Follow
ராஜ் பிரபாகரன்
@birabakaran05
1,164
Posts
877
Followers
ராஜ் பிரபாகரன்
2.4K views
16 days ago
கால காத்தால பக்கத்து வீட்டுல ஆட்டைய போட்டாச்சு... நம்மளையெல்லாம் சிங்கப்பூர் ல கொண்டு விட்டாலும் அங்கேயும் சிலரை தனம்.... போகாது போல....மாங்கா திருடுவோம். #நக்கல் 🤣🤣🤣
ராஜ் பிரபாகரன்
624 views
24 days ago
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், * தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்...... * வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். * தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். * ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. * ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும். * எது அந்த தவளையை கொன்றது...? * பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். * ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"...... * நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். * ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள். * உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. * "நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது".. #துணிவு
ராஜ் பிரபாகரன்
728 views
25 days ago
ஆசப்பட்டதுல ஒன்னு கெடைக்கலைன்னா கூட பரவால, ஒன்னுமே கெடைக்கலைன்னா எப்பிடி. #நக்கல் 😒
ராஜ் பிரபாகரன்
648 views
28 days ago
துரைசாமி வழக்கம் போல் பாரில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் தனித் தனியாக மது ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார். அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் பிராந்தி ஒன்று வாங்கி, மூன்று கிளாஸ்களில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார். வெயிட்டர் சிறிது நேரம் பார்த்துவிட்டு, "சார், நீங்க தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேட்கலாமா?" "கேளுப்பா...." "நீங்க மூணு கிளாஸ்ல தனித்தனியா வாங்கி குடிக்கிறீங்களே... ஏன்னு எனக்கு புரியல". "இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூணு பேரு. ஒரு அண்ணன் பரமக்குடியில் இருக்கான், மற்றொரு தம்பி காரைக்குடியில் இருக்கான், நான் இங்க தூத்துக்குடியில் இருக்கேன். நாங்க மூணு பேரும் எப்பவுமே ஒன்னாதான் சரக்கடிப்போம். நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி, மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணியிருக்கோம். என்னோட பிரதர்ஸ் ரெண்டு பேருமே இதே மாதிரி செஞ்சுட்டுதான் அங்கேயும் குடிப்பாங்க, அதனால தான்" என்றார். ஆச்சர்யமாக பார்த்தான் அந்த Bar வெய்ட்டர். சில நாட்கள் கழித்து, இரண்டு கிளாஸ் மட்டும் தரச்சொல்லி மது வாங்கி குடித்தார். இதைக்கண்ட Bar வெயிட்டர் அவரிடம் "ரொம்ப ஸாரி சார்," என்று வருத்தப்பட்டான். "ஏம்ப்பா என்னாச்சு" என்றார் அந்தக் குடிமகன்... "இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூணு கிளாஸ்ல வாங்கிக் குடிப்பீங்க. உங்க பிரதர்ல யாரோ ஒருத்தர் இறந்துட்டாங்க போலிருக்கு, அதான் இரண்டு கிளாஸ்ல மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான். அந்த இரண்டு கிளாஸ் மதுவை, நிதானமாக சிப் பண்ணி குடித்துக் கொண்டே சொன்னார் துரைச்சாமி, "யாருக்கும் எதுவும் ஆகல, நேத்தோட நான் தான் குடியை நிறுத்திட்டேன்". 😳😳😳 #நக்கல்
ராஜ் பிரபாகரன்
883 views
29 days ago
வாகனத்தில் அதிகளவில் பணம் எடுத்து சென்ற வாகனத்தை மடக்கி பிடித்த பறக்கும் படையினர் 🔥 : நாங்க பேங்க ஆளுங்க சார் ATM மெஷின்ல பணம் போட போயிட்டு இருக்கோம்😶 #நக்கல்