலை : ஆன்மா உடம்போடு கூடி இருக்கும்போதே இன்ப துன்பங்களைக் கடந்து சிவபோகத்தில் திளைப்பதை இது விவரிக்கிறது* பாடல் வரிகள் : *13. நின்மல அவத்தை* 2304 ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. 1 2305 காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம் மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே. 2 2306 ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது தான்மா மறையறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால் ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே. 3 2307 உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின் கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே. 4 2308 எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர் பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச் செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. 5 2309 காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. 6 2310 ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில் ஆன வகையை விடும்அடைத் தாய்விட ஆன மாலதீதம் அப்பரந் தானே. 7 2311 சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச் சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. 8 2312 வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. 9 2313 கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே. 10 2314 தானே சிவமான தன்மை தலைப்பட ஆன மலமும்அப் பாச பேதமும் ஆன குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன்மதி போல்பலராவே. 11 2315 நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத்தக்க மாலும் திசைமுகன் தானும் உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. 12 2316 ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாமே. 13 2317 ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித் தெழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேதாக மங்களும் நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே. 14 2318 முன்னை அறிவினில் செய்த முதுதவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அ தன்றிப் பின்னை அறிவது பேயறி வாகுமே. 15 2319 செயலற் றிருக்கச் சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. 16 2320 தான்அவ னாகும் சமாதிகை கூடினால் ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம் ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே. 17 2321 தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி தொலையா இருளொளி தோற்ற அணுவும் தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. 18 2322 தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம் ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே. 19 2323 அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. 20 2324 தான்அவ னாகிய ஞானத் தலைவனை வானவ ராதியை மாமணிச் சோதியை ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே. 21 2325 ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிய அருளே சிவானந்த மாமே. 22 2326 ஆனந்த மாகும் அரனருட் சத்தியில் தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில் கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே. 23 2327 அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. 24 2328 சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச் சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. 25 2329 தானே அறியான் அறிவிலோன் தானல்லன் தானே அறிவான் அறிவு சதசத்தென்று ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. 24 2330 தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும் தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. 27 2331 தன்னை அறிந்து சிவனுடன் தானாக மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும் பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. 28 2332 ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான் மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே. 29 2333 உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம் உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே. 30 2334 தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர் கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும் பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே. 31 2335 இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச் சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே. 32 2336 உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே. 33 2337 சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர் பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர் ஆருங்கண் டோரார் அவையருள் என்றே. 34 2338 எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின் எய்தினர் செய்யும் இருஞான சத்தியின் எய்தினர் செய்யும் இருஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறையருள் தானே. 35 2339 திருந்தினர் விட்டார் திருவில் நரகம் திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம் திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 36 2340 அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவனரு ளாமே. 37 2341 அருளான சத்தி அனல் வெம்மை போல பொருள் அவனாகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும் திருவருள் ஆனந்தி செம்பொருளாமே. 38 2342 ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள் பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப் பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே. 39 2343 பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் புணர்போதம் போதமும் நாதமும் நாத முடன்நாக நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. 40 2344 மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப் பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள் ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. 41 2345 ஆறாது அகன்று தனையறிந் தானவன் ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள் தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே. 42 2346 தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. 43 2347 சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே. 44 2348 தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம் தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத் தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர் தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. 45 2349 தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும் தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில் தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே. 46 2350 அறியகி லேன்என்று அரற்றாதே நீயும் நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை இருசுட ராகி இயற்றவல் லானும் ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. 47 2351 மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும் உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே. 48 2352 ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர் தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர் கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே. 49 2353 குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார் குறிஅறி யார்கடம் கூடல் பெரிது குறிஅறி யாவகை கூடுமின் கூடி அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. 50 2354 ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம் வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத் தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர் தானே பிறப்போடு இறப்பறி யாரே. 51 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
629 காட்சிகள்
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Just because the past didn't turn out like you wanted it to, doesn't mean your future can't be better than you ever imagined. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
4.2K காட்சிகள்
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Think Over It Opinions Are Like Wrist Watches. Everyone’s Watch Shows Different Time. But, Everyone Believes That Their Time Is Correct.. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
A Mohan Raj
16.5K காட்சிகள்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணம், மற்றும் 10. அண்டாதி பேதம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் 9-வது பகுதியான "முக்குண நிர்க்குணம்" (பாடல் 2296), சாத்திகம், இராசதம், தாமதம் ஆகிய மூன்று குணங்களும் (முக்குணங்கள்) மற்றும் அவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையை (நிற்குணம்) விளக்குகிறது. இது துரிய நிலையில் முக்குணங்களும் மாய்ந்து (அழிந்து), நிர்க்குணமான சிவநிலை எய்துதலை எடுத்துரைக்கிறது* *எட்டாம் தந்திரத்தில் பத்தாவது பகுதியான "அண்டாதி பேதம்" (#2297 - #2298) அண்டத்தின் (பிரபஞ்சம்/உடல்) வகைகளை விளக்குகிறது. மனித உடல் முட்டையோடு போன்ற ஒளி மண்டலத்தில் சூழப்பட்டுள்ளது என்றும், பக்குவம் பெற்ற நிலையில், குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறுவது போல ஆன்மா பாசத்தை நீத்து சுத்தநிலையை அடையும் என்பதை இப்பகுதி கூறுகிறது*. பாடல் வரிகள் : *9. முக்குண நிர்க்குணம்* 2296 சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால் வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 1 *10. அண்டாதி பேதம்* 2297 பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல்அள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 1 2298 ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல் மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க் தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே. 2 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
712 காட்சிகள்
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் எட்டாவது பகுதியாக பராவத்தை அமைந்துள்ளது. பராவத்தை என்பதன் சுருக்கமான விளக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு பொருள் : 'பராவத்தை' என்பது மேலான அவத்தை அல்லது நிலை என்று பொருள்படும். இது ஆன்மா சகல நிலைகளில் இருந்து நீங்கி, இறைவனது அருளால் சுத்த அவத்தையில் பொருந்தும் உயர் நிலையைக் குறிக்கிறது, இந்தப் பகுதியில் பாடல்கள் 2269 முதல் 2295 வரை இடம்பெற்றுள்ளன*. முக்கியக் கருத்துக்கள் : ஆன்மாக்கள் சகல நிலையில் ஐந்து மலங்களால் (ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி) பிணைக்கப்பட்டுள்ளன. இறைவனின் அருளால் இந்தப் பந்தம் நீங்கி, மனம் சிவத்தில் பதியச் செய்யும் நிலையே பராவத்தை ஆகும். சூரிய ஒளி கண்டவுடன் அந்தி இருள் விலகுவது போல, சிவபெருமானின் அருளால் ஆன்மாவைச் சூழ்ந்துள்ள ஐம்மலங்களும் மாறும் எனத் திருமூலர் விளக்குகிறார் (பாடல் 2293). மாயை மற்றும் தத்துவங்களைக் கடந்து, 'தான்' என்ற முனைப்பு அற்று, சுத்த நிலையில் ஆன்மா இறைவனை உணர்வதை இது விவரிக்கிறது. ஆன்மீகப் பயன் : பராவத்தை நிலையில் உள்ள ஆன்மா, புறப் பொருள்களின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு, உள்முகமாகத் திரும்பிப் பரம்பொருளுடன் ஒன்றிணையும் தகுதியைப் பெறுகிறது. பாடல் வரிகள் : *8. பராவத்தை* 2269 அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம் நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட வஞ்சத் திருந்த வகையறிந் தேனே. 1 2270 சத்தி பராபரம் சாந்தி தனிலான சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன் சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே. 2 2271 ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. 3 2272 அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே. 4 2273 உரிய நனாத்துரி யத்தில் இவளாம் அரிய துரிய நனவாதி மூன்றில் பரிய பரதுரி யத்தில் பரனாம் திரிய வரும்துரி யத்தில் சிவமே. 5 2274 பரமாம் அதீதமே பற்றறப் பற்றப் பரமாம் அதீதம் பயிலப் பயிலப் பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார் பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே. 6 2275 ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும் வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின் தூய அறிவு சிவானந்த மாகிப்போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே. 7 2276 துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. 8 2277 நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின் மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன்வடி வாமே. 9 2278 விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்திடை ஈடான மாயை பொருந்தும் துரியம் புரியல்தா னாகும் தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே. 10 2279 உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய் உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. 11 2280 கருவரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே. 12 2281 அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணுஅசை வின்கண் ஆனகனவும் அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி பணியில் பரதுரி யம்பர மாமே. 13 2282 பரதுரி யத்து நனவும் பரந்து விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவதுரி யத்தனு மாமே. 14 2283 பரமா நனவின்பின் பால்சக முண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே. 15 2284 சீவன் துரியம் முதலாகச் சீரான ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும் ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே. 16 2285 பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில் பரம்சிவன் மேலாம் பரநனவாக விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே. 17 2286 சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப் பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே. 18 2287 கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும் உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார் குறிப்பது கோலம் அடலது வாமே. 19 2288 பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம்இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியலுற்று இன்புற்ற வாறே. 20 2289 பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கர ணங்களாம் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. 21 2290 மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே. 22 2291 ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி ஈறார் பரையின் இருளற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. 23 2292 துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம் புரியப் பரையில் பராவத்தா போதம் திரிய பரமம் துரியம் தெரியவே. 24 2293 ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம் அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே. 25 2294 ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும் பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. 26 2295 நின்றான் அருளும் பரமும்முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. 27 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
3.3K காட்சிகள்
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Sometimes struggles are exactly what we need in our life. If we were to go through our life without any obstacles, we would be crippled. We would not be as strong as what we could have been. Give every opportunity a chance, leave no room for regrets. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
See other profiles for amazing content