ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீமதே லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவர முநயே நம
மகிழ்மாறன் பொன்னடி குழாம் கமலவல்லி நாச்சியார் சமேத பெரிய பெருமாள் பெரிய பெருமாள் சேர்த்தி பங்குனி முதலாம் ஆண்டு கைங்கர்யம்
சுவாமி : அழகிய மணவாளர்.
தாயார் : கமலவல்லி.நாச்சியார்
தீர்த்தம் : கமல புஷ்கரணி.
தலச்சிறப்பு : பொதுவாக பெருமாள் ஸ்தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். நாச்சியாருக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி நாச்சியாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே நாச்சியாரை மணந்து கொண்டதால் இங்கு சுவாமி, நாச்சியார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கி இருக்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் நாச்சியாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் நாச்சியார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை.
தல வரலாறு : திருமாலின் பக்தரான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. திருமாலிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி திருமால் அனுப்பினார். ஒரு சமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்ற போது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி” என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, திருமால் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக் கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தாள். இதை புரிந்துகொண்ட திருமால், நந்தசோழனின் கனவில் தோன்றி, தான் கமலவல்லியை மணக்க விரும்புவதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் காலை 8.00 மணி வரை, காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்
அடியேன் சீனிவாச தாசன் ஐப்பசி திருவோண நன்னாளில் அவதரித்த ஸ்ரீ லோகாச்சாரியார் திருவடி பலத்தாலும் ராமானுஜனின் கிருபையாலும் எமது ஆச்சாரியனின் திருவடி பலத்தாலும் கூடி இருந்த பாகவத கோஷ்டியாலும் அடியோங்கள் பெரிய பெருமாளாம் நம்பெமாளின் கைங்கரித்தை தலை மேல் ஏற்றுள்ளோம் இக்கைங்கர்யம் இடைவிடாது நடக்கும்படி பாகவத கோஷ்டிகளையும் ஆச்சாரிய பெருமக்களையும் எம்பெருமான் தாயாரின் கிருபை கொண்டு வணங்குகின்றோம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி-15 ஆயில்யம் சேர்த்தி வருகிற மார்ச் -29 ததியாயாதனை நடைபெற உள்ளதால் பாகவத கோஷ்டியும் மற்றும் அனைத்து பக்த கோடிகளும் எழுந்தருளூமாறு பிராத்திக்கிறோம்
- மகிழ்மாறன் பொன்னடி குழாம்
7695998995
நிர்வாகிகள்
கோவிந்த ராமானுஜ தாசன் ஆரம்பாக்கம் -+918919873843
தெய்வநாயகம் ராமானுஜ தாசன் கூடுவாஞ்சேரி -+919941199741
ஸ்வாமி அனந்தபத்மநாபன்<+919840275791>
கண்ணன் ராமானுஜதாசன் ஆவடி -+919003272161
ஸ்வாமி ராஜாராம்- திருவல்லிக்கேணி +919444143231
கண்ணதாசன் ராமானுஜதாசன்- திருவல்லிக்கேணி +919791731347
மோகன ரங்க ராமானுஜ தாசன்+919840822461- கொருக்குபேட்டை
கேசவ ராமானுஜதாசன் பல்லாவரம்-9884670032
ஸ்வாமி புருஷோத்தமன்- 9940885535
ராமானுஜர் ராமானுஜ தாசன் ஆவடி, - 8939575028
திருமால் ராமானுஜ தாசர் தண்டையார்பேட்டை,-+919884117542
குலசேகர ராமானுஜ தாசன் திருநின்றவூர்-
+919789888756
கண்ணன் ராமானுஜ தாசன் வேளச்சேரி 9941799534
சக்ரவர்த்தி ராமானுஜ தாசன்-+918056054526
தேவராஜ ராமானுஜ தாசன் முகப்பேர் 9042604831-
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை, காஞ்சிபுரம்-+918122105889
பானு ராமானுஜதாஸ்யை உளுந்தூர்பேட்டை
+918012345691
திருப்பாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன் உறையூர் +919790077019
அழகிய மணவாளன் திருநாங்கூர்-+916382937429
திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீரங்கம்
ததியாராதனை நடக்குமிடம்
இராமர் மடாலயம்
உறையூர் நாச்சியார் கோயில் பஸ் ஸ்டாண்ட் அருகில்
தொண்டர் தொண்டோன் அடியேன் கேசவ ராமானுஜ தாசன் திருவல்லிக்கேணி
#🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்