பன்னிரு திருமுறை
541 Posts • 396K views
A Mohan Raj
1K views 26 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில் உள்ள 14-ஆம் பகுதி "அடியார் பெருமை" ஆகும். இப்பதிகத்தில், ஒருநாட்டில் சிவனை நாடும் அடியார்கள் நிறைந்து இருந்தால், அந்த நாடு பகை இல்லாமல், மழை பொழிந்து, விளைபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் செழிப்பாக வாழ்வார்கள் என்று திருமூலர் விளக்குகிறார்*. பாடல் வரிகள் : *14. அடியார் பெருமை* 1868 திகைக்குரி யானொரு தேவனை நாடும் வகைக்குரி யானொரு வாது இருக்கில் பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 1 1869 அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும் அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 2 1870 கொண்ட குறியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள் உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 3 1871 அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும் கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 4 1872 பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள் உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக் கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 5 1873 இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர் புயங்களும் எண்டிசை போதுபா தாள மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 6 1874 அகம்படி கின்றநம் ஐயனை ஒரும் அகம்படி கண்டவர் அல்லலில் சேரார் அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 7 1875 கழிவும் முதலும் காதல் துணையும் அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே 8 1876 என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. 9 1877 துணிந்தார் அகம்படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 10 1878 தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே. 1 1 1879 அறியாப் பருவத்து அரன்அடி யாரைக் குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 12 1880 அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன் அவன்பால் அணுகியே நாடும் அடியார் இவன்பால் பெருமை இலயமது ஆமே. 13 1881 முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள் எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 14 1882 சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 15 1883 மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன் மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன் மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள் மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 16 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
15 likes
18 shares
A Mohan Raj
626 views 11 hours ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 27. பசு இலக்கணம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும் *ஏழாம் தந்திரத்தில் உள்ள "பசு இலக்கணம்" (உயிரின் இயல்பு) என்ற அதிகாரம், பாசக்கட்டில் (பந்தத்தில்) சிக்கியுள்ள ஆன்மாவின் தன்மைகளை விளக்குகிறது*. இந்த அதிகாரத்தின் முக்கிய சாராம்சம் பின்வருமாறு: 1. பசு என்பதன் பொருள் சைவ சித்தாந்தத்தில் 'பசு' என்பது உயிரைக் (ஆன்மா) குறிக்கும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால் பிணைக்கப்பட்டு, அறிவற்ற நிலையில் இருக்கும் உயிரே 'பசு' எனப்படுகிறது 2. பசுவின் இயல்பு (பசு இலக்கணம்) மறைந்திருக்கும் அறிவு: ஆன்மா இயல்பிலேயே அறிவுடையது என்றாலும், ஆணவ மலம் அதனை மறைத்துக் கொண்டிருக்கிறது. இது சூரியனை மேகம் மறைப்பது போன்றது. சார்ந்ததன் வண்ணமாதல்: உயிர் எதைச் சார்ந்திருக்கிறதோ, அதன் தன்மையைப் பெறும். உலகப் பொருட்களைச் சார்ந்து நின்றால் 'சகலர்' என்றும், இறைவனைச் சார்ந்து நின்றால் 'முத்தர்' என்றும் போற்றப்படும். மலங்களால் கட்டுப்படுதல்: மும்மலங்களின் பிடியால் ஆன்மா தன்னுடைய உண்மையான சிவசொரூபத்தை உணராமல், உலக இன்ப துன்பங்களில் உழல்கிறது. 3. திருமந்திரப் பாடலின் கருத்து (உதாரணம்) இந்த அதிகாரத்தில் வரும் பாடல்கள், பசு (உயிர்) எவ்வாறு இறைவனுடன் கலக்க முடியாமல் தவிக்கிறது என்பதை விளக்குகின்றன. "பசுவே பசுவென்று பறைந்தறி விப்பார்" என்று தொடங்கும் பாடல்கள் மூலம், உயிர்கள் தங்களை 'பசு' (கட்டுண்ட உயிர்) என்று உணர்ந்து, அந்தப் பாசக்கட்டுகளை நீக்கிக் கொண்டால் மட்டுமே 'பதி'யாகிய இறைவனை அடைய முடியும் என்பதை திருமூலர் வலியுறுத்துகிறார். 4. முக்தி நிலை பசுவின் அறியாமை நீங்கி, அதன் 'பசுத்துவம்' (விலங்குத் தன்மை அல்லது கட்டுண்ட நிலை) அழியும் போது, அது சிவனோடு ஒன்றிப் பேரின்பத்தை அடைகிறது. இந்த மாற்றமே பசு இலக்கணத்தின் இறுதி நோக்கமாகக் கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், பாசத்தில் கட்டுண்டிருக்கும் உயிர் எவ்வாறு விடுதலை பெற்று இறைவனைச் சேர முடியும் என்பதைக் கூறுவதே இந்த அதிகாரம்*. பாடல் வரிகள் : *27. பசு இலக்கணம்* 2005 உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1 2006 அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம் தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால் பின்ன மடஅன்னம் பேறணு காதே. 2 இரண்டு பாடல்கள் தான் கிடைத்தது🙏 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
22 likes
9 shares