god status

⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
724 காட்சிகள்
15 நாட்களுக்கு முன்
விதி வீதி வழி நடப் போர்க்கு வீதி தெரியாமல் போனால் வீடு . விதி வீதி வழி நடப் போர்க்கு வீதி தெரியாமல் போனால் வீடு சேருவது எங்கே பிறந்தவன் வாழ்கிறான்..வாழும் பிறந்தவன் விதி தெரியாமல் அதன் சத் சதி உணராமல் வீடு பெறுவது எங்கே வாழ்வில் மரணம் ரகசியம் மரணத்திற்கு பின் நடப்பது ரகசியம் பிறப்புக்கு முன் எங்கே இருந்தோம் என்பது ரகசியம் நாளை நடப்பது ரகசியம் நாமும் நாளைஇருப்போமா அதுவும் ரகசியம் ரகசியத்திலே வாழ்வை கடத்தும்அந்தரகசியம்எது, தலையில் உள்ள எழுத்தும் தரணியில் வாழபோகும் வாழ்வும் ரகசியம் ரகசியம் எத்தனை ரகசியம் இருந்தாலும் அதை சட்டை பண்ணாமல் ஆனந்தமாக வாழும்மனிதரின் ரகசியம் அந்தரகசியமே அறியாமல் திணரும் ரகசியம் ரகசியத்தைதேடிஞானி களும் யோகிகளூம் சித்தர்களும் ரகசிய உலகை அணு அணுவாக சல்லடை போட்டு சளிக்காமல் தேடினார்கள் தேடி சென்ற யோகியூம் கண்டு உணர்ந்தான் அந்த ரகசியம் அட இதுக்கு தானா இவ்வளவு தேடினோம் என வியப்பு வந்து மௌனமான யோகிகள் கோடி கோடி பேர் அதை மக்களுக்கு சொல்லலாம் என முடிவு பண்ணி சொல்லி விட்டு சென்ற சித்தர்களும் லட்சம் லட்சம் பேர் அப்படிஎன்னதான் இருக்கு அந்த ரகசியத்திலே விதி அதைஎழுதுவதுநாமே எழுதியவனேஎழுதியதை தெரியாமல்வாழ வைக்கும் காலமும் சிரிக்க விதியைமாற்றிஅமைக்கும் சக்திமனிதரிடமே உள்ளது என்றஉண்மையை காலம் அறிந்தும் அதை நாமும் அறியும் வரை அமைதி காக்கும்காலமும்வாழ்வின் சுவாரஸ்யமானவையே கண்டவர்கள் விண்டதுண்டு விண்டவர்கள் கண்டது உண்டு அதிசயம் என்னவென்றால் கண்டவர்கள் எதுவும் கூறுவதில்லை உடல் விட்டு சென்ற உயிர் அனைத்தையும் அறியும் உடலோடு இருக்கும் உயிர் எந்த ரகசியமும் அறிவது இல்லை அப்படி என்றால் இங்கு தடை என்பது உடலே உடலைமறந்தவன் உயிராய் ஆனவன் ரகசியம் அறிய முடியும் அந்த உடலை மறப்பதே நிர்வாணம் என்கிற பொருள் அதற்க்காக ஆடை இல்லாமல் திரியும் பைத்தியங்கள் உடலை மறந்தவன் ஆக மாட்டான் உடல் தான் உயிருக்கு ஆடைஅந்த ஆடை மறந்து இருப்பது வேறு வெறும் துணி ஆடைதுறந்துவிட்டுதுறவி வேசம் ரகசியம் அறியாது ரகசியத்தை அறியமுதல் தகுதி உயிராக இருப்பதே அதற்கு தான் யோகா தியானம் அனைத்தும் பயன்படுத்த குருமார்கள் சொல்கிறரார்கள் செம்மையான உடலே மனதை செம்மை ஆக்கும் செம்மையானமனமே உயிரைசெம்மை ஆக்கும் செம்மையான உயிரே உயிரின் ரகசியம் அறியும் அந்த ரகசியம்நாமே விதி அதை படைப்பது நாமே அதை மாற்றுவதும் நாமே அனைத்தும் நம் கையில் உயிரான சிவத்தை உணர்ந்தால்அந்த ரகசியம் யாரும் அறியலாம் உணர்ந்து அறியவேண்டிய ஒன்றை உணராமல் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றேயாரும் அந்தரகசியம் கூறு வதில்லை ஏழ குதிரை பிடித்து மூன்றாம் கண் வழி ஏழும் வழி கண்டால் அந்த தேரில் ஆண்டவன் அமர அழகு தேரில் உலகைவந்த வேலை முடித்து ஆனந்தமாக யாத்திரை அமைய ஆமரனாகும் ஆருயீர்..ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #தெரிந்து கொள்ளுங்கள் #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
2K காட்சிகள்
24 நாட்களுக்கு முன்
🙏விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?... அவ்வளவு பெரிய கடவுளான விநாயகர் ஏன் ஒரு சின்ன சுண்டலி மீது பயணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் பெரிய ஆவல் இருக்கும். சொல்லப்போனால், விநாயகர் இப்படி எலியின் மீது சவாரி செய்வதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையும் உள்ளது. அனைத்து தடங்கல்களையும் நீக்கி, பாரபட்சம் இன்றி அனைவரையும் ஆசீர்வதிப்பவர் தான் விநாயகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மற்ற கடவுள்களை வணங்குவதற்கு முன்பாக விநாயகரை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கு அவர் எலியின் மீது பயணிக்கும் கதையே விளக்கமளிக்கும். விநாயகர் பயணிக்கும் எலி, கடந்த ஜென்மத்தில் முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உபதேவதையாக விளங்கியது என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். விநாயகர் ஏன் எலியின் மீது பயணிக்கிறார் என்ற கதையை முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். □ க்ரோன்ச்சாவின் கதை விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்துள்ளது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது. வேண்டும் என்றே தன் காலை மிதித்து விட்டது என எண்ணி, வெகுண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ந்த க்ரோன்ச்சா, அவர் காலில் மண்டியிட்டு கருணை காட்ட மன்றாடியது. இது வாமதேவ முனிவரின் கோபத்தை குறைத்தது. தன் சாபத்தை திருப்பி பெற இயலாது என கூறினார். ஆனால் விநாயகரின் வாகனமாக விளங்கும் எனவும் கூறினார். அதனால் அனைவராலும், ஏன் பிற கடவுள்களாலும் கூட வணங்கப்படும் ஒன்றாக மாறியது. இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது. ■ க்ரோன்ச்சாவின் பயங்கரவாதம்... இருப்பினும் க்ரோன்ச்சா சாதாரண எலியல்ல. சொல்லப்போனால், மலையளவில் பெரியதாக விளங்கியது. அதே போல் அதனை பார்த்த அனைவரையும் அஞ்ச வைத்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்து, கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து வந்தது. உலகத்தில் வாழ்ந்த மக்களுக்கு பயங்கரத்தின் மற்றொரு அர்த்தமாக விளங்கியது. ○□ விநாயகரின் வாகனம்.... இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அவரை பரஷர் ரிஷியும் அவரின் மனைவியுமான வத்சலாவும் கவனித்துக்கொண்டனர். ராட்சச எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷாவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார். அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் படர்ந்தது. எலியை துரத்திய பாஷா அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது. இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது. #god