இனியும்,
இன்னொரு மனுசங்க கிட்ட அன்புக்கு கெஞ்சி நிக்கறது போதும்...🦋🤗
இங்க எதுவுமே நிரந்தரம் இல்ல...
சந்தர்ப்பமும், சூழ்நிலையும், தேவைகளும்..,
மனிதர்களை மாத்திட்டே இருக்கும்...
மாறுவது அவங்க தப்பு இல்ல...
மாறிட்டாங்கனு தெரிஞ்சும் அவங்க பின்னாடியே போற, நம்ம மேல தான் தப்பு...
மனுசங்க எப்படியும் ஒரு நாள் மாறுவாங்கனு தெரிஞ்சும்,
திரும்ப திரும்ப இன்னொரு உறவை தேடுனா...
அது முட்டாள்தனம் தான்...
அதுக்காக மனுசனே வேண்டாம்னு காட்ல போய் வாழ சொல்லல...
கூட வாழ்ற மனிதர்களை நேசிங்க...
அவங்களோட அழகா பயணம் பண்ணுங்க...
ஆனா,
அவங்க தான் உங்க வாழ்க்கைனு முடிவு பண்ணாதீங்க...
அன்பா இருக்கலாம்,
நட்பா பழகலாம்,
அளவில்லாம அன்பை கொடுக்கலாம்...
அது வரைக்கும் சரி,
நமக்கான ஆறுதலை அவங்க கிட்ட தேடறது தான் தப்பு...
நம்மை நாம தான் நேசிக்கணும்,
நம்மளோட பிரச்சனைக்கு நாம தான் தீர்வு தேடணும்,
நமக்கு நாம தான் ஆறுதலா இருக்கணும்...
இந்த confident வந்துட்டா...
வாழ்க்கை அழகா மாறிடும்....🦋🤗💯 #😎சிங்கிள்ஸ் Attitude🤙