Follow
Rationalist
@332020744
8,058
Posts
12,956
Followers
Rationalist
525 views
7 days ago
பூஜை செய்த பார்ப்பான் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டியதால் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பூஜை செய்ய தடை (பணியிடை நீக்கம் அல்ல). மேற்கொண்டு லஞ்சம் பெறாதபடி வேலை செய்யாமல் இருக்க உத்தரவு. ஆனால் மொட்டையடிக்கும் இடத்தில் பணம் கேட்டதால் இரண்டு மொட்டையடிக்கும் தொழிலாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு. இரண்டும் ஒரே விதமான குற்றம் தான். ஆனால் ஆளுக்கேற்றப்படி தண்டனை. மனுதர்மம் இப்படியாகத் தான் ஆட்சி செய்கிறது. இது தான் சநாதனம். #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁
Rationalist
632 views
9 days ago
2029ல் செய்ய வேண்டிய மும்மொழிக் கொள்கை திணிப்பை 2026ல் ஏன் செய்கிறீர்கள் என அண்ணாமலை கேட்கிறார். அதாவது பாஜக அரசின் அமைச்சகத்தை கேள்விகேட்கிறாராம் vlog அண்ணாமலை. உண்மையான நிலவரம் என்ன? "..3 மொழிகளை ஒரு குழந்தை ஏன் கற்க வேண்டும்?.." என்பதுதான் மாணவர்களின் நியாயத்தை பேசும் உண்மையான கேள்வி. அதை கேட்கமாட்டார் vlog-அண்ணாமலை. மூன்று மொழி கோமாளித்தனத்தின் உண்மைத்தன்மையை பார்ப்போம். மூன்று மொழி கற்றல் என்பது, 1. மாணவனின் தாய்மொழி 2. ஆங்கிலம்/ப்ரஞ்ச் போன்றவை 3. ஏதேனும் ஒரு இந்திய மொழி "..நாங்கள் 'இந்தி'யை மட்டும் கற்க சொல்லவில்லை, எந்த இந்திய மொழியையும் கற்கலாம் எனச் சொல்கிறோம்.." என்கிறது அண்ணாமலை &கோ கம்பெனி. இதில் மூன்றாவதாக, இந்தியை தவிர வேறு என்ன மொழிகளை சொல்லித்தர வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன?. அசாமி, வங்காளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, சந்தாலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எதையாவது 3வது மொழியாக தேர்ந்தெடுக்க ஆசிரியர் நியமனம் நடந்துள்ளதா? தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் இப்படி ஆசிரியர்களை நியமனம் செய்ததா? தமிழக பள்ளிக்கூடங்களில் 'இந்தி' ஆசிரியரை தவிர வேறு எந்த மொழி ஆசிரியரும் நியமனம் செய்யப்படவில்லை? இதை எப்படி உறுதியாக சொல்கிறாய் என Vlog அண்ணாமலை கேட்கலாம். அவருக்கான பதில், "...தமிழ் மொழியை கற்றுக்கொடுப்பதற்காக எத்தனை தமிழ் ஆசிரியர்களை பாஜக ஆளும் மாநிலங்களில் பணிநியமனம் செய்துள்ளார்கள்?.." உதாரணமாக, உ.பி, மகாராஷ்டிரா, பீகார், ம.பி, ஹரியானா, குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களின் பள்ளிகளில் எத்தனை நம்மூர் தமிழ் ஆசிரியர்கள் 3வது மொழியாக தமிழை கற்றுத்தர நியமிக்கப்பட்டுள்ளார்கள்? அப்படியான நியமனம் நடந்த நினைவு யாருக்காவது உண்டா. NEPபுதிய கல்விக்கொள்கையின் இலக்கின் படி 30:1 எனும் விகிதத்தில் 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் எனும் இலக்கை கொண்டுள்ளதை வைத்து கணக்கிடுவோம். இந்தி பேசும் மாநிலங்களில் மொத்த மாணவர் எண்ணிக்கை 11.5 கோடி. இதில் மாணவர் ஆசிரியர் விகிதம் 30:1 என்பதை 300:1 என வைத்துக்கொண்டால் கூட ~3,82,000 தமிழ் ஆசிரியர்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே தேவைப்படுவார்கள். இந்த ஆசிரியர்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா என 6 மொழி ஆசிரியர்களாக பிரித்தால் கூட, தமிழ் மொழி ஆசிரியர்களாக ~64,000 தமிழாசிரியர்கள் உடனடியாக தேவை . இத்தனை தமிழ் ஆசிரியர்களை வட இந்தியாவில் நியமனம் செய்திருக்கிறார்களா? அல்லது இத்தனை தமிழ் படித்த ஆசிரியர்களுக்கு வேலைகிடைக்கும் என உத்திரவாதப்படுத்துவாரா vlog அண்ணாமலை? தமிழ் மொழியை வளர்க்கிறார் மோடி என ஒப்பாறி வைக்கும் சங்கிகள், ஏன் தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை? உண்மையில், இந்தி பேசும் மாநிலங்களில் 3வது மொழி என எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழக மாணவன் 3 மொழி என இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும். ஆனால் வடமாநிலத்தவனுக்கு எவ்வித கட்டாயமுமில்லை. தாய்மொழியும், ஆங்கிலமும் கற்றுக்கொண்டு வசதியாக மதிப்பெண் பெற்றுவிடுவான். 3 மொழி கற்பது என்பதெல்லாம், இந்தியை திணிக்கும் முயற்சி மட்டுமே.. இதை தற்போதே திணிப்பதைவிட 3 ஆண்டு கழித்து திணித்துக்கொள்ளுங்கள் என்கிறார் vlog அண்ணாமலை. பாஜக பித்தலாட்ட கூட்டத்தில் அண்ணாமலை மட்டும் வேறுமாதிரி இருப்பாரா என்ன? - #தோழர் திருமுருகன் காந்தி #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார்
Rationalist
630 views
9 days ago
தாய்த்தமிழ்தேசத்தில் அன்னைத் தமிழுக்கே முதலிடம். அன்னிய மொழிச்சடங்குகளை அனுமதியோம். ஆளுநர் எனும் கங்காணியினை கண்டிக்க ஒன்றுதிரள அழைக்கிறோம்.. 'வேடிக்கை பார்க்கும் தமிழினமே, வீதிக்கு வந்து போராடு!' எனும் முழக்கத்துடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போராட்டத்தில் இணைவீர். இடம்: சைதை, பனகல் மாளிகை அருகில் நேரம்: காலை 10:00 மணி நாள் : 31-05-2026 மே பதினேழு இயக்கம் 9884864010 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #🎙️அரசியல் தர்பார்