நவராத்ரி ஸ்பெஷல்

RamaswamyAnnamali
615 views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் *புரட்டாசி மாதம் 15ம் நாள் 01-அக்டோபர் -25, புதன் கிழமை மஹாநவமி சரஸ்வதி ஆயுதபூஜை* *நவராத்திரி ஒன்பதாம்* *நாள்* *புனிதமாக நவராத்திரி* அம்பிகையை ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மற்றும் நவதுர்கா சம்பிரதாயத்தில் ஸ்ரீ சித்திதாத்ரி வடிவில் அன்னை யாக அலங்காரத்தில் போற்றி வழிபடுவோம் வாரீர் அனைத்து உயிர்களையும் ஆரோக்கியத்தோடுகாத்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பான “தீபிகா பிம்ப சக்கரம்” அமைந்துள்ளது வெண் பட்டாடை உடுத்தி வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவளே வாணி சரஸ்வதியே போற்றி வெள்ளை நிற மல்லிகை முல்லை சாமந்தி பூக்கள் கொண்ட மணக்க மணக்க மாலைகளை சாற்றிடுவேன் நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நாமணக்க உனை போற்றி பாடிடுவேன் பற்பல கலைகளில் சிறந்த ஞானம் வளர்ப்பாய் காணும் பொருளில் தோன்றும் கலைமணியே போற்றிடுவேன் எந்தன உள்ளக் கோவிலிலே சதா உறைந்து நின்று இனிய தமிழில் போற்றி பாக்கள் எழுதிட அருள்வாய் கான மனோகரி கல்யாணி உனை போற்றி பணிந்திடும் எனக்கு வேண்டும் இந்த வரம் தருவாய் வேணி சரஸ்வதி தாமரை மலர்மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ சித்திதாத்ரி அன்னையை . ஒன்பதாம் நாள்வழிபட முக்தி கிட்டும், நான்கு கரம் கொண்டு இருக்கும் இவள் இடது கரத்தில் கதை, சக்ரம் கொண்டும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம். சித்திதாத்ரி தேவி (9) சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும் துர்க்கையளே! ஸித்திதாத்ரி எனப் பெருமை பெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே தாமரைமலர் மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன் 🪷🪷🪷
RamaswamyAnnamali
773 views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் *சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துக்கள்* .... சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம், வழிபாட்டு முறை... எப்போது பூஜித்தால் சரஸ்வதி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும்?!... இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை பண்டிகை நாளை அக்டோபர் 1ம் தேதி காலை 9:15 முதல் 10:15 மணி வரை கொண்டாடப்படுகிறது. மாலை 4:45 மணி முதல் 5:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக அமைந்திருக்கிறது. அதே போன்று நாளை மாலை 6 மணிக்கு மேல் 7:30க்குள் பூஜை செய்யலாம். ஆயுத பூஜை வழிமுறைகள் கருவிகள், வாகனங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் திருநீறு கரைத்து 3 பட்டையிட்டு சந்தனம், குங்குமம் திலகமிட வேண்டும். திருநீறு வைத்து, திலகமிட்ட பொருட்களை அம்பாளின் திருவுருவ புகைப்படத்திற்கு முன் வைத்து அம்பாளுக்கு பிரியமான சர்க்கரைக் கலந்த பொங்கல், புளியோதரை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்து படைக்கலாம். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி நிவேதனம் செய்து வழிபாடு செய்யலாம். ஆயுத பூஜை செய்யும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். பூஜை நேரத்தில் கோபப்படுவதோ, தொழிலாளர்கள் மீது எரிச்சல் காட்டுவதோ, அவர்களை ஏவல் செய்வதோ கூடாது. வாக்குவாதங்கள் செய்வது, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஆயுத பூஜை தினத்தில் கல்வி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு பூஜை செய்வதால் தொழில், கல்வி மற்றும் பணியில் முன்னேற்றம் கிடைக்கும். 🙏🪷🙏
RamaswamyAnnamali
1K views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் *புரட்டாசி மாதம் 15ம் நாள் 01-அக்டோபர் -25, புதன் கிழமை மஹாநவமி சரஸ்வதி ஆயுதபூஜை* *நவராத்திரி ஒன்பதாம்* *நாள்* *புனிதமாக நவராத்திரி* அம்பிகையை ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மற்றும் நவதுர்கா சம்பிரதாயத்தில் ஸ்ரீ சித்திதாத்ரி வடிவில் அன்னை யாக அலங்காரத்தில் போற்றி வழிபடுவோம் வாரீர் அனைத்து உயிர்களையும் ஆரோக்கியத்தோடுகாத்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பான “தீபிகா பிம்ப சக்கரம்” அமைந்துள்ளது வெண் பட்டாடை உடுத்தி வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவளே வாணி சரஸ்வதியே போற்றி வெள்ளை நிற மல்லிகை முல்லை சாமந்தி பூக்கள் கொண்ட மணக்க மணக்க மாலைகளை சாற்றிடுவேன் நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நாமணக்க உனை போற்றி பாடிடுவேன் பற்பல கலைகளில் சிறந்த ஞானம் வளர்ப்பாய் காணும் பொருளில் தோன்றும் கலைமணியே போற்றிடுவேன் எந்தன உள்ளக் கோவிலிலே சதா உறைந்து நின்று இனிய தமிழில் போற்றி பாக்கள் எழுதிட அருள்வாய் கான மனோகரி கல்யாணி உனை போற்றி பணிந்திடும் எனக்கு வேண்டும் இந்த வரம் தருவாய் வேணி சரஸ்வதி தாமரை மலர்மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ சித்திதாத்ரி அன்னையை . ஒன்பதாம் நாள்வழிபட முக்தி கிட்டும், நான்கு கரம் கொண்டு இருக்கும் இவள் இடது கரத்தில் கதை, சக்ரம் கொண்டும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம். சித்திதாத்ரி தேவி (9) சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும் துர்க்கையளே! ஸித்திதாத்ரி எனப் பெருமை பெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே தாமரைமலர் மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன் 🪷🪷🪷
RamaswamyAnnamali
726 views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் *நவராத்திரி* *ஒன்பதாம் நாள்* *சித்திகளை அருளும் ஒன்பதாம் நாளான சாமுண்டி* *பூஜை* *அம்மன் வடிவம் :* சாமுண்டி *பூஜையின் நோக்கம்* : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல். *அம்மன் வடிவம் :* தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள். முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். மிகவும் சினம் கொண்டவள். தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள். தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் : தீப துர்க்கை. யோகிகள் யோகத்தால் தவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள். *பூஜை விவரங்கள்* *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *மாலை* : தாமரை *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை :* மரிக்கொழுந்து *அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : வெள்ளை நிறம் *அன்னையின் அலங்காரம்* : சுபத்ராதேவி அலங்காரம் *அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள் :* வெண் மலர்கள். *கோலம்* : கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும். *நைவேத்தியம் :* அக்கார வடிசல் *குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது* : 10 வயது *குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள்* : சௌபாக்கியம் உண்டாகும். *பாட வேண்டிய* *ராகம்* : வசந்தா *நடனம்* : கோலாட்டம் *குமாரிக்கு தரவேண்டிய* *பிரசாதம் :* திரட்டுப்பால் *பலன்கள்* : இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள். 🙏🪷🙏
RamaswamyAnnamali
739 views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் *நாள்* *9* - *அம்மா* *சித்திதாத்ரி* *வழிபாடு* 🙏🌹. நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளில் மா சித்திதாத்ரி வழிபடப்படுகிறது. அவள் தாமரை மலரில் அமர்ந்திருப்பாள். தேவி பரிபூரணத்தின் அடையாளமாகவும், இயற்கைக்கு மாறான நிகழ்வுகளில் இருந்து தனது பக்தர்களைப் பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது.பராசக்தியின் முழு அருளையும் பெறுவதற்கான நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாள், நவமி திதியில் கொண்டாடப்படுகிறது. எனவே இதனை துர்கா நவமி என்றும் சொல்லுவதுண்டு. மேலும் இத்தினம் நவராத்திரியின் நிறைவு என்பதால் இன்றைய இரவு தெய்வீக சக்தி உச்சம் பெற்றிருக்கும். நவராத்திரி விரதம் இருந்து பக்தியுடன் வழிபட்டதற்கான பலன்களை பக்தர்களுக்கு அம்பிகை தந்தருள்வாள். *சித்திதாத்ரி* என்ற பெயரின் பொருள் சித்தி என்றால் வெற்றி. தாத்ரி என்றால் தருபவள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள். படைப்புக்கான திறவுகோலை பெற்றுவிட்டால் நாம் நினைக்கும் அனைத்தையும் ஒரே நொடியில் நம்மால் உருவாக்க இயலும்.அதற்கான திறவுகோலை நம்மிடம் தருபவள் இந்த தாய் தான். யார் இந்த சித்திதாத்ரி? பார்வதி தேவியின் மூல ரூபமாக சித்திதாத்ரி கருதப்படுகிறார். சிவப்புநிற உடையில் காணப்படும் அன்னைக்கு நான்கு கைகள் உள்ளன. அவற்றில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை வைத்திருக்கிறாள். அவள் முழுமையாக பூத்த தாமரை அல்லது சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கிறாள். அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, *பிரகாம்யா* , *இஷித்வா* , வசித்வா என அழைக்கப்படும் எட்டு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது சித்திகளைக் கொண்டிருக்கிறாள். எனவேதான் அஷ்டமா சித்திகளும் பெற அனைத்து சித்தர்களும் தினமும் அம்மா சித்திதாத்ரியை வழிபடுகின்றனர். சித்திகள்பெற்று பரிபூரண நிலை பெற்று ஆக்கல் அழித்தல் காத்தல் ஆகியவை செய்திடும் ஆற்றலை இவளிடமே தேவர்களும் பெற்று கொள்கின்றனர். மாயை எனும் திரையை விளக்கி ஞானம் எனும் வரத்தை பெற்று வாழ்வின் யதாரத்தை உணர்ந்து வெற்றி பெற வைப்பவள் இவளே! அம்மா சித்திதாத்ரியை வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் நிறைந்து காணப்படும். சங்கு, சக்கரம், அபய, வரத முத்திரையுடன் இருக்கும் அம்மா சித்திதாத்ரியை போற்றி வழிபட்டால், வாழ்வில் வெற்றி மேல் வெற்றிதான். தேங்காய், பாயசம், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மலர்கள் அம்மா சித்திதாத்ரி வழிபாட்டிற்கு உகந்தவை. மேலும் இந்த தேவிக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபடுவது அன்னையின் மனதை குளிர்வித்து குடும்பத்தினர் அனைவருக்கும் ஞானத்தை பெருக்கி, ஆயுள், ஆரோக்கியத்தை அளிக்குமாம். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்களாம். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺