செய்தி

Makkal Mugam
486 views
4 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 பல வருடங்களாக சிசு மரணத்தை மறைத்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த பெண் மருத்துவர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தஞ்சாக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர், அப்பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற சிசு மரணங்களை முழுவதுமாக மறைத்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் மிகவும் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் நீலாதேவி மீது அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நம்மை தலைசுற்ற வைக்கும் வண்ணமாகவும், இவர் ஏதும் மன நலம் சார்ந்த பிரச்சனையில் உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக இப்பெண் மருத்துவர் தேவைப்பட்டாலும் படாவிட்டாலும் குளுக்கோஸ் போடுவது, பொதுமக்களின் நோட்டுகளை தூக்கி எறிந்து அவமானப்படுத்தி வெளியே போ என்று கத்துவது, தேசிய தர உறுதி தரநிலைகள் சான்றிதழ் பெற சுகாதார நிலையத்தை சீர்திருத்தம் மேற்கொண்ட மற்றொரு ஆண் மருத்துவர் மீது தங்கும் விடுதி சுவரை இடித்ததாக பொய் புகார் பொதுப் பணித்துறை அதிகாரியிடம் கொடுத்தது மற்றும் பணியாளர் எழுதியதுபோல் எழுதி இன்வர்டர் பேட்டரியை காணவில்லை என்று புகார் கொடுத்தது, அதே போல் மற்றொரு புகார் தயார் செய்து உள்ளாட்சிப் பிரதிநிதியை கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்று அனுப்பியது, வெளி நோயாளிகள் சிகிச்சை அறையை தவிர்த்து, பொது அறையில் நோயாளிகள், குறிப்பாக பெண்கள் மருத்துவரிடம் மறைமுகமாக கூற வேண்டிய அறிகுறிகளை அனைவர் முன்னிலையில் கூற வைத்துவிட்டு, வெளி நோயாளிகள் சிகிச்சை அறையில் டிரைவருடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கு மட்டும் பயண்படுத்துவது, தான் சொல்வதை கேட்காத பணியாளர்களை பொதுமக்கள் முன்னிலையில் வசைபாடி அவமானப்படுத்துவது, சிசுவை பறிகொடுத்து கண்ணீரில் தத்தளிக்கும் பணியாளரிடம், "எனக்கு செய்த துரோகத்தால் தான் நீ பிள்ளையை பறிகொடுத்துவிட்டாய்", என்று சபிப்பது, வருகைப் பதிவேடை பூட்டி வைத்துவிட்டு, பின்னர் பல நாட்களுக்கும் சேர்த்து வருகை பதிவை செய்து கொள்வது, உயர் அதிகாரிகளை மதிக்காமல், எனக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சொந்தக்காரர் இருக்கிறார் என்று மிரட்டி, பொய் பழிகளை சுமத்தி புகார் அளிப்பது, நேயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், வீண் விவாதங்களையும் கிசுகிசுகளையும் பரப்புவது, மகளிர் சுகாதார தன்னார்வலரை பணி செய்ய விடாமல் தடுப்பது என்று இவர் மீதான குற்றச்சாட்டுகளின் லிஸ்ட் பெரிதாக போய்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு சிசுவின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிந்து, பிற்காலத்தில் அம்மாதிரியான மரணங்கள் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியாமல் செய்து சிசு மரணத்தை மறைத்து சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தும் இப்பெண் மருத்துவரை என்னவென்று சொல்வது என அப்பகுதி கிராம பொதுமக்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்தனர். எனவே பெண் மருத்துவர், டிரைவர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மீதுதான குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய மற்றும் துரித கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், தஞ்சாக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேறு ஏதேனும் பெரும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுக்க, சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Makkal Mugam
394 views
4 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” என்ற தலைப்பில் பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” என்ற தலைப்பில் பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட கோலப்போட்டி, உரியடிக்கும் போட்டி, மியூசிக்கல் சேர், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி ”நமது வாக்கு, நமது உரிமை”, ”தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா” மற்றும் ”எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம்” என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழா என்பது உற்றார்-உறவினர்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழும் ஒரு திருவிழாவாகும். பொங்கல் திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில் ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களும் அலைக்கடல்போல் திரண்டு வந்து கொண்டாடி வருவது திண்டுக்கல் மாவட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. அதேபோல், அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026-ல் தங்களது வாக்கினை செலுத்தி 100% தேர்தல் வாக்குப்பதிவினை உறுதி செய்திட வேண்டும். மேலும், தேர்தல் நாளன்று தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் தங்களது வாக்கினை செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். எனவே, ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் “எனது வாக்கு, எனது உரிமை“ என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தொடர்ந்து, வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026-ல் 100% தேர்தல் வாக்குப்பதிவினை உறுதி செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், முன்னிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் அனைத்துறை அரசுப் பணியாளர்கள் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். மேலும், ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சா.சதீஸ்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Makkal Mugam
512 views
5 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தருவையில் நான்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி.ஆர். மனோகரன் வாக்கு சேகரித்தார் நெல்லை.ஏப்.15 நெல்லை மாவட்டம் தருவையில் நான்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி.ஆர்.மனோகரன் தீவிர வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியின் முன்பு அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது. கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகைத் கிராமப் புறங்களைச் சேர்ந்த பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது.மீண்டும் இந்த ஆட்சி தொடர மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு உங்கள் ஆதரவு தந்து கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பாளையங்கோட்டை வட்டார தலைவர் கணேசன்.நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தருவை செல்வக்குமார். கிராம கமிட்டி தலைவர்கள் நந்தகோபால். சுப்பையா. பொருளாளர் ராமசுப்பு. முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகராமச்சந்திரன். மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
567 views
11 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார் மதுரை மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளராக டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் . அவருடன் பாஜகவை சேர்ந்த மாரி சக்கரவர்த்தி, மூமூகவை சேர்ந்த பகவதி ,மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர் செல்லூர் பாஸ்கரன் உடன் இருந்தனர் மாற்று வேட்பாளராக டாக்டர் சரவணன் மனைவி கனிமொழி தாக்கல் செய்தார். டாக்டர் சரவணன் கூறியதாவது மதுரை வடக்கு தொகுதி என்பது ஒரு புனிதமான தொகுதி இதே வடக்கு தொகுதி தான் அன்றைக்கு மேற்கு தொகுதியாக இருந்தது இந்த தொகுதியில் புரட்சித்தலைவர் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் .இதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்றார் புரட்சித்தலைவரை கோட்டைக்கு அனுப்பிய தொகுதி இந்த வடக்கு தொகுதி தான் . அது மட்டுமல்லாது வடக்கு தொகுதியில் யார் சட்டமன்ற உறுப்பினர் வருகிறார்களோ அந்தக் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் அதுபோல இந்த வடக்கு தொகுதி நிச்சயம் இரட்டை இலை மலரும் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் இந்த வடக்கு தொகுதியை நான் நிச்சயம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் குறிப்பாக நகர்புறங்களில் சொந்த வீடு என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது சொந்த வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருவதை நன்கறிந்த எடப்பாடியார் தனது தேர்தல் அறிக்கையில் அம்மா இல்லம் திட்டம் என்று அறிவித்துள்ளார் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு வீட்டுமனையும், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் ,அதேபோல நகர் பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு அம்மா இல்லம் திட்ட மூலம் அடுக்கு மாடி வீடுகள் விலையில்லாமல் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த திட்டத்தில் ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலில் இன மக்களின் மகள், மகன் திருமணமாகி தனி குடித்தனம் சொல்கிற போது அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார் நிச்சயம் இந்த வடக்கு தொகுதியில் அம்மா இல்ல திட்டத்தின் மூலம் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படும் என்பதை நான் உறுதி அளிக்கிறேன் ஸ்டாலின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தியாயச பொருட்கள் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் ,குடிநீர் கட்டணம் போன்ற பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது‌ எனவே மக்களின் இந்த சுமையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவி தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடியார் அறிவித்துள்ளார் நிச்சயம் மே மாதம் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார் அந்த மாதமே உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிச்சயமாக வழங்கப்படும்.
lalitha
31.9K views
20 days ago
#குழந்தையை பிரியும் ஒரு தாயின் வேதனை. #செய்தி வாசிப்பாளர் ஸ்டேட்டஸ். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
palraj
159.7K views
26 days ago
ஆயுள் தண்டனை கைதிய எதுக்கு வெளியே சுத்த விட்டாங்க... #செய்தி