Follow
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
5,418
Posts
4,638
Followers
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
0 view
1 minutes ago
_*உங்களிடம் உள்ள திறமைகளே உங்களுடைய உயர்ந்த செல்வங்கள்.*_ _*அச்செல்வங்களை யாராலும் அபகரிக்க முடியாது. அவற்றைப் பயன்படுத்தினால் நிறையுமே தவிர குறையாது.*_ _*பயன்படுத்துவதால் பன்மடங்காகும்.*_ _உங்கள் திறமைச் செல்வங்களை உணருங்கள். பயன்படுத்துங்கள்._ _தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்._ _உங்கள் வாழ்வில் புதிய உதயம் தோன்றுவதை உணருங்கள்._ _*அனைத்தையும் சொல்லிச்*_ _*சொல்லிப் புரிய வைப்திலேயே பாதி அன்பு தோற்று விடுகிறது.*_ _*சொல்லியும் புரியாத போது மீதி அன்பும் தோற்று விடுகிறது.*_ _புரியாத அன்பை புரிய வைக்கவும், உங்களைப் புரிந்து_ _கொள்ளாதவர்களைத் தேடிச் செல்வதையும் கைவிடுங்கள்._ _அப்போது தான் உள்ளமும் உடலும் நலமாகும்._ _*அருகதை இல்லாத இடத்தில் அன்பு வைத்துவிட்டு ஏமாந்து விட்டேன் என்று புலம்பாதீர்கள்,*_ _*நல்லவேளை தப்பித்து விட்டேன் என்று*_ _*சொல்லுங்கள்.*_ _உங்கள் உண்மையான அன்பைப் பற்றி உணராதவர்க்கு உங்கள் விழிநீரை வீணாக்காதீர்கள்._ _*தடைகள்*_ _*நம்மைத் தடுப்பதற்கு அல்ல.*_ _*நாம் தாண்டும்*_ _*உயரத்தைக் கூட்டுவதற்கே.*_ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
0 view
5 minutes ago
*🇮🇳🌎 வரலாற்றில் இன்று 🌎🇮🇳* *✍️ பதிவு நாள்* *🌎08 - 08 - 2026🌎* *_🔹🔸 SATURDAY 🔸🔹_* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *✍️திருவள்ளுவர் ஆண்டு 𝟮𝟬𝟱𝟳* *🏵️ ஆடி 💎 23-ந் தேதி🏵️* *🧿 சனிக்கிழமை 🧿* *_✍️கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன._* *🔷🔸 நிகழ்வுகள் 🔸🔷* 1503 – இசுக்காட்லாந்து மன்னர் நான்காம் யேம்சு இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றியின் மகள் மார்கரெட்டை எடின்பரோவில் திருமணம் செய்தார். 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக சித்தூரில் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது. 1588 – இங்கிலாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு முடிவுக்கு வந்தது. 1648 – முதலாம் இப்ராகிமுக்குப் பின்னர் உதுமானியப் பேரரசராக நான்காம் மெகுமெது முடி சூடினார். 1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான். 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டையில் தோல்வியடைந்த இராணுவத் தளபதி ராபர்ட் ஈ. லீ தனது பதவியைத் துறப்பதாக அமெரிக்கக் கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிசிற்குக் கடிதம் எழுதினார். தலைவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 1876 – தாமசு ஆல்வா எடிசன் மிமியோகிராஃப் என்ற பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார். இதுவே ரைட் சகோதரர்களின் முதலாவது வான் பயணமாகும். 1919 – ஆப்கானித்தானுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே துராந்து எல்லைக்கோடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.[1] 1929 – கிராஃப் செப்பலின் என்ற செருமானிய போர்க் கப்பல் உலகைச் சுற்றும் தனது பயணத்தை ஆரம்பித்தது. 1942 – இந்திய தேசிய காங்கிரசு பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை நிர்ணயிக்க பிரான்சு, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலண்டனில் கூடின. 1947 – பாக்கித்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. 1963 – இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு £ 2.6 மில்லியன் பணத்தைக் கொள்ளையடித்தது. 1967 – தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) அமைப்பு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய இணைந்து உருவாக்கப்பட்டது. 1973 – தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அரசுத்தலைவர்) கிம் டாய் ஜுங் கடத்தப்பட்டார். 1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அடுத்த நாள் முதள் தனது பதவியைத் துறக்கவிருப்பதாக அறிவித்தார். 1988 – பர்மாவில் ரங்கூன் நகரில் மக்களாட்சியை வலியுறுத்தி எழுச்சி நிகழ்ந்தது. செப்டம்பர் 18 இல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததை அடுத்து இவ்வார்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. 1989 – ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது. 1990 – ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. சில நாட்களில் வளைகுடாப் போர் ஆரம்பமானது. 1991 – அக்காலத்தில் மிக உயர்ந்த அமைப்பு வார்சாவா வானொலித் தொலைத்தொடர்பு கோபுரம் இடிந்து வீழ்ந்தது. 1992 – யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார். 1993 – குவாமில் இடம்பெற்ற 7.8 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது, 71 பேர் காயமடைந்தனர். 1998 – ஆப்கானித்தான் மசார் ஈ சரீப் நகரில் ஈரான் தூதரகம் தாலிபான்களால் தாக்கப்பட்டதில் பத்து தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 2000 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் மூழ்கிய அமெரிக்க கூட்டமைப்பின் எச்.எல்.ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. 2006 – திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 2008 – சீனா, பெய்ஜிங் நகரில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2008 – போலந்தின் கிராக்கோவ்வில் இருந்து செக் குடியரசு பிராகா நோக்கிச் சென்ற யூரோசிட்டி விரைவுத் தொடர் வண்டி செக் குடியரசில் விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 64 பேர் காயமடைந்தனர். 2010 – சீனாவில் கான்சு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவில் சிக்கி 1,400 பேர் உயிரிழந்தனர். 2014 – மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு பன்னாட்டு அளவில் பொதுநல அவசரகால நிலையை அறிவித்தது. 2016 – பாக்கித்தான் குவெட்டாவில் அரச மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 முதல் 94 பேர் வரை கொல்லப்பட்டனர். *🔷🔸 பிறப்புகள் 🔸🔷* 1170 – புனித தோமினிக், புனிதர், தொமினிக்கன் சபை நிறுவனர் (இ. 1221) 1705 – கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ், இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் (இ. 1750) 1873 – அழகசுந்தரம், இலங்கைத் தமிழறிஞர் (இ. 1941) 1884 – சாரா டீஸ்டேல், அமெரிக்கக் கவிஞர், கல்வியாளர் (இ. 1933) 1901 – எர்னஸ்ட் லாரன்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1958) 1902 – பால் டிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1984) 1909 – சார்ல்ஸ் லிட்டில்டன், நியூசிலாந்தின் 9வது ஆளுநர், துடுப்பாட்ட வீரர் (இ. 1977) 1921 – உலிமிரி இராமலிங்கசுவாமி, இந்திய நோயியலாளர் (இ. 2001) 1924 – அ. ந. கந்தசாமி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் (இ. 1968) 1927 – வி. எஸ். துரைராஜா, இலங்கைக் கட்டிடக் கலைஞர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2011) 1931 – உரோசர் பென்ரோசு, ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், மெய்யியலாளர் 1940 – திலீப் சர்தேசாய், அருச்சுனா விருது பெற்ற இந்தியத் துடுப்பாளர் (இ. 2007) 1941 – டிரோன் பர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி (இ. 2008) 1941 – கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத், இந்திய வணிகத்துறைப் பேராசிரியர் (இ. 2010) 1948 – சிவெத்லானா சவீத்சுக்கயா, உருசிய விண்வெளி வீராங்கனை 1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர் 1952 – சோ. தர்மன், தமிழக எழுத்தாளர் 1956 – தீஜான் பாய், இந்திய நாட்டுப்புறக் கலைஞர் (இ. 2026) 1974 – மஞ்சுள் பார்கவா, கனடிய-அமெரிக்க கணிதவியலாளர் 1977 – முகம்மது வசீம், பாக்கித்தானித் துடுப்பாளர் 1981 – ரொஜர் பெடரர், சுவிட்சர்லாந்து டென்னிசு வீரர் 1990 – கேன் வில்லியம்சன், நியூசிலாந்துத் துடுப்பாளர் *◼️இறப்புக்கள் ◼️* 117 – திராயான், உரோமைப் பேரரசர் (பி. 53) 1909 – மேரி மக்கிலொப், ஆத்திரேலியக் கத்தோலிக்கப் புனிதர் (பி. 1842) 1916 – யமஹா, டொரகுசு, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1851) 1946 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1867) 1998 – அன்னா ஜேன் ஆரிசன், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1912) 2000 – எஸ். நிஜலிங்கப்பா, கர்நாடக அரசியல்வாதி (பி. 1902) 2000 – கா. கைலாசநாதக் குருக்கள், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1921) 2016 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1948) 2024 – புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சர் (இ. 1944) *🌎சிறப்புநாள்🌍* தந்தையர் தினம் (மங்கோலியா, சீனக் குடியரசு) போர்நிறுத்த நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்) பன்னாட்டுப் பூனை நாள் #உண்மையை அறிவோம் #😎வரலாற்றில் இன்று📰
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.1K views
17 hours ago
நிஜத்தின் நேசிப்பால் தான்.. என் நினைவுக்குள்ளும்.. நீ உயிர் வாழ்கிறாய்... இல்லை இல்லை ... உயிர்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...!! *இரவு* வணக்கம்....✨🌹 #good night
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.7K views
1 days ago
*சிரித்துக் கொண்டே இன்றைய நாளைத் துவக்குவோம். 🤓😃😃* #comady #comady status😂😁
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.6K views
1 days ago
இயற்கையின் அதிசயம் 🔥❤️ அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசியபூங்காவில் காணப்படும் ஹார்ஸ்டெயில் நீர்வீழ்ச்சி தான் இந்த வைரல் நிகழ்வாகும். ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் (பொதுவாக பிப்ரவரி 17 முதல் 22 வரை உச்சத்தை அடையும்) சூரியன் மறையும் நேரத்தில், ஒவ்வொரு மாலையும் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே மறையும் சூரியன் இந்த நீர்வீழ்ச்சியின் மீது ஒரு துல்லியமான கோணத்தில் படும்போது, குளிர்காலப் பனி உருகுதல் சீராக இருப்பதும், சூரியன் மறையும் நேரத்தில் மேற்குப் பகுதியில் வானம் முற்றிலும் தெளிவாக இருப்பதும் அவசியம் அதனால் அது நெருப்பு நதியைப்போல பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்கிறது. #உண்மையை அறிவோம்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.4K views
1 days ago
*🇮🇳🌎 வரலாற்றில் இன்று 🌎🇮🇳* *✍️ பதிவு நாள்* *🌎07 - 08 - 2026🌎* *_🔹🔸 FRIDAY 🔸🔹_* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *✍️திருவள்ளுவர் ஆண்டு 𝟮𝟬𝟱𝟳* *🏵️ ஆடி 💎 22-ந் தேதி🏵️* *🧿 வெள்ளிக்கிழமை 🧿* *_✍️கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன._* *🔷🔸 நிகழ்வுகள் 🔸🔷* கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 461 – உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். 626 – அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர். 768 – இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 936 – முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். 1714 – உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது. 1786 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது நடுவண் தொல்குடி இந்திய சிறப்புப் பகுதி அமைக்கப்பட்டது.[1] 1819 – கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் எசுப்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார். 1890 – சுவீடனில் அன்னா மான்சுடொட்டர் என்பவர் கடைசிப் பெண்ணாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். 1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[2] 1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. 1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது. 1933 – ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர். 1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர். 1944 – ஆர்வர்டு மார்க் I என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது. 1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் அறிவித்தார். 1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது. 1960 – ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. 1962 – தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க மறுத்த கனடிய-அமெரிக்க மருந்தியலாளர் பிரான்செசு கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 1964 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் மீது வட வியட்நாமியப் படைகளின் தாக்குதல்களைக் கையாளுவதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சனுக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது. 1970 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது. 1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது. 1987 – லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். 1989 – எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கி லேலண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 1990 – வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர். 1995 – கொழும்பில் மத்திய மாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் 24 பேர் கொல்லப்பட்டனர், 55 பேர் காயமடைந்தனர்.[3] 1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 212 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 1999 – செச்சினிய-ஆதரவு இசுலாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர். 2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார். 2008 – தெற்கு ஒசேத்தியா தொடர்பான உருசிய-ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது. 2017 – இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஆக்சிசன் தரப்படாமல் இறந்தனர். *🔷🔸 பிறப்புகள் 🔸🔷* 1642 – உமறுப் புலவர், தமிழகப் புலவர் 1702 – முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748) 1876 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (இ. 1917) 1912 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976) 1925 – மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்திய உயிரியலாளர் 1928 – யேம்சு ராண்டி, கனடிய-அமெரிக்க நடிகர் 1933 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2012) 1946 – ஜான் மேத்தர், அமெரிக்க விண்மீனியல் அறிஞர் 1948 – கிறெக் சப்பல், ஆத்திரேலியத் துடுப்பாளர் 1950 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994) 1958 – மகேசு தத்தானி, இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர் 1963 – நிக் கிலெஸ்பி, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் 1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர் 1975 – சார்லீசு தெரன், தென்னாப்பிரிக்க-அமெரிக்க நடிகை 1978 – அலெக்சாண்டர் அஜா, பிரெஞ்சு இயக்குநர் *◼️இறப்புக்கள் ◼️* 1941 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் (பி. 1861) 1974 – வாணிதாசன், புதுவைத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1915) 1996 – கிருஷாந்தி குமாரசுவாமி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டவர் (பி. 1977) 2013 – ச. சபாநாயகம், ஈழத்து மரபுவழி ஓவியர் 2014 – சுருளி மனோகர், தென்னிந்திய நகைச்சுவை நடிகர் 2018 – கலைஞர் மு. கருணாநிதி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1924) *🌎சிறப்புநாள்🌍* குடியரசு நாள் (ஐவரி கோஸ்ட்) * #😎வரலாற்றில் இன்று📰 #உண்மையை அறிவோம்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.3K views
1 days ago
*பஞ்சபாத்ரம் என்று* *ஏன்* *சொல்லுகிறோம்?* *அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது?* பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு, ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர். அது என்ன பஞ்ச பத்ரம்? அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும் பாத்திரம் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக ஐந்து இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம்,பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான் ஆராதனத்திற்கு உகந்தது துளசிதளம் ( திருத்துழாய்). ஸ்மார்த்தார்கள் ஆராதிக்கும் சிவனுக்கு உகந்தது வில்வம் என்பர் (பெருமாள் கோவிலிலும் வில்வ அர்ச்சனை செய்வர்). சிவனின் பத்னியான அம்மனுக்கு வேப்பிலை உகந்தது. அவரின் புத்திரனான விநாயகருக்கு அருகம் புல் உகந்தது. படைப்பு தொழிலை கவனிக்கும் பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது. இப்படியாக ஐந்து பத்ரங்களை ஒவ்வொரு ஆராதனைக்கும் அவரவர்கள் உபயோகிப்பதால் பஞ்ச பத்ர பாத்ரம் என்பர். திருவாராதனத்தில் பகவானுக்கு அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்று பஞ்ச உபசாரம் செய்ய உபயோகிப்பதால் அந்த ஐந்து நீர்வட்டில் பஞ்ச பாத்ரம் என அழைக்கிறோம். *பஞ்சபாத்திரம் =* *பஞ்ச+ பாத்திரம்.* பெரும்பாலும் இல்லத்தில் அல்லது நமது பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் தீர்த்தம் இருக்கும். ஆனால் தீர்த்த விநியோகம் செய்யும் போது ஒரு கிண்ணத்தில் உள்ள தீர்த்தத்தை மட்டுமே நமக்குத் தருகிறார்கள். பஞ்சோபசார பாத்ரம் என்றால் என்ன? அதாவது பெருமாளுக்கு அர்க்யம் -கைகளை சுத்தம் செய்ய பாத்யம் – பாதங்களை சுத்திகரிக்க ஆசமனீயம் – இது ஆசமனம் ஸ்நானீயம் – திருமேனிக்கு சர்வார்த்த தோயம் – மேலே உள்ள உபசாரத்தை தவிர உள்ள மற்ற அனைத்து உபசாரங்களுக்கும் என பயன் படுத்துவதால் அந்த ஐந்து பாத்திரங்களையும் பஞ்ச பாத்திரங்கள் என்பர். அப்போ சொம்பு எதுக்கு? மேலே சொல்லியுள்ள உபசாரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை வைப்பதற்க்கு அதில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் இந்த பஞ்ச பாத்திரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை விடுவார்கள். அப்படியானால் கோவிலில் தீர்த்த விநோயோகத்திற்கு எதில் இருந்து தீர்த்தம் தருவார்கள்? அதாவது நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம் சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து தருவார்கள். அந்த பாத்ரம் தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். மற்ற அனைத்தின் உபசார தீர்தங்களும் இந்த ஐந்தாவது பாத்திரத்திற்க்கே தான் போயும் வரவும் செய்யும். இந்த தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்களும் ஐந்தாகும். பச்சைக் கர்ப்பூரம் (ஶ்ரீவைஷ்ணவர்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் மட்டும் உபயோகிப்பர்). ஏலக்காய், இலவங்கம் ஜாதிக்காய், வெட்டிவேர். இவற்றுடன் சிறிது மஞ்சள் கலந்து சில கோவில்களில் உபயோகிப்பர். மூன்றாவதாக பஞ்சபாத்ரம் என்று ஒரே ஒரு பாத்ரத்தை சொல்லுவர். பொதுவாக அந்த டம்ளர் போலுள்ள பாத்ரத்தை பஞ்சமுக பாத்ரம் என்பர். விளக்கில் தானே பஞ்சமுகம்? நீர் பாத்ரத்துக்கும் பஞ்சமுகம் என்பதா? பஞ்சமுகம்என்பதற்குஅர்த்தமே வேறு. வியாக்கரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள். இந்த பாத்திரத்தின் முகப்பு மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்றும் பெயர். *அதேபோல் திருவாராதனத்திற்கு* *உபயோகிக்கும் அந்த டம்ளர்* *போன்ற* *பாத்திரத்தின்* *தலைப்பாகம்* *விரிந்தும்* *உடல் சிறுத்தும்* *இருப்பதனால் இந்த பாத்திரத்தையும்கூட பஞ்ச பாத்திரம்* *என்று கூறுவர்* *பெரியோர்.✍🏼🌹*.. #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
7.9K views
1 days ago
*சிக்கல்கள் தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாத பெருமாள் கோவில்.,....* விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிங்கவரம் ரங்கநாதர் கோவில். இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட குடைவரை கோவிலாகும். கோவில் வரலாறு பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணு ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டம். அவரது செஞ்சி அரண்மனைக்கு அருகே எழில் மிகு மலர்வனம் ஒன்று அமைந்திருந்தது. இங்கிருந்து தினமும் அரண்மனைக்கு பூக்கள் எடுத்துச்செல்லப்படும். ஆனால் சில நாட்களாக அந்த வனத்தில் இருந்து பூக்கள் எதுவும் அரண்மனைக்கு வரவில்லை. மன்னன் என்னவென்று விசாரித்தபோது, `வராகம் ஒன்று நந்தவனத்தின் பூக்களை எல்லாம் தின்று தீர்த்துவிடுகிறது. எவ்வளவு முயன்றும் அந்த வராகத்தைப் பிடிக்கவோ, கொல்லவோ முடியவில்லை' என்று புகார் தெரிவித்தனர். ஒருநாள் சிம்மவிஷ்ணு, அந்த வராகத்தை பிடிக்க நந்தவனத்தில் ஒளிந்திருந்தார். அப்போது வராகம் வந்து மேயத் தொடங்கியது. உடனே, மன்னன் அதன் முன் குதித்து அதை வேலால் குத்த முயன்றான். ஆனால் அந்த வராகம் தப்பி ஓடியது. மன்னன் விடாமல் துரத்தினான். ஒருகட்டத்தில் வராகம் நந்தவனத்தைத் தாண்டி மலைமேல் ஏறத்தொடங்கியது. மன்னனும் விடாமல் பின் தொடர்ந்தான். மலை உச்சிவரை சென்ற வராகம் அங்கே ஒரு கணம் நின்று மன்னனைத் திரும்பிப் பார்த்து மறைந்தது. மன்னன் வராகம் மறைந்த உச்சிக்குச் சென்று பார்த்தால் அங்கே பிரமாண்டமான ரங்கநாதர் திருமேனி இருந்ததாம். வந்தது சாதாரண வராகம் இல்லை என்று உணர்ந்த மன்னன் அன்று முதல் அந்த ரங்கநாதரை வழிபடத் தொடங்கினார். அந்த சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் அந்த மலையைக் குடைந்து ரங்கநாதருக்கு கோவில் அமைத்தார் என்பது வரலாறு. ஆலய அமைப்பு இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் உயர்ந்தோங்கிய ஊஞ்சல் மண்டபம் நம்மை இனிதே வரவேற்கிறது. மலைக்கோவிலை தரிசிக்கப் படிக்கட்டுகள் ஏறுவதற்கு முன், ஒற்றைப் பாறையில் திருமாலுக்கு உகந்த சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம், பஞ்சமுக அனுமன் ஆகிய திருவடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றை வணங்கிய பின் செங்குத்தாகக் காணப்படும் 125 படிக்கட்டுகளைக் கடந்து மேலே சென்றால், 5 நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்தை காணலாம். இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் தொன்மை வாய்ந்த குடைவரையைக் காணலாம். பாறையை குடைந்து உள்ள மண்டபத்துக்கு பின்னால் ஆதிசேஷன் மீது அனந்த சயன நிலையில் ரங்கநாதர் பள்ளிகொண்டுள்ளார். குடைவரையில் காணப்படும் ரங்கநாத பெருமாளின் திருமேனியானது 24 அடி நீளம் கொண்டது. இது திருவரங்கம் அரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாதரை விடவும் பெரியது ஆகும். மூலவர் வயிற்றுக்கு நேராக பிரம்மாவும், மார்பில் மகாலட்சுமியும், கீழ்பாகத்தில் பூதேவி, கருடன், ஜெயவிஜயன், நாரதர் ஆகியோரும் உள்ளனர். இந்த குடைவரையில் வலப்புறமாக ரங்கநாயகி தாயார், தனி சன்னிதியில் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். அதே அறையின் பின்புறமாக குடைவரையை ஒட்டியபடி உக்கிரமான துர்க்கை வீற்றிருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. துர்க்கை அம்மனை ஜன்னல் வழியாகவே தரிசிக்க முடியும். துர்க்கையை வயதான ஒருவரும், இளம் வயதுடைய ஒருவரும் வணங்குவது போல் அருகில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் எதிர்புறம் பலிபீடமும், கல் கொடிமரமும் காணப்படுகின்றன. மலையில் ராஜகோபுரம், வரதராஜ பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி, சுனை நீர் குளம், வராகர் சன்னிதி ஆகியவை உள்ளன. கோவிலின் சுனை நீர் குளத்துக்கு எதிரில் அரசமரம் தலவிருட்சமாக இருக்கிறது. இந்த தலத்தில் இருக்கும் கருடர் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர் என்கிறார்கள். இந்தக் கருடரை வணங்கினால் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனபயமும் அகலுமாம். இங்கு வந்து வணங்கும் பக்தர்களின் தீராத கஷ்டங்களையும், சிக்கல்களையும் ரங்கநாதர் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம். செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு, ரங்கநாதரை குலதெய்வமாக வணங்கி வந்ததாகவும், தாயார் அம்மாள் சன்னிதி அருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாகவே செஞ்சிக்கோட்டையில் இருந்து ராஜா தேசிங்கு, இந்தக் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வணங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. வழிபாடு இக்கோவிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டுகளில் சிறப்பு பூஜையும், சித்ரா பவுர்ணமி அன்று சுவாமி வீதி உலாவும், வைகாசியில் கருட சேவையும், ஆடி மாத பவித்திர உற்சவமும், ஆடிப்பூரத்தில் ஊஞ்சல் உற்சவமும், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும், திருப்பாவாடை உற்சவமும், தை மாதம் திருப்பதியில் நடைபெறுவது போல் ரத சப்தமி உற்சவமும், காணும் பொங்கல் மற்றும் தை அமாவாசை அன்று பகலில் உற்சவமும், பங்குனியில் ராமநவமி உற்சவமும் நடக்கிறது. மேலும் சுப முகூர்த்த நாட்களில் திருமணங்களும், 60-ம் கல்யாணமும் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் ரங்கநாதரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.✍🏼🌹 #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.2K views
1 days ago
*#திருமலையில் பக்தர்கள் பூ வைக்காமல் இருப்பதன் உண்மையான காரணம் இதுதான்....??* நமது இந்து பாரம்பரிய முறைப்படி பெண்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் பாரம்பரிய உடை, நகை, பூ அணிந்து முத்துக்கள் நிறைந்த கோவிலுக்கு சென்று அந்த தெய்வத்தின் அருள் பெறுவார்கள். * ஆனால் கலியுக கடவுளாக மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி உள்ள திருப்பதியில், பக்தர்கள் எந்த சூழ்நிலையிலும் மலருடன் சுவாமி தரிசனத்திற்கு செல்ல மாட்டார்கள். வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் செக்போஸ்டில் தவறாக மலர்களை வைத்து, வரிசையில் பூக்களை அகற்றி பக்தர்களை தரிசிக்க அனுப்பி வைக்கிறார்கள். *ஆனால் ஏன் பக்தர்களை இப்படி சுவாமி தரிசனத்திற்கு செல்ல வைக்க கூடாது என்பதன் காரணத்தை தெரிந்துகொள்வோம்... விஷ்ணு அலங்கார பிரியன், சிவன் அபிஷேகப் பிரியனாக இருந்தால், வெங்கடேஸ்வர சுவாமி பூ அலங்காரப் பிரியனாக இருக்கிறார். பிரம்மோற்சவத்தின் போது சுவாமிக்கு சில ஆயிரம் வகையான மலர்களால் புஷ்பம் சாதிக்கப்படும். பொதுவாக ஸ்ரீ ரங்கனை போகி மண்டபம் என்பார்கள், காஞ்சி மண்டபம் தியாக மண்டபம் என்பார்கள். அப்படியே திருமலை மலர் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. * இதனால் தான் திருமலையில் பூக்கும் ஒவ்வொரு மலரையும் மனிதர்களை விட அந்த கடவுளுக்கு செலுத்த வேண்டும் என்று அங்குள்ள மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் பெண்களும் ஆண்களும் பூ அணியக்கூடாது என்ற விதி இருக்கிறது.✍🏼🌹 #god