நதியின் அழகிய காட்சி😍🥰

-
534 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#நதி வளைந்து நெளிந்து ஓடும் நதி நீர் போன்றதே நம் வாழ்க்கை.* சலசலப்பாய் சிலநேரம் சப்தமின்றியும் சிலநேரம். எதிர்பாரா திருப்பங்கள்* சிலநேரம். பிறர் மகிழும் விருப்பங்கள்* சிலநேரம். கடந்து போன இடத்திற்கு* நதிகள் மீண்டும் திரும்புவதில்லை. நம்மை கடந்து போன நிகழ்வுகள் எல்லாம் வாழ்க்கையில் மீண்டும் வருவதில்லை சந்திக்கும் திருப்பங்களையும் சிந்தித்து எதிர் கொள்வோம்.
-
852 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
நதிக்குச் செல்லும் பாதை தெரியாவிட்டால், அது ஓடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. அதுபோல,வாழ்க்கையில் வழி தெரியாவிட்டால், வாழ்வதை நிறுத்திக் கொள்ளாதே.! தோல்விகள் என்பது உங்களைத் தூங்க வைக்கப்பாடும் தாலாட்டு அல்ல, நீங்கள் நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்..!! பழுத்த பழமாக இருந்தாலும் மிளகாய் இனிப்பதில்லை. பச்சை நிறத்தில் காய்கள் என்றாலும் கொய்யா கசப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் இதுபோலத்தான்..!! சுக்கு நூறாக உடைந்த பிறகும் தனி ஒருவராக தன்னை மீண்டும் உருவாக்கி கொள்ள தெரிந்தவரை விட பலமானவர் எவரும் இல்லை.....!!! நம்மால் செய்ய முடியாததை, கடைபிடிக்க முடியாததை, பிறரிடமும் எதிர்பார்க்க இயலாது...! #நதி
-
878 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#நதி காலம் என்ற நதி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடுவது போதுதான் நதி. தேங்கிவிட்டால் குளம் ஓடும் நதிதான் பயன்பாட்டிற்குரியது. நதியின் பயணமாய் உங்கள் வாழ்க்கை இருக்கட்டும். எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்தாலும், எதையும் தைரியமாகச் செய்யும் குணம் இல்லையென்றால் திறமை பயனற்றுப் போகும். அந்த தைரியத்தை மன உறுதியால் பெறலாம். செய்யும் செயல்களுக்கு விரும்பிய பலன் கிடைக்காவிட்டால் சோர்வு தொற்றிக் கொள்ளும், அப்போது மன உறுதி தான் நம்மைத் தூக்கி நிறுத்தும். சோகங்களைச் சேர்த்து வைக்காமல் செலவு செய்துவிடுங்கள் அப்போது தான் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். சின்னக் கல் பட்டாலும் உடையும் கண்ணாடியாய் இருக்காதீர்கள்.பெரிய மரமே விழுந்தாலும் உடையாத பாறையாய் இருங்கள் எதையும் எதிர் கொள்ளலாம். இந்த மூன்று ஆயுதங்கள் உங்களைப் பாதுகாக்கும்.