இன்றைய ட்ரெண்டிங்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
609 views
14 hours ago
இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜேஷ்குமார், 2 மாதங்களுக்கு முன்புதான் அவர்களுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்வதால், மனைவி, மகனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்துக்கொண்டார் ராஜேஷ்குமார். இந்த நிலையில்தான், கடந்த மே மாதம் 5-ம் தேதி, ராஜேஷ்குமாரின் தாயார் விஜயா திருப்பூருக்குச் சென்று தனது பேரப்பிள்ளையை வற்புறுத்தி தன்னுடன் மேல்பட்டி கிராமத்திலுள்ள தனது வீட்டுக்கு அழைத்துவந்தார். பாட்டியுடன் வீட்டில் இருந்த சிறுவன் முகிலன் நேற்று முன்தினம் மாலை ரத்தக காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தான். `காம்பவுண்ட் சுவர் மீது ஏறி கீழே விழுந்ததில், இறந்துவிட்டான்' எனக் கூறி, பாட்டி விஜயாவும், அத்தை ரேவதி (37) என்பவரும் எந்தவிதமான கவலையுமின்றி ஃப்ரீசர் பாக்ஸ் வரவழைத்து இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர். இதைக் கவனித்த அக்கம், பக்கத்தினர் மேல்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுவன் உடலைப் பார்வையிட்டபோது, கண் பகுதியில் வீக்கம், உதடு, தாடை பகுதிகளில் ரத்தக் காயம், உடல் முழுவதும் சிராய்ப்பு கன்றிய காயங்கள் எனச் சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதும் உறுதியாகத் தெரிந்தது இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட போலீஸார் பிரதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பாட்டி விஜயாவையும், அத்தை ரேவதியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். இதில், சிறுவனின் தந்தையான ராஜேஷ்குமாரின் உடன்பிறந்த அக்காள்தான் இந்த ரேவதி. கருத்து வேறுபாடு காரணமாக, கணவனைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் தாய் வீட்டில் தங்கியுள்ளார் ரேவதி. இந்த நிலையில், தனது தம்பி மகன் முகிலனை தனது தாய் அழைத்துவந்தது ரேவதிக்குப் பிடிக்கவில்லை. முகிலனின் குறும்புத்தனம், விளையாட்டு ரேவதிக்கு வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது. இதனால், முகிலனுக்குச் சரியாகச் சாப்பாடு வழங்காமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துவந்திருக்கிறார். சம்பவத்தன்று, தனது மகனின் படிப்புக்காக வாங்கி வைத்திருந்த கலர் பெயிண்ட்டை முகிலன் விளையாட்டுத்தனமாக எடுத்தபோது தரையில் கொட்டிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அத்தை ரேவதி தென்னைமட்டையால் முகிலனைச் சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தியிருக்கிறார். இதில், பலத்த காயமடைந்த சிறுவன் முகிலன் சுருண்டு விழுந்திருக்கிறான். உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லாமல் வீட்டுக்குள் இழுத்துபோட்டுவிட்டு, தனது தாய் விஜயாவை அழைத்துக்கொண்டு கொத்தூர் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டாராம் ரேவதி. திரும்பி வந்து பார்த்தபோதும், சிறுவன் முகிலன் அசைவில்லாமல் கிடந்ததைப் பார்த்து, `காம்பவுண்ட் சுவரில் ஏறி விழுந்ததில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறான்' என்று நாடகமாடி, உறவினரை அழைத்து பரிசோதிக்கச் செய்திருக்கிறார்கள். `இறந்துவிட்டான்' எனத் தெரியவந்ததும், இறுதிச் சடங்கையும் செய்து கொலையை மறைக்க முயன்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தனது தாய்க்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலமும், வீடும் இருப்பதால், அந்தச் சொத்துகள் தனது தம்பியின் மகனான முகிலனுக்குத்தான் சேரும். தனது மகனுக்கு சொத்து கிடைக்காது என்ற கோபத்திலும், வெறுப்பிலும்தான் முகிலனைக் கொடுமைப்படுத்தி, இன்று அடித்துக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்திருக்கிறார் அத்தை ரேவதி என்கின்றனர் போலீஸார். இதையடுத்து, ரேவதியைக் கைது செய்த போலீஸார், பாட்டி விஜயாவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K views
1 days ago
1990-ம் ஆண்டு வெளியான சிறையில் சில ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலா லட்சுமணன். அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர் பாலா லட்சுமணன். சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி படத்தில் மாயண்ண வந்திருக்காக, என்ற காமெடி பெரிதாக பேசப்பட்டது. அதேபோல் ஆனந்தம் படத்தில் மம்முட்டி வீட்டுக்கு திருட வந்து அதே வீட்டில் வேலைக்காரராக மாறி ஒரு குணச்சித்திர நடிகராகவும் அசத்தியிருப்பார். மேலும் அரசு, பாண்டி உள்ளிட்ட படங்களிலும் பாவா லட்சுமணன் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வரும் அவருக்கு நோயின் தீவிரம் அதிகரித்ததால் காலி இருந்து கட்டை விரல் அகற்றப்பட்டது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறேன். ஆரம்பத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக வேலை பார்த்தேன், அப்புறம் அதன்பிறகு நடிகரான மாறினேன். 'மாயி' படம் எனக்குப் பெரிய அடையாளம் தந்தது. ஆனால் சமீபகாலமாக எனக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு போனபோது ஜெனரேட்டரில் கால் வைத்துவிட்டுடேன். அப்போ வலி தெரியவில்லை. ஆனால், 10 நாள் கழித்து கால் பயங்கரமாக வீங்கிவிட்டது. இந்த வீக்கம் பெரிய பிரச்னையாக மாறி கால் விரல்களை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் என்னால் நடக்கவே முடியாது என்று சினிமா வட்டாரத்தில் பரவியதால், பட வாய்ப்பு குறைந்துவிட்டது. இப்போது பிச்சை எடுக்கும் நிலையில் தான் இருக்கிறேன். நான் தங்கிய வீட்டையும் காலி செய்ய சொன்னதால் என் நண்பர் ஒரு வீடு தருவதாக கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில்,விஜய் டிவி பாலா, நடிகர் ஜீகா ஆகியோர் எனக்கு மருத்துவ செலவுக்கும் சாப்பாட்டுக்கும் உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள். முதல்வர் விஜய் எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வெண்டும் என்று நினைக்கிறேன். அப்படி உதவி செய்தால் நன்றாக இருக்கும். அவரை நேரில் பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. இருப்பதற்கு வீடு இல்லாமல் இருக்கிறேன். ஒரு வீடு கிடைத்தால் கடைசிகாலத்தில், நிம்மதியாக கழிப்பேன் என்று கண்ணீர்மல்க பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴