ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்

Devarajan Rajagopalan
650 views
2 days ago
🌾 Rice Bag & Grocery Support for Small Temples - A min of ₹5,000 per small temple per month is required to provide rice bags and essential groceries for the daily needs of the temple (prasadam) or the temple priest family. Since October 2022, we have been supporting three temples but are unable to continue regularly due to shortage of funds, and with your contribution we can sustain this service without interruption and extend it to more small temples — A humble appeal from Devarajan N.R. (NRD) — leading the Brahmin (GC) Political Party since 2017, with 10,000+ volunteers across India, which contested 5 MP seats from Tamil Nadu in the 2024 elections and Sai Sudha Deva Trust (SSDT), which has supported 150+ students and impacted 1000+ lives 🌾 We welcome monthly donors of ₹500 / ₹5k / ₹10k to help us sustain and expand our work. Together, we can uplift lives with dignity and purpose. A/C Name: SAI SUDHA DEVA TRUST A/C No: 23280200005800 IFSC: FDRL0002328 Bank: Federal Bank Upi id: Saisudha5800@fbl GPay: 9362439124 Let your monthly support become someone’s lifeline. Thanks & Regards, Devarajan N.R (NRD) President – Brahmin (GC) Political Party - DevaPoliticalParty.org Chairman – SaiDevGroup.com President – SaiSudhaDevaTrust.org 📱 +91 93624 39124 (Note: The attached content is for broader outreach and not directly related to this post.) #SaiSudhaDevaTrust #HelpingHelps #TransformLives #SocialImpact #IndiaCares #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #ஶ்ரீ குரு ராகவேந்திர. #குரு ராகவேந்திர சுவாமிகள் #ராகவேந்திர #ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
760 views
4 days ago
ராகவேந்திரரின் கருணை: ஒரு சிறு கதை முன்னொரு காலத்தில், துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள மந்திராலயத்திற்கு மிக அருகில் ஒரு ஏழைத் தொழிலாளி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ராகவேந்திரர் என்றால் உயிர். தினமும் குருவின் பிருந்தாவனத்தை தரிசனம் செய்யாமல் அவன் வேலைக்குச் செல்ல மாட்டான். ஒருமுறை அவனது ஒரே மகனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பல வைத்தியர்கள் பார்த்தும் பலனில்லை. குழந்தையின் நிலைமை மோசமானதைக் கண்டு அந்தத் தந்தை கதறி அழுதான். "இனி ராகவேந்திரரே கதி!" என்று ஓடி வந்து பிருந்தாவனத்தின் முன் விழுந்து அழுதான். "குருதேவா! நீயே உலகைக் காப்பவர் என்பார்களே... என் மகனைக் காக்க மாட்டாயா? உன் மீது நான் வைத்த பக்தி உண்மையென்றால் என் பிள்ளையை எழுப்பித் தா!" இரவு முழுவதும் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தபடியே அங்கேயே உறங்கிவிட்டான். அப்போது அவனது கனவில் ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் கையில் துளசி மாலை இருந்தது. அவர் புன்னகையுடன், "மகனே, அழுவதை நிறுத்து. உன் இல்லத்திற்குப் போய் பார், அங்கே ஒரு அதிசயம் காத்திருக்கிறது," என்று கூறி மறைந்தார். அவன் திடுக்கிட்டு எழுந்து வீட்டிற்கு ஓடினான். அங்கே அவனது மகன் ஆரோக்கியமாக எழுந்து அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அவன் மனைவி ஆச்சரியத்துடன் சொன்னாள்: "நேற்று நள்ளிரவில் ஒரு பெரியவர் வந்திருந்தார். அவர் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தக் ரகஷை அவன் நெற்றியில் வைத்தார். வைத்த அடுத்த நிமிடம் காய்ச்சல் காணாமல் போய்விட்டது!" பக்தன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். தன் பக்தனின் அழுகுரலைக் கேட்டு, அந்த மகா குருவே நேரில் வந்து அருள் புரிந்ததை எண்ணி மெய்சிலிர்த்தான். கதையின் நீதி தூய்மையான பக்திக்குத் தெய்வம் எப்போதும் செவிசாய்க்கும். நம்பிக்கையோடு அழைத்தால், ராகவேந்திரர் இன்றும் சூட்சும வடிவில் வந்து பக்தர்களைக் காப்பார்.. ஸ்ரீமன் மூலராமோ விஜயதே... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #✨கடவுள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
808 views
4 days ago
கன்றைக் காத்த ராகவேந்திரர் மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (ராயர்) ஜீவ சமாதி அடைவதற்கு முன்னால், மடத்தில் அமர்ந்து சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டும், பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டும் இருந்த காலகட்டம் அது. ஒரு நாள் மதிய வேளை, ராயர் மடத்தில் பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதம் வழங்கிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மடத்தின் வாசலில் ஒரு பசு மாடு கத்தும் சத்தம் கேட்டது. அது சாதாரணக் குரல் அல்ல; ஏதோ ஒரு ஆபத்தில் தன் குழந்தையைக் காப்பாற்றக் கோரும் ஒரு தாயின் தீனமான கதறல் போல இருந்தது. மடத்திற்குள் வந்த பசு யாராலும் தடுக்க முடியாதபடி, அந்தப் பசு நேராக ராயர் அமர்ந்திருந்த சந்நிதிக்குள்ளேயே ஓடி வந்தது. அங்கிருந்த சீடர்கள் அதை விரட்ட முயன்றனர். ஆனால், ராயர் அவர்களைத் தடுத்து, "விட்டுவிடுங்கள், அந்தத் தாய்க்கு ஏதோ பெரும் குறை இருக்கிறது. அதைச் சொல்லவே என்னிடம் வந்திருக்கிறது" என்றார் அன்போடு. பசு ராயரின் அருகில் வந்து நின்று, தன் கண்களில் கண்ணீர் வழிய, கன்றைக் காணாத ஏக்கத்தில் ஓவென்று கத்தியது. பின்னர், ராயரின் காவி உடையை மெதுவாகத் தன் வாயால் கவ்வி இழுத்து, வெளியே வருமாறு சைகை காட்டியது. ஆபத்தான தருணம் ராயர் உடனே எழுந்து அந்தப் பசுவின் பின்னாலேயே சென்றார். சீடர்களும் பதற்றத்துடன் பின்தொடர்ந்தனர். மடத்திற்கு வெளியே சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றின் அருகே பசு ஓடிச் சென்று நின்றது. அங்கே போய் பார்த்தபோதுதான் உண்மை புரிந்தது! அந்தப் பசுவின் சிறிய கன்றுக்குட்டி, புற்களை மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்தக் ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. கிணற்றில் சிறிதளவு தண்ணீரும், நிறைய சேறும் இருந்தன. கன்றுக்குட்டி சேற்றுக்குள் சிக்கி, மேலே வர முடியாமல், மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. ராயரின் அருள்வாக்கு கிணறு மிகவும் ஆழமாக இருந்ததாலும், சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருந்ததாலும், சீடர்கள் கீழே இறங்கத் தயங்கினர். நேரம் செல்லச் செல்ல கன்றுக்குட்டியின் பலம் குறைந்து கொண்டே வந்தது. பசு மாடோ கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கதறியது. ராயர் தன் கையில் இருந்த கமண்டலத் தீர்த்தத்தை கைகளில் எடுத்து, ஸ்ரீ மூலராமரை மனமுருக வேண்டி, அந்தக் கிணற்றுக்குள் தெளித்தார். பின்னர் தன் கையை உயர்த்தி கன்றுக்குட்டியை நோக்கி ஆசி வழங்கினார். ​"அஞ்சாதே... ஸ்ரீ ராமனின் அருளால் உனக்கு ஆயுள் கூடும். மேலே வா!" என்று ராயர் கம்பீரமான குரலில் கூறினார். ​நடந்த அதிசயம்! ​என்ன ஆச்சரியம்! அடுத்த சில நொடிகளில், சேற்றில் மூழ்கிக் கொண்டிருந்த கன்றுக்குட்டிக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ தெரியவில்லை, அது சட்டென்று துள்ளிக் குதித்து எழுந்தது. ​அதே நேரத்தில், அங்கிருந்த சீடர்களுக்கும் ஊர் மக்களுக்கும் ஒருமித்த தைரியம் பிறந்தது. அவர்கள் வேகமாக ஒரு பெரிய கயிற்றைக் கொண்டு வந்து, மிகவும் சாதுரியமாகக் கிணற்றுக்குள் இறக்கி, கன்றுக்குட்டியின் உடலில் கட்டி, அதை பத்திரமாக மேலே தூக்கினர். ​தாயும் சேயும் ​கிணற்றை விட்டு வெளியே வந்த கன்றுக்குட்டி, எந்தக் காயமும் இன்றி துள்ளிக் குதித்து ஓடித் தன் தாயிடம் சென்றது. பசு மாடு தன் கன்றை ஆசையோடு நக்கிக் கொடுத்து மகிழ்ந்தது. ​பின்னர், அந்தப் பசுவும் கன்றுக்குட்டியும் ராயரின் பாதங்களுக்கு அருகில் வந்து, தங்கள் தலைகளை அவர் காலடியில் சாய்த்து நன்றி தெரிவிப்பது போல வணங்கின. ராயர் புன்னகையுடன் இரண்டின் தலைகளிலும் கை வைத்து, "எல்லா உயிர்களிலும் அந்தப் பரமாத்மா இருக்கிறான். நலமாய் இருங்கள்" என்று மந்திரித்த அட்சதையைத் தூவி ஆசிர்வதித்தார்.. ஸ்ரீமன் மூலராமோ விஜயதே... #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✨கடவுள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
893 views
8 days ago
இவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணுமோ! அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதமாய் விளங்குவானிவன். அமலன் அவியாத சுடர் அளவிலா ஆரமுது இவன். அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவன் இவன். மறங்கொள் இரணியன் மார்வை முன் கீண்டவன் இவன். அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க உருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்பகலம் பிளந்திட்ட கைகள் உடைய எம்பெருமான் இவன். கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன் இவன். அதிரும் சுழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன் இவனே. நாதனான நரசிங்கன் இவன். மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்குபவன் இவன். இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளை யணையமேவி மட்டபல்லியெனும் பெருநகருள் தெண்ணீர் க்ருஷ்ணவேணீ திரைக்கையாலடி வருட அமர்ந்த நாதன் இவன். திரண்ட தோளிரணியன் சினங்கொளாகமொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்கமென்பதிவனையே! எட்டு மெட்டு மெட்டுமாய் ஓரேழுமேழுமேழுமாய் எட்டு மூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவன் இவனே. மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வனிவன். வானவரேஸு இவன். மாமுனி வேள்வியைக் காத்தவன் அடிபணியும் எம்பெருமானிவன். அமலனாதி பிரானுமிவனே. நிமலன் நின்மலன் நீதிவானவனும் இவனே. என்னை யாண்டிடும் தன்மையன் இவனே. மிக்க வேதியர் வேதத்துனுட் பொருளானவன். அடைந்தவர்கட்கெல்லாம் அன்பனிவன். அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இவன். அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிவன். ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்தவம் மானிவன். எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலனின்னுயிரை வவ்வி, ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மான் இவன். மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்றவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிவன். எரிந்த பைங்கணிலங்கு பேழ்வாய் எயிற்றோடி தெவ்வுருவென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்தவம்மான் இவன். முனைத்த சீற்றம் வீண்சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்து மஞ்ச வாளரியாய் இருந்தவம்மானிவன் நாத்தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோரா ளரியாய் இருந்த வம்மானிவன். நாம் தொழும் நம் பெருமான் இவன். அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிவன். எங்களீசன் எம்பிரானிவனே!! தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணனுடலம் பிளந்திட்டவன் இவன். நம்பி நம் பெருமானிவன். முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன். பந்திருக்கும் மெல்விரலாள் பார்வை பனி மலராள் வந்திருக்கும் மார்வனாம் நீலமேனி மணிவண்ணனிவன். வேதத்தின் சுவைப் பயனிவன். விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனி, மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிற்றடக்கியாலின் மேலோர் இளந்தளிரின் கண் வளர்ந்த வீசனிவன்.tks nalini gopalan இவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணுமோ! அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதமாய் விளங்குவானிவன். அமலன் அவியாத சுடர் அளவிலா ஆரமுது இவன். அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவன் இவன். மறங்கொள் இரணியன் மார்வை முன் கீண்டவன் இவன். அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க உருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்பகலம் பிளந்திட்ட கைகள் உடைய எம்பெருமான் இவன். கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன் இவன். அதிரும் சுழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன் இவனே. நாதனான நரசிங்கன் இவன். மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்குபவன் இவன். இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளை யணையமேவி மட்டபல்லியெனும் பெருநகருள் தெண்ணீர் க்ருஷ்ணவேணீ திரைக்கையாலடி வருட அமர்ந்த நாதன் இவன். திரண்ட தோளிரணியன் சினங்கொளாகமொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்கமென்பதிவனையே! எட்டு மெட்டு மெட்டுமாய் ஓரேழுமேழுமேழுமாய் எட்டு மூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவன் இவனே. மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வனிவன். வானவரேஸு இவன். மாமுனி வேள்வியைக் காத்தவன் அடிபணியும் எம்பெருமானிவன். அமலனாதி பிரானுமிவனே. நிமலன் நின்மலன் நீதிவானவனும் இவனே. என்னை யாண்டிடும் தன்மையன் இவனே. மிக்க வேதியர் வேதத்துனுட் பொருளானவன். அடைந்தவர்கட்கெல்லாம் அன்பனிவன். அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இவன். அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிவன். ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்தவம் மானிவன். எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலனின்னுயிரை வவ்வி, ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மான் இவன். மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்றவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிவன். எரிந்த பைங்கணிலங்கு பேழ்வாய் எயிற்றோடி தெவ்வுருவென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்தவம்மான் இவன். முனைத்த சீற்றம் வீண்சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்து மஞ்ச வாளரியாய் இருந்தவம்மானிவன் நாத்தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோரா ளரியாய் இருந்த வம்மானிவன். நாம் தொழும் நம் பெருமான் இவன். அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிவன். எங்களீசன் எம்பிரானிவனே!! #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.1K views
8 days ago
நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் செய்யும் போதும்., நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் எதிர்கொள்ளும் போதும்... நாமும் காயப்படாமல், யாருக்காக அந்தக் கடமைகளை ஆற்றுகிறோமோ, அவர்களும் காயப்பட்டு விடாமல், அந்தக் கடமைகளை பூரணமாக்கிக் கடந்து போக வேண்டியிருக்கிறது. இதைத்தான் 'பக்குவம்' என்று சொல்கிறோம். இந்த பக்குவம்தான்... 'கர்மயோகம்' என்ற 'கடமைகளை பூரணத்துவம்' செய்யும் பாதையில் நம்மை அழைத்துப் போகிறது. இந்தப் பாதையின் ஆரம்பம், இறவனின் மீது வைக்கும் பக்தியிலிருந்து ஆரம்பிக்கிறது. இறுதியில், இறைவனின் பேருளால், ஒரு சத்குருவின் தொடர்புடன் பூரணத்துவமும் அடைகிறது. அந்த சத்குருவின் இடைபடல்தான்... நம்மை விதிக்கப்படாத கடமைகளிலிருந்து விலக்கி, விதிக்கப்பட்ட கடமைகளுக்குளுக்குள் மட்டுமே பயணிக்க வைத்து... பக்குவத்தின் பாதையில் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. நம்மை பக்குவமாக்கிவிடும் சத்குருவின் அனுக்கிரகம், உலக வாழ்க்கையையும்... உள் வாழ்க்கையையும் உள்ளடக்கியதுதான். சந்தேகம் கொள்ளத் தேவையேயில்லை ! குருவே சரணம் ஸ்ரீ ராகவேந்ராய நமஹ ... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✨கடவுள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
2.5K views
1 months ago
🌹ஸ்ரீ ராகவேந்திரரின் கருணை 🚩ஒரு தாயின் அழுகையும் குருவின் கருணையும் முன்னொரு காலத்தில், ஒரு ஏழைத் தாய் தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தச் சிறுவன் ராகவேந்திர சுவாமிகளி ன் மீது அளவற்ற பக்தி கொண்டவன். ஒருமுறை அவர்கள் இருவரும் ராகவேந்திரரை தரிசிக்க மந்திராலயம் சென்றிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மந்திராலயத்தின் துங்கபத்திரை ஆற்றில் நீராடும்போது, எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவன் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். தாயின் கதறல் தன் மகனின் உடலை மடியில் கிடத்திக் கொண்டு அந்தத் தாய் கதறி அழுதாள். "குருவே! உங்களை நம்பி வந்தேனே, என் ஒரே விளக்கையும் அணைத்து விட்டீர்களே? நீங்கள் உயிருடன் இருக்கும் தெய்வம் என்று நம்பினேனே, இதுதான் உங்கள் கருணையா?" என்று ஊரே அதிரும் படி கதறினாள். மற்ற பக்தர்கள் அவளைத் தேற்ற முயன்றும் அவளது அழுகை நிற்கவில்லை. 🚩குருவின் அதிசயம் அப்போது, பிருந்தாவனத்திற்குள் தியானத்தில் இருந்த சுவாமிகள், அந்தத் தாயின் அழுகுரல் கேட்டு மனம் இரங்கினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் சீடர்கள் மூலம் ஒரு செய்தி வந்தது. சுவாமிகள் அந்தச் சிறுவனின் உடலில் புனிதமான மந்திராட்சதையை (மந்திரம் ஓதப்பட்ட அரிசி) தூவச் சொன்னார். பிருந்தாவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை அவன் முகத்தில் தெளிக்கச் சொன்னார். நடந்த அதிசயம் என்னவென்றால், அந்த த் தாய் ராகவேந்திரரை முழுமையாக நம்பி கதறிய அந்த நொடியில், இறந்து கிடந்த சிறுவன் மெல்லக் கண் விழித்தான். தூக்கத்தில் இருந்து எழுவது போல அவன் எழுந்து நின்றான் 🚩இந்தக் கதை உணர்த்தும் பாடம் இந்தச் சம்பவம் அந்தத் தாய்க்கு மட்டுமல் ல, உலகிற்கே ஒரு பெரிய உண்மையைப் புகட்டியது நிபந்தனையற்ற சரணாகதி: நாம் கடவுளிடம் "ஏன் எனக்கு இப்படி நடந்தது?" என்று கேட்பதை விட "நீயே கதி" என்று சரணடையும்போது அங்கு அதிசயம் நிகழ்கிறது. 🚩தாய்மைக்கு மதிப்பு. ஒரு தாயின் கண்ணீருக்கு இறைவனே கட்டுப்படுவார் என்பதை ராகவேந்திரர் நிரூபித்தார். 🚩மரணத்தையும் வெல்லும் கருணை: குருவின் அருள் இருந்தால் விதியையும் மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு சான்று அந்தத் தாய் தன் மகனைத் தூக்கிக்கொண்டு பிருந்தாவனத்தை நோக்கி ஓடினாள் அவளது கண்கள் இப்போது துக்கத்தால் அல்ல ஆனந்தத்தால் நிறைந்திருந்தன. 🌹குருவே சரணம்... 🌹குரு ராகவேந்திரர் திருவடி சரணம்... 🌹23.04.2026.. நேசமுடன் விஜயராகவன்.... #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்