Follow
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
5,356
Posts
5,542
Followers
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
563 views
1 days ago
*புறநானூறு 206* அதியமான் நெடுமான் அஞ்சி ஔவையார் அதியமானிடம் பரிசில் வேண்டி அவனது அரண்மனைக்குச் சென்றார். வாயில்-காவலன் தடுத்தான். எனக்கு உள்ளே நுழையும் உரிமை உண்டு. தடுக்காதே எனக் கூறும் பாடல் இது. [அ] வாயிலோயே, வாயிலோயே, பரிசிலர் நாங்கள். வள்ளல்களின் காதில் தெளிவான மொழியை விதைத்து எண்ணிவந்த செயலை முடித்துக்கொள்ளும் உறுதி கொண்ட நெஞ்சம் உடையவர்கள். சீர்வரிசை பெறுவதற்காக வருந்தும் வாழ்க்கை இது. அரசன் நெடுமான் அஞ்சி பரிசிலர்க்கு அடைக்காத வாயிலை உடையவன். (நீ தடுக்காதே) [ஆ) அதியமான் நெடுமான் அஞ்சி காக்கும்-மன்னர்களின் (கடுமான், கடி – உரிச்சொல், பொருள் காப்பு) வழித்தோன்றல். இப்படிப்பட்ட தன்னை அவன் அறியவில்லையா? அல்லது என் புலமையை அறியவில்லையா? (விளங்கவில்லை). [இ] அறிவும் புகழும் உடையவர்கள் மாண்டுபோயினர் என்று இந்த உலகம் பாழ்பட்டுப் போகவில்லை. (அறிவும் புகழும் கொண்ட வேறுபலர் இருக்கிறார்கள்). அதனால் என் யாழைக் காப்பாற்றிக்கொள்கிறேன். அதனை என் பையில் (கலம் என்னும் யாழ் வைக்கும் பை கலப்பை) வைத்துக்கொள்கிறேன். [ஈ] விறகு வெட்டிப் பிழைக்கும் கை வலிமை கொண்ட சிறுவர்கள் கையில் கோடாரியும் இருக்கிறது. காடும் இருக்கிறது. அதைப்போல பரிசிலராகிய நாங்களும் எந்தப் பக்கம் சென்றாலும் சோறு பெறுவோம். பாடல் [அகரப் பகுப்பு செருகல்] [அ] வாயிலோயே! வாயிலோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! [ஆ] கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? [இ] அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; [ஈ] மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை. அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது. #உண்மையை அறிவோம்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
660 views
1 days ago
18.08.2026 *இன்றைய சிந்தனை* ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ *ஆசை vs பேராசை* >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> நண்பர்களே வாழ்க்கையில் நமக்கு தேவையானதை கொண்டு வருவதற்கு ஏற்படும் உணர்வு *ஆசை* ஆகும்.... பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல், மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை தான் *பேராசை* ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.... அதிகமான பணத்தை விரும்புவது பேராசை என்று தவறாக நினைக்கிறார்கள்.... ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தேவை படும் பணத்தை அடைவதற்கு ஆசை பட்டால் அது பேராசை இல்லை.....அப்படி இல்லாமல், பயன் அற்றவை மீது வைக்கும் எல்லா ஆசைகளும் பேராசை ஆகும்... அளவற்ற ''பேராசை'' நமது குணங்களை எல்லாம் அழித்து விடும்...!எதன் மீதும் அதிகமாக ஆசை படாமல் இருந்தால், துன்பம் ஏதும் இல்லை...!!! *பேராசை தவிர்த்து நியாயமான ஆசை கொள்வோம்* ****************************************** *நற்காலை வணக்கம்🙏* கதிரவனை கண்டதும் பூக்கும் மலர்களை போல் மகிழ்ச்சி பெருகிட, இன்றைய நாளை புன்னகையுடன், இனிதாக ஆரம்பித்து நலம் தரும் நாளாக அமைத்து கொள்வோம்👍 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 *வாழ்த்துகள்*💐💐 >>>>>>>>>>>>>>>>>>>> இன்றைய நாளில் திருமண நாள்,பிறந்த நாள் கொண்டாடும் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகள்🪴🪴 வாழ்க வளமுடன்🪴🪴 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 நேர்மையுடன் செயல்படுவோம்👍🏽 *பிரியமுடன் உங்கள் நட்பு ❤️✍🏾👍* *************************************** IG Coffee☕ day 8888 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
9.8K views
1 days ago
*சிரித்துக் கொண்டே இன்றைய நாளைத் துவக்குவோம். 🤓😃😃* #🤓தமிழ் காமெடி😄 (மிஸ்) #comedy
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
644 views
1 days ago
⛹️   ⛹️‍♂️   ⛹️‍♀️ *மனம்* *ஒரு திறந்த கதவு* உணர்வுகளை பயமின்றி வரவேற்கக் பழகுங்கள், அவை உங்களிடம் பேச வந்த விருந்தினர்கள். அவை கற்றுத்தரும் பாடத்தைக் கேளுங்கள், நேரம் முடிந்ததும் அன்போடு வழி அனுப்பி வையுங்கள். உணர்வுகள் அனுபவித்து கடக்க வேண்டியவை, ஆயுள் முழுக்க சுமந்து திரிவதற்கல்ல. உங்கள் இதயம் நீங்கள் வாழ்வதற்கான இடம், வலிகளைச் சேமித்து வைக்கும் அறை அல்ல. ஏற்கனவே நிறைந்திருக்கும் கோப்பையில் புதுத் தேநீரை ஊற்ற முடியாது. முதலில் உங்கள் மனதைக் காலியாக்குங்கள். அங்கு எண்ணங்கள் ஓயட்டும், அன்பான உணர்வுகள் மட்டும் நிறையட்டும். ⛹️‍♀️   ⛹️‍♂️   ⛹️ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
656 views
1 days ago
*இன்றைய💎 சிந்தனை* ____________________________ ⛲⛱️⛲⛱️⛲⛱️⛲⛱️⛲ *⭕"அதிகப்படியான மனிதர்களுக்கு,* *⭕மிக உயர்ந்த மகிழ்ச்சியைத் தரும்* *⭕செயலே சிறந்த அறநெறி."* ⛲⛱️⛲⛱️⛲⛱️⛲⛱️⛲ *🏕️இனிய நாளாகட்டும்* ___________________________ * #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
601 views
1 days ago
*🇮🇳🌎 வரலாற்றில் இன்று 🌎🇮🇳* *✍️ பதிவு நாள்* *🌎18 - 08 - 2026🌎* *_🔹🔸 TUESDAY 🔸🔹_* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *✍️திருவள்ளுவர் ஆண்டு 𝟮𝟬𝟱𝟳* *🏵️ ஆவணி 💎 01-ந் தேதி🏵️* *🧿 செவ்வாய்க்கிழமை 🧿* *_✍️கிரிகோரியன் ஆண்டின் 230 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 231 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 135 நாட்கள் உள்ளன._* *🔷🔸 நிகழ்வுகள் 🔸🔷* 684 – மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர். 1487 – காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின. 1572 – புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது. 1587 – அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது. 1590 – அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் ஜோன் வைட் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த போது அக்குடியேற்றப் பகுதியில் மக்கள் எவரும் காணப்படவில்லை. பின்னர் அக்டோபர் 24 இல் இங்கிலாந்து திரும்பினார். 1634 – பிரான்சின் லவ்டுன் நகரில் மாந்திரீகக் குற்றங்களுக்காக உரைன் கிராண்டியர் என்பவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். 1783 – பெரிய பிரித்தானியா எங்கும் பெரும் எரிவெள்ளி அவதானிக்கப்பட்டது. 1868 – இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.[1] 1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஈலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். 1891 – மர்தினிக்கு தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் உயிரிழந்தனர். 1914 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு பேரரசர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் பெயரை பெத்ரோகிராது என மாற்றினார். 1917 – கிரேக்கத்தில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர். 1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. 1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. 1938 – அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும் சென் லாரன்சு ஆற்றின் மேலாக ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது. 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியச் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன. 1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார். 1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யூலியன் லாகூட் வலதுசாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். 1958 – விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. 1965 – வியட்நாம் போர்: அமெரிக்கக் கடற்படை வியட்கொங் படைகளின் தளம் ஒன்றை தாக்கி அழித்தது. 1971 – வியட்நாம் போர்: ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை வியட்நாமில் இருந்து திரும்ப அழைக்க முடிவு செய்தன. 1977 – ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கடுங்காயங்களால் இறந்ததை அடுத்து தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிக்கொணரப்பட்டன. 1983 – அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர். 2008 – பாக்கித்தானில் அரசுத்தலைவர் பெர்வேஸ் முஷாரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவர் பதவியைத் துறந்தார். *🔷🔸 பிறப்புகள் 🔸🔷* 1700 – பாஜிராவ், மராட்டியப் பேரரசர் (இ. 1740) 1750 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1825) 1870 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி, நாடுகாண் பயணி (இ. 1918) 1875 – பிரிதிவி வீர விக்ரம் ஷா, நேப்பாளப் பேரரசர் (இ. 1911) 1886 – ஆர். எஸ். சுபலட்சுமி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1969) 1900 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (இ. 1990) 1904 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1984) 1933 – ரோமன் போலான்ஸ்கி, பிரான்சிய-போலந்து இயக்குநர், நடிகர் 1934 – குல்சார், இந்திய இயக்குநர், கவிஞர் 1934 – தி. ந. இராமச்சந்திரன், தமிழகத் தமிழறிஞர் (இ. 2021) 1938 – பி. எம். எக்டே, இந்திய மருத்துவர், நூலாசிரியர் 1945 – எஸ். எல். வி. மூர்த்தி, ஒரு தமிழக எழுத்தாளர் 1954 – வி. கே. சசிகலா, தமிழக அரசியல்வாதி 1962 – பெலீப்பே கால்டெரோன், மெக்சிக்கோவின் 56வது அரசுத்தலைவர் 1967 – தலேர் மெகந்தி, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர் 1969 – எட்வர்டு நார்டன், அமெரிக்க நடிகர் 1975 – சிவனேசத்துரை சந்திரகாந்தன், இலங்கை, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர், அரசியல்வாதி 1987 – பாபி, வங்காளதேசத் திரைப்பட நடிகை *◼️இறப்புக்கள் ◼️* 440 – மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை) 1227 – செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1162) 1850 – பல்சாக், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1799) 1945 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897) 1979 – வசந்தராவ் நாயக், இந்திய அரசியல்வாதி (பி. 1913) 1990 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1904) 1992 – கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ், அமெரிக்க சாகசக்காரர் (பி. 1968) 2009 – கிம் டாய் ஜுங், தென் கொரியாவின் 15வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925) 2011 – ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (பி. 1953) 2012 – ரா. கி. ரங்கராஜன், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1927) 2015 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (பி. 1940) 2018 – கோபி அன்னான், ஐக்கிய நாடுகள் அவையின் 7-வது பொதுச் செயலர் (பி. 1938) *🌎சிறப்புநாள்🌍* மர நாள் (பாக்கித்தான்) #தெரிந்து கொள்வோம் #😎வரலாற்றில் இன்று📰
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
755 views
1 days ago
*கருடா கருடா என்றாலே.✍🏼🌹* #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
859 views
1 days ago
🕉️108 விநாயகர் போற்றி 1. ஓம் விநாயகனே போற்றி 2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி 3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி 4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி 5. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி 6. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி 7. ஓம் ஆனை முகத்தானே போற்றி 8. ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி 9. ஓம் ஆதிமூலமானவனே போற்றி 10. ஓம் ஆனந்த வடிவினனே போற்றி 11. ஓம் இமவான் சந்ததியே போற்றி 12. ஓம் இடரைக் களைபவனே போற்றி 13. ஓம் ஈசன் தலைமகனே போற்றி 14. ஓம் ஈகை நெஞ்சினனே போற்றி 15. ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி 16. ஓம் உலகத்தின் தலைவனே போற்றி 17. ஓம் ஊர்தோறும் உறைபவனே போற்றி 18. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி 19. ஓம் எளியோர்க்எளியவனே போற்றி 20. ஓம் என்னுயிர்த் தந்தையே போற்றி 21. ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி 22. ஓம் எருக்கம்பூ சூடுபவனே போற்றி 23. ஓம் ஏழைப் பங்காளனே போற்றி 24. ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி 25. ஓம் ஐங்கரம் படைத்தானே போற்றி 26. ஓம் ஐந்தெழுத்தான் மகனே போற்றி 27. ஓம் ஒப்பில்லாத ஒருவனே போற்றி 28. ஓம் ஒளிமயமானவனே போற்றி 29. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி 30. ஓம் ஔவைக்அருளினாய் போற்றி 31. ஓம் கருணா மூர்த்தியே போற்றி 32. ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி 33. ஓம் கண நாதனே போற்றி 34. ஓம் கணேச மூர்த்தியே போற்றி 35. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி 36. ஓம் கலியுக தெய்வமே போற்றி 37. ஓம் கற்பக விநாயகனே போற்றி 38. ஓம் கந்தனுக்அண்ணனே போற்றி 39. ஓம் கருணைக் கடலே போற்றி 40. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி 41. ஓம் கிருபா சமுத்திரமே போற்றி 42. ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி 43. ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி 44. ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி 45. ஓம் குணத்தில் குன்றே போற்றி 46. ஓம் குற்றம் பொறுத்தாய் போற்றி 47. ஓம் கூத்தன் பிள்ளாய் போற்றி 48. ஓம் கொழுக்கட்டை ஏற்பாய் போற்றி 49. ஓம் கோவிந்தன் மருகனே போற்றி 50. ஓம் சடுதியில் அருள்வாய் போற்றி 51. ஓம் சங்கஷ்ட ஹரனே போற்றி 52. ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி 53. ஓம் சிறிய கண்ணினாய் போற்றி 54. ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 55. ஓம் சுருதியின் கருத்தே போற்றி 56. ஓம் சுந்தர வடிவினனே போற்றி 57. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி 58. ஓம் ஞான முதல்வனே போற்றி 59. ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி 60. ஓம் தந்தம் ஏந்தியவனே போற்றி 61. ஓம் தும்பிக்கை முகனே போற்றி 62. ஓம் துயர் தீர்ப்பவனே போற்றி 63. ஓம் தெய்வக் குழந்தாய் போற்றி 64. ஓம் தேவாதி தேவனே போற்றி 65. ஓம் தொந்தி விநாயகனே போற்றி 66. ஓம் தொப்பையப்பனே போற்றி 67. ஓம் தோன்றாத் துணையே போற்றி 68. ஓம் நம்பினாரைக் காப்பாய் போற்றி 69. ஓம் நான்மறை காவலனே போற்றி 70. ஓம் நீதிநெறி மிக்கவனே போற்றி 71. ஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றி 72. ஓம் பழத்தை வென்றாய் போற்றி 73. ஓம் பக்தரைக் காப்பாய் போற்றி 74. ஓம் பரிபூரணமானாய் போற்றி 75. ஓம் பாரதம் எழுதினாய் போற்றி 76. ஓம் பிரணவப் பொருளாய் போற்றி 77. ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி 78. ஓம் பிரம்மச்சாரியே போற்றி 79. ஓம் பிள்ளையார் அப்பனே போற்றி 80. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி 81. ஓம் பிள்ளை மனத்தானே போற்றி 82. ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி 83. ஓம் பெரிய கடவுளே போற்றி 84. ஓம் பேரருள் மிக்கவனே போற்றி 85. ஓம் பேதம் தவிர்ப்பவனே போற்றி 86. ஓம் மஞ்சளில் வாழ்பவனே போற்றி 87. ஓம் மகிமை நிறைந்தவனே போற்றி 88. ஓம் மகா கணபதியே போற்றி 89. ஓம் முதல்பூஜை ஏற்பவனே போற்றி 90. ஓம் முழுமுதல் கடவுளே போற்றி 91. ஓம் முக்கண்ணன் மகனே போற்றி 92. ஓம் முக்காலம் உணர்ந்தாய் போற்றி 93. ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி 94. ஓம் மெய்யான தெய்வமே போற்றி 95. ஓம் மேன்மை மிக்கவனே போற்றி 96. ஓம் வல்லப கணபதியே போற்றி 97. ஓம் வரசித்தி விநாயகனே போற்றி 98. ஓம் வாழ்வு தரும் வள்ளலே போற்றி 99. ஓம் வானவர் தலைவனே போற்றி 100. ஓம் விக்னேஸ்வரனே போற்றி 101. ஓம் விக்ன விநாயகனே போற்றி 102. ஓம் வியாசருக்உதவினாய் போற்றி 103. ஓம் விடலைக்காய் ஏற்பாய் போற்றி 104. ஓம் வீதியில் உறைவாய் போற்றி 105. ஓம் வெள்ளை மனத்தாய் போற்றி 106. ஓம் வெற்றி அளிப்பாய் போற்றி 107. ஓம் வேழ முகத்தவனே போற்றி 108. ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி! 🙏🙏🙏 #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
716 views
1 days ago
ஆத்மநாதசுவாமி திருக்கோயில் அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்), ஆவுடையார்கோயில் – 614 618, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு. 📞 கோயில் தொலைபேசி: 04371 – 233301 🌳 ஸ்தல விருட்சம்: குருந்த மரம் 🕰️ தரிசன நேரம்: காலை 6.00 – 12.00 மாலை 4.00 – 9.00 அருகிலுள்ள முக்கிய நகரம்: அறந்தாங்கி – சுமார் 13 கி.மீ. ஆவுடையார்கோயிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் “குருந்த மரம்” ஆகும். இம்மரம் இந்தத் திருத்தலத்தின் வரலாற்றுடனும், மாணிக்கவாசகரின் ஆன்மிக அனுபவத்துடனும் மிக நெருக்கமாக இணைந்துள்ளது. குருந்த மரத்தின் சிறப்பு: ஆத்மநாதசுவாமி கோயிலின் குருந்த மரம் ஒரு சாதாரண தல விருட்சமாக மட்டும் கருதப்படுவதில்லை. சிவபெருமானே குருந்த மரத்தின் கீழ் குருவாக இருந்து மாணிக்கவாசகருக்கு ஞான உபதேசம் அருளியதாக தலபுராண மரபு கூறுகிறது. மாணிக்கவாசகர் அப்போது பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்தார். மன்னன் கொடுத்த பொருளைக் கொண்டு குதிரைகள் வாங்கச் சென்றபோது, திருப்பெருந்துறையை அடைந்தார். அங்கு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குரு வடிவில் அவருக்கு காட்சி தந்து அருளியதாக ஐதீகம். அந்த சந்திப்பே மாணிக்கவாசகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆன்மிகத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் அவர் சிவபக்தியில் முழுமையாக ஈடுபட்டு, திருவாசகத்தைப் பாடிய மாணிக்கவாசகராக உயர்ந்தார். குருந்த மரமே சிவ வடிவம்: இந்தத் திருத்தலத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக, குருந்த மரத்தையும் சிவபெருமானின் திருவுருவமாகக் கருதி வழிபடுவது குறிப்பிடப்படுகிறது. உருவமற்ற இறைவனின் தத்துவத்தை வலியுறுத்தும் ஆவுடையார்கோயிலின் வழிபாட்டு மரபுடன் இது மிகவும் பொருந்துகிறது. ஆத்மநாதசுவாமி கோயிலில் கருவறையில் வழக்கமான சிவலிங்க வடிவம் இல்லாமல், ஆவுடையார் மட்டுமே பிரதானமாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் விளங்குகிறார் என்ற தத்துவம் இத்தலத்தில் வலியுறுத்தப்படுகிறது. குருந்த இலைகளின் வித்தியாசம்: தல மரபு மற்றும் கோயில் தொடர்பான சில ஆதாரங்களில், குருந்த மரத்தின் இலைகளில் மூன்று விதமான மணங்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதனை இத்தலத்தின் அற்புதச் சிறப்புகளில் ஒன்றாக பக்தர்கள் கருதுகின்றனர். மாணிக்கவாசகருக்கும் குருந்த மரத்திற்கும் உள்ள தொடர்பு: குருந்த மரத்தின் கீழ் சிவபெருமான் குருவாக மாணிக்கவாசகருக்கு அருளியதாக நம்பப்படுவதால், இந்த மரம் ஞானம், குருவருள், சிவஞானம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனால் ஆவுடையார்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு, குருந்த மரத்தை தரிசிப்பது என்பது ஒரு மரத்தைப் பார்ப்பது மட்டுமல்ல; மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவாக அருளிய திருநிகழ்வை நினைவுகூர்வதாகவும் அமைகிறது. குருந்த மரத்தின் முன் நடைபெறும் வழிபாடு: குருந்த மரம் சிவபெருமானாகவே போற்றப்படுவதால், கார்த்திகை மாத சோமவாரங்களில் இம்மரத்தின் முன்பாக 108 சங்காபிஷேகம் நடைபெறும் மரபு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இது ஆவுடையார்கோயிலின் தனித்துவமான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். திருவாசகத்துடன் தொடர்பு: ஆவுடையார்கோயில் திருவாசகத் திருத்தலம் என்ற பெருமையைப் பெற்றது. மாணிக்கவாசகரின் ஆன்மிக அனுபவங்களும் சிவபெருமானின் குருவருளும் இத்தலத்துடன் ஆழமாக இணைந்துள்ளன. குருந்த மரத்தடியில் ஏற்பட்டதாகக் கூறப்படும் அந்த அருள்நிகழ்வே திருவாசகத்தின் ஆன்மிகப் பின்னணியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சுருக்கமாக: 🌳 ஸ்தல விருட்சம்: குருந்த மரம் 🕉️ சிறப்பு: சிவபெருமான் குரு வடிவில் மாணிக்கவாசகருக்கு அருளியதாக நம்பப்படும் மரம் 📿 ஆன்மிகப் பொருள்: குருவருள் – ஞானம் – சிவஞானம் 🍃 தல மரபுச் சிறப்பு: இலைகளில் மூன்று விதமான மணம் இருப்பதாகக் கூறப்படுகிறது 🪔 வழிபாடு: கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேக மரபு குறிப்பிடப்படுகிறது. ஆத்மநாதசுவாமி கோயிலின் குருந்த மரம், மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவாக அருளிய நினைவுச் சின்னமாக மட்டுமல்லாமல், “இறைவன் உருவத்தைக் கடந்த அருவமான பரம்பொருள்” என்ற ஆவுடையார்கோயிலின் ஆழமான சிவஞானத் தத்துவத்தையும் எடுத்துரைக்கும் புனித ஸ்தல விருட்சமாக விளங்குகிறது. #god