ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
717 views • 14 days ago
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணைக் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
இந்தநிலையில், மதுமிதா திருமணத்திற்கு பிறகும் தனது ஆண் நண்பருடன் தொடர்ந்து மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது கணவர் சரண் பலமுறை கண்டித்தும், அவர் பேசுவதை நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண், நேற்று மாலை ஒரத்தி அருகே உள்ள செனைனேரி பகுதியில், உள்ள மலைப்பகுதிக்கு மதுமிதாவை அழைத்துச் சென்றுள்ளார்.
திட்டமிட்டு கொடூர கொலை
சரண், ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்துடன் கத்தியை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து சிலாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், மலைப்பகுதிக்கு விரைந்த போலீசார், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த மதுமிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நான்கு மாதத்தில் நடந்த கொடூரம்
மதுராந்தகம் போலீசார் சரணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரண் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சரண் மீது ஏற்கனவே நிலவில் இருந்ததாக கூறப்படுகிறது. பாய் பெஸ்டி உடன் தொடர்ந்து பேசி வந்த, திருமணம் ஆகிய நான்கு மாதத்திலேயே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள் #💑திருமண ஜோடிகள் #🥺சோக வாழ்க்கை #👉வாழ்க்கை பாடங்கள்
14 likes
7 shares