சற்றுமுன் கிடைத்த செய்தி

Makkal Mugam
577 views
3 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக அத்திக்கோம்பை ஊராட்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓட்டன்சத்திரம், மே.28 மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் - ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக K.அத்திக்கோம்பை ஊராட்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுறா சுரேஷ் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கார்த்திக்ராஜன் தலைமையில் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கண்ணாயிரம் ,மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி N .பாலன், நகர கழகச் செயலாளர் குரு அருண், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் கண்ணன் ,துணைச் செயலாளர் ஜெகதீஷ் ,பொருளாளர் சேகர், துணைச் செயலாளர் வீரக்குமார்,இளைஞர் அணி அமைப்பாளர் K.சந்தோஷ் குமார், தங்கச்சியம்மாபட்டி அசோக்,மற்றும் சார்பு பணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Makkal Mugam
599 views
3 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மக்கள் தொகை 2027- க்கான கணக்கெடுப்பு (சென்சஸ்) பணிகள் தொடர்பான மூன்று நாள் பயிற்சி கூட்டம் நடைபெற்று நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இயக்குநர் திரு. எம். சுந்தரேஷ் பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா.சுகுமார் கலந்து கொண்டனர்கள்.
Makkal Mugam
517 views
4 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொது மக்களிடமிருந்து மனுக்களை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை பெற்றுக்கொண்டார். அருகில் உதவி ஆணையாளர் ரவிக்குமார் நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
Makkal Mugam
538 views
5 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
Makkal Mugam
527 views
5 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
Makkal Mugam
594 views
6 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 கன்னியாகுமரி மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது...
Makkal Mugam
506 views
7 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
Makkal Mugam
561 views
7 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க நடந்து முடிந்த2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றி வாய்ப்பை தவற விட்டதை ஆலோசனை செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட திரு சி. பி. எம். எழிலரசன் ( EX MLA கழக கொள்கை பரப்பு செயலாளர்) மற்றும் மாநில மாணவர் அணி துணை செயலாளர் மன்னை சோழராஜன் ஆகியோர் ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் ஆய்வு கூட்டத்தினை நடத்தி மனுக்களை பெற்று கொண்டு தனித்தனியாக கருத்துக்களை கேட்டறிந்தனர் . இக்கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் சு. முத்துசாமி அவர்கள், தொகுதி பொருப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநில நெசவாளர் அணி செயலாளர் SLT. சச்சிதானந்தம் , வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர். இடம்: அன்பகம் உதயம் இளைஞர் அணி அலுவலகம், மொடக்குறிச்சி.
Makkal Mugam
19.1K views
7 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜூவ் காந்தியின் 36 ஆவது ஆண்டு நினைவுதினம் தூத்துக்குடி மே 23 தூத்துக்குடியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜூவ் காந்தியின் 36 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜூவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சகாயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பயங்கரவாத தீவிரவாதத்தை தடுக்கும் பொருட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்வில் மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோபால் மைக்கேல், பிரபாகர் மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் அந்தோணி ஜெயராஜ், அருள் வளவன், தனசேகரன், ராஜாராம், இளைஞர் காங். மரிய ஆல்வின், அமைப்புச்சாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், ஆராய்ச்சி பிரிவு ஆடிட்டர் சிவராஜ்மோகன், பிரபாகரன், மகளிர் காங்.மாநில இணை ஒருங்கி ணைப்பாளர் முத்து விஜயா,ஹசன், பாத்திமா, ஊடக பிரிவு தென்மண்டல அமைப்பாளர் ஜான் சாமுவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்.நிர்வாகி ரென்னிஸ் பாபு, வார்டு தலைவர்கள் மகாலிங்கம், சிமியோன், ராஜரத்தினம், நாகேந்திரன், தனிஸ்லாஸ், ராஜ்குமார், ஜெயபாண்டியன், ராஜகோபால், தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
530 views
7 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 *சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜு – இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் இணைந்து பேட்டி* இராமநாதபுரம், மே 23- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜு மற்றும் தமிழக வெற்றி கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் தனக்கு முக்கியமான பொறுப்பையும், மக்கள் பணியாற்ற ஒரு சிறந்த வாய்ப்பையும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இன்றி மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அந்த செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். இயற்கை வளங்களை சேதப்படுத்தும் சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறினார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் உருவாகும் அபாயம் நிலவி வருவதால், சாயப்பட்டறை கழிவுகளை முறையாக சுத்திகரித்து மட்டுமே வெளியேற்ற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த பகுதிகளை தூய்மையாகவும், குப்பைகள் தேங்காத வகையிலும் பராமரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அந்த செயல்களை கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான தண்டனைகள் எதிர்நோக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விலகி கல்வி மற்றும் நல்ல முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க முழுமையாக பாடுபடுவேன் என்றும் உறுதியளித்தார். இந்த பேட்டியின் போது இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.