thannambikkay thulirgal

saravanan.
513 views
1 months ago
#thannambikkay thulirgal விருப்பமா அவமானப்படுங்கள். என்னை நானே யாரென்று புரிய எனக்கு தேவைப்படும் ஓர் ஆயுதம் தான் அவமானம்! இது உண்மை என்பது போல், அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். அவமானங்கள் தான், நம்மை திசை மாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்த அவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்பக் கட்ட அடித்தளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும். நம்மை அவமானப்படுத்துவோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும் போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும். நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. "அந்தக் குப்பையை தனக்கான உயிர்ச் சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளைத் தருவதில்லையா!" நாம் அந்தச் செடியைப் போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கிச் செல்ல வேண்டாமா?*ன உங்களுடைய குறைகளைச் சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியைப் பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப் படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். சோர்ந்து போகாதீர் அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தைக் கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகி விடுவது. மனித இனத்தைத் தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான். சாதிக்க விருப்பமா மனதை பக்குவபடுத்துங்கள் ( அவமானப்படுங்கள்)😊😊😊
saravanan
429 views
1 months ago
#thannambikkay vaasagam ஒரே வழி தன்னம்பிக்கை! தன் வீட்டின் சாவியைத் தொலைத்த ஒருவர் அதை ஊருக்கு வெளியே தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு நபர், “என்ன தேடுகிறீர்கள்?” எனக் கேட்டிருக்கிறார். நான் “என் சாவியைத் தேடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர். “உங்களது சாவியை எங்கேத் தொலைத்தீர்கள்?” என்று அவர் கேட்டதற்கு, “எனது வீட்டுக்கருகில்” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். ஆச்சர்யமடைந்த அந்த நபர், “வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்து விட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?” என்றாராம். அதற்கு சாவியைத் தொலைத்தவர், “இங்கே தானே வெளிச்சமாக இருக்கிறது?” என்று சொன்னாராம். இது போலத்தான், நம்மில் பலர் லட்சியத்தை எட்டுவதற்கான திறமை தமக்குள் உண்டு என்பதை உணராமல் அதை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். பல லட்சியங்கள் இருந்தும் நமக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரத் தெரியாமல், அதை அடைவதற்கான முயற்சியில் தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம் தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக் கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமான ஒன்று தன்னம்பிக்கை. அது ஒன்றே அதற்கான வழி. நம் பலம் நமக்கே தெரியாதததால் தான் வெற்றி கைநழுவிப் போகிறது; நம்மை நாம் உணர்ந்தால் மட்டுமே வெற்றியை எளிதில் அடைய முடியும். 😊
saravanan
478 views
1 months ago
#thannambikkay thulirgal நீண்டு கொண்டே போனால் சலிப்பு ஏற்படும் என்பதாலே நிறைய கதாபாத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது விதி.*_ _ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார்,_ _கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்_ _*அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது.*_ _*நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன்.*_ _அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது._ _உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள்._
saravanan.
740 views
4 months ago
#thannambikkay thulirgal ஒவ்வொரு சாதனையும் “முயற்சி” என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது. 🌿 நாம் பார்க்கும் ஒவ்வொரு பெரிய சாதனையும் ஒரு நாள் திடீரென்று உருவானது அல்ல. 👉 அது ஒரு சிறிய முடிவில், ஒரு எளிய செயலில், ஒரு தைரியமான முயற்சியில் தொடங்கியது. வாழ்க்கை எப்போதும் முழுமையை எதிர்பார்ப்பதில்லை. 👉 அது தொடக்கத்தை தான் எதிர்பார்க்கிறது. --- 🔥 1. முயற்சி என்பது தைரியத்தின் முதல் வெளிப்பாடு முயற்சி செய்யும் தருணத்தில் பயம் இருக்கும். சந்தேகம் இருக்கும். 👉 அதைக் கடந்து ஒரு அடி எடுப்பதே உண்மையான தைரியம். தைரியம் இல்லாமல் எந்த சாதனையும் இல்லை. --- 🔥 2. முயற்சி சிறியதாக இருக்கலாம் ஆனால் அதன் அர்த்தம் பெரியது முதல் முயற்சி சிறியதாக இருக்கலாம். 👉 ஆனால் அதே முயற்சி தான் பெரிய கனவுகளுக்கு வாசல் திறக்கும். சிறியது என்று எந்த முயற்சியையும் அலட்சியம் செய்யாதே. --- 🔥 3. முயற்சி இல்லாமல் அறிவு பயன்படாது எவ்வளவு தெரிந்தாலும், செய்யவில்லை என்றால் அது பயன்படாது. 👉 முயற்சி தான் அறிவை அனுபவமாக மாற்றும். அனுபவம் தான் உன்னை முன்னேற்றும். --- 🔥 4. முயற்சி தொடர்ந்தால் பயம் குறையும் முதல் முயற்சியில் பயம் பெரியதாக இருக்கும். 👉 தொடர்ந்து முயன்றால் அதே பயம் பழகிவிடும். பழகிய பயம் உன்னை நிறுத்தாது. --- 🔥 5. முயற்சி தோல்வியடையலாம் ஆனால் வீணாகாது ஒவ்வொரு முயற்சியும் வெற்றி தர வேண்டிய அவசியமில்லை. 👉 ஆனால் ஒவ்வொரு முயற்சியும் ஒரு பாடம் தரும். அந்த பாடமே அடுத்த முயற்சியை மேம்படுத்தும். --- 🔥 6. முயற்சி தான் மனதை மாற்றும் “நான் முடியுமா?” என்று கேட்ட மனம், 👉 முயற்சி செய்த பிறகு “நான் முயன்றேன்” என்று உறுதியாகும். அந்த உறுதியே வளர்ச்சியின் தொடக்கம். --- 🔥 7. முயற்சி இல்லாத கனவு கனவாகவே மங்கும் கனவு காண்பது தவறு இல்லை. 👉 ஆனால் முயற்சி இல்லாமல் அது மாயையாகிவிடும். முயற்சி தான் கனவுக்கு உடல் தரும். --- 🔥 8. முயற்சி ஒழுக்கத்தை உருவாக்கும் முயற்சி தினசரி பழக்கமாகும் போது ஒழுக்கம் பிறக்கும். 👉 அந்த ஒழுக்கம் சாதனையாளர்களின் அடையாளம். ஒழுக்கமில்லாத வெற்றி நிலைக்காது. --- 🔥 9. முயற்சி தொடங்கியவன் ஏற்கனவே முன்னேறிவிட்டான் பலர் தொடங்கவே தயங்குகிறார்கள். 👉 தொடங்கியவன் ஏற்கனவே அவர்களை விட ஒரு படி முன்னே. அந்த ஒரு படியே வாழ்க்கையை மாற்றத் தொடங்கும். --- 🔥 10. சாதனையின் எளிய உண்மை 👉 மந்திரம் இல்லை. 👉 அதிர்ஷ்டம் இல்லை. 👉 குறுக்கு வழி இல்லை. முயற்சி. மீண்டும் முயற்சி. தொடர்ந்த முயற்சி. அதுவே ஒவ்வொரு சாதனையின் உண்மையான அடித்தளம். --- 🌟 முடிவுரை சாதனைகள் பெரிய மனிதர்களுக்கே உரியவை அல்ல. 👉 முயற்சி செய்யும் எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமானவை. ஒவ்வொரு சாதனையும் “முயற்சி” என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது. இன்று ஒரு சிறிய முயற்சி செய். 👉 அந்த ஒரு முயற்சியே நாளைய உன் பெரிய சாதனையின் முதல் வரி. 🌱🔥 🌹🌹🌹
saravanan.
547 views
4 months ago
#thannambikkay thulirgal ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம்*_ _*எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல்*_ _*ந‌ம்‌பி‌க்கையு‌ம் ந‌ம்மா‌ல் முடியு‌ம்*_ _*என்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.*_ _ம‌ற்றவ‌ர்க‌ள் தவறு செ‌ய்தா‌ல்_ _அதை ம‌ன்‌னி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்ற_ _மன‌ப்ப‌க்குவ‌ம்_ _இரு‌ப்பது ‌மிக‌ப் பெ‌ரிய ‌செயல்._ _*ஆனா‌ல் ம‌ற்றவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் ‌நியாயமான தவறுகளை ம‌ன்‌னி‌க்கா‌ வி‌ட்டாலு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் மறந்து விடுங்கள்.*_ _எப்‌போது‌ம் ந‌ம்மை ‌விட தா‌‌ழ்‌ந்தவ‌ர்களை ஒப்பி‌ட்டு‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட உய‌ர்‌ந்தவ‌ர்களை ஒப்பி‌ட்டு‌ப் பா‌ர்‌த்து அவ‌ர்க‌ள் பாதை‌யி‌ல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்._ _*அடுத்து*_ _*என்னாகப்போகுதோ*_ _*என எதிர்பார்ப்போடு இருக்காதீர்கள்.*_ _*என்ன ஆகிடப் போகுது*_ _*என எதார்த்தமாக இருங்கள்.*_