A Mohan Raj
1K views
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 5. ஆத்மலிங்கம்* (உயிர்ச்சிவம் )
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
*திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும்*
*ஏழாம் தந்திரத்தின் ஐந்தாம் பகுதி 'ஆத்மலிங்கம்' எனப்படும்; இது அருவமாக இருக்கும் ஆன்மாவின் லிங்க வடிவத்தைக் குறிக்கிறது, அகரம் (அ), உகரம் (உ) ஆகிய எழுத்துக்களின் சேர்க்கையே லிங்க வடிவம் என்றும், சத்தி சிவமாக மாறுவதே ஆத்மலிங்கம் என்றும், மனம், உயிர், உடல் அனைத்தும் சிவத்தையே குறிக்கின்றன என்றும் விளக்குகிறது, ஆன்ம ஞானத்தின் மூலமாக இறைவனை உணர்வதே இதன் சாராம்சம்*.
பாடல் வரிகள் :
*5. ஆத்மலிங்கம்* (உயிர்ச்சிவம் )
1753 அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே. 1
1754 ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 2
1755 சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே. 3
1756 தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 4
1757 விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. 5
1758 சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 6
1759 மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 7
1760 பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்னடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 8
1761 பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 9
1762 அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று
சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 10
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
17 likes
15 shares