innraya SINTHANAY

saravanan.
549 views
15 hours ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 13.05.2026).. ……………………………………………............ *முயன்றால் முடியும்"..* ...................................... ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்திப் பயணித்தால் அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம். உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன். பல்வேறு உலகப் புகழ் பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் எனக் கருதி உழைத்தனர். இறுதியில் வெற்றி பெற்றனர்... தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார். முயன்றால் முடியும், இடியையும் தாங்கலாம். முயன்றால் முடியும், இருள் நீக்கி விடியலையும் காணலாம். முயன்றால் முடியும், முடிவில் புகழை அள்ளலாம். முயன்றால் முடியும், விண்ணையும் தொடலாம். முயன்றால் முடியும், மண்ணில் பொன்னையும் பார்க்கலாம். முயன்றால் முடியும், கறை படியும் கரங்களும் சரித்திரம் படைக்கலாம். ஆனால் முயற்சி இல்லாதவர் வீழ்ச்சி அடைகிறார். முயற்சித்தவர் மகிழ்ச்சி கொள்கிறார்.. முயற்சியை மூச்சு போல் நினைப்பவர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். முயற்சியை அலட்சியம் செய்பவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் .. திருவள்ளுவரும் இதைத் தானே சொல்கிறார். ‘’முயற்சி திருவினை யாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’’ என்று. நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு, முயன்று செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். *ஆம்.,நண்பர்களே..,* முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும். (ஆனால்) முயலாமை வெல்லாது எந்நாளும்... முயன்றால் முடியும் என்பவனுக்கு தடைக்கல் படிக்கல் போலே. முடிவில் வெற்றி தழுவும். முயன்றால் முடியும் என்பவனை முடிவில் நெருங்கும் நிலையான மதிப்பும் நிம்மதியான வாழ்வும்..... (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி......)💐💐💐🙏🏻🌹🌹🌹*
saravanan.
567 views
15 hours ago
*இன்றைய சிந்தனை* 🌷13.05.2026🌷 #innraya SINTHANAY கஷ்டங்கள் நம்மை நெருங்கும் போது அதற்கு யார் காரணம் எனத் தேடுவதை விட அதன் மாற்று வழியைத் தேடுவதே வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும். ஒருவனின் திறமையைப் பாராட்டினாலே போதும், அவனுடைய இயலாமையும், கெட்ட சிந்தனைகளும் குறைந்து விடும். எனவே மனதாரப் பாராட்டுங்கள். ஒரு சிலருக்கு நாம எவ்வளவு தான் அனுசரித்துப் போனாலும் புரிவதே இல்லை. காரணம் புரியலையா அல்லது பிடிக்கலையானு தெரியல. யாரிடமும் நெருங்கிப் பழகிய பின் விமர்சிக்காதீர்கள். நெருங்கிப் பழகியதால் தான் விமர்சிக்கக் காரணங்களே கிடைத்தது. உங்களுக்கான அமைதியைப் பிறரிடத்தில் தேடுகின்ற வரை மன அமைதி கிடைப்பது சந்தேகமே. 😊😊😊
saravanan.
553 views
1 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 12.05.2026).. …………………………………………….......... *’சோம்பலை விரட்டுவோம்..'* ....................................................... நம் முன் பரந்து கிடக்கும் வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறச் செய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவு தான் என எண்ணி மூலையில் முடங்கிப் போய் விடுகினறோம். சோம்பேறியை அழைத்து “என்னப்பா, படித்து விட்டாயே! இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறேன்” என்பான். “சும்மா” என்ற வார்த்தை தமிழ் இல்லை. சோம்பேறிகள் தோற்றுவித்த மொழி இது அவர்களுக்கு மட்டுமே சொந்தம். உற்சாகமுடையவர்கள் இவ்வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். சோம்பேறித்தனத்திற்கு சிலர் வறுமையைக் காரணம் காட்டுவார்கள். அப்படிக் காரணம் காட்டுபவர்களும் சிந்திக்கத் தெரியாத சோம்பேறிகளே.. சோம்பல் தான் சுறுசுறுப்பின் எதிரி !சோம்பல் மிக்கவர்கள் படுக்கையை விட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக் கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். இவர்கள் சிரங்குகளை சொறிந்து புண்களை உண்டாக்குபவர்கள். வாழ்வின் பாதையில் முள் வேலியாய் நிற்பது சோம்பலே.,முதலில் சோம்பலை விரட்டுங்கள். சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்.. ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான். அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது. தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து,"மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது. கதையைச் சொல்லி முடித்த மகான், "நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமை தான் கிட்டும்'' என்றார். ''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''. சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! *ஆம்,நண்பர்களே.,* ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல் தான். சோம்பலாலால் கால தாமதம் நேர்கிறது.கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது. எனவே.,சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்... (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி...)🌹🌹🌹🙏🏻💐💐💐*
saravanan.
3.7K views
2 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷11.05.2026🌷 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 "If you have a dream, don't just sit there. Gather courage to believe that you can succeed and leave no stone unturned to make it a reality." " உங்களுக்குக் கனவென்று ஒன்று இருந்தால், சும்மாயிராமல், வெற்றியடைய முடியும் எனும் உற்சாகம் கொள்ளுங்கள்; அதை நிஜமாக்க, ஒவ்வொரு கல்லையும் புரட்டிப் போடுங்கள்." Roopleen. Accept your past without regrets. Handle your present with confidence. Face your future without fear." "வருத்தப்படாமல் உங்கள் கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு நிகழ்காலத்தைக் கையாளுங்கள். தைரியத்தோடு எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள்." வெற்றியாளர்கள் தங்கள் இலட்சியங்களைப் பற்றி சிந்திப்பார்கள்..! சிறுமையானவர்கள் பிற மனிதர்களை சிந்திப்பார்கள்..! உங்கள் சிந்தனைகளே, நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கின்றன..!! கடல் நிறைய முத்து இருந்தாலும் கரையில் நிற்பவருக்கு கிடைக்காது. உடல் நிறைய வலிமை இருந்தாலும் எப்போதும் உறங்கிக் கிடப்பவருக்கு அது உதவாது....!!! மற்றவரை வீழ்த்துவதோ தாழ்த்துவதோ நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்கக் கூடாது..... நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவது தான் நமது வாழ்க்கையின் நோக்கமாக , லட்சியமாக இருக்க வேண்டும்.... வெற்றி பெறுவது மிகவும் எளிமையாக்க என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள்..! செய்வதை விரும்பிச் செய்யுங்கள்..! செய்வதை நம்பிக்கையோடு செய்யுங்கள்..!! உயரத்தில் இருந்து பார்த்தால் மற்றவர்கள் சிறியவர்களாக உங்களுக்குத் தெரியலாம்... ஆனால், நீங்களும் அவர்களில் ஒருவர் தான் என்பதை மறந்து விடாதீர்.. ...!!!! வாழ்த்துகள். வாழ்க வளமுடன். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
saravanan.
480 views
3 days ago
#innraya SINTHANAY சிந்தனை.* ( 10.05.2026).. ……………………………………………........ *'’உங்களை நம்புங்கள் ''* ....................................................... எல்லாவற்றுக்கும் அடிப்படை தன்னை நம்புவது ஆகும்.ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தித் தள்ளி விடுகிறதல்லவா. அது போல மனித சக்தி நம்மில் நிறைந்திருந்து இருந்தால் தான் அது முன்னேற்றப் பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.. சிறிதளவேனும் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இயற்கையிலே நாம் நம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம். பிச்சைக்காரன் கூட நான் பிச்சை எடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன் மீதுள்ள நம்பிக்கையில் தான். எனவே எல்லாவற்றுக்கும் அடிப்படை தன்னை நம்புவது ஆகும். அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்து இருந்தால் தான் அது முன்னேற்றப் பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும். அது போதுமான அளவு சிலருக்கு இருப்பதில்லை. அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக் கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம். முழுவதுமாக நிரம்பப் பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மைக் கொண்டு செல்லும். சிலர் தாம் தவற விட்ட சில இலக்குகளை நினைத்தே வருந்திக் கொண்டு இருப்பார்கள். எப்போதும் செய்ய முடியாமல் போனதை நினைத்ததை வருந்துவதை விடவும், சில நேரங்களில் நாம் சிறப்பாக செய்து முடித்ததையும் அதற்கு நமக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நினைத்துப் பெருமை கொள்கிற உற்சாக தருணங்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நம் உச்சம் என்ன, நம் உயரம் என்ன என்பதை நமக்கே அது புலப்படுத்தும் நொடிகளாக அது அமையும். பிறருக்கான மனிதராக நீங்கள் இருப்பது உங்களை நீங்களே வீணடித்துக் கொள்வதற்குச் சமம்.. *ஆம்.,நண்பர்களே..,* தன் உயரம் யாருக்குப் புரியவில்லையோ, அவரே மற்றவரை உயர்வானவராக, தன்னை விட சிறந்தவராக நினைத்துக் கொள்வார். இந்த எண்ணத்திற்க்கு பதிலாக நீங்கள் உயர்வாக நினைக்கிற அனைவருக்கும் எந்த வகையிலும் நீங்களும் சளைத்தவரில்லை என்ற எண்ணத்தை விதைத்துப் பாருங்களேன்!! எப்போது இந்த பொதுவுடைமை மனநிலை வருகிறதோ, அப்போது உங்களின் உச்சம் உங்களுக்குப் புரியும்... உங்கள் வெற்றிகளும் விரியும். (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐🙏🏻🌹🌹🌹*
saravanan.
570 views
4 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷09.05.2026🌷 வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் எதாவது ஒன்றை அடைய முயற்சியைத் தொடங்கியிருப்போம்... ஆனால், முயற்சியின் தொடக்கத்தில் இருந்த உத்வேகமானது சில நாள்களில் இல்லாமல் போய் விடுகின்றது... ஏனென்றால், நாம் எதிர்பார்த்த பலன் ஆனது உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்பதே நிதர்சமான உண்மை... ஓவ்வொரு முயற்சியிலும் அது எடு்த்துக் கொள்ளும் காலமானது வேறுபடும்... ஆனால் நம் மனமானது இதனை ஏற்றுக் கொள்ளத் தான் மறுக்கின்றது... எச்செயலைத் தொடங்கினாலும் அதில் இடைவிடாது உழைத்தலே பலனைத் தரவல்லது... போராடிப் பெறுவது மட்டுமே வெற்றியாகும்... எளிதாய்க் கிடைப்பதை யாருமே கொண்டாடுவதில்லை... வாழ்க்கைப் பயணத்தில், நமக்கு நடந்த பெரும்பாலான நிகழ்வுகளை ஆராய்ந்தால்... ஒவ்வொரு தடையும், ஒவ்வொரு வெற்றியைத் தன்னுள் மறைத்து வைத்திருந்தது என்பது புரியும்... அது போன்று தான் தோல்வியும்... தோல்வி என்பது நம்மை நாம் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான சரியான அறிவிப்பு என்று கூட சொல்லலாம்... வெற்றி வந்தால் பெற்றுக் கொள்வோம்... தோல்வி வந்தால் கற்றுக் கொள்வோம்... சிந்தித்து செயலாற்றுங்கள். வாழ்த்துகள்... வாழ்க வளமுடன். 😊😊😊
saravanan.
562 views
4 days ago
#innraya SINTHANAY சிந்தனை*.( 09.05.2026).. ……………………………………………................... *" பிறரை மகிழ வைத்து மகிழுங்கள்''* ........................................................ வாழ்க்கைப் பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம். ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன், அறிவாளி என எத்தனை விதமானவர்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும் மகிழ்ச்சியை அவர்கள் தேடி அலைவது மட்டும் ஒரே பொதுக்காரணியாக இருந்து வருகிறது. வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதிலே தான் இருக்கிறது... மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல. அது ஒரு பயணம்... மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம்... மகிழ்ச்சி என்பது ஏற்றுக் கொள்வது அல்ல. அது ஒரு முடிவு... ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச் சென்றாள். அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு..எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணருகின்றேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் அளவு கடந்த பணமும்,சொத்தும் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. என் மகிழ்ச்சிக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றாள். "கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலகத்தில் தரையை கூட்டிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணை அழைத்தார். அந்த பணக்காரப் பெண்ணிடம், " நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் அவர் பேசுவதை மட்டும் கேளுங்கள் என்றார். பணிப்பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.. "என் கணவர் இறந்த மூன்றாவது மாதம் என் ஒரே மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை. யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் போது ஒரு பூனை என்னைப் பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக் கொண்டு இருந்தது , எனக்கு பூனையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனைப் பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது. கடந்து போன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாகப் புன்னகைத்தேன். நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு செயல் என்னை மகிழ்ச்சி அடையச் செய்கிறது எனில், ஏன் இதைப் பலருக்கு செய்து நான் ஏன் மனநிலையை மாற்றிக் கொள்ளக் கூடாது என யோசித்தேன். அடுத்த நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி, அவர்தம் மகிழ, நானும் பெரு மகிழ்வு உற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா? என்பதே ஐய்ப்பாடு தான்.. மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை இந்த செயல்கள் கண்டு கொண்டேன்." இதைக் கேட்ட அந்தப் பணக்காரப் பெண் ஓலமிட்டுக் கத்தி அழுதாள். அவளிடம் பணத்தைக் கொண்டு வாங்கக் கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத மகிழ்ச்சி மட்டும் அவளிடம் இல்லை. *ஆம்.,நண்பர்களே..,* மரங்கள் கனிகளை தருவது போல, தங்களிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும். "பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும். உலகம் உங்களைக் கண்டு மகிழும்" உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும். (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐🙏🏻🌹🌹🌹 .*
saravanan.
507 views
5 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 08.05.2026).. ……………………………………………................... *தீர விசாரிக்காமல் எதையும் நம்பாதீர்கள்..''* ...................................................... ஒரு நிகழ்வை நாம் நம்புகின்றோம் என்பதற்க்காகவும், விரும்புகின்றோம் என்பதற்க்காகவும், அப்படி நடக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு என்பதற்க்காக, மட்டும் அது உண்மையாகி விடாது. எதையும் கேள்வி கேட்கின்ற,தீர விசாரித்து பரிசோதனை செய்து தெரிந்து கொள்கின்ற அறிவு நமக்கு அவசியம் இருக்க வேண்டும்.. யார் எதைச் சொன்னாலும் அது உண்மை தானா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறிவார்ந்த மனிதனாக வளர அதுவே வழி. நம் அய்யன் திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்லி உள்ளார். எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப் பொருள்மெய்ப் பொருள் காண்பதறிவு என்று.. அதாவது., எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்.. ‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் அவரே சொல்லி இருக்கிறார். வேட்டையாடச் சென்ற ஒருவரின் கையில், பறவை ஒன்று சிக்கியது. அந்தப் பறவை, அவரிடம், உனக்கு நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சியது. சரி, அந்த அறிவுரைகளைச் சொல் என்று கேட்டார் அவர். அதற்கு அந்தப் பறவை, உன் கையிலிருந்து என்னை விட்டு விட்டதற்குப் பிறகு முதல் அறிவுரை சொல்கிறேன் என்றது. நான் மரத்தில் போய் உட்கார்ந்த பிறகு, இரண்டாவது அறிவுரையையும், நான் அதிலிருந்து பறந்ததற்குப் பிறகு மூன்றாவது அறிவுரையையும் சொல்கிறேன் என்று சொன்னது பறவை. அவரும் அந்தப் பறவையை, தனது பிடியிலிருந்து விட்டார். அப்போது அந்தப் பறவை, முதலில் உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவைகளையும் எண்ணி சுமைகளாக்கி, உன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதே என்று சொன்னது. பின்னர்,அருகில் இருந்த மரத்திற்குச் சென்று உட்கார்ந்த பின், யார் எதைச் சொன்னாலும், அதை உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே. உன் அறிவு கொண்டு நீ சிந்தனை செய்தால் தான், எதையும் நீ சரியாகச் செய்ய முடியும் என்று தனது இரண்டாவது அறிவுரையைச் சொன்னது பறவை. இவ்வாறு சொன்ன அந்தப் பறவை, வேடரைப் பார்த்து, ''பைத்தியக்காரா, என் உடலுக்குள் இரண்டு அற்புதமான பெரிய வைரங்கள் இருக்கின்றன, என்னை கொலை செய்திருந்தால் அவற்றை நீ அடைந்து இருக்கலாம்.உன் பிடியிலிருந்து என்னை விட்டு விட்டாயே என்று சொன்னது. அதற்கு அந்த மனிதர், ''சரி இப்ப என்ன, விட்டு விட்டேன், வேதனை தான், பெரிய இழப்பு தான், பெரிய தவறு தான் என்று சிறிது நேரம் புலம்பி விட்டு, அந்த மூன்றாவது அறிவுரையைச் சொல் என்றார். அதற்கு அந்தப் பறவை,உன் கடந்த காலத் தவறுகளையும் நீ இழந்தவற்றையும் எண்ணி நொந்து போகாதே என்று, நான் உனக்கு முதலில் சொன்னது நினைவு இருக்கிறதா, ? நீ அதைத்தான் இப்போது செய்கிறாய் என்று சொன்னது. அடுத்து, இரண்டாவது அறிவுரையாக, யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே என்று சொன்னேன். இவ்வளவு சிறிய பறவையாகிய என் வயிற்றில் இவ்வளவு பெரிய இரண்டு வைரங்கள் இருக்கின்றன என்று, நான் சொன்னால் அதை நீ நம்பிய உனது அறிவற்றதனத்தை என்ன சொல்வது? எனவே உனக்கு எது சொன்னாலும் பயன்படாது என்பதே மூன்றாவது அறிவுரை என்று சொல்லி விட்டுப் பறந்தது, அந்த அறிவாளிப் பறவை. *ஆம்.,நண்பர்களே !* தீர விசாரிக்காமல் எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் கொண்டு இருக்கிறோம். எதையும் அறிவு கொண்டு சிந்திப்போம்.. தீர விசாரித்து எது உண்மை,எது பொய் என்று அறிந்து வாழ்க்கைப் பாதையிலே நடைபோட்டு முன்னேறுவோம்.. வெற்றி பெறுவோம். (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி.....)💐💐💐🙏🏻🌹🌹🌹
saravanan
647 views
8 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 05.05.2026).. …………………………………………...... *"பகைமை மறப்போம்'* ..................................................... இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது. இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது. உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறந்து விடுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதி யைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சு ஆக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும் மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார். அவரது பகுதிக்கு உட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார். இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார். தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார். விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார். மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்து இருந்தனர். சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி. மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார். அதற்கு மன்னர், ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கி விட்டேன். ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்து உள்ளது’ என்றார்.. பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்று தான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது. வம்ச வம்சமாகத் தொடரும் என்றார்... . *ஆம்.,நண்பர்களே..* “நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள் பகைமை மறப்போம் . அன்பை செலுத்துவோம்..(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..)💐💐💐🙏🏻🌹🌹🌹*
saravanan
575 views
9 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷04.05.2026🌷 கடினமான பாதைகள் தான்.. அழகான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது..!! 🔸🔹உலகியல் வாழ்வில் நாம் ஒரு சிறு துரும்பு கூட இல்லை என்பதை உணர்ந்து கொண்டோமா.... "இழந்ததை" மறந்து விடு..! "இருப்பதை" இழக்காமல் இருக்க..!! 🔹🔸நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை 🔸🔹நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம். 🔸🔹இந்தக் காலம் சிக்கலான முடிச்சுகளை சுமந்தபடி மாறாத தேகத்தில் மாறுகின்ற காலம் 🔹🔸எதற்குமே சஞ்சலமின்றி சரணம் என்றே சுழன்று கொண்டிருக்கின்ற காலம்.... தன்னுள் அடக்கியபடி இயல்பாய் இயங்குகின்றது.... 🔸🔹வாழ்வின் அவசர ஓட்டத்தில் இதைப் புரிந்து கொள்ளத் தான் நமக்கு நேரம் இருப்பதில்லை... காலம் கடந்து புரிந்து கொள்கின்றோம்..... 🔹🔸எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, 🔸🔹உலகில் நானே அறிவாளி... என்னால் எல்லாம் முடியும்... என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கு என்று தேடிக் கொண்டிருக்கின்றோம்... உண்மை இது தான்..... 🔹🔸நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை .. நிம்மதியாய்.... மகிழ்ச்சியாய்... கொண்டாட்டமாய்.... குதூகலத்தோடு... அமைதியாய்... ஆனந்தத்தோடு.... துள்ளல் குறையாமல்... இயந்திரத்தனமாக வாழாமல்..... வாழ்வினை அனுபவித்து..... நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம்... 🔸🔹இந்தத் தெளிவும் புரிதலும் மட்டுமே வாழ்வை எளிதாய் இன்பத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.... இயல்பையும் காலத்தையும் நேரத்தையும் ஆழ்ந்த புரிதல் கொண்டே அவற்றை அனுபவிக்க இயலும் 😊😊😊