பன்னிரு திருமுறை

473 Posts • 397K views
chellakannan
4K views 12 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருஐயாறு #பதிகம்_027 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
66 likes
49 shares
A Mohan Raj
2K views 27 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - பழமுதிர்சோலை* *திருமுருகாற்றுப்படையில் பழமுதிர்சோலை என்பது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது மற்றும் இறுதிப் படை வீடாகப் போற்றப்படுகிறது. சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில், இப்பகுதி நூலின் இறுதிப் பகுதியாக அமைந்துள்ளது.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - பழமுதிர்சோலை* சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் (220) ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறிஅயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225) மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும் மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் (230) செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் (235) பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழிசை அருவியோடு இன்னியம் கறங்க (240) உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் (245) கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே யாண்டாண் டாயினும் ஆகக் காண்தக (250) முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைதொழுஉப் பரவிக் கால்உற வணங்கி நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ (255) ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி வானோர் வணங்குவில் தானைத் தலைவ (260) மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265) குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள (270) அலர்ந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (275) போர்மிகு பொருந குரிசில் எனப்பல யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் (280) குறித்தது மொழியா அளவையில் குறித்துடன் வேறுபல் உருவில் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285) இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி (290) அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ ஆகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295) வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300) ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305) நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் (310) கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம் பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்பச் சேண்நின்று (315) இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
20 likes
23 shares
chellakannan
471 views 2 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருஐயாறு #பதிகம்_028 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
11 likes
16 shares