Failed to fetch language order
🔴இன்றைய முக்கிய செய்திகள்
3K Posts • 507K views
சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக-வை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென நாதக-வினர் முனைப்புக் காட்டுகின்றனர். இந்த நிலையில், பிப்.21-ம் தேதி திருச்சியில் `மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது நாதக. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த நிலையில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாதக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை மாநாட்டுக்கு அழைத்து வருகின்றனர். சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் அவரது தாயார் அன்னம்மாள் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்குடன் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இந்த அழைப்பின் போது, "கண்டிப்பாக அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். தயாராக இருந்தால் போதும்" என்று கிராமத்து பாணியில் பேசி வருகிறார் அன்னம்மாள். அவருடன் மாநில கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர் தங்கராஜ், கிழக்கு மண்டலச் செயலாளர் திசைக்கர்ணன், மாநில இளைஞர் பாசறைஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ், விஷ்ணு, வடக்கு மாவட்டத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் சென்றனர். தனது மகனின் கட்சி என்றாலும் நாதக விஷயத்தில் அன்னம்மாள் இதுவரை தலையிடாமல் இருந்து வந்தார். தற்போது அவரே களத்தில் இறங்கி வீடு வீடாகச் சென்று நாதக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தது சொந்த ஊர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது #நாம் தமிழர் கட்சி #🔴இன்றைய முக்கிய செய்திகள்
10 likes
5 shares
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையாக 3,000 ரூபாயும், கோடைகால சிறப்புத் தொகையாக 2,000 ரூபாயும் என மொத்தம் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், இல்லத்தரசிகள் மத்தியில் இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நேரடிப் பணப் பரிமாற்றம், சாமானியக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பெண்களின் வாழ்வாதாரத்தை ஓரளவு உறுதிப்படுத்தவும் பேருதவியாக இருப்பதாகப் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இந்த மகிழ்ச்சியான சூழலில், மேலும் ஒரு 5,000 ரூபாயை மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு திட்டமிட்டு வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன. இது ஒரு நேரடி நிதியுதவியாகவோ அல்லது பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட முதலீடு அல்லது சிறு கடனுதவியாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கத்தில் இந்தத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அரசின் முறையான அறிவிப்பு வெளியானால் மட்டுமே, இந்த கூடுதல் நிதியுதவி யாருக்கெல்லாம் கிடைக்கும் மற்றும் இதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்த தெளிவான விவரங்கள் தெரியவரும். #🔴இன்றைய முக்கிய செய்திகள் #முன் கூட்டியே மகளிர் உரிமை தொகை.
9 likes
9 shares
திரு​வண்​ணா​மலை மாவட்​டம் வந்தவாசி அடுத்த வழு​வூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மோகன். தொழிலா​ளி. இவரது மனைவி பவானி, மகன்​கள் அபினேஷ்(16), முகேஷ்(15). வந்தவாசி அரசு ஆண்​கள் மேல்​நிலை பள்​ளி​யில் அபினேஷ் பிளஸ்​-1, முகேஷ் 10-ம் வகுப்பு படித்து வந்​தனர். மாணவர்​கள் இரு​வரும் வந்தவாசி அடுத்த இளங்​காடு கிராமத்​தில் உள்ள தாத்தா முனியன் வீட்​டில் தங்​கி, பள்​ளிக்​குச் சென்று படித்து வந்​துள்​ளனர். முனியன் அரசு தொகுப்பு வீட்​டில் குடும்​பத்​துடன் வசித்து வந்த நிலை​யில், நேற்று அவரது வீட்டை சீரமைப்​ப​தற்​காக வீட்டை இடிக்​கும் பணி​யில் அபினேஷ், முகேஷ் மற்​றும் உறவினர் மகன் ஸ்ரீராம் உள்​ளிட்​டோர் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். அப்​போது, வீட்​டின் சுவர் இடிக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த சகோ​தரர்​கள் அபினேஷ், முகேஷ் ஆகியோர் மீது எதிர்​பா​ராத​வித​மாக சுவர் சரிந்து விழுந்​தது. இதில் இடி​பாடு​களில் சிக்​கிய இரு​வரும் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். காயமடைந்த ஸ்ரீராம் (11) மீட்ட அக்​கம்​பக்​கத்​தினர், வந்தவாசி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்​கள் மற்​றும் போலீ​ஸார், இடி​பாடு​களில் சிக்​கி​யிருந்த அபினேஷ், முகேஷ் ஆகியோரது உடல்​களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக வந்தவாசி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். விபத்து தொடர்​பாக பொன்​னூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​. ரூ.3 லட்​சம் நிவாரணம்: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், "கட்​டிட இடி​பாடு​களில் சிக்கி உயி​ரிழந்த அபினேஷ், முகேஷ் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல். காயமடைந்த ஸ்ரீரா​முக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்​தர​விட்​டுள்​ளேன். உயி​ரிழந்​தவர்​களின் பெற்​றோருக்கு தலா ரூ.3 லட்​சம், காயமடைந்​தவருக்கு ரூ.50 ஆயிரத்தை முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்" என்று தெரி​வித்​துள்​ளார்​. #🔴இன்றைய முக்கிய செய்திகள்
11 likes
10 shares