பன்னிரு திருமுறை

553 Posts • 397K views
chellakannan
528 views 1 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்லிக்கா #பதிகம்_019 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #தேவாரம் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #திருஞானசம்பந்தர்
16 likes
11 shares
chellakannan
543 views 2 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பூர் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
15 likes
13 shares
A Mohan Raj
3K views 17 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 31-வது அதிகாரமாக விளங்குவது "எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை" (அல்லது அஷ்டதள கமல முக்குண அவத்தை) இந்த அதிகாரம் மனித உடலின் இதயத் தானத்தில் உள்ள எட்டிதழ் தாமரையில் (அனாகத சக்கரம்) ஆன்மா அடையும் நிலைகளையும், அங்கு முக்குணங்கள் (சத்துவம், இராசதம், தாமதம்) எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதையும் விளக்குகிறது.* *அதிகாரத்தின் முக்கியக் கருத்துக்கள்* எட்டிதழ் தாமரை : இதயத்தில் உள்ள இந்த எட்டிதழ் தாமரையின் ஒவ்வொரு இதழிலும் ஆன்மா நிலைபெறும்போது வெவ்வேறு உணர்வுகள் அல்லது அவத்தைகள் தோன்றும். திசை தெய்வங்கள் : இதழ்கள் ஒவ்வொன்றிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசன் ஆகிய எண் திசை பாலகர்களின் ஆதிக்கம் இருப்பதை திருமூலர் குறிப்பிடுகிறார். முக்குணங்களின் தாக்கம் : ஆன்மா இந்த இதழ்களில் சஞ்சரிக்கும் போது சத்துவம் (அமைதி/அறிவு), இராசதம் (வேகம்/செயல்), தாமதம் (சோம்பல்/மயக்கம்) ஆகிய குணங்களால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளை (அவத்தைகளை) அடைகிறது. பாடல் வரிகள் : *31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை* 2527 உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. 1 2528 ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 2 2529 மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 3 2530 ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுபொருள் தானே. 4 2531 திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 5 2532 ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானே. 6 2533 பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே 7 2534 புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. 8 2535 ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 9 2536 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவடை யோரே. 10 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
87 likes
85 shares