தவெக தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் சங்கீதா, நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது.
நான் இதனை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இதனை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும், எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.
அதேபோல் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அந்த நடிகை வெளியிட்டு வருவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர் மனுதாரராக சேர்ப்பேன். விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்.
அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால் அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்பு தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் விஜய் - சங்கீதா இருவரும் கடைசியாக இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது.
கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்றார். அதன்பின் விஜய் நடித்த வாரிசு இசை வெளியீட்டு விழா, லியோ வெற்றி விழா, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, தவெக கட்சி தொடக்க விழா, தவெக கொடி அறிமுக விழா, விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு என்று எந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺