Follow
Sivasakthi
@arthanareeswarar
245
Posts
1,631
Followers
Sivasakthi
9.2K views
3 months ago
புத்தகத்தில் ஒரு பக்கம் தவறு என்பதற்காக முழு புத்தகத்தையே இழக்கிறார்கள் சிலர்... அதே போல் தான் மனிதர்களும்...ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தவறிழைக்கும் பட்சத்தில் அந்த மனிதனின் மற்ற நல்ல குணங்களை யாரும் பார்க்காமல் அவனை முழுவதும் புறக்கணித்து அந்த மனிதனை வெறுத்து முழுமையாக இழந்து விடுகிறார்கள்...ஐயோ...! அந்த மனிதனை இழந்துவிட்டோம் என என்று உணர்கிறோம்? அந்த மனிதன் இறந்த பிறகு...! இது தான் மரணம் என்ற மர்மம்...! மரணம்...இப்ப வராது என்ற பொய் நம்பிக்கையில்...வாழ்கிறோம்..! வாழும் போது அது தெரிவதில்லை...! மரணித்த பிறகு தான் தெரிகிறது அவர்களை இனி, நாம் காணப்போவதில்லை என்று..! இழப்பு இழப்பின் வலி மிகவும் கொடியது! அது இழந்த பிறகு தான் தெரிகிறது! தம்பி பார்த்த சாரதி நீ உன்னை படைத்த அப்பா சிவனிடமும்.. உன்னை பெத்த அப்பா மீனாட்சி சுந்தரத்திடமும் போயிட்ட... இனிமேலாவது, உனக்கு நிம்மதியும்... அமைதியும்.. அன்பும் கிடைக்கட்டும்....உன் மனமும்...ஆன்மாவும்... சாந்தி அடையட்டும்...! என்னால் உனக்கு உதவ முடியவில்லை... அதை நினைத்து வருந்துகிறேன்..என்னை மன்னித்து விடு🙏🙏😔😔😭😭 #rip# ##RIP#இழப்பு# பிரிவு#
Sivasakthi
1.1K views
5 months ago
இதென்னடா... gas - க்கு வந்த சோதனை...விறகு... இன்டக்சன் ஸ்டவுக்கு வந்த வாழ்வு... பாருடா... ஆட்டத்த...எல்லாம் நேரம் தான்...வாழ்க்கை ஒரு வட்டம்... உண்மைதான்னு மறுபடியும் நிரூபணமாயிருக்கு... புதுசா இருக்குறது பழசாறதும்... பழசா இருக்கிறது புதுசாறதும்...புதுசில்ல... தேவை இருக்கும் வரை தான் மவுசு.. இல்லைனா.. ஓரமாத்தான் இருக்கணும்...gas...மாதிரி.... சிரிக்கிறதா...அழுகுறதா... தெரியல...நாம சிரிச்சே வப்போம்! 😂🤣😂🤣 #🙏நமது கலாச்சாரம்
Sivasakthi
983 views
5 months ago
🔥🌷#இருளாயிஅம்மன்🌷🔥 🌴கருப்பனின் தங்கை பெண் தெய்வங்களில் சிறுமியாக தெய்வமானவள் தான் இருளாயி அம்மன்.. தீயில் மாண்ட காளியின் அவதாரம்.. பெண் தெய்வ வழிபாட்டில் இருளாயி வழிபாடு மிகவும் உக்கிரமான வழிபாடு.. இருளாயி அம்மன் தனது 12 வயதில் தீயில் மாண்டு மக்களை காத்தவள் என கூறுவார்கள்.. இருளாயி வழிபாடு என்னவென்றால் சாம வழிபாடு.. அதாவது நள்ளிரவு 12மணி நேரத்தில் அப்ப வாங்கிய நெல்மணிகளை அவித்து அப்பவே சாதம் வடித்து தாயிக்கு நாட்டு கோழி பலியிட்டு கறிசோறு படைத்து வழிபாடு செய்வார்கள்.. இதில் ஒரு முறை உள்ளது அதாவது ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. திருமணம் முடிந்த பிறகு இருளாயி அம்மன் வழிபாட்டில் அந்த பெண் கலந்து கொள்ளகூடாது. காரணம் இருளாயி கன்னி கழியாத பெண் சிறுமி.. மேலும் தாயிக்கு படைக்கபட்ட படையலை வெளிஆட்கள் உண்ணக்கூடாது.. நாய் கூட அந்த உணவை உண்ணக்கூடாது என்பதற்காக புதைத்து விடுவார்கள்.. இவ்வழிபாடு இருளாயிக்கு செய்யும் பூசை முறைகள்.. 🌷🌷 #💖என்னை கவர்ந்த பெண்மணிகள் 👑 #🙏கோவில் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏நமது கலாச்சாரம் 🙏🏻🙏🏻 🌹நல்லதே நடக்கும் 🌹