இன்றைய ட்ரெண்டிங்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
409 காட்சிகள்
3 மணி நேரத்துக்கு முன்
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த நிகழ்வு, சமூகத்தில் மனிதாபிமானம் இன்னும் குறையவில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. அப்படியென்ன நடந்தது? இங்கே பார்க்கலாம். சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிரத்னா என்பவருக்கு 28 வயதாகிறது.. இவர் தன்னுடைய தேவைக்காக 38 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு கைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு, பெரிகை பகுதியிலிருந்து அரசு பேருந்து மூலம் சூளகிரி நோக்கிப் பயணம் செய்துள்ளார். பஸ்ஸில் பயணம் முடிந்து சூளகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அவசரத்தில் இருக்கையில் தான் வைத்திருந்த கை பையை எடுக்க மறந்துவிட்டார்.. அதனால், தன் கையில் இருந்த கைப்பையை பேருந்து இருக்கையிலேயே வைத்துவிட்டு, ஏதோ ஒரு கவனத்தில் மூழ்கி, தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார். கைப்பையில் 500 ரூபாய் நோட்டுகள் கொஞ்ச நேரம் கழித்து பணப்பை தொலைந்ததை அறிந்த முனிரத்னா அதிர்ச்சியில் உறைந்து போனார். பல்வேறு இடங்களிலும் தேடியும், எங்கும் பணம் கிடைக்காததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அந்தப் பணம் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தபோது, அது கிடைக்க வாய்ப்பில்லை என்றே அவர் கருதியிருந்தார். அதே நேரத்தில், சூளகிரி பஜார் தெருவைச் சேர்ந்த ஜோஸ்வின் (50) என்ற பெண்மணி, அதே அரசு பேருந்தில் ஏறினார். அவர் இருக்கையில் அமர்ந்தபோது, அங்கிருந்த கைப்பையைக் கண்டார். அந்தப் பையைத் திறந்து பார்த்த ஜோஸ்வின், உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். ஒரு கணம் கூட யோசிக்காமல், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு நேராக சூளகிரி காவல் நிலையத்திற்குச் சென்றார். அந்தப் பையை போலீசாரிடம் ஒப்படைத்து, நடந்த அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். ஜோஸ்வின் காட்டிய இந்த நேர்மை அங்கிருந்த காவலர்களைப் பெரிதும் கவர்ந்தது. அடையாள அட்டை - பாராட்டு காவல் துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, கைப்பையில் இருந்த அடையாள அட்டை, செல்போன் எண் மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்தனர். அந்த ஆவணங்களின் மூலம், பணத்தைத் தவறவிட்டது முனிரத்னா என்பது உறுதி செய்யப்பட்டது. காவல் துறையினர் முனிரத்னாவைத் தொடர்பு கொண்டு, அவர் தொலைத்த பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். ஸ்டேஷனுக்கு ஓடோடி வந்த முனிரத்னா, தனது பணம் பத்திரமாக இருப்பதைக் கண்டு கண்ணீர் மல்க மகிழ்ச்சி அடைந்தார். பேருந்தில் பணத்தைத் தவறவிட்டுத் தேடி அலைந்த அவருக்கு, காவல்துறையின் அழைப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. நேர்மையான பெண் தான் இழந்த பணம் முழுமையாகத் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த முனிரத்னா, ஜோஸ்வினுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். காவல் துறையினரும், இக்கட்டான சூழலில் நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜோஸ்வினைப் பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். ஒரு சாதாரணப் பெண்ணின் இந்த உன்னதமான செயல், சூளகிரி பகுதி மக்கள் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நேர்மை ஒரு போதும் தோற்பதில்லை என்பதற்கு ஜோஸ்வின் ஒரு சிறந்த உதாரணம். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
806 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் நடிப்பால் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் முத்துக்காளை தற்போது மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளார். அவரது மனைவி மாலதி (47) கடந்த 19 நாட்களாக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாலதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் மருத்துவமனையில் 19 நாட்களாக போராடிய முத்துக்காளை, சமீபத்தில் மருத்துவ செலவுகளுக்காக உதவி கோரி வீடியோவிலும் மனவேதனை பகிர்ந்திருந்தார். அந்த கோரிக்கையை தொடர்ந்து சில அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டியிருந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாலதி உயிரிழந்த செய்தி குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மனைவியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சங்கம்பட்டி திருக்கோதையாபுரம் பகுதிக்கு முத்துக்காளை எடுத்துச் சென்றுள்ளார். இன்று இரவு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சோகமான செய்தி வெளியாகியதையடுத்து திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் முத்துக்காளைக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவியின் சிகிச்சைக்கு உதவி கேட்டு முத்துக்காளை வீடியோ வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. அவர் உடனடியாக அமைச்சர் ராஜ்மோகனை மருத்துவமனைக்கு அனுப்பி, அவர்களுக்கு தேவையான உதவியை செய்து தரும்படி அறிவுறுத்தி இருந்தார். ராஜ்மோகன் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் முத்துக்காளை மனைவிக்கு தேவையான சிகிச்சையை துரிதமாக அளிக்க உத்தரவிட்டு இருந்தார். உயரிய சிகிச்சை அளித்தும், முத்துக்காளை மனைவி மாலதி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
610 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றை வீழ்த்தி முதல்வர் அரியணையில் ஏறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். 1967 ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக தான் மாறி மாறி ஆட்சி செய்த நிலையில் முதல் முறையாக இருகட்சிகளையும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமர வைத்துள்ளார் முதல்வர் விஜய். திமுக வீழ்ச்சி - அதிமுகவில் பிளவு இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவது எப்படி? தோல்விக்கான காரணம் என்ன? என்பது பற்றி திமுக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சரிவில் இருந்து மீளும் முனைப்பில் குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக நிலைமையோ பரிதாபமாக உள்ளது. அதிமுகவில் உள்ள 47 எம்எல்ஏக்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனர். தவெகவின் அடுத்த ஷாக் உண்மையில் விஜய்யின் அரசியல் வருகை என்பது இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தான் விஜய் இருகட்சிகளுக்கும் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சட்டசபை தேர்தலில் வீழ்த்தியதோடு மட்டுமின்றி தற்போது அந்த கட்சிகளின் நிர்வாகிகளை தொடர்ந்து தவெகவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். விஜய் முதல்வரானதும்.. த்ரிஷாவிற்கு உதயநிதி கொடுத்த மெகா ஆஃபர்.. இப்போது 'ஹாட் டாபிக்கே' இதுதான் கட்சி மாறும் நிர்வாகிகள் இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை தவெகவில் இணையும் நிர்வாகிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுகவிற்கு குட்பை சொல்லும் நிர்வாகிகளின் எண்ணிக்கை பிற இடங்களை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. கொங்குவில் அதிகம் அதன்படி சமீபத்தில் மட்டும் ஈரோடு திமுக மாநில நிர்வாகி எல்லோராபாளையம் ஆர். சிவக்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஏ.கே. பாலச்சந்தர், ராசிபுரம் நகராட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ராம்குமார், 'கேட்' தங்கவேல் உள்ளிட்டவர்கள் அடங்குவர். அதேபோல அதிமுகவை எடுத்து கொண்டால் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கமும், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் சேர்ந்தார். அதுமட்டுமின்றி இன்று எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகர அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கண்ணன் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதுதவிர கொங்கு மண்டலத்தில் பல முக்கிய நிர்வாகிகளை தவெக நோக்கி இழுக்கும் வேலையில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேரில் 'வெள்ளை துண்டு' போடாதீர்கள்.. சிறுமி சொன்னதை கேட்டு உடனே மாற்றிய விஜய்! கவனம்பெற்ற முதல்வர் கவலையில் திமுக - அதிமுக இது திமுக, அதிமுக என்று இரு திராவிடக் கட்சிகளையும் கவலைப்படுத்தியுள்ளது. மேலும் இது ஒரு தொடக்கமே என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலரும் தவெகவில் சேர தயாராகி வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று திமுக, அதிமுகவினர் அஞ்சுகின்றனர். இதுபற்றி அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறுகையில், ''உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தால், சட்டசபை தேர்தல் வெற்றியை உள்ளாட்சியிலும் தவெக பெறும் என பலரும் நினைக்கின்றனர். இதனால் தான் திராவிடக் கட்சிகளின் பலர் ஆளும் கட்சியை நோக்கி நகர்கிறார்கள்'' என புலம்பி வருகின்றனர். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
586 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மித்து போன சிக்கன் உணவை சாப்பிட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமா பலி..... மற்றொரு ஒரு வயதுக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் சமைக்கப்பட்டு மீதமிருந்த சிக்கன் துண்டுகளை, அடுத்த நாள் காலையில் வீட்டின் வெளியே சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவாக அக்குழந்தைகளின் தாய் வைத்துள்ளார். அப்போது, வீட்டின் வெளிப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 3 வயது மகள் பூமிகா மற்றும் ஒரு வயது மகள் ரேணுகா ஆகியோர், விளையாட்டின் போக்கில் அந்த சிக்கன் துண்டுகளைத் எடுத்துத் தெரியாமல் சாப்பிட்டுள்ளனர். சிக்கனைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே இரு குழந்தைகளுக்கும் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 3 வயது சிறுமி பூமிகாவின் உடல்நிலை மிக மோசமடைந்தது. குழந்த அலறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வயதுக் குழந்தை ரேணுகாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.... #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #மே-17 முக்கிய தகவல்கள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
586 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
இந்தத் திட்டம் எப்போது முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களுக்கு இடையே அதிகரித்துள்ள நிலையில், புதிய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகே பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய முடியும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னரே, உரிமைத்தொகை உயர்வும், புதிதாக யாரெல்லாம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, தகுதியான புதிய பயனாளிகள் மற்றும் கூடுதல் தொகையை எதிர்பார்க்கும் பெண்கள் அதுவரை சற்று பொறுமையுடன் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
565 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
இந்த திட்டத்தின் படி: 3வது குழந்தை பிறந்தால் ₹30,000 4வது குழந்தை பிறந்தால் ₹40,000 என்ற ஒருமுறை நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை நேரடியாக தாயின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தை பிறப்புக்குப் பிறகு குடும்பங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உதவியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி: 3வது குழந்தைக்கு மாதம் 3 கிலோ சிறுதானியம் 4வது குழந்தைக்கு மாதம் 6 கிலோ சிறுதானியம் வழங்கப்படும் என அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். அதோடு "NTR Baby Kit" வழங்கும் திட்டமும் இதில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் இன்னும் இறுதி ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் கிராம சபைகள் மூலம் மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு, அதன் பின்னர் அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், 2026 ஆகஸ்ட் 15 முதல் திட்டம் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, ஆந்திரப் பிரதேசத்தின் "Total Fertility Rate" தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகை சமநிலையை பராமரிக்க குறைந்தபட்சம் 2.1 தேவைப்படுவதாகவும், எதிர்காலத்தில் இளைஞர் மக்கள் தொகை குறைந்தால் பொருளாதார சிக்கல்கள் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் தொகை சரிவு பிரச்சினைகளை எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டுள்ளார். #மே-17 முக்கிய தகவல்கள் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
593 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வசீம் அக்ரம் என்ற வாலிபர், தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையை மாற்றுவதற்காக கடந்த 22 மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு வேலை தேடிச் சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் உழைத்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவரது குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் ஒரு பறக்கும் விமானத்தை அல்லது விமானத்தின் உள்ளே இருக்கும் காட்சிகளைத் தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். தற்போது நிலவும் சர்வதேசப் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், துபாயின் கடுமையான பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களின்படி இது ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தத் தீர்ப்பு, பீகாரில் உள்ள வசீம் அக்ரமின் கிராமத்திலும் அவரது குடும்பத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள மிகக் கடுமையான சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தனது மகன் எந்தவொரு தவறான நோக்கமும் இன்றி, வெறும் அறியாமையினாலும் ஆர்வத்தினாலுமே அந்தப் புகைப்படத்தை எடுத்ததாக அவரது தாயார் ஷாய்தா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனைகள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த ஒரே நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று அந்த ஏழைக் குடும்பம் தவித்து வருகிறது. தற்போது அவரது பெற்றோர், இந்திய அரசும் உள்ளூர் நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, தங்களது அப்பாவி மகனை துபாய் சிறையிலிருந்து மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #மே-17 முக்கிய தகவல்கள் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
582 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த செங்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). விவசாயக் கூலி தொழிலாளி இவருக்கு சுமதி என்கின்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமதியின் உறவினர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரைப் பார்த்து நலம் விசாரிக்க சுமதி 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி ரமேஷிடம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து 15-ம்தேதி ரமேஷ், சுமதி மற்றும் அவரது தந்தை வடிவேல் ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அரியலூர் மருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வி. கைகாட்டி பகுதி அருகே வந்தபோது ரமேஷ் மதிய உணவுக்காக அங்குள்ள ஹோட்டலில் பிரியாணி வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சுமதி "பிரியாணி எவ்வளவுக்கு வாங்கினாய்" என்று கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் "750 ரூபாய்க்கு வாங்கினேன்" என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி சுமதி "நானே 2000 கடன் வாங்கி வந்துள்ளேன் என்றும், அதிக விலைக்கு பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம் என்ன?" என்றும் சண்டை போட்டுள்ளார். இதற்தையடுத்து சண்டையானது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தீவிரமடைந்துள்ளது. அப்போது அங்கிருந்த சுமதியின் தந்தை வடிவேல், சமரசம் செய்து வைத்து பின்னர் அவரது சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். இதனிடையே 16-ம் (நேற்று) தேதி இன்று காலை மீண்டும் பிரியாணி குறித்த சண்டை எழுந்துள்ளது. அப்போது சுமதி ரமேஷை குச்சியால் தாக்கியுள்ளார். சண்டை முடிவுக்கு வரதநிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவர் ரமேஷ் அருகில் இருந்த சவுக்கு மரக்கட்டையை எடுத்து சரமாரியாக சுமதியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமதியின் கொலையை மறைத்து ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமதியின் உடலில் ஏற்பட்ட காயங்களை மஞ்சளால் பூசி மறைத்துள்ளனர். பின்னர் உடனடியாக உடலை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமதியின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வடிவேல் விக்ரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் உடனடியாக சென்ற விக்ரமங்கலம் போலீசார் அங்கு சுமதியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ரமேஷிடம் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுமதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, கானத்தூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க நண்பருடன் இறால் பிடிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம், பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் மாணவன் உயிரிழந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது. #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #மே-17 முக்கிய தகவல்கள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
517 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
கே. ராஜன் அவர்கள் சென்னை அடையாறு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகினரையும், ரசிகர்களையும் மாபெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று மதியம் சென்னை அடையாறு பாலத்தின் வழியே சென்ற தயாரிப்பாளர் கே. ராஜன், எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஆற்றில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, கே. ராஜனின் உடலை ஜேசிபி மற்றும் படகுகள் உதவியுடன் மீட்டனர். மீட்கப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக உடனடியாகச் சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சினிமாத் துறையின் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இந்த அதிரடி முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அடையாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடும்பப் பிரச்சினையா, கடுமையான கடன் சுமையா அல்லது அண்மைக்காலமாக அவருக்கு ஏற்பட்ட ஏதேனும் மன உளைச்சலா என்ற கோணங்களில் போலீசார் முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் எப்போதும் கலகலப்பாகவும், அநீதிகளுக்கு எதிராக ஆவேசமாகவும் பேசக்கூடிய ஒரு மூத்த கலைஞர் இப்படித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சென்னைத் திரையுலகினர் மத்தியில் சொல்லொணாத் துயரத்தையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், பல்வேறு பொது விவாதங்களில் தனது துணிச்சலான கருத்துகளால் சினிமா வட்டாரத்தில் எப்போதும் பரபரப்பாக அறியப்பட்டவருமான திரு. கே. ராஜன் அவர்கள் சென்னை அடையாறு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகினரையும், ரசிகர்களையும் மாபெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #மே-17 முக்கிய தகவல்கள்