ஃபாலோவ்
திருநீற்றுச் சுவடு
@193036147
6,682
போஸ்ட்
11,158
பின்தொடர்பவர்கள்
திருநீற்றுச் சுவடு
7.9K காட்சிகள்
14 மணி நேரத்துக்கு முன்
#🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 கருப்பு கயிறு கட்டுபவரா ... உங்களுக்கே தெரியாத உண்மை, என்ன என்று தெரிந்து கொள்வோம்* ... தற்காலத்திய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது புதிய பேஷனாகி வருகிறது. வெறும் கருப்பு கயிறு மட்டுமல்ல, அதனுடன் கிறிஸ்டைன், யானை, இதயம், முத்து போன்ற சிறிய லாக்கெட்டுகளையும் சேர்த்து அணிவதால், இது ஒரு ஸ்டைலிஷ் அணிகலனாக மாறியுள்ளது. ஆனால், இந்த பழக்கம் எப்போதும் புதியது அல்ல; இது நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவரும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது திருஷ்டிக்கான ரீதியில் செய்கிறார்கள். திருஷ்டியைத் தவிர்க்கும் பழக்கம், சுத்தி போடுவது போன்ற மரபு முறைகளை போலவே, முன்னோர்கள் கடைபிடித்திருந்தனர். இதில் ஆண்கள் பொதுவாக வலது காலில், பெண்கள் இடது காலில் கருப்பு கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இதற்கான ஆன்மிக காரணங்களும் குறிப்பிடப்படுகின்றன. பாரம்பரிய நம்பிக்கைகள்படி, காலில் கருப்பு கயிறு கட்டுவதால் சனி தோஷம் நீங்கும், ராகு-கேது பாதிப்புகள் வராது என்று கூறப்படுகிறது. முன்பு, வீட்டில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலிருந்து வந்தால் அல்லது விபத்துகள் ஏற்பட்டால், பாட்டிகள் காலில் கருப்பு கயிறைக் கட்டி அவர்களை காக்க முனைந்திருப்பார்கள். குறிப்பாக, யானையின் முடி கொண்டு மோதிரம் போல் வெள்ளியில் அல்லது தங்கத்தில் செய்து கைகளில் அணிவிப்பார்கள். இதன் நோக்கம் கண் திருஷ்டியைத் தவிர்க்கும் என்பதாகும். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமையான பழமொழி இதனை ஒட்டி வருகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் பார்வை சக்தி அதிகம் கொண்டதாகும். இதனால் கண் படாமல் இருக்க குழந்தைகளாக இருந்தால், கன்னத்தில் கருப்பு மை வைத்து புள்ளி வைப்பதும், காலில் கருப்பு கயிறு கட்டுவதும் பின்பற்றப்படுகிறது. இடுப்பில் அணியக்கூடிய அரைஞாண் கயிறும் கண் திருஷ்டியை நீங்கவும், நோய் நொடி இல்லாமல் இருக்கவும் பயன்படுகிறது. கருப்பு கயிறு உடலில் நேர்மறை சக்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்களை உடலுக்கு உறிஞ்சும் தன்மை அதற்கு உண்டு. இதன் மூலம் உடல்நலக்கோடு, மனநிலை சீராகவும், எண்ணங்கள் அமைதியாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, கணுக்கால் பகுதியில் கருப்பு கயிறு கட்டினால் நாடியின் இயக்கமும், மனச்செயல்பாடுகளும் சீராகும் என்பது நம்பிக்கை. ஜோதிடர்களின் கருத்துப்படி, காலில் கருப்பு கயிறு கட்டுவது நிதி நிலையை பலப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. காரணம், சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களைத் துறவார். எனவே, கருப்பு கயிறு கட்டும் முன் சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறை ஒன்பது முடிச்சுகள் வைத்து அணிவதால் பண வரவு அதிகரிக்கும் என்றும், ஆபத்துகள் இல்லாமல் பாதுகாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. கடைசியாக, பெண்கள் காலில் கருப்பு கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமைகள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்நிலை, பாரம்பரிய நம்பிக்கைகளையும், நவீன ட்ரெண்டையும் ஒருங்கிணைக்கிறது. 😯😟😯😟😯 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯
திருநீற்றுச் சுவடு
612 காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்* 🌹 கிரகங்களே தெய்வங்களாக கோசெங்கண்ணன் என்ற மன்னனுக்கு குன்ம நோய் (அல்சர்) ஏற்படுகிறது. மிகுந்த அவதியுற்றான். மூன்று விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் உன்னுடைய நோய் தீரும் என்ற அசரீரி கேட்கிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டுகிறான். ஆக்கூர் என்னும் இத்தலத்திற்கு வரும் கொன்றை, வில்வம், பாக்கு விருட்சங்களை மன்னன் பார்க்கிறார். உடனே, அந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான் மன்னன். அவ்வாறு கோயில் கட்டும் இடத்தில் ஒரு சுவர் கிழே விழுந்துவிடுகிறது. அவ்வாறு விழுந்த இடத்தில் ஏன் விழுந்தது என சிவபெருமானிடம் கேட்டு மன்றாடுகிறான் மன்னன். சிவபெருமான் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைகள் நீங்கி சிறப்பாக கோயில் கட்டலாம் என்ற அசரீரி கேட்கிறது. அதன்படி, 48 நாட்கள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் இலைகள் போட்டால் 999 பேர்தான் சாப்பிடுகிறார்கள். இதில் ஒரு இலை மீதமாகவே மன்னன் மிகுந்த வருத்தம் அடைந்தான். இறைவனிடம் சென்று மன்றாடுகிறான் மன்னன், “ஏன்? இந்த சோதனை'' என்று கேட்கிறான். மன்னனின் குரலுக்கு செவி சாய்த்த இறைவன், 48வது நாள் ஆயிரம் இலைகள் போடப்படுகிறது. ஆயிரம் இலைகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்த ஆயிரத்தில் ஒருவராக வயதான அந்தணர் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவராக அமர்ந்த அந்தணரிடம் தாங்கள் எந்த ஊர்? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்த அந்தணர் “யாருக்கு ஊர்'' எனக் கேள்வி கேட்கிறார். (இதனால் இவ்வூருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி “ஆக்கூர்'' ஆனது) மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் மிரட்டுகின்றனர். ஓடி சென்ற வயதானவர் அங்கிருந்த புற்றுக்குள் விழுந்துவிட்டார். புற்றை கடப்பாரையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக “தான்தோன்றீசுவரர்'' காட்சி தருகிறார். கடப்பாரையால் புற்றை குத்தியபோது கடப்பாரை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாரை பட்டதின் அடையாளமாக இன்று லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருக்கிறது. அங்கிருந்த லிங்கத்தின் மீது ஆலயத்தை கட்டி மன்னன் குடமுழுக்கு நடத்தினான். அதற்குபிறகு அவன் நோய் தீர்ந்து விட்டது. இத்தலம் பாடல் பெற்ற தலமாக உள்ளது சிறப்பாகும். இந்த தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு நாமாகரணம் செய்துள்ளது. பௌர்ணமி நாளில் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து இங்கு தரிசனம் செய்து யாருக்காவது அன்னதானம் செய்தால் தீராத பிணியும் தீரும் என்பது ஐதீகமாகும். அனுஷம் நட்சத்திர நாளில் சுயம்பு மூர்த்திக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்து செண்பகப்பூ மாலை கொடுத்தால் கடன் பிரச்னை தீரும். ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் சூரியன் உள்ளவர்கள் இங்கு தேனும் தினை மாவும் கொடுத்து நைவேத்தியம் செய்து வெள்ளைப்பசுவிற்கு உணவாக கொடுத்தால் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். புனர்பூசம் நட்சத்திர நாளில் மூன்று புனித நீர் எடுத்து தல விருட்சமான சரக்கொன்றை விருட்சத்திற்கு ஊற்றி சாமி தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும். குபேர சம்பத்து உண்டாகும். மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 16 கி.மீ தூரத்தில் ஆக்கூர் அமைந்துள்ளது.🌹
திருநீற்றுச் சுவடு
942 காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 24 சோமவார சதுர்த்தி: அங்காரக தோஷம் நீங்க ஆனைமுகத்தான் வழிபாடு!* சோமவார சதுர்த்தி என்பது திங்கட் கிழமையும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் ஒரு விசேஷ தினமாகும். விநாயகர் வரும் நவம்பர் 24-ம்தேதி, திங்கட்கிழமை, விநாயகருக்கு உகந்த சோமவார சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் ஆனைமுகத்தோனை வழிபட்ட பின்னரே தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நமது கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அருள்வார் ஆனைமுகத்தான். சங்கடங்களை மட்டும் அல்லாமல் நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும் தடைகளை நீக்கி வெற்றிகளை தரக்கூடிய தெய்வமாகவும் விநாயகர் பெருமான் திகழ்கிறார். வரும் திங்கட்கிழமையில் மறக்காமல் விரதம் இருந்து விநாயகரை வழிபடுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் வேழமுகத்தான். மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரை விரதம் இருந்து தரிசிப்பதும் அவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை. சாபத்தால் நோய்வாய்ப்பட்ட சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தார். திருமாந்திரை ஊரில் உள்ள அட்சயநாததை தரிசித்தார். அதன் பலனாக சாபம் நீங்கி சிவபெருமான் தனது சடையில் சந்திரனை சூடிக்கொண்டார். சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டும் நெருப்பு கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணைவதை அங்காரக யோகம் அல்லது அங்காரக தோஷம் என்று கூறுவார்கள். அன்றைய தினம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் மேஷம் மற்றும் விருச்சிகம். அந்த வகையில் வரும் நவம்பர் 24-ம்தேதி வரும் திங்கட்கிழமை சோமவார சதுர்த்தி அன்று அங்காரக தோஷம் ஏற்படுவதால் இந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அன்றைய தினம் (திங்கட் கிழமை) நீங்கள் விரதம் இருந்து விநாயகரை தரித்தால் தோஷத்தின் தாக்கம் குறையும். அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலையும், வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி, பிரார்த்தனை செய்யுங்கள். சந்திரனுக்கும், விநாயகருக்கும் சாபம் போக்கிய ஸ்தலம் திருமாந்திரையில் இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் உங்களுக்கான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மூட்டு வலிக்கும், கிட்னியில் கல் இருப்பவர்களுக்கும் இந்த கோவிலில் மருந்து தரப்படுகிறது. தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்ளலாம். எளிமையான கடவுளாக கருதக்கூடிய விநாயகப் பெருமானை எளிமையான முறையில் நாம் முழுமனதோடு வழிபாடு செய்ய அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மிகவும் சாந்நித்தியம் நிறைந்த கார்த்திகை மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில், தூய மனதுடன் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் தந்தருள்வார் ஆனைமுகத்தான்!🌹
திருநீற்றுச் சுவடு
1.1K காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
முருகப்பெருமான் ஆலயங்கள் : சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தனுக்காக, பொட்டு வைத்துக் கொள்ள சிரம் தாழ்த்திய சென்னி ஆண்டவர் பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். 1749 அடி உயரம் உடைய இந்த மலைக்கு மேல் செல்ல வாகன வசதிகள் உண்டு. சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில். ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது . அதனால் இந்த மலைக்கு சிரகிரி என்ற பெயரும் உண்டு. (சிரகிரி - சிரம் - சென்னி, கிரி-மலை).அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். பால தேவராய சுவாமிகள் எழுதிய 'கந்த சஷ்டி கவசம்' அரங்கேற்றிய தலம். இங்கு முருகன் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். இந்த மலையின் ஒரு பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட பசுவின் உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் இருக்க, இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த சிலை மீது சிற்பி உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது, பின்பு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாறு கூறுகிறது. சிலை இடுப்புக்குக் கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் தயிரானது புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கத்துறையான் என்னும் குடியானவன், இங்கு பண்ணையாரிடம் மாடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். முருக பக்தனான அவரை தடுத்தாட் கொண்ட முருகன், அவர் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்தார். அவனுக்கு முருகன், நிலத்தம்பிரான் என்று நாமக்கரணம் சூட்டினார். ஒரு நாள் சிவாச்சார்யார் வராததால், சென்னியாண்டவருக்கு நிலத்தம்பிரானே பூஜை செய்தார். நிலத்தம்பிரான் பூஜையின் போது முருகனின் நெற்றியில் பொட்டு வைக்க முயற்சித்தபோது, அப்போது குள்ளமான தம்பிரானுக்கு ஆண்டவர் நெற்றி எட்டாததால், சென்னி ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தினாராம். அதனால் இன்றும் சென்னியாண்டவரின் தலை தாழ்ந்தபடியே இருக்கிறது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி படம் கீழே!👇👇 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🖌பக்தி ஓவியம்🎨🙏
திருநீற்றுச் சுவடு
1.2K காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 3ம் தேதி மாலை ஏற்றப்படும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,688அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.🙏🙏🙏🙏🙏
See other profiles for amazing content