Follow
சர்வேஷ்
@463120801
686
Posts
817
Followers
சர்வேஷ்
676 views
4 days ago
🚆 ராஜபாளையம் – புளியரை ரயில் பாதை: மக்கள் கனவு எப்போது நனவாகும்? தென்காசி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை 👇 📍 ராஜபாளையம் ➡️ சிவகிரி ➡️ வாசுதேவநல்லூர் ➡️ புளியங்குடி ➡️ புளியரை இந்த வழித்தடத்தில் ரயில் பாதை அமைந்தால்: ✅ போக்குவரத்து நெரிசல் குறையும் ✅ வணிக வளர்ச்சி அதிகரிக்கும் ✅ வேலை வாய்ப்புகள் உருவாகும் ✅ மாணவர்கள் & பொதுமக்களுக்கு பெரிய உதவி ⚠️ ஆனால் இன்னும் திட்டம் காகிதத்திலேயே… 💥 “Road இருக்குது… Rail எப்போது?” 💥 “மக்கள் தேவைக்கு பதில் எப்போது?” 🗳️ இது அரசியல் வாக்குறுதி இல்ல… மக்களின் உரிமை! 📢 ராஜபாளையம் – புளியரை ரயில் பாதையை உடனே செயல்படுத்துங்கள்! #RailwayProject #Tenkasi #Puliyangudi #Rajapalayam #Development #TamilNadu #📺அரசியல் 360🔴 #📺அரசியல் 360🔴 #⭐தேர்தல் வாக்குறுதிகள்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰
சர்வேஷ்
2.1K views
22 days ago
703 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், அதாவது 1323ம் ஆண்டு பங்குனி உத்திரத்தின் 8ம் நாள். ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் கொலுசு சத்தம் ரம்மியமாக இருந்தது. ஆண்களும், பெண்களும் பஜனைகள் பாடியபடி பக்தியில் திளைத்திருந்தனர். பூலோக வைகுண்டம், சொர்க்கம் போல காட்சியளித்தது. ஆனால் அடுத்து அரங்கேறிய பயங்கரம் தமிழகத்தின் வரலாற்றையே மாற்றியது. உலுக் கான் என்கிற முகமது பின் துக்ளக் தனது படைகளுடன் ஸ்ரீரங்கத்தின் உள்ளே புகுந்து, திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்த, நிராயுதபாணியாக இருந்த சாமான்ய பக்தர்களை, மதவெறி கொண்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 12,000 பேரை வெட்டிக் கொன்றான். காவிரியாற்றில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில் சூறையாடப்பட்டது. கோவில் பட்டாச்சாரியார்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து, உற்சவரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். பெருமாளை காக்க, வெள்ளாயி என்பவள் நடனமாடி துக்ளக் படைகளின் கவனத்தை திசை திருப்பினார். அவனது தளபதியை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்து சென்று, தள்ளி கொன்று, தானும் பிறகு கீழே குதித்து உயிர் துறந்தார். உற்சவர் சிலையை, பட்டர்கள் திருப்பதிக்கு எடுத்து சென்றனர். ஸ்ரீரங்கத்தை கைப்பற்றிய துக்ளக், கோவிலை இழுத்து மூடினான். 48 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி நீடித்தது. 1371ம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் கம்பண்ணர் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் சுயராஜ்யம் ஏற்படுத்தினார். கோவில் மீண்டும் திறக்கப்பட்டது... #பங்குனி உத்திரம் #பங்குனி உத்திரம் 🙏💯 #வரலாற்றில் இன்று
சர்வேஷ்
543 views
26 days ago
இந்தியா, 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் எரிபொருள் டேங்கர் ஒன்றை இலங்கைக்கு அனுப்புகிறது. இந்திய எதிர்ப்பு கொண்ட முட்டுச் சந்துோராளிஸ் இந்த பெட்ரோல் டீசலை பயன்படுத்துவாங்களா இல்ல புறக்கணிப்பான்களா என்று பார்ப்போம் ! #இலங்கை #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #இந்திய கடல்
சர்வேஷ்
618 views
1 months ago
#📢தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு🗳️ சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாநில முன்னாள் முதல் முதலமைச்சர் பூ.ச.குமாரசுவாமி ராஜா நினைவு தினம் ராஜபாளையத்தில் பூசப்பட்டி சஞ்சீவி ராஜா- முத்தம்மாள் இணையருக்குப் 1898 ஜூலை 8 இராசபாளையத்தில் பிறந்த குமாரசாமி ராஜா மாணவப் பருவத்திலேயே அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். ராஜபாளையத்தில் ஹோம்ரூல் இயக்க மாநாடு ஒன்றை நடத்தினார். பி.பி. வாடியா அதற்குத் தலைமை தாங்கினார். அப்போது சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொறுப்பில் இருந்தார். 1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். மேலும் 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி, மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார்.அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு,காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன. தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்த ராஜபாளையத்தில் மண்ணின் மைந்தர் பி.எஸ். குமாரசாமி ராஜா 1957 மார்ச் 16ல் மறைந்தார். #🔶பாஜக #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #🙏நமது கலாச்சாரம்
சர்வேஷ்
5K views
1 months ago
சர்வேஷ்
580 views
3 months ago
#🍷டாஸ்மார்க், பார்களுக்கு🍺 விடுமுறை😄 மதுபானத்தை விட கோகோ கோலா அபாயகரமானது - சீன விஞ்ஞானிகள் கூறும் திடுக்கிடும் உண்மைகள்! மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சீன விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகள் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளன. கோகோ கோலா போன்ற சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள், மதுவை விடவும் கல்லீரலை மிக மோசமாகப் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதிலுள்ள அதிகப்படியான சர்க்கரை, கல்லீரலில் கொழுப்பு படிதல் (Fatty Liver Disease) மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் போன்ற தீவிர பாதிப்புகளை உண்டாக்குகிறது. மதுவால் கல்லீரல் சேதமடையும் என்பது பரவலாகத் தெரிந்த விஷயம் என்றாலும், சர்க்கரை கலந்த பானங்களின் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. இத்தகைய சோடா பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, அதன் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துகிறது. பலரும் இதன் பின்னால் இருக்கும் அபாயத்தை உணராமலேயே அன்றாடம் இந்த பானங்களைப் பயன்படுத்துவது ஒரு கவலையளிக்கும் நிதர்சனமாக உள்ளது. நாம் பருகும் பானங்கள் விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது காலத்தின் கட்டாயம். சோடா மற்றும் செயற்கை குளிர்பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது இயற்கையான இனிப்பு கொண்ட பானங்களைத் தேர்ந்தெடுப்பது கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கான பயணம் நாம் எடுக்கும் இத்தகைய சிறிய மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய மாற்றங்களிலிருந்தே தொடங்குகிறது.