ஃபாலோவ்
Sivasakthi
@arthanareeswarar
253
போஸ்ட்
596
பின்தொடர்பவர்கள்
Sivasakthi
733 காட்சிகள்
இப்போ தான் நகை வேணாம்.... சொத்து வேணாம்... வரதட்சணை வேணாம்...பொண்ணு மட்டும் இருந்தா போதும்னு தோணுதா? பொண்ணு சுலபமா... கிடைச்சிருந்தா... இதெல்லாம் வேணாம்னு சொல்ல தோணியிருக்காது... இன்னும் அதிகமா எவ்வளவு வாங்கலாம்னு யோசிச்சு இருப்பீங்க...வாழ்க்கை ஒரு வட்டம்...எதுவும் இங்க எப்பவும் நிரந்தரம் இல்ல... இப்ப வழிக்கு வந்தீங்களா...? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி எந்த பிரையோஜனமும் இல்ல.... 😂🤣😂🤣 அதே மாதிரி பெண்களே...சொந்த வீடு இருக்கா... ? கார் இருக்கா..? கல்யாணத்திற்கு பிறகு தனிக் குடித்தனம் போகணும்... அரசு வேலை பார்க்கணும்.... பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவாங்க...இப்படியெல்லாம் பார்த்து மாப்பிள்ளை கேட்காதீங்க.... மாப்பிள்ளையோ...பொண்ணோ...ஒரு டிகிரியாவது கண்டிப்பா படிச்சிருக்கணும்....வயது பெண்ணை விட ஆணுக்கு 3 -லிருந்து 5-க்குள் அதிகமாக இருக்கலாம்... அதற்கு மேல் போகக் கூடாது... ஆணும் வேலைக்கு போகணும்... பெண்ணும் வேலைக்கு போகணும்... முக்கியமாக ஆணுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது... ஆடம்பரமா திருமணத்தை நடத்தாம எளிமையா நடத்தி செவுகள இரு வீட்டாரும் பகிர்ந்திக்கிரணும்... இப்படி தான் துணையை தேட வேண்டும்... திருமணத்திற்கு பிறகு... வீட்டு வேலைகள் ரெண்டு பேரும் பகிர்ந்து தான் பார்க்கணும்... வரவு செலவுகள ரெண்டு பேரும் சேர்ந்து பேசி எந்த ஒரு முடிவையும் எடுக்கணும்... பரஸ்பர மரியாதை அவசியம்...இருவருமே பிறரின் கருத்துக்களை பொறுமையா கேட்கணும்...இருவருமே தன் துணையின் குடும்ப உறுப்பினர்களை மதித்து நடக்க வேண்டும்... ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் கடன் வாங்க கூடாது... ஆடம்பரமா குடும்பம் நடத்தாம... எளிமையா நடத்த பழகிக்கணும்..இருவரும் செலவுகள குறைக்கணும்.. எதிர்கால திட்டமிடல் சேமிப்பு அவசியம்...குழந்தைகளை இருவருமே பராமரிக்க வேண்டும்... இப்படியெல்லாம் இருக்கிற மாதிரி மனநிலை உள்ள ஆணையோ...பெண்ணையோ.. தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது இருவருக்கும் நலம்... இரு குடும்பத்துக்கும் நலம்... சமுதாயத்துக்கும் நலம்...👍👍 #🚹உளவியல் சிந்தனை
Sivasakthi
1.4K காட்சிகள்
(ஒரு பொழுது அண்டை அயலார் பெண்கள் ஒன்று கூடி பொழுது போக்காக பேசி கொண்டிருக்கையில்...) Neighbor 1 : இன்னைக்கு என் கணவருக்கு பிடித்த சமையல் செஞ்சிருக்கேன்!ரொம்ப நல்லா ருசியா... சமைச்சிருக்கேன்...🤤🤤 New Neighbor : என்னைக்குமே உன் கணவருக்கு பிடித்த சமையல் தானா..உங்க வீட்ல..? உன் கணவர் சாப்றதுக்கு முன்னாடியே நீ சாப்ட்ருவியா? Neighbor 1: ஆமா அப்பத்தான் உப்பு... உரப்பு...சரியா இருக்கா..இல்லயான்னு பார்த்து சரி பண்ண முடியும்! New Neighbor : புத்திசாலி தான்... Neighbor 1: அது மட்டுமில்லாம... நேரத்துக்கு நான் சாப்டலைன்னா... எங்க வீட்டுக்காரர் திட்டு வாரு..ஏங்கிட்ட பேசாம கோவிச்சிக்கிருவாரு... New Neighbor : (mind voice:-ரொம்பத்தான்... Scene... போட்றா... என்னமோ...இவ தான் புருசன் மேல பாசம் இருக்குற மாதிரி... இவ புருசன் தான் பொண்டாட்டி மேல பாசம் வச்சு இருக்கிற மாதிரி 😤😤 பொறு... எதுத்த வீட்டுக்காரி என்ன சொல்றான்னு... கேட்போம்.....) ஏங்க...உங்க வீட்ல யாருக்கு பிடிச்ச சமையல் daily...? நீங்க எப்ப சாப்பிடுவீங்க? Neighbor 3: எங்க வீட்ல எப்பவுமே எனக்கு பிடிச்ச சமையல் தான்...ஆனா...நான் என் வீட்டுக்காரர் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவேன்... New Neighbor : 🤔🤔🤔 இப்ப இவுங்க என்ன சொல்ல போறாங்கன்னு எனக்கு தெரியும்! Neighbor 1 : என்ன..என்ன...? Neighbor 2 : என் புருசன் என் மேல அதீத அன்பு வச்சிருக்கிறாதால எனக்கு பிடிச்ச சமையல் தான் daily- அது மட்டுமில்லாம... அவர் உப்பு ...உரப்பு...சரியா இருந்தா..உன்ன சாப்பிட சொல்லுவாரு அதான்ன.. சொல்ல போற (mind voice : இவளும் அவள மாதிரியே over...ஆ...சீன போடுறா....) Neighbor 3: அதெல்லாம் ஒண்ணுமில்ல... Neighbor 2: என் கணிப்பு தப்பாதே... அப்போ..நீ என்ன சொல்ல வர்ற....? Neighbor 3: என் வீட்டுக்காரர் சாப்றதுக்கு முன்னாடி நான் சாப்பிட்டா... கொஞ்சமா பாத்து பாத்து சாப்பிடணும்...ஆஆசைய அதிகமா...சாப்பிட்டு அவருக்கு பத்தாம போயிடுச்சுன்னா...அதேது என் புருசன் சாப்பிட்டதுக்கு அப்புறம் நான் சாப்பிட்டா... எல்லாத்தையும் போட்டு வயித்துக்கும் மனசுக்கும் குறைவில்லாம... திருப்தியா... சாப்பிடலாம்ல.. அதுக்குத்தான்.... Neighbour 1 and New : 😱😱😱😱😱😱 Neighbour 1: உன் கணிப்புல தீய வைக்க... New Neighbour :😔😔😔 Neighbour 3:😎😎😎 #🤓தமிழ் காமெடி😄 (மிஸ்)
Sivasakthi
658 காட்சிகள்
இந்த வீடியோவை நான் பலமுறை பார்த்து விட்டு என் பார்வையில் இருந்து சொல்கிறேன்...கை தெரியாம முதல்லபட்டது... அதை தொடர்ந்து அதையே சாக்கா வச்சு தெரிஞ்சே ஒரு தடவ வேணும்னே உரசுறது தெரியுது... ஆனா...அந்தப் பெண் நெனச்சிருந்தா.. அதை தவிர்த்திருக்கலாம்... அங்கயே விலகி வந்திருக்கலாம்....செல்போனை பிடித்து வீடியோ எடுத்த கையை வைத்து மார்பை கவர் பண்ணியிருக்கலாம்...விரட்டி விரட்டி உரசுற நபர் மாதிரி தெரியல... கிடைச்ச சான்ஸ use பண்ண மாதிரி தெரியுது...வீடியோவ பல தடவ பார்த்திட்டு தான் சொல்றேன்...எங்கள் வீட்டிலும்... ஆண்கள் இருக்கிறார்கள்.. மூச்சு கூட விட முடியாத அளவுக்கு பேருந்தில் பயணம் செய்யும் சூழலில் என்ன செய்வது? பேருந்து நெரிசலில் எல்லா உடல் உறுப்புகளும்... பெண்களோட... பெண்களா இருக்கட்டும்.. ஆண்களோடு ஆண்களாக இருக்கட்டும்... ஆண்கள்..பெண்களாக இருக்கட்டும் தெரியாமல் உரசும் நிலை வரத்தான் செய்யும்... இதை தவிர்க்க முடியாது...அருவருப்பாகத்தான் இருக்கும்... முடிஞ்ச வரை அதை தவிர்க்க முயற்சி செய்யணும்... உரசாத மாதிரி adjust பண்ணி நிற்க தெரியணும்..எப்படீன்னா... பெண்கள் edge-ல் அமர்ந்திருக்கும் Seat பக்கம் நின்று கொண்டு ஆண்கள்.. நெருங்கி வரும் போதோ... கடந்து செல்லும் போதோ...பெண்கள் பக்கம் உடல் முழுவதுமாக சாய்த்து ஆண்களுக்கு வழி விட வேண்டும்...மார்பை உரசும் நிலை வந்தால் கைகளை கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும்.. பின்பக்கம் உரசுற மாதிரி சூழல் ஏற்பட்டால்..நம் கையில் உள்ள பை வைத்து பின்பக்கம் மறைத்துக் கொள்ள வேண்டும்... முடியலயா...driver Seat பக்கம் போய் நின்னுடனும்... ஒரளவுக்கு உரசுறத தவிர்க்க முடியும்... அத்துமீறல் அதிகமாகும் போது... பொறுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை... அந்த இடத்திலே கண்டிக்க வேண்டும்... உண்மையிலே இனி வரும் காலங்களில் இந்த நிகழ்வுக்கு பிறகு நிஜமாகவே நடக்கும் பட்சத்தில் பெண்கள் வீடியோ எடுத்தால் பெண்களைத் தான் குறை சொல்வார்கள்... உண்மையாக தவறான உரசுதல்..தொடுதல் உணர்ந்தால் அப்பவே react பண்ணிடனும்...Social media...ல போட்டா... Views தான் போகும் தீர்வு கிடைக்காது... தீர்வு கிடைக்கணும்னு நெனைக்கிறவுங்க அப்பவே... react பண்ணிட்டு போயிடுங்க...நிறைய பேர் நினைப்பு தப்பு பண்ணணும்.. ஆனா அது யாருக்கும் வெளியே தெரிஞ்சிடக் கூடாது.. ஏன்னா...மானம் போயிடும்ல... சுயக்கட்டுப்பாடு இருக்காது... தான் செய்தது தவறுன்னு ஒத்துக்கவும் மாட்டாங்க.... அத்துமீறல் தொடரும் பட்சத்தில் பேருந்து ஒட்டுனர் நடத்துனர்கிட்ட சொல்லி இருந்தாலே அவர்கள் அந்த நபரை கண்டித்திருப்பார்கள்..இந்த வீடியோ எடுத்த பெண்ணையும் அந்த நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அந்த வீடியோவை போட்டு காண்பித்து அதில் யார் மீது தவறோ அதற்கு தகுந்த மாதிரி காவல் துறை நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம்... இதற்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை... தன் மீது தவறில்லை என நிரூபிக்க ஆயிரம் வழிகள் அந்த நபருக்கு இருக்கு...இருந்தும் அதை செய்யாமல் தற்கொலை செய்தது எதனால்? தவறு வீடியோ எடுத்த பெண் மீது என்றால் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வரவழைத்து அந்த பெண்ணயே அந்த நபர் மீது தவறில்லை என்பதை சொல்ல வைத்திருக்கலாம்...யார் மீது தவறோ...அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க...வைத்திருக்க முடியும்!... 42 வயது நபர் தன் மீது தவறில்லாத பட்சத்தில் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்க வேண்டியதில்லை...பழிகளையும்...அவதூறுகளையும் கடந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்... தவறு செய்திருக்கும் பட்சத்தில் அதை திருத்திக் கொள்ளலாம்... மறுபடியும் அந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம்...எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றால் யாருமே உயிரோடு இருக்க முடியாது... திருத்தி கொள்ளக் கூடிய தவறுகளில் இதுவும் ஒன்று... அந்த சம்பவம் உண்மையாக நடந்ததோ... இல்லையோ...அந்த நபர் இறந்ததால் அது அந்த பெண்ணின் மீது தவறு என்று ஆகிவிட்டது... பெண்களே...உங்கள் உடலை அனுமதி இன்றி யாரேனும் தொட்டாலோ..தொட முயற்சி செய்தாலோ... வீடியோவெல்லாம்... எடுக்காமல் நீங்களே.. கண்டித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்...இது அந்த பேருந்தோடு முடிந்துவிடும்... இந்தப் ஆண் ((தற்கொலை) செய்த செயலால் உண்மையாகவே பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆண்கள் தப்பித்துக் கொள்வார்கள்... பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்து விட்டால்...சகிப்புத் தன்மை அவசியம்...சகிக்க முடியாத விசயங்கள் தினசரி ஒராயிரம் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்கிறது...சகித்து கொள்ள முடியவில்லை என்றால்...மகளிர் மட்டும் பேருந்தை பயன்படுத்தவும்... எல்லோரும் வீடியோ எடுத்து கயவர்களை நிரூபித்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? நேரம் வீண்... மன உளைச்சல்..சில நேரங்களில் தெரியாமல் நிகழும் நிகழ்வுகளுக்கு குற்றம் சுமத்தினால்... இதற்கு தீர்வு தான் என்ன? என் பதில்:- நம் உள்ளுணர்வு தவறான உரசுதலையோ...தொடுதலையோ..உணர்ந்தால் கொஞ்சம் தள்ளி நில்லுங்கன்னு கோபமா... சொல்லுங்க..அப்படி சொல்லியிருந்தாலே...நம் கோபத்தை புரிந்து கொண்டு அந்த நபர் ஒதுங்கி இருப்பார்...தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை... #🚹உளவியல் சிந்தனை
Sivasakthi
1.3K காட்சிகள்
wish you a happy birthday princess...angel..Many long life god blessed to you..... Many more happy returns of the day🎂🎂🎂💐💐🍫❤️😘💐🎂❤️🍫😘🍫❤️🎂💐🍫❤️😘❤️ #வாழ்த்துக்கள்
Sivasakthi
1.7K காட்சிகள்
மாதவிடாய் வலியையும்.. பிரசவ வலியையும் பெண்களைத் தவிர யாராலும் தாங்க முடியாது என்பது 100% உண்மை தான்..அதற்காக... ஆணின் தாக்குதலை சமாளிக்கும் அளவுக்கு ஏற்ற உடலமைப்பு பெண்ணுக்கு பிரசவத்திற்கு பின் இருக்காது... தற்காப்பு கலை கற்றப் பெண்ணால் ஆணின் திடீர் தாக்குதலை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்...ஆனால்.. பெரும்பாலான நேரம் தாக்குப் பிடிக்க முடியாது.. ஒரு பெண் சண்டை போடுற எண்ணம் சிறிதும் இல்லாத நேரத்தில்..சண்டைக்கு தயாராக இல்லாத தருணத்தில் ஒரு ஆணின் திடீர் தாக்குதலை எந்தப் பெண்ணாலும் எதிர் கொள்ள முடியாது... பெரும்பாலான பெண்கள் திருமணம்... குழந்தை பெற்ற பிறகு தனது உடலை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள எண்ணுவதில்லை..ஒரு சிலர் வைத்துக் கொண்டாலும் திடீர் தாக்குதல்களை சமாளிக்க தேவையான தற்காப்பு.... கலையை யாரும் கற்றுக் கொள்ள முன்வருவதில்லை..ஏனென்றால்.. நல்லத் தாயின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட ஆண் குழந்தைகள் திருமணமான... பிரசவித்த பெண்களை பெரும்பாலும் கை நீட்டி அடிக்க எண்ணுவதில்லை.. தன் தாயாக..தன் சகோதரியாக நினைக்கும் பட்சத்தில் மூர்க்கத் தனமாக தாக்க வேண்டிய அவசியம் அந்த ஆணுக்கு இயற்கையாகவே ஏற்படுவதில்லை... ஆதலால்...விளையாட்டு போட்டிகள் பல வகைப்படும்...அதில் ஒரு சில விளையாட்டுக்களில்... அடிபடுவது சகஜம்...அடித்து... மிதித்து... தள்ளி விட்டு... தாக்கி...விளையாடும் சூழல் தானாகவே ஏற்பட்டு விடும்... அது தவிர்க்க முடியாது...ஆனால்... இந்த கார் Game... ஒருவரின் சகிப்புத் தன்மையை பொறுமையை சோதிப்பதே... மற்றும் எவ்வளவு நேரம் அந்த காருக்குள் தாக்கு பிடிக்கிறார் என்பதே தவிர... மற்ற விளையாட்டுக்கள் போல் அல்ல... ஆதலால்... இந்த தாக்குதல் திட்டமிட்டு இருவரும் அவர் எதிர்பாராத நேரம் நடத்திய தாக்குதல் தான் ... இரண்டு குழந்தைகளோட தாய ஒரு பெண்ண... காலால எட்டி மிதிச்ச இதுங்களுக்கு இந்த Red Card...கொடுத்து போட்டியில் இருந்து வெளியேற்றுவது மட்டும் தண்டனை இல்ல...இனி மேல் தான் இருக்கு...wait and see both of you😡😡Karma is boomerang...எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும்...அத பேசித்தான் தீர்க்கணும்...ஆண் உடலளவில் வலிமையானவன்... பெண் மனதளவில் வலிமையானவள்... இரண்டு பேரும் தங்கள் பலத்தை சரியாக..சரியான.. நபரிடம் பிரயோகப்படுத்த வேண்டும்... குழந்தை பெற்ற பெண்ணிடம் ஆணின் பலத்தைக் காட்டுவது சரியல்ல... தவறு...! மிகவும் கண்டிக்கத்தக்கது...பெண்ணை அடித்து வீழ்த்துவது வீரமல்ல... வாய்ச் பேச்சு...வாயோடு இருக்கணும்...இவன் அக்காவும்...,அம்மாவும்..பெண் தான்....அவர்களை மட்டும் இவன் பெண்ணாக பார்ப்பது தான் இங்கு தவறு...! #🚹உளவியல் சிந்தனை
Sivasakthi
534 காட்சிகள்
கர்மா சொல்வதென்ன? அது எப்படி செயல்படும்? தனக்கு ஒருவர் தீங்கிழைத்திருந்தால்... அதனால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால்.. நாம் அதை காலமே எனக்கான நீதியையும் அவர்களுக்கான தண்டனையையும் பெற்றுத் தா...என காலம் எனும் கர்மாவிடம் (கடவுளிடம்) முறையிட்டு ஒப்படைத்து விட்டு... பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...பொறுமை தான் கர்மா வேலை செய்ய தேவை... அப்பொழுது தான்.. கர்மா...தவறு செய்தவர்களுக்கான தண்டனையையும்... அந்த தவறால் பாதிக்கப்பட்ட நமக்கான நீதியையும் நியாயமாக பெற்றுத் தரும்..அவர்கள் தவறு செய்ய நாம் எந்த விதத்திலும் காரணமாக இருக்கக் கூடாது..நம்முடைய பங்கு 1% கூட அந்தத் தவறு நிகழ காரணமாக இருக்க கூடாது.. கர்மா தண்டிக்கும் வரை பொறுமையாக இருப்பது கடினம்...அப்படி, பொறுமையாக மட்டும் இருந்து விட்டால்... கர்மா... சரியாக தன் பணியை காலத்துடன் கைகோர்த்து தவறுக்கான தண்டனையை தவறிழைத்தவர்களுக்கு... அவர்கள் செய்த அதே பாணியில் சிறப்பான செய்கைகள் செய்து..தண்டனை வழங்கி தண்டித்தே தீரும்..கர்மா உறுதியாக நமக்கு பாதகம் செய்தவர்களை விட்டு வைக்காது....நமக்கான நியாயத்தைப் பெற்றுத் தரும்.. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை... அதற்கு கொஞ்சம் காலம் மற்றும் நமக்கு பொறுமை தேவை அவ்வளவு தான்... அதற்குள் .... ஒருவர் தனக்கு பாதகம் செய்து விட்டார்கள் நான் பாதிப்படைந்து விட்டேன்.......என்று, பொங்கி.. ஆக்ரோசமாக...அதற்கு நானே தண்டனை கொடுக்கிறேன்... என்ற பெயரிலும் பாதிக்கப்பட்டவர் நான் தானே.... அதற்கு சரியான தண்டனை எஎன்னால் தான் கொடுக்க முடியும்... அதற்கு எனக்கு தானே முழு அதிகாரமும்... உரிமையும் இருக்கிறது என தனக்கு தானாகவே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கர்மாவால் தண்டிக்கப்பட வேண்டியவர்களை தான் தொடர்ந்து அசிங்கப்படுத்தி... அடித்து... துன்புறுத்தி.. கேவலப்படுத்தி... அவமரியாதை செய்து... வார்த்தைகளால் காயப்படுத்தி... பிறரை ஏவி விட்டு தொடர்ந்து பிரச்சனை செய்ய வைத்து... மனநிம்மதி.. மரியாதையை கெடுத்து கீழ்தரமாக பேசி...நடத்தி.... எங்கும் வாழவிடாமல் ஓட.. ஓட... அடித்து விரட்டி கொடூரமாக தண்டனை என்ற பெயரில் மிக மிக மோசமாக அவர்களிடம் நடந்து விட்டு.. தனக்கு தீங்கிழைத்து விட்டார்கள்.. நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்... நான் காயப்பட்டிருக்கிறேன்... அதனால்...நான் என்ன செய்தாலும் சரி...எப்படி தண்டித்தாலும் நியாயம்...என நினைத்துக் கொண்டு.. இவ்வளவும் செய்த பிறகும் தான் கொடுத்த தண்டனை பத்தாது..எனக்கு திருப்தியில்லை என்று, எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஈடாகாது... என்று... தவறிழைத்தவரின் குணத்தை தவறாக சித்தரித்து புரளி பரப்பி ... பொது வெளியில் மானப்பங்கப்படுத்தி வெளியில் தலைகாட்டாமல் இருக்க ஆவண செய்து... உறவுகளிடம் தவறாகச் சொல்லி கொடுத்து வெறுக்கச் செய்து... அடிப்படையாக கிடைக்க வேண்டிய நியாயமான விஷயங்களை கூட கிடைக்க விடாமல் செய்து...இத்தனை கொடுமைகளையும்... சித்ரவதைகளையும்... தான் பாதிக்கப்பட்டதற்காகவே செய்து விட்டு... தனக்கு நடந்த ஒரு கொடுமைக்காக அதையே சுட்டிக் காட்டி... சுட்டிக் காட்டி... மேலும் மேலும் தண்டனைகள் தர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சித்ரவதை செய்வது... வாட்டி வதைப்பது...என தொடர்ந்து கொடுமை மட்டுமே செய்து கொண்டு இருந்து விட்டு... இப்பொழுதும் எப்படி தண்டிக்கலாம்...என யோசித்துக் கொண்டே இருந்தால்.. தற்போது யார் பாவம் செய்தவர்கள்... ஆகிறார்கள்...? யார் யாருக்கு கொடுமை செய்தவர் ஆகிறார்?ஒரு தவறுக்கு பதிலுக்கு பதிலாக நாம் செய்யும் 1000 கொடுமைகள்... சித்ரவதைகள்.. தீர்வாகுமா? அது சரியா? அப்போ... நமக்காக நாமே... நமக்கு கஷ்டத்தை துன்பத்தை கொடுத்தவர்களுக்கு பல வழிகளில் தண்டித்து தண்டனை கொடுத்து விட்டோம்...தான் செய்வது சரி நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று... அதற்கு நியாயமும் கற்பித்து விட்டோம்...அதை எல்லோரையும் நம்பவும் வைத்து விட்டோம்..இப்போ... நாமும் பாவம் தான் செய்து கொண்டிருக்கிறோம்...இதை அறியாமல்... உணராமல்..பல பாவங்களை செய்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நடந்து விட்டு... பிறகு கர்மா வேறு தனியாக தண்டிக்க வேண்டும் என காத்திருப்பது வேடிக்கையாக உள்ளது... பாதிக்கப்பட்டவரின் பேராசையாகவே தெரிகிறது தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என நினைப்பது ஆசை... தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக தானும் தண்டித்து... கடவுளும் தண்டிக்கு வேண்டும் என நினைப்பது பேராசை... முதலில் பாவம்... புண்ணியம்.. குற்றம்...தவறு... நல்லது... கெட்டது இதெல்லாம் அனைவரின் முன் ஜென்ம கர்ம வினைகளை தீர்ப்பதற்கே நநடக்கிறது..என்றால், இப்பிறப்பெடுத்தது நம் கர்ம வினையை தீர்க்க..அப்படித் தானே! ஒரு மனிதன் வாழ்நாளில் 100% நல்லவனாகவோ..(or) கெட்டவனாகவோ வாழ முடியுமா? சந்தர்ப்பமும்... சூழ்நிலையும் தான் ஒருவன் நல்லவனா... கெட்டவனா...என தீர்மானிக்கிறது... சட்டமும் அதைத்தான் சொல்கிறது..தர்மமும் அதைத்தான் சொல்கிறது... நல்லது...கெட்டது மாறி ...மாறி... ஒரு மனிதன் வாழ்வில் நடக்காவிடில், பிறகு எப்படி நம் கர்ம வினைகள் கழிந்து..பிறவி பெருங்கடலை நீந்தி கடந்து இறைவனை சரணடைவது? பிறப்பில்லா நிலையை எப்படி அடைவது...? இது எதுவும் புரியாமல்... தான் கொடுத்த தண்டனைகள் பத்தாது என்று கர்மாவும் தண்டனை தர வேண்டும் என நம்பி காத்திருப்பதும்.. கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதும் அபத்தம்! இது யார் யாரை முட்டாளாக்கும் வேலை....! #🚹உளவியல் சிந்தனை
Sivasakthi
415 காட்சிகள்
மீண்டும் ஒரு உண்மை கனா திரைப்படம்💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳👏👏💪💪🫡🫡👏👏👌👌👌👸👸🥹🥹 #👏Inspirational videos
Sivasakthi
2.9K காட்சிகள்
ஒரு பெண் மிகவும் மோசமாக மனதளவில் காயம்பட்ட பிறகு மீண்டும் எழுந்தால் மிகவும் ஆபத்தானவளாக இருப்பாள்.. நீங்கள் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் காயப்படுத்தலாம்... நீங்கள் அவளுடைய இதயத்தை உடைக்கலாம்... அவளுடைய மன அமைதியைக் கெடுக்கலாம்... அவளுடைய மனதை கூட அழ வைக்கலாம்... உடைந்த இதயம் மற்றும் சேதமடைந்த ஆத்மாவுடன் ஒரு பெண்ணை நீங்கள் வெளியேற்றி விடலாம்.., ஆனால் அவள் திரும்பி வரும்போது மிக மிக ஆபத்தான பெண்ணாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கு.. ஏறக்குறைய அவளது தனித்தன்மையை... திறமையை.. அவளுக்கான வாய்ப்பை... அங்கீகாரத்தை பறிக்கும் போரில் இருந்து அவள் தப்பிய பிறகு, அவள் வேறு ஒரு பக்குவமடைந்த பெண்ணாக முற்றிலும் மாறியிருப்பாள்.... ஒரு பெண்ணை நீங்கள் மிகவும் மோசமாக நடத்தலாம்.. காயப்படுத்தலாம்... ஆனால் அவள் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டால், நீங்கள் தவறான ஒரு நபரை காயப்படுத்தி விட்டீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டிய காலம் வரும். ஒரு பெண் பாதிக்கப்படக்கூடியவளாக இருக்கலாம்... ஆனால் அவள் நெகிழ்ச்சியுடன் இருக்க முடியும்... அனைத்தையும் கடந்து வர முடியும்.... அவள் மிகவும் மன்னிக்கக்கூடியவள், ஆனால் மறக்க கூடியவள் அல்ல... வாழ்க்கையில் மோசமான விஷயங்களைச் சந்தித்த பிறகு அவளால் இரக்கப்பட முடியாது. எனவே நீங்கள் காயப்படுத்தப் போகும் பெண்ணிடம் கவனமாக இருங்கள்... ஏனென்றால், நீங்களே உங்களை அறியாமல் ஒரு ஆபத்தான பெண்ணை உருவாக்க கூடும். அவள் நடந்துகொள்ளும் விதமெல்லாம் அவள் எப்படி நடத்தப்படுகிறாள் என்பதன் பிரதிபலிப்பே.... #👉வாழ்க்கை பாடங்கள்
See other profiles for amazing content