ஃபாலோவ்
Rationalist
@332020744
7,868
போஸ்ட்
12,762
பின்தொடர்பவர்கள்
Rationalist
631 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
தமிழ்நாட்டு மக்கள் ஏன் பீகார் தேர்தல் பட்டியலில் நாங்கள் இல்லை என சொல்ல வேண்டும்? #🎥Trending வீடியோஸ்📺 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #sir #தோழர் திருமுருகன் காந்தி
Rationalist
544 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
பீகார் தேர்தல் எவ்வளவு நேர்மையாக நடைபெற்றிருக்கிறது என்பதற்கு ஒரு சில உதாரணங்களை ஆல்ட் நீயூஸ் வெளியிட்டிருக்கிறது. https://www.altnews.in/alt-news-report-bjp-leaders-got-caught-voting-from-two-different-states-bihar-and-uttrakhand/ வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த பிஜேபியினர் பீகார் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த வாக்காளர் சிறப்பு திருத்தமெல்லாம் வேலை செய்யவில்லை போலும். தேர்தலுக்கு முன்பு 65லட்சம் பேரின் வாக்குகளை பறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு பிஜேபி பிராடுகள் மட்டும் எப்படி பாடாமல் போனார்களோ தெரியவில்லை. எல்லாம் மோடிக்கே வெளிச்சம். எஸ்.ஐ.ஆர் என்பதும் தேர்தல் ஆணையம் என்பதும் பித்தலாட்டமென்று இராகுல் காந்தி கத்தி கதறிப்பார்த்தார், அந்த கட்சியின் மூத்த தலைவரான கபில்சிபில் பீகார் தேர்தலுக்காக ஹரியானாவிலிருந்து 6000பேர் தொடர்வண்டியில் டிக்கெட் எடுக்காமல் வந்தார்கள் என்று சொன்னார். இது எதுவும் பொது சமூகத்தில் விவாதமாகவும் இல்லை. காங்கிரஸால் அதை விவாத பொருளாக மாற்றவும் முடியவில்லை. விளைவு படுமோசமான ஒரு தோல்வியை சந்தித்திருக்கின்றது எதிர்க்கட்சிகள். இப்பொழுதும் (காங்கிரஸ்) நீங்கள் ஸைலைட் போட்டு தேர்தல் ஆணையம் இப்படி செய்துவிட்டது மோடி அப்படி செய்துவிட்டார் என்று பாடம் காட்டிக் கொண்டிருந்தால் இதைவிட பெரிய பின்னடைவு உங்களுக்கு ஏற்படும். போராட்டத்தை வீதியில் நடத்தாமல் பாசிஸ்ட்டுகளை வெல்ல முடியாது. அதை காங்கிரசால் ஒருநாளும் இனி செய்யமுடியாது. மாநில கட்சிகளின் ஒன்றிணைவும் இயக்கங்களின் களசெயல்பாடுகளும் தான் பாசிச மோடி கும்பலை வீழ்த்தும். #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #பீகார் #✍️மே17 இயக்கக் குரல்
Rationalist
383 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
நவ 1 முதல் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கைக்கு ஆர்.எஸ்.எஸ் சென்று கொண்டிருக்கிறது. கருத்தரங்கு, அறிக்கை, புத்தகவெளியீடு, ஐடி விங் வைத்திருத்தல் மட்டும் போதுமென்று இருந்தால் பீகார் முடிவுகளை நோக்கி தமிழ்நாடு செல்ல அதிக நாட்கள் இல்லை. மக்களை சந்திக்காமல் மாற்றமில்லை என்றார்கள் முற்போக்கு தலைவர்கள். அதை ஆர்.எஸ்.எஸ் செய்துகொண்டிருக்கிறது. RSSஇன் செயல்பாடு குறித்து நாங்கள் அம்பலப்படுத்தி 10 நாட்களாகியும் எதிர்வினைக்கான அறிவிப்புகள் எவரிடமிருந்தும் வரவில்லை. ஓநாய்களை ஊருக்குள் அனுமதித்துவிட்டு அமைதி காப்பது முறையல்ல. #தோழர் திருமுருகன் காந்தி #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்த்தேசியம் #✍️மே17 இயக்கக் குரல் #தமிழின எதிரி ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி
Rationalist
526 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
*இலங்கைப் பேரினவாதத்தின் தொல்லியல் முகம்* - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை - 14 நவம்பர் 2025. தமிழர்களின் நிலப்பறிப்பு” என்பது இன்றல்ல, இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இருந்தே ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது. 1948-லிருந்து 2009 – வரை சுமார் 12 லட்சம் ஏக்கர் வரையிலான தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1949 – ல் கல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம், 1970-ல் ஜெயவர்தனே ஆட்சிக் காலத்தில் இலங்கையின் ‘மகாவெளி நீர்ப்பாசனத் திட்டம்’ என சுமார் 7 லட்சம் வரையிலான தமிழர்களின் வடக்கு – கிழக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த நிலப்பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் சிங்களக் குடும்பங்கள் (10 லட்சம் சிங்களர்கள்) குடியமர்த்தப்பட்டனர். இது மட்டுமல்ல, அதற்குப் பிறகு இறுதிப்போர் நடந்த 2009-காலகட்டம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டன. போர் முடிந்த 2009 -க்குப் பின்பும் மீண்டும் 1 லட்சம் ஏக்கர் வரை சிங்கள இனவெறி அரசுகளால் தமிழர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், மாவீரர் சமாதிகள் என அனைத்தும் களவாடப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக, பௌத்த தலங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அறிக்கைகளான UNHRC, Oakland institute போன்றவற்றின் அறிக்கைகள் இந்த நிலப்பறிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. தமிழ் திராவிட பண்பாட்டுடன் தொடர்புடையவை என அறிஞர்களால் கூறப்படும் தமிழ் மக்கள் வாழும் பகுதியான குருந்தூர் மலையை “பழங்கால சிங்கள பௌத்த குடியிருப்பு” என்று தொல்லியல் துறை அபகரிக்கத் துவங்கியது. இந்த மலையில் 2021லிருந்து இன்று வரை பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் சுமார் 600க்கும் மேற்பட்டவை. இவை யாவும் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. அனுர திசநாயக ஆட்சி நடக்கும் 2025 -லும் 341 ஏக்கர் தமிழர் விவசாய நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டது. 2025- மே 15 அன்று புத்த விகாரை கட்டுமானத்தை பௌத்த பிக்குகளும் சிங்கள திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்தினர். 2005-மே 29-ல் இதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஜூன் 24-ல் யாழ்ப்பாண கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் வாசிக்க👇 https://may17kural.com/wp/the-archaeological-face-of-srilankan-racism/ மே 17 இயக்கக் குரல் 9444327010 #தொல்லியல் #தொல்லியல் துறை #📺அரசியல் 360🔴 #✍️மே17 இயக்கக் குரல் #🚨கற்றது அரசியல் ✌️
See other profiles for amazing content