செய்தி

Makkal Mugam
558 views
8 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 பண்டாரவிளை - ஏரலில் ஸ்ரீவைகுண்டம் காங். தொகுதி வேட்பாளர் ஊர்வசி எஸ் அமிர்தராஜை ஆதிரித்து கனிமொழி எம்.பி.தேர்தல் பரப்புரை தூத்துக்குடி ஏப்17 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்க்கு கை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என பண்டாரவிளை மற்றும் ஏரலில் கனிமொழி எம்.பி . தேர்தல் பரப்புரையாற்றினார். ஏரல், சாத்தான்குளம் பகுதியில் இளைஞர் மற்றும் பெண்களுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக ஊர்வசி அகடமி நடத்தி வருகிறார். இதில் பயின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறையில் பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் சாயர்புரத்திலும் இலவச அகடமி தொடங்க உள்ளார் எனவும் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். எனவே வாக்காள பெருமக்களே நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். முதலமைச்சர் தேர்தல் அறிக்கை படி மகளிர் உதவிக்தொகை ரூ 2000/- உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்குமகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தேர்தல் அறிக்கை படி பெண்களுக்கு "சூப்பர்ஸ்டார்" ரூ.8000/- மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். கூப்பனை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிவாரணநிதி ஒன்றும் இதுவரை தரவில்லை மகளிர் கான இடஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் இருக்கக் கூடிய தொகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் குறைக்க கூடாது. மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.100 நாட்கள் வேலை முடக்கப்பட்டுள்ளன சம்பளம் கிடைப்பதில்லை. 42% பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டை குழந்தைகளின் எதிர்காலம் மொழிகளை பாதுகாக்க திராவிட விடியல் ஆட்சி மீண்டும் மலர்ந்திட வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்க்கு "கை" சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார். நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் ஜெப தங்கம் பிரேமா,வக்கில் ஆறுமுகபெருமாள், ஸ்ரீவை ஒன்றிய கழக செயலாளர்கள் பி.ஜி.ரவி, கோட்டாளம், மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, பேரூர் கழக செயலாளர்கள் ராயப்பன், கண்ணன், நவநீத முத்துக்குமார், சாயர்புரம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் த.அறவாழி, மாவட்ட அயலக துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், மாவட்ட காங்.துணை தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், வட்டார தலைவர்கள் ஜெயராஜ், ஜெயசீலன்துரை, தாசன், மாவட்ட பொது செயலாளர் சிவகளை பிச்சையா, சாயர்புரம் நகர காங்.தலைவர் இசை சங்கர் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
👀𝕻𝖗𝖆𝖇𝖚 𝕾𝖍𝖆𝖓𝖐𝖆𝖗👀
530 views
15 hours ago
வாழ்த்துக்கள் வைஷாலி 🙏 வாழ்க தமிழ் #sports #செய்திகள் #nanmai365
Makkal Mugam
584 views
12 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார் மதுரை மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளராக டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் . அவருடன் பாஜகவை சேர்ந்த மாரி சக்கரவர்த்தி, மூமூகவை சேர்ந்த பகவதி ,மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர் செல்லூர் பாஸ்கரன் உடன் இருந்தனர் மாற்று வேட்பாளராக டாக்டர் சரவணன் மனைவி கனிமொழி தாக்கல் செய்தார். டாக்டர் சரவணன் கூறியதாவது மதுரை வடக்கு தொகுதி என்பது ஒரு புனிதமான தொகுதி இதே வடக்கு தொகுதி தான் அன்றைக்கு மேற்கு தொகுதியாக இருந்தது இந்த தொகுதியில் புரட்சித்தலைவர் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் .இதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்றார் புரட்சித்தலைவரை கோட்டைக்கு அனுப்பிய தொகுதி இந்த வடக்கு தொகுதி தான் . அது மட்டுமல்லாது வடக்கு தொகுதியில் யார் சட்டமன்ற உறுப்பினர் வருகிறார்களோ அந்தக் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் அதுபோல இந்த வடக்கு தொகுதி நிச்சயம் இரட்டை இலை மலரும் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் இந்த வடக்கு தொகுதியை நான் நிச்சயம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் குறிப்பாக நகர்புறங்களில் சொந்த வீடு என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது சொந்த வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருவதை நன்கறிந்த எடப்பாடியார் தனது தேர்தல் அறிக்கையில் அம்மா இல்லம் திட்டம் என்று அறிவித்துள்ளார் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு வீட்டுமனையும், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் ,அதேபோல நகர் பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு அம்மா இல்லம் திட்ட மூலம் அடுக்கு மாடி வீடுகள் விலையில்லாமல் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த திட்டத்தில் ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலில் இன மக்களின் மகள், மகன் திருமணமாகி தனி குடித்தனம் சொல்கிற போது அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார் நிச்சயம் இந்த வடக்கு தொகுதியில் அம்மா இல்ல திட்டத்தின் மூலம் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படும் என்பதை நான் உறுதி அளிக்கிறேன் ஸ்டாலின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தியாயச பொருட்கள் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் ,குடிநீர் கட்டணம் போன்ற பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது‌ எனவே மக்களின் இந்த சுமையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவி தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடியார் அறிவித்துள்ளார் நிச்சயம் மே மாதம் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார் அந்த மாதமே உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிச்சயமாக வழங்கப்படும்.
lalitha
35.6K views
22 days ago
#குழந்தையை பிரியும் ஒரு தாயின் வேதனை. #செய்தி வாசிப்பாளர் ஸ்டேட்டஸ். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
palraj
160.1K views
27 days ago
ஆயுள் தண்டனை கைதிய எதுக்கு வெளியே சுத்த விட்டாங்க... #செய்தி