#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - திருவாவினன்குடி.*
*திருமுருகாற்றுப்படையில் இரண்டாம் பகுதியாக விளங்குவது திருவாவினன்குடி (பழனி) ஆகும். முருகப்பெருமான் அலைமகள் (லட்சுமி), நிலமகள் (பூதேவி), இந்திரன், முனிவர்கள் மற்றும் தேவர்களுடன் வீற்றிருக்கும் காட்சியை நக்கீரதேவ நாயனார் இதில் விவரித்துள்ளார்.*
பாடல் வரிகள் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - திருவாவினன்குடி*
3. திருவாவினன்குடி
சீரை தைஇய
உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும்
வால்நரை முடியினர்
மாசற இமைக்கும்
உருவினர் மானின்
உரிவை தைஇய
ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கும்
யாக்கையர் நன்பகல் (130)
பலவுடன் கழிந்த
உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய
மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா
அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய
தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த
காட்சியர் இடும்பை (135)
யாவதும் அறியா
இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி
முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன
மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த
தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த
செய்வுறு திவவின் (140)
நல்லியாழ் நவின்ற
நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர்
இன்னரம் புளர
நோயின் றியன்ற
யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும்
மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும்
திதலையர் இன்னகைப் (145)
பருமம் தாங்கிய
பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு
மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய
தூம்புடை வாலெயிற்று
அழலென உயிர்க்கும்
அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும்
பல்வரிக் கொடுஞ்சிறைப் (150)
புள்ளணி நீள்கொடிச்
செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய
பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும்
இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய
முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய
நாட்டத்து நூறுபல் (155)
வேள்வி முற்றிய
வென்றடு கொற்றத்து
ஈரிரண் டேந்திய
மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை
உயர்த்த யானை
எருத்தம் ஏறிய
திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து
நன்னகர் நிலைஇய (160)
உலகங் காக்கும்
ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந்
தலைவர் ஆக
ஏமுறு ஞாலந்
தன்னில் தோன்றித்
தாமரை பயந்த
தாவில் ஊழி
நான்முக ஒருவற்
சுட்டிக் காண்வரப் (165)
பகலில் தோன்றும்
இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப்
பதினொரு மூவரொடு
ஒன்பதிற் றிரட்டி
உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன
தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன
செலவினர் வளியிடைத் (170)
தீயெழுந் தன்ன
திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன
குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம்
பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர்
வந்துடன் காணத்
தாவில் கொள்கை
மடந்தையொடு சில்நாள் (175)
ஆவினன்குடி அசைதலும் உரியன், அதா அன்று
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏