azagaana ulaviyal sinthanay.

saravanan.
4.1K views
11 days ago
#azagaana vaalkkay thathuvam உச்சரித்தால் மட்டும் போதுமா? - அருண் ராமதாசன் தினமும் ராம நாமத்தை ஜபிப்பார், ராமசரண் எனும் தீவிர ராமபக்தர். ஒருநாள், தன் வீட்டின் அருகே கிளிக்குஞ்சு ஒன்று வந்து விழுந்ததை எடுத்து, கூண்டில் அடைத்து, வளர்த்து வந்தார். அதற்கு ராம நாமத்தையும் சொல்லிக் கொடுத்தார். கிளியும் அடிக்கடி ராம நாமத்தைச் சொல்லி வந்தது. சில நேரம் ராமாயணத்தில் உள்ள சில விபரங்களைக் கேட்கும், கிளி. அதற்கு விளக்குவார், ராமசரண். ஒருநாள், ஒரு ஞானியைச் சந்திக்கப் புறப்பட்டார், ராமசரண். அப்போது அவரிடம், 'ராம நாமத்தை ஜபித்தால் நன்மை கிடைக்கும் என்கின்றனர். நான், ராம நாமத்தைத் தினமும் ஜபிக்கிறேன். எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையே... ஏன் என்று அந்த ஞானியிடம் கேட்டு வாருங்கள்...' என்றது, கிளி. ஞானியைச் சந்தித்து விட்டு வந்த ராமசரணிடம், 'என் கேள்விக்கு ஞானி, என்ன பதில் கூறினார்?' என்றது, கிளி. 'கிளியே, உன் கேள்வியைக் கேட்டதும் ஞானி மவுனமானார்...' என்றார், ராமசரண். கிளி பதிலே கூறவில்லை. மறுநாள் கூண்டிற்குள் இறந்து கிடந்தது, கிளி. மிகவும் துயரப்பட்டார், ராமசரண். கிளியை எடுத்துச் சென்று, மரப்பொந்தில் வைத்து, மலர்களால் மூடி, கிளியின் ஆத்மா சாந்தி அடைவதற்காக, ராம பாடலைப் பாடினார். உடனே கிளி பறந்து, மரக் கிளையில் அமர்ந்தது. மிகவும் கவலையோடு, 'நீ இறந்தது போல நடித்து ஏமாற்றினாயா?' என்று கேட்டார், ராமசரண். 'சுவாமி, நான் உங்களை ஏமாற்றவில்லை. என் கேள்விக்கு எந்தப் பதிலும் கூறாமல், ஞானி மவுனமானார் என்று சொன்னீர்களே... அதன் தத்துவத்தை நான் புரிந்து கொண்டேன். ராம நாமத்தை வாய் விட்டுக் கூறினால் மட்டும் போதாது. 'ராம நாமத்தை ஆவி ஒடுங்கும் அளவிற்கு ஆத்மாவோடு கலக்க வேண்டும் என்பது தான், அவர் கூறிய விளக்கம். அதை நான் கடைப்பிடித்து, மயக்க நிலையில் இருந்தேன். நான் இறந்ததாக எண்ணி, எனக்கு விடுதலை அளித்தீர்கள். 'உங்களை ஒன்று கேட்கிறேன்... ராம நாமத்தை ஜபிக்க வேண்டும் என்று எனக்குக் கூறிய உங்களுக்கு, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே...' என்று கூறியபடி பறந்து சென்றது, கிளி. தன் அறியாமைக்காக வெட்கப்பட்டார், ராமசரண். பகவானின் நாமத்தை உச்சரிப்பதால் மட்டும் நன்மை வந்துவிடாது; அதை ஆத்மார்த்தமாக உள்வாங்கி, தர்மத்தின்படி நடக்க வேண்டும்! 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
saravanan.
6.4K views
1 months ago
#azagaana vaalkkay thathuvam போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.*_ _*நல்லது நடக்கும் போது*_ _*மகிழ்ச்சியாக இருங்கள்.*_ _*பிரச்சினை வரும் போது நம்பிக்கையோடு கையாளுங்கள்.*_ _சாதாரண விஷயத்தைக் கூட_ _சதா நினைத்துக் கொண்டே இருந்தால், அதுவே வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்னையாகத் தோன்றும்._ _*பாதிக் கவலைகள்*_ _*கற்பனையானவை.*_ _*மீதி தற்காலிகமானவை.*_ _ஒரு மனிதன் எதற்கு_ _பரபரக்க வேண்டும். இங்கு எதுவும்_ _முக்கியமில்லை._ _எதுவும் நிரந்தரமில்லை._ _*குழப்பமான இடத்தில் தெளிவாகப் பேசுங்கள்.*_ _*பினச்சனையான நேரத்தில் தீர்வு பற்றிப் பேசுங்கள். வருத்தமான சூழலில் ஆறுதலாய்ப் பேசுங்கள்.*_ _*மன அழுத்தம்*_ _*உள்ளவர்களிடம்*_ _*உற்சாகப் படுத்திப் பேசுங்கள்.*_ _முயற்சிக்கு வயதில்லை! முயன்றவருக்கு தோல்வியில்லை!_
saravanan.
847 views
1 months ago
#azagaana ulaviyal sinthanay. நண்பர்கள்*_ _*ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக்*_ _*கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.*_ _*உடனே சாக்ரட்டீஸ் அவரிடம்*_ , _"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்._ _*மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.*_ _*சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்*_ _"அவர் செய்த செயலை_ _நேரடியாகப் பார்த்துவிட்டு_ _தான்_ _அவரைப் பற்றி_ ,கூறுகிறாயா...???" _என்று கேட்டார்._ *_இல்லை என பதில் சொன்னார்._* _"அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? "_ _என்று இரண்டாவது_ _கேள்வியைக் கேட்டார்._ *_இல்லை என பதில் சொன்னார்._* _"அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???"_ _என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்._ *_இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது._* *_"யாருக்கும் பயனில்லாத,_* *_நல்ல விஷயமுமில்லாத,_* *_நேரடியாக நீங்கள் பார்க்காத,_* *_என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்._* _நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்._ _*நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.*_ _உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை._ *_மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!_* _எனவே,_ _வார்த்தைகளால் பழிக்காதீர்கள்......!!!_ _*வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!*_ _நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!_ *_உண்மையான நண்பர்கள்_* _ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப் பட்டவர்கள்._