#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” என்ற தலைப்பில் பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
செ.சரவணன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” என்ற தலைப்பில் பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட கோலப்போட்டி, உரியடிக்கும் போட்டி, மியூசிக்கல் சேர், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election)
(15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி ”நமது வாக்கு, நமது உரிமை”, ”தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா” மற்றும் ”எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம்” என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழா என்பது உற்றார்-உறவினர்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழும் ஒரு திருவிழாவாகும். பொங்கல் திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில் ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களும் அலைக்கடல்போல் திரண்டு வந்து கொண்டாடி வருவது திண்டுக்கல் மாவட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. அதேபோல், அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026-ல் தங்களது வாக்கினை செலுத்தி 100% தேர்தல் வாக்குப்பதிவினை உறுதி செய்திட வேண்டும். மேலும், தேர்தல் நாளன்று தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் தங்களது வாக்கினை செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
எனவே, ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் “எனது வாக்கு, எனது உரிமை“ என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தொடர்ந்து, வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026-ல் 100% தேர்தல் வாக்குப்பதிவினை உறுதி செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், முன்னிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் அனைத்துறை அரசுப் பணியாளர்கள் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
மேலும், ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சா.சதீஸ்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.