கர்மா சொல்வதென்ன?
அது எப்படி செயல்படும்?
தனக்கு ஒருவர் தீங்கிழைத்திருந்தால்... அதனால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால்.. நாம் அதை காலமே எனக்கான நீதியையும் அவர்களுக்கான தண்டனையையும் பெற்றுத் தா...என காலம் எனும் கர்மாவிடம் (கடவுளிடம்) முறையிட்டு ஒப்படைத்து விட்டு... பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...பொறுமை தான் கர்மா வேலை செய்ய தேவை...
அப்பொழுது தான்..
கர்மா...தவறு செய்தவர்களுக்கான தண்டனையையும்...
அந்த தவறால்
பாதிக்கப்பட்ட நமக்கான நீதியையும் நியாயமாக பெற்றுத் தரும்..அவர்கள் தவறு செய்ய நாம் எந்த விதத்திலும் காரணமாக இருக்கக் கூடாது..நம்முடைய பங்கு 1% கூட அந்தத் தவறு நிகழ காரணமாக இருக்க கூடாது.. கர்மா தண்டிக்கும் வரை பொறுமையாக இருப்பது கடினம்...அப்படி, பொறுமையாக மட்டும் இருந்து விட்டால்... கர்மா...
சரியாக தன் பணியை
காலத்துடன் கைகோர்த்து தவறுக்கான தண்டனையை தவறிழைத்தவர்களுக்கு... அவர்கள் செய்த அதே பாணியில் சிறப்பான செய்கைகள் செய்து..தண்டனை வழங்கி தண்டித்தே தீரும்..கர்மா உறுதியாக நமக்கு பாதகம் செய்தவர்களை விட்டு வைக்காது....நமக்கான நியாயத்தைப் பெற்றுத் தரும்..
இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...
அதற்கு கொஞ்சம் காலம் மற்றும் நமக்கு பொறுமை தேவை அவ்வளவு தான்...
அதற்குள் .... ஒருவர் தனக்கு பாதகம் செய்து விட்டார்கள் நான் பாதிப்படைந்து விட்டேன்.......என்று, பொங்கி.. ஆக்ரோசமாக...அதற்கு நானே தண்டனை கொடுக்கிறேன்... என்ற பெயரிலும் பாதிக்கப்பட்டவர் நான் தானே.... அதற்கு சரியான தண்டனை எஎன்னால் தான் கொடுக்க முடியும்... அதற்கு எனக்கு தானே முழு அதிகாரமும்... உரிமையும் இருக்கிறது என தனக்கு தானாகவே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கர்மாவால் தண்டிக்கப்பட வேண்டியவர்களை தான் தொடர்ந்து அசிங்கப்படுத்தி... அடித்து... துன்புறுத்தி.. கேவலப்படுத்தி...
அவமரியாதை செய்து...
வார்த்தைகளால் காயப்படுத்தி...
பிறரை ஏவி விட்டு தொடர்ந்து பிரச்சனை செய்ய வைத்து... மனநிம்மதி..
மரியாதையை கெடுத்து கீழ்தரமாக பேசி...நடத்தி....
எங்கும் வாழவிடாமல் ஓட.. ஓட... அடித்து விரட்டி கொடூரமாக தண்டனை என்ற பெயரில் மிக மிக மோசமாக அவர்களிடம் நடந்து விட்டு..
தனக்கு தீங்கிழைத்து விட்டார்கள்.. நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்... நான் காயப்பட்டிருக்கிறேன்... அதனால்...நான் என்ன செய்தாலும் சரி...எப்படி தண்டித்தாலும் நியாயம்...என நினைத்துக் கொண்டு.. இவ்வளவும் செய்த பிறகும் தான் கொடுத்த தண்டனை பத்தாது..எனக்கு திருப்தியில்லை என்று, எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஈடாகாது... என்று... தவறிழைத்தவரின்
குணத்தை தவறாக சித்தரித்து புரளி பரப்பி ...
பொது வெளியில் மானப்பங்கப்படுத்தி வெளியில்
தலைகாட்டாமல் இருக்க ஆவண செய்து... உறவுகளிடம் தவறாகச் சொல்லி கொடுத்து வெறுக்கச் செய்து... அடிப்படையாக கிடைக்க வேண்டிய நியாயமான விஷயங்களை கூட கிடைக்க விடாமல் செய்து...இத்தனை கொடுமைகளையும்... சித்ரவதைகளையும்... தான் பாதிக்கப்பட்டதற்காகவே செய்து விட்டு...
தனக்கு நடந்த ஒரு கொடுமைக்காக அதையே சுட்டிக் காட்டி... சுட்டிக்
காட்டி... மேலும் மேலும் தண்டனைகள் தர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சித்ரவதை செய்வது... வாட்டி வதைப்பது...என தொடர்ந்து கொடுமை மட்டுமே செய்து கொண்டு இருந்து விட்டு... இப்பொழுதும் எப்படி தண்டிக்கலாம்...என யோசித்துக் கொண்டே இருந்தால்.. தற்போது யார் பாவம் செய்தவர்கள்... ஆகிறார்கள்...? யார் யாருக்கு கொடுமை செய்தவர் ஆகிறார்?ஒரு தவறுக்கு பதிலுக்கு பதிலாக நாம் செய்யும் 1000 கொடுமைகள்...
சித்ரவதைகள்.. தீர்வாகுமா? அது சரியா? அப்போ... நமக்காக நாமே... நமக்கு கஷ்டத்தை துன்பத்தை கொடுத்தவர்களுக்கு பல வழிகளில் தண்டித்து தண்டனை கொடுத்து விட்டோம்...தான் செய்வது சரி நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று... அதற்கு நியாயமும் கற்பித்து விட்டோம்...அதை எல்லோரையும் நம்பவும் வைத்து விட்டோம்..இப்போ...
நாமும் பாவம் தான் செய்து கொண்டிருக்கிறோம்...இதை
அறியாமல்... உணராமல்..பல
பாவங்களை செய்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நடந்து விட்டு...
பிறகு கர்மா வேறு தனியாக தண்டிக்க வேண்டும் என காத்திருப்பது வேடிக்கையாக உள்ளது... பாதிக்கப்பட்டவரின் பேராசையாகவே தெரிகிறது தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என நினைப்பது ஆசை... தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக தானும் தண்டித்து... கடவுளும் தண்டிக்கு வேண்டும் என நினைப்பது பேராசை... முதலில் பாவம்... புண்ணியம்.. குற்றம்...தவறு...
நல்லது... கெட்டது இதெல்லாம் அனைவரின் முன் ஜென்ம கர்ம வினைகளை தீர்ப்பதற்கே நநடக்கிறது..என்றால்,
இப்பிறப்பெடுத்தது நம் கர்ம வினையை தீர்க்க..அப்படித் தானே! ஒரு மனிதன் வாழ்நாளில் 100% நல்லவனாகவோ..(or) கெட்டவனாகவோ வாழ முடியுமா? சந்தர்ப்பமும்... சூழ்நிலையும் தான்
ஒருவன் நல்லவனா... கெட்டவனா...என தீர்மானிக்கிறது... சட்டமும் அதைத்தான் சொல்கிறது..தர்மமும் அதைத்தான் சொல்கிறது...
நல்லது...கெட்டது மாறி ...மாறி... ஒரு மனிதன் வாழ்வில் நடக்காவிடில்,
பிறகு எப்படி நம் கர்ம வினைகள் கழிந்து..பிறவி பெருங்கடலை நீந்தி கடந்து இறைவனை சரணடைவது? பிறப்பில்லா நிலையை எப்படி அடைவது...? இது எதுவும் புரியாமல்... தான் கொடுத்த தண்டனைகள் பத்தாது என்று
கர்மாவும் தண்டனை தர வேண்டும் என நம்பி காத்திருப்பதும்..
கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதும் அபத்தம்!
இது யார் யாரை முட்டாளாக்கும்
வேலை....! #🚹உளவியல் சிந்தனை