ஒரு நேசத்துக்காக ஏங்கி ஏங்கித் தோற்ற மனது
பிறகு ஒரு நாள் வெறுமை கொள்ளும்
ஒரு அரவணைப்புக்காக எதிர்பார்த்து தோற்ற மனது
பிறகு ஒருநாள் விடுபட்டுக்கொள்ளும்
ஒரு காதலுக்காக தவித்துத் தோற்ற மனது
பிறகு ஒருநாள் தனிமைய விரும்பிக்கொள்ளும்
கத்தலும் கூச்சலும் போராட்டமுமாய் ஒரு அன்பின்பிடிக்குத்தவித்து ஏமாந்த மனது
ஒருநாள்
தவித்து தனித்து அவமானமாய் உணர்ந்து ஓடிவிடும்
நீ ஏன் இப்போதெல்லாம் அமைதியாய் இருக்கிறாய் என்றால்
நீ ஏன் இப்போது முன்பு போல் இல்லை
என்றால்
அங்கே மிகப்பெரும் ஏமாற்றத்தின் பெருஞ்சுவடு படிந்திருக்கிறது
நீ இப்போது முன்பு போல் கோபித்துக்கொள்வதில்லை என்று மகிழ்ந்து கொள்ளாதே
புரிதலை விட
ஏமாற்றத்தின் காயங்கள்
ஒரு விடுபடுதலை மிக அமைதியாய் நிகழ்த்திக்கொண்டிருக்கிறதாகவும் இருக்கலாம்
இறுகப்பற்றிக்கொள்ள முடியாத உன் கைகளில் இருந்து
ஒரு பேரன்பின் அற்புதம்
உள்ளுக்குள் இறந்து
நழுவிக்கொண்டுமிருக்கலாம்
இப்போதாவது
இறுகப்பற்றித் தாங்கிக்கொள்!!!
#தனிமையே சிறந்தது