விஜய் - சங்கீதா ஸ்பெஷல்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.6K views
1 months ago
வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 விலையில்லா எரிவாயு உருளைகள் மற்றும் திருமணத்தின் போது ஒரு சவரன் தங்கம் போன்ற வாக்குறுதிகளை அவர் வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்த அவர், மாநில பட்ஜெட்டில் 30 சதவீதம் "ஸ்டாலின் சார் வரி" என்ற பெயரில் ஊழலுக்கே செல்வதாகவும், இந்த ஊழலை ஒழித்தாலே மக்களுக்குத் தேவையான நிதியை வழங்க முடியும் என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இவ்விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து வழக்கு குறித்து முதல்முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தனது குடும்பப் பிரச்சினைகளால் தொண்டர்கள் கவலைப்படுவதைக் கண்டு தனக்கு வருத்தம் ஏற்படுவதாகவும், ஆனால் அந்தப் பிரச்சினைகள் எதற்கும் தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார். "தனிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், நாம் அனைவரும் இணைந்து மக்களின் பிரச்சினைகளை மட்டும் கவனிப்போம்" என்று தொண்டர்களுக்கு தைரியம் கூறினார். விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள சூழலில், விஜய்பேசய இந்த உருக்கமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #விஜய் - சங்கீதா ஸ்பெஷல்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.6K views
1 months ago
"விஜய்க்கு Annamalai ஆதரவு MGR-க்கும் இதேதான்.....!” : : : விஜய், மனைவி, மற்றும் கோர்ட் இது மூணு பேர் சம்பந்தப்பட்ட விஷயம்..இதை அரசியல் ஆக்காதீர்கள். நீங்க விஜய்யின் அரசியல் பத்தி கேள்வி கேளுங்க சொல்றேன், இதை பத்தி Vendam கேட்காதீங்க...அரசியலுக்கு வந்தால் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். இதே போலத்தான் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் ஆரம்பகட்ட அரசியலில் இது நடந்தது. எனவே, விஜய் இதெல்லாம் கடந்து வரணும். #விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
2K views
1 months ago
விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர் கூட்டத்தை நம்பிதான் தற்போது அரசியலுக்கும் வந்திருக்கிறார்..2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 18 சதவீத வாக்குகள் வாங்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.. குறிப்பாக பெண்களின் ஓட்டு அதிகமாக விஜய்க்கு கிடைக்கும் என பலரும் சொல்கிறார்கள்.. இந்நிலையில்தான், அதன் மீது குண்டு வீசியிருக்கிறார் விஜயின் மனைவி சங்கீதா.. விஜயிடம் விவாகரத்து கேட்டு சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.. அதில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருந்ததாகவும் அதை தட்டிக் கேட்டதால் தன்னை விஜய் கொடுமைப்படுத்துவதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.. இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி விஜய் நேர்ல ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த வழக்கு விஜயன் அரசியல் இமேஜை பாதிக்க வாய்ப்பிருப்பதாக பலரும் சொல்லுகிறார்கள்.. குறிப்பாக பெண்களுக்கு விஜய் மீது கோபம் வந்தால் அவர்கள் அவர் தவெகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.. ஆனால் சிலரோ தமிழ்நாட்டு மக்கள் அப்படி இல்லை.. சொந்த வாழ்க்கையை பார்க்க மாட்டார்கள்.. திமுக தலைவர் கருணாநிதி கூட மனைவியார், துணைவியார் என அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தது. எனவே அதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். விஜய் மீது சங்கீதா கூறியிருக்கும் புகார்கள் விஜயின் அரசியல் வாழ்க்கையை பாதிக்குமா? இல்லையா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்... #விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.5K views
1 months ago
கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு பெறுவது என்பது பலரின் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுதான். ஆனால் விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதல்தான் நான் விவாகரத்து பெறுகிறேன் என சங்கீதா சொல்லி இருப்பதுதான் இப்போது பிரச்சினை.. கடந்த பல வருடங்களாகவே விஜய் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்.. நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.. என்னை கொடுமைப்படுத்தினார்.. என்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.. பொருளாதார ரீதியாக என்னை முடக்கப் பார்த்தார்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்தான் இப்போது நீதிமன்றத்தை அணுகியிருக்கிறேன்.. என சொல்லி அதிர்வல்களை ஏற்படுத்தியிருக்கிறார் சங்கீதா.. மேலும், நடிகையுடன் என் கணவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார்.. அது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.. அதை என் கணவரும் அனுமதித்தார்.. தேவைப்படும் நேரத்தில் நடிகையின் பெயரை வெளியே சொல்வேன்.. தேவைப்பட்டால் நடிகை மீது வழக்கு தொடர்வேன் என கூறி அதிர வைத்திருக்கிறார் சங்கீதா. இதை தொடர்ந்து இந்த புகாரால் விஜயின் அரசியல் இமேஜ் பாதிக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.. ஏனெனில் பெண்களின் ஓட்டுக்களை விஜய் வாங்குவாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.. ஏனெனில், திமுக, அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்து விஜயை சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் விஜயின் தீவிர ரசிகர்களும் விசுவாசிகளும் இதை நம்பவில்லை. கரூர் விஷயத்தை வைத்து எங்கள் தலைவரையும் முடக்க பார்த்தார்கள்.. பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதித்து முடக்க பார்த்தார்கள்.. சிபிஐ விசாரணையை வைத்து மிரட்டினார்கள்.. ஜனநாயகனை ரிலீஸ் செய்யவிடாமல் மிரட்டி பார்த்தார்கள்..இப்போது விவாகரத்து வழக்கு பின்னணியிலும் அரசியல் சதி இருக்கிறது.. என்ன நடந்தாலும் எங்கள் ஓட்டு விஜய்க்குதான் என்கிறார்கள் #விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.5K views
1 months ago
தவெக தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் சங்கீதா, நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதனை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இதனை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும், எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன். அதேபோல் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அந்த நடிகை வெளியிட்டு வருவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர் மனுதாரராக சேர்ப்பேன். விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால் அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்பு தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் விஜய் - சங்கீதா இருவரும் கடைசியாக இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது. கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்றார். அதன்பின் விஜய் நடித்த வாரிசு இசை வெளியீட்டு விழா, லியோ வெற்றி விழா, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, தவெக கட்சி தொடக்க விழா, தவெக கொடி அறிமுக விழா, விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு என்று எந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
3.3K views
1 months ago
"யாரும் இதை பற்றி பேச கூடாது.."மனுதாரர் சங்கீதா குறிப்பிட்ட முக்கிய பாயிண்ட் #விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.3K views
1 months ago
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருப்பதுடன், அதில் ஒரு பிரபல நடிகையுடனான தொடர்பே இதற்குக் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்கி வைத்திருந்ததாகவும் சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ​இந்த விவகாரம் விஜய்யின் அரசியல் பிம்பத்தைச் சிதைக்க எதிர்க்கட்சிகளால் சமூக வலைதளங்களில் பெரிதுபடுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களின் வாக்குகள் விஜய்க்கு கிடைக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் சதி என்று கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே கரூரில் அனுமதி மறுப்பு, சிபிஐ மிரட்டல், 'ஜனநாயகன்' பட ரிலீஸ் சிக்கல் என பல தடைகளைத் தாண்டி வந்த தங்களுக்கு, இந்த விவாகரத்து விவகாரமும் அரசியல் எதிரிகளின் ஒரு நாடகமே என்று கூறி விஜய்க்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளனர் #விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.4K views
1 months ago
கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோவான விஜய் தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அரசியலுக்கு வந்த அவர் தனது முதல் மாநாட்டிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நடந்த வேலூர் கூட்டம் வரை திமுகவை கடுமையாக அட்டாக் செய்துவருகிறார். அது திமுகவினரிடையே பெரிய அதிருப்தியை உண்டு செய்திருக்கிறது. தங்களுடன் அவர் கூட்டணி வைப்பார் அல்லது தங்களை அனுசரித்து போவார் என்றுதான் அவரது அரசியல் பிரவேசத்தின்போது உடன்பிறப்புகள் நினைத்தார்கள். அப்படி நடக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். எனவே விஜய் மீது கடுமையான விமர்சனங்களையும் அவர்கள் வைத்துவந்தார்கள். சங்கீதா கேட்ட விவாகரத்து: சூழல் இப்படி இருக்க விஜய்யின் மனைவி இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், 'நானும், விஜய்யும் கடந்த ஐந்து வருடங்களாகவே பிரிந்து வாழ்கிறோம். அவருக்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அதை முறித்துக்கொள்ளும்படி எவ்வளவோ கேட்டும் அவர் செய்யவில்லை. இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். நடிகையின் பெயரை சொல்வேன்: அந்த நடிகையும் விஜய்யுடன் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்றார். அதுதொடர்பான புகைப்படங்களையும் பொதுவெளிகளில் ஷேர் செய்தார். அது எனது மகன், மகளுக்கும், குடும்பத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை வெளியில் சொல்லவில்லை. அதேசமயம் எனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்; அந்த நடிகையை இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்" என்று பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். பெரும் பரபரப்பு: சங்கீதாவின் இந்த விவாகரத்து மனு பெரிய பரபரப்பை திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் பெர்சனல் வாழ்க்கையை இழுத்து விமர்சித்தவர்களின் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது. சகட்டுமேனிக்கு சோஷியல் மீடியாவில் அவரை தாக்கி பதிவிட்டுவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர்களுக்கு விஜய்யின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்துவருகிறார்கள். Sangeetha Vijay: யாரும் இதை பற்றி பேச கூடாது.. சங்கீதாவின் முக்கியமான பாயிண்ட்! பின்னணியில் யார்?: அதாவது விஜய்க்கு அரசியலில் படிப்படியாக செல்வாக்கு வளர்ந்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க விஜய்யை நினைத்து மாநிலத்தை ஆளும் திமுகவுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் பெரிய அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாகத்தான் இந்த விவகாரத்தை எடுத்து விஜய்யை அடித்து வருகிறார்கள். அதுவும் சங்கீதா தனது மனுவில், 'ஐந்து வருடங்களாகவே பிரிந்து வாழ்கிறோம்' என குறிப்பிட்டிருக்கிறார். அப்படி இருக்கும்பட்சத்தில் இத்தனை வருடங்களில் அவர் விவாகரத்து மனு தாக்கல் செய்யாமல்; சரியாக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்காக இதை செய்ய வேண்டும். இதன் பின்னணியில் திமுகவும், பாஜகவும்தான் இருக்கிறது. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின்பேரில்தான் இது நடந்திருக்கும். சில வருடங்களுக்கு முன்புகூட முரசொலி செல்வம் மறைவுக்கு கோபாலபுரம் சென்றிருந்தார் சங்கீதா. விஜய்யை அரசியலில் நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள்; சங்கீதாவின் பின்னணியில் இருந்துகொண்டு இயங்குகிறார்கள். இந்த சதியை எல்லாம் எங்கள் தளபதி அசால்ட்டாக காலி செய்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "சங்கீதா முன்வைத்திருக்கும் அனைத்தும் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே. அது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இல்லை. ஆவணங்கள் கசிந்த நேரத்தையும்,வழியையும் கவனியுங்கள். எங்கு அடித்தால் விஜய்யை அதிகமாக பாதிக்குமோ அந்த இடத்தில் தாக்க முயற்சி செய்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார். #விஜய் - சங்கீதா ஸ்பெஷல் #விவாகரத்து #🗞️பிப்ரவரி 28 முக்கிய தகவல்📺