விடை தெரியாத கேள்விகள்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
812 காட்சிகள்
28 நாட்களுக்கு முன்
ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த இரண்டு வாரங்களாகக் கடுமையான மலச்சிக்கல் பாதிப்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று அவர் கழிவறைக்குச் சென்றபோது, மலம் கழிக்க அதிக முயற்சி செய்து முக்கியுள்ளார். அதன் பிறகு வெளியே வந்த அவர், கடந்த 10 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தையும் நினைவுகூர முடியாமல் தவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சுமார் 8 மணிநேரம் அந்தப் பெண்ணால் கடந்த கால நிகழ்வுகளைச் சிறிதும் யோசிக்க முடியவில்லை. ஆனால், அதன் பிறகு மெல்ல மெல்ல அவரது நினைவாற்றல் தானாகவே திரும்பியது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த 8 மணிநேரம் அவர் எங்கு இருந்தார், என்ன செய்தார் என்பது அவருக்கு இன்றுவரை நினைவில் இல்லை. இந்த வினோத பாதிப்பிற்கு மருத்துவ ரீதியாக 'ட்ரான்சியன்ட் குளோபல் அம்னீசியா' (Transient Global Amnesia) என்று பெயர். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், மலம் கழிக்க அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும்போது, அது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்தத் திடீர் அழுத்தத்தினால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் கலந்த இரத்த ஓட்டம் சில நொடிகள் தடைபடக்கூடும். இதனால் மூளையின் நினைவாற்றல் பகுதி பாதிக்கப்பட்டு, தற்காலிகமாகத் தகவல்களைச் சேமிக்கவோ அல்லது பழைய நினைவுகளை மீட்கவோ முடியாமல் போகிறது. மேலும் இதுபோன்ற பாதிப்புகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றாலும், மலச்சிக்கல் போன்ற சாதாரணப் பிரச்சனைகளைக் கூட கவனிக்காமல் விட்டால் இத்தகைய வினோத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். #புரியாத புதிர்🌷 #மருத்துவ குறிப்பு #விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவு
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
5.5K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
ஐஸ்கிரீம் கோன்கள் பிஸ்கட் அல்லது Waffle கொண்டு தயாரிக்கப்படுபவை. ஐஸ்கிரீம் மெதுவாக உருகத் தொடங்கும்போது, அது கோனின் அடியில் உள்ள சிறிய துளை வழியாகக் கசிந்து நமது கைகளை அழுக்காக்கிவிடும். Escalator ஓரத்தில் இருக்கும் பிரஷ் எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 15 ஐஸ்கிரீம் கோன் சாக்லேட் 1950-களின் இறுதியில், ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் இதற்கொரு தீர்வைக் கண்டறிந்தனர். 1959-ல் Spica என்ற இத்தாலிய ஐஸ்கிரீம் தயாரிப்பாளர், ஐஸ்கிரீம் மற்றும் கோனுக்கு இடையில் ஒரு எண்ணெய் மற்றும் சாக்லேட் படலத்தைப் பயன்படுத்தி, கோன் நனைந்து போகாமல் (Soggy) தடுக்கும் முறையைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். இதுவே ஐஸ்கிரீம் கோன் சாக்லேட்களின் இன்றைய நவீன புரட்சிக்கு வித்திட்டது. லிஃப்டில் (Lift) கண்ணாடி வைப்பது எதற்காக? - இது தெரியாமப் போச்சே?! - 14 கோனின் அடிப்பகுதியில் உருக்கப்பட்ட சாக்லேட்டை ஊற்றினால், அது குளிர்ந்த நிலையில் உறைந்து ஒரு நீர்க்கசிவு இல்லாத அடைப்பானாக மாறும். இது உருகும் ஐஸ்கிரீம் வெளியேறாமல் தடுத்து, கடைசிவரை கோனை மொறுமொறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த முறையை முதலில் பிரபலப்படுத்தியது Cornetto நிறுவனம்தான். ஐஸ்கிரீம் கோன் சாக்லேட் வேறு சில பயன்கள்: உணவியல் ரீதியாக, ஒரு இனிப்பைச் சாப்பிட்டு முடிக்கும்போது கிடைக்கும் அந்த இறுதித் துண்டு (Final bite) நுகர்வோருக்கு மிகுந்த திருப்தியைத் தரும். இந்தச் சாக்லேட் துண்டு அந்த வேலையைச் சரியாகச் செய்கிறது. மக்கள் இந்தச் சாக்லேட் நுனியை மிகவும் விரும்புவதால், தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் Muddy Bites என்ற பெயரில் ஐஸ்கிரீம் இல்லாமல் வெறும் கோன் நுனிகள் மட்டும் தனி சிற்றுண்டியாக விற்கப்படுகின்றன. சாக்லேட் அடுக்கு கோனின் அடிப்பகுதிக்குக் கூடுதல் வலிமையைத் தருவதால், பேக்கிங் மற்றும் போக்குவரத்தின் போது எளிதில் உடையாமல் இருக்கின்றன. #தெரிந்து கொள்வோம் #புரியாத புதிர்🌷 #🏖️ சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
896 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
சித்தாந்தத்தின் படி ஆன்மா என்பது ஒன்று அல்ல. அது மூன்று வகைப்படுகிறது. நம் அனைவருக்குள்ளும் ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என்ற மூன்றும் செயல்படுகிறது. ஜீவாத்மா என்பது உயிர்சக்தியைக் குறிக்கும். கிரியாசக்தி என்றும் சொல்லலாம். கிரியை என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடல் இயங்குவதற்கான சக்தியைக் கொடுப்பது இந்த ஜீவாத்மா. பரமாத்மா என்பது நமக்குள் இருக்கும் இறைசக்தியைக் குறிக்கும். இதனை ஞானசக்தி என்றும் சொல்லலாம். அன்பு, கருணை, இரக்கம் என அத்தனை நற்குணங்களையும் தருவது இந்த பரமாத்மா எனும் ஞானசக்தி. அந்தராத்மா என்பது நமக்குள் இருக்கும் ஆசையைக் குறிக்கும். இதனை இச்சாசக்தி என்றும் சொல்லலாம். இச்சை என்றால் ஆசை, அல்லது விருப்பம் என்று பொருள். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என இந்த மனம் அலைகிறதல்லவா.. அதாவது இந்த உலகில் நாம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்பு களைத் தேடத் தூண்டுவது இந்த அந்தராத்மா. இந்த மூன்றும் சரியான விகிதாச்சாரத்தில் சராசரி மனிதனின் உடம்பினில் இடம்பிடித்திருக்கின்றன. வெறும் பொம்மை ஆகிய இந்த உடம்பிற்குள் ஜீவாத்மா என்கிற உயிர்சக்தி உடலை இயங்கச் செய்கிறது. காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்கிறார் திருமூலர். இந்த பையிற்குள் காற்று எனும் ஜீவாத்மாவை அடைத்தால் பிண்டம் உயிர்பெறுகிறது. மற்ற இரண்டு ஆத்மாக்களும் இந்த உடம்பினில் இணையவில்லை எனில் உயிர் இருந்தாலும் இது வெறும் ஜடம் ஆகவே கருதப்படும். ஒரு சில குழந்தைகள் எந்த வித அசைவுமின்றி அப்படியே கிடப்பதைக் காண்கிறோம். இந்த குழந்தைகளுக்கு உயிர் இருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பது எதுவுமே தெரியாது. இவர்களது உடம்பினில் வெறும் ஜீவாத்மா மட்டுமே இயங்கும். பிறந்த குழந்தை வளரத்தொடங்கும்போது பசியென்று அழுகிறது. ஒரு பொம்மையைப் பார்த்து விளையாடுவதற்கு வேண்டும் என்று விரும்புகிறது. இவ்வாறாக கொஞ்சம், கொஞ்சமாக அதன் மனம் இந்த உலக வாழ்க்கையை விரும்பத் தொடங்குகிறது. இதுவே அந்தராத்மா என்னும் இச்சாசக்தியின் செயல்பாடு. இச்சாசக்தியின் வேகம் அதிகரிக்கும்போது இந்த மனம் பேராசைப்படுகிறது. தவறு செய்யத் தூண்டுகிறது. இவை அனைத்தும் வெறும் மாயை, உலகினில் வாழ இது மட்டும் போதாது, ஆண்டவனின் அருளும் தேவை, அதற்கு பிற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்ற ஞானத்தை நமக்குள் தோற்றுவிப்பது பரமாத்மா எனும் ஞானசக்தி. அந்தராத்மாவின் சக்தியை வெகுவாகக் குறைத்து பரமாத்மாவின் சக்தி அதிகரிக்கப் பெற்றவர்களை ஞானிகள் என்று போற்றுகிறோம். அதனால் இவர்களை கடவுளுக்குச் சமமாக ஆலயங்கள் எழுப்பி வழிபாடு செய்கிறோம். இயேசுநாதர், சாயிபாபா, ராகவேந்திரர் ஆகியோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்பொழுது உங்கள் கேள்விக்கான பதிலைக் காண்போம். உடலை விட்டு உயிர் பிரியும்போது நமது உடம்பிற்குள் இருந்த ஜீவாத்மா எனும் கிரியாசக்தி வேறு ஒரு பிண்டத்தினைச் சென்றடைகிறது. அந்த உடம்பு உயிர்பெற்று உலகினில் பிறவி எடுக்கிறது. நமக்குள் இடம்பெற்றிருந்த பரமாத்மா எனும் ஞானசக்தி இறைவனின் பாதத்தைச் சென்றடைகிறது. இதனைத்தான் பரமபதம் அடைந்தார், அல்லது இறைவனடி சேர்ந்தார் என்று குறிப்பிடுகிறார்கள். அந்தராத்மா என்று அழைக்கப்படும் இந்த இச்சாசக்தியே ஆவியாக அலைகிறது. இந்த ஆத்மாவிற்கு நாம் இறந்துவிட்டோம் என்பது அவ்வளவு எளிதாகப்புரிவதில்லை. அந்த ஆத்மாவை அமைதி கொள்ளச் செய்து, அதனை பித்ருலோகத்திற்குச் சென்றடையச் செய்வதற்குத்தான் நாம் கரும காரியங்களைச் செய்கிறோம். அவரவருக்கு உரிய மத சம்பிரதாய சடங்குகளைச் செய்து பித்ருலோகத்திற்குச் சென்றடையச் செய்வதற்கான கடமை பிள்ளைகளுக்கு உரித்ததாகிறது. இந்த அந்தராத்மாவிற்குத்தான் பிரதி வருடம் திவசம் கொடுக்கிறோம், அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்கிறோம். ஆக நீங்கள் கேட்ட ஆத்மா என்பது மூன்று வகைப்படுகிறது. அதில் ஒன்று வேறு ஒரு இடத்தில் மீண்டும் பிறக்கிறது. ஒன்று இறைவனின் பாதத்தைச் சரணடைகிறது. மூன்றாவது பித்ருலோகத்தைச் சென்றடைகிறது என்பதே உங்கள் கேள்விக்கான தெளிவான பதில். ?பரம்பரை நோய் இருக்கிறது என்று கூறுகிறார்களே, உண்மையா? – வண்ணை கணேசன், சென்னை. உண்மைதானே. சர்க்கரை வியாதி போன்றவை பரம்பரையாக வருவதை மருத்துவர்களும் ஒப்புக் கொள்கிறார்களே. ஜோதிடவியல் ரீதியாக மரபணுக்களை கடத்தும் கிரஹங்களாக ராகு – கேதுக்களைச் சொல்வார்கள். இந்த ராகு மற்றும் கேதுவின் சஞ்சார நிலையே பரம்பரை வியாதிகளைத் தருகிறது என்பதை ஜோதிடமும் வலியுறுத்துகிறது. ஆக, பரம்பரை வியாதி என்பது உண்மையே. அதே நேரத்தில், எல்லா வியாதிகளும் பரம்பரை வியாதிகள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ?பொதுவாக கோபுர கலசத்திற்குள் என்னென்ன பொருட்கள் வைக்கப்படுகிறது?- என். இளங்கோவன், மயிலாடுதுறை. பொதுவாக கோபுர கலத்திற்குள் வரகு தானியத்தை நிரப்பி வைத்திருப்பார்கள். ஒரு சிலர், விதை நெல்மணிகளை நிரப்பி வைக்கிறார்கள். இதுபோன்ற தானியங் களைத் தவிர வேறு எந்த பொருளையும் கோபுர கலசத்திற்குள் வைப்பதில்லை. ?60 வயதிற்கு மேல் உள்ளவர்களை சனி திசை பாதிக்காதா? – சு.ஆறுமுகம், கழுகுமலை. முதலில் சனி திசை என்றாலே பாதிப்பினைத் தரும் என்ற கருத்தே தவறானது. சனி திசை காலத்தில் அளப்பறிய நற்பலன்களை அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எந்த வயதினராக இருந்தாலும், ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்திகளின் அடிப்படையில்தான் பலன் என்பது நடக்கிறது. இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. ?இறைவனை உணர எளிய வழி? – சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம். அன்பே சிவம், தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என நம்மவர்கள் பல எளிய வழிகளை சொல்லித் தந்திருக்கிறார்களே, இவற்றைப் பின்பற்றினாலே இறைவனை எளிதாக உணர இயலுமே. இந்த வழிகளை சரிவரப் பின்பற்றி வந்தாலே உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதையும் உணர்ந்துவிடுவோம் #புரியாத புதிர்🌷 #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #⏱ஒரு நிமிட கதை📜 #📝என் இதய உணர்வுகள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
867 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
மூளைக்கு வேலை கொடுக்கும்' கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. சவால் நிறைந்த அத்தகைய கேள்வி, "பெண்களுக்கு குளித்த பின் எது சுருங்கிப் போகிறது?" இதன் சரியான விடை, கூந்தல் அல்லது பின்னல் (சடை) ஆகும். குளித்த பின் ஈரமான முடி காய்ந்து போகும்போது இயல்பாகவே சிறிது சுருங்கி அல்லது சிறியதாகத் தோன்றும். இந்த வகையான கேள்விகள் யுபிஎஸ்சி (UPSC) அல்லது ஐஏஎஸ் (IAS) நேர்காணல்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் விரைந்து முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. இந்த வினாடி வினாவில், "எது நமக்கு ஒருமுறை இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால் இரண்டாவது முறை இல்லை?" என்ற கேள்விக்கு விடை: பற்கள், மற்றும் "நாம் ஏன் தண்ணீர் குடிக்கிறோம்?" என்ற கேள்விக்கு விடை: ஏனெனில் அதை சாப்பிடவோ அல்லது மெல்லவோ முடியாது. இது தவிர, "மனிதன் இறந்த பிறகும் செய்யக்கூடிய வேலை என்ன?" என்ற கேள்விக்கு விடை: உறுப்பு தானம் ஆகும். இத்தகைய கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தெரிந்துகொள்வது உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது #புரியாத புதிர்🌷 #மூளைக்கு வேலை கொடு #இன்றைய சிந்தனை