நீயென்பது
என் தெளியா
மயக்கம் ..
நீயென்பது
என் பிதற்றல்
மொழி ..
நீயெபன்து
என் இதழ்
முணுமுணுப்பு ..
நீயென்பது
என் மோக
உணவு ..
நீயென்பது
என் நினைவு
பொதி ..
நீயென்பது
என் விழிகளின்
கனவு ..
நீயென்பது
என் ரசிப்பான
பிழை ..
நீயென்பது
என் கோடைகால
நிழல் ..
நீயென்பது
என் மழைக்கால
தேநீர் ..
நீயென்பது
என் குளிர்கால
நெருப்பு ..
நீயென்பது
என் கண்ணீரின்
அர்த்தம் ..
நீயென்பது
என் மகிழ்வின்
ஆணிவேர் ..
நீயென்பது
என் துன்பத்தின்
ஆறுதல் ..
நீயென்பது
என் அடைக்கல
வாசல் ..
நீயென்பது
என் அரவணைப்பின்
தாய்மடி ..
நீயென்பது
என் வாழ்நாள்
காதல் ..
நீயென்பது
இதோ நான் எழுதி
தீர்க்க முயன்றும் நீளும்
இந்த கவிதையும் 📝🖋️ ...!
#அவளுக்காக
உன்னை மனந்தவனை சந்தோச படுத்த,
உன்னை என்றும் நெஞ்சில் சுமக்கும் என்னை காயப்படுத்தாதே!!!♥️🫰🏻🫶🏻💝🫂🍷🍷🍷🍷 #உனக்காகத்தான்
உன் அன்பிற்குள் இருந்து
என்னை நீ வெளியேற்றிவிடவே
கூடாதென என்றைக்கு என்னுள் தோன்றியதோ
அன்றிலிருந்து
இந்தக் காதலின் அளவை
அதிகப்படுத்தினேன்.
அன்பின் முக்கியத்துவங்களையும்
கூட்டினேன்.
விதியின் சதியால்
அன்றிலிருந்துதான்
நீ என்னைவிட்டு
விலகவும் தொடங்கினாய்..💔 #💞Feel My Love💖
கொடுக்கப் பட்ட அன்புக்கு நிகராய் கொடுக்கப் படாத அன்பு ஒரு வகை மோசடி தானே...😒🚶♀️ #😔தனிமை வாழ்க்கை 😓
தனிமை என்பது நமக்கென
யாரும் இல்லாதது அல்ல...
இருந்தும் இல்லாதது...!
வெறுமை என்பது எதுவும்
நம்மிடம் இல்லை என்பதல்ல...
இருக்கும் எல்லாமே ஒட்டுதலற்று
வெறுமனே இருப்பதாக உணர்வது...!
#💞Feel My Love💖
ஏதோ ஒரு நாள்
எஞ்சியிருக்கும் நம் காதலின்
கணம் – ஒரு கணம்
உன்னை உதைக்க கூடும்..!
தயங்காதே!
உன் வருகைக்காய்
என் வீட்டு
அழைப்புமணிகள்
தவித்துக் கிடக்கின்றன..!
வாசலில்
இரட்டை ரோஜாக்கள்
தினம் தினம்
பூத்து உதிர்கின்றன..!!
கவி எழுதி
நிறைந்த காகிதக் கிடங்கு
உன்னை
கண்டு தன்னை
சீராக்க
தவம் செய்கின்றன..!!
நீ குடியிருந்த என்
இதயத்தில்
உனக்கான இடம்
இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது..!!
தனிமை குடியேறக்கூடாதென
உன் நினைவுகளை
தினமும்
ஒலிக்கச் செய்வேன்..!
இடைக்கிடை
கண்ணீர் மழை தூவி
நினைவுகளின் பசுமையை
காத்து வருகின்றேன்..!!
தயக்கம் கொள்ளாதே
உன்னை தவிர்த்திருப்பேன் என
ஏக்கம் கொள்ளாதே…!!
நீ என்பது
வெறும் நினைவுகளல்ல —
என் இளமைக் கால
வாழ்க்கையின்
மொத்தம்…!💔 #அவளுக்காக
கனிந்த மை
கலையாத விழி
நெளிந்த கூந்தல்
நெளியாத புருவம்
நீண்ட மூக்கு
நீந்த அழைக்கும் இதழ்
கவிழ்ந்த கழுத்திடை என
கருப்புஞ் சிவப்புமாய்
திருத்திய அழகில்
சிரித்தாலும்
சிரசு முதல் பாதம் வரை
சிலிர்ப்போடி புல்லரிப்பு தரும்
என்னவளின்
கழுத்தின் மச்சம் 🫶🏻♥️ #அவளுக்காக
குட்டி மீன்
முட்டிப் பார்க்கிறது
தொட்டியை
நன்னீர்
ஒருபோதும்
தனக்கு கடலாகாது
என்ற தர்க்கத்தை
கைவிடும் வரை
இடிபட்டுக் கொண்டே
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
பதில் சொல்லாத கடவுள்... புரியாத காதல்... இடைவெளியில் தவிக்கும் நம் தூரம்.....
உன்னையும் என்னையும் சேர்க்காத விதியிடம், உன் நினைவுகளை மட்டும் ஏன் விட்டுச் சென்றாய்...
#அவளுக்காக
வார்த்தைகள்
உனக்காய்
நெய்யப்படுபவை
மருந்தென
விருந்து சொற்கள்
பந்தியிலிடத் தெரியாது
பீடத்தின் காணிக்கை
நீ சொல்வதே
பலியிட்ட பின்னும்
நோன்பு பாத்திரம்
குறையாது இருப்பது
காலவதை
நான் இருக்கிறேன்
என்பதாய்
கேட்டுக்கொள்ள
சொல்லிக்கொள்ள
இதுவரையிலும் ஓருயிரை சம்பாதிக்கவில்லை
என்பதென் வறுமைப்பிணி
இப்போது உன்நிழலை
வரைவதென்றால்
எந்தப்புள்ளியில்
ஆரம்பிப்பது நான்
என் சிலுவைகளில்
எத்தனை ஆணிகள்
எண்ணிக்கொள்
பின் உயிர்த்தெழும்
நாளுக்கான
என் பாடுகளை
நீயே வரைந்துவிடு
நாளை வெள்ளிக்கு
உன் வானத்தில்
உன் அண்மையில்
நீ சிமிட்ட ஒருபுள்ளி
நட்சத்திரமாய்
உனக்காய் ஆகிப்போகிறேன்..💔💔💔 #💞Feel My Love💖




