அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:19
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
மத்தேயு 18:20
#👉வாழ்க்கை பாடங்கள்#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#👌இந்த நாள் நல்ல நாள்🤝#😔தனிமை வாழ்க்கை 😓#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார். இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 3:1
ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்.
மல்கியா 3:2
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏#👌இந்த நாள் நல்ல நாள்🤝#👉வாழ்க்கை பாடங்கள்#💖நீயே என் சந்தோசம்🥰
நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள். உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந் தீருங்கள்.
சகரியா 8:16
ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள். இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 8:17
#🖌பக்தி ஓவியம்🎨🙏#👉வாழ்க்கை பாடங்கள்#👌இந்த நாள் நல்ல நாள்🤝#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏#💖நீயே என் சந்தோசம்🥰