thannambikkay thulirgal

saravanan
448 views
3 days ago
#thannambikkay thulirgal நீண்டு கொண்டே போனால் சலிப்பு ஏற்படும் என்பதாலே நிறைய கதாபாத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது விதி.*_ _ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார்,_ _கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்_ _*அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது.*_ _*நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன்.*_ _அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது._ _உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள்._
saravanan
602 views
8 days ago
#sinthanay thulirgal ! சுத்தியல் ஒன்றுதான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது. ஒருநாள் சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை. அவன் மீண்டும் அடித்தான்; ஆனாலும் பூட்டு திறக்கவில்லை. அப்போது அவன் மனைவி “பூட்டை உடைக்காதீர்கள்; சாவி கிடைத்து விட்டது” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள். அவன் சாவியை வாங்கிப் பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான். சாவியையும் சுத்தியலையும் அருகிலேயே வைத்து விட்டுப் போய்விட்டான். சுத்தியலுக்கோ மிக அவமானமாக இருந்தது. “மிக வலிமையான நம்மால் திறக்க முடியாத பூட்டை, இந்தச் சிறிய சாவி திறந்து விட்டதே” என்று வருந்தியது. சுத்தியல் சாவியிடம் பேச்சுக் கொடுத்தது. “நான் உன்னைவிட மிகவும் #வலிமையானவன்; ஆனால் நான் பூட்டைத் திறக்க மிகவும் கஷ்டப்படுகிறேன். நீ என்னைவிட மிகவும் #எளிமையானவன்; ஆனால் எளிதில் பூட்டைத் திறந்து விட்டாயே; என்ன காரணம்?” என்று சுத்தியல் சாவியிடம் கேட்டது. அதற்கு சாவி சொன்னது “நீ என்னைவிட பலசாலிதான். ஆனால் நீ பூட்டை உடைக்க அதன் தலையில் தட்டுகிறாய். அதனால் அதுவும் தன் பலத்தைக் காட்டி உன்னை எதிர்க்கிறது. எனவே உனக்கு பூட்டைத் திறப்பது கடினமான வேலையாகிறது.” “நான் பூட்டைத் திறக்க அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு திறந்து கொடுக்கின்றது; எனவே என் வேலை எளிதாகின்றது.” என்று சாவி சொன்னது. நாமும் மற்றவர் #மனம் என்னும் பூட்டைத் திறக்க, #அதிகாரம் என்னும் சுத்தியல் கொண்டு அடிக்காமல் #அன்பு என்னும் சாவியைப் பயன்படுத்தலாமே! 😊😊😊
saravanan
530 views
9 days ago
#thannambikkay vaarthaygal *_வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா?_* _வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அருமையை உணர சோகமும், உறவுகளின் மேன்மையை உணர தனிமையும் எத்தகைய பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்பதை இது விவரிக்கிறது._ * 🌹🌹🌹ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா? சூழ்நிலையை கற்பூரம் மாதிரி பற்றிக்கொள்ள வேண்டும். அதனை இறை நம்பிக்கையோடு வணங்குவது போல் நம்முடைய செயல்கள் அனைத்தும், மற்றவர்கள் மதிக்கும்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாழவேண்டும். அதேமாதிரி உங்கள் வாழ்க்கையில் தினமொரு விடியல் நமக்கானது, தினமொரு வாய்ப்பு நமக்கானது என்று நினைத்து சிந்தனையை தூண்டிவிடுங்கள். அதற்காக தினமொரு வெற்றி அடைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காலம் பொன் போன்றது என்று உணர்ந்து, அன்றைய தினத்தை வீணாக்கி, தோல்வி அடைந்து விடாதீர்கள். அதுமாதிரி வாழ்க்கையில் ஆயிரம் பேரைக் கூட துணிவோடு எதிர்த்து நிற்பது தவறில்லை. ஆனால் ஒருநாளும் யாரையும் எதிர்பார்த்து நின்று விடாதீர்கள். அதேபோல் முடியாது என்பதை கடைசியில் யோசியுங்கள். எப்படி முடிப்பது என்பதை முதலில் யோசிக்கப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைவதோடு, நேர்மறை எண்ணங்கள் உங்கள் இதய வாசலை வந்து தட்டும். உங்கள் மனதில் விதைக்கப்படும் எண்ணங்களுக்கும், நீங்கள் செயல்படுத்த நினைக்கும் செயலுக்கும் எந்தவித மாற்றத்தையும் செய்து, குழம்பிய குட்டைபோல், மாறாமல், தெளிந்த நீரோடை போல் இருங்கள். அப்போதுதான் உங்கள் இலக்கு வெற்றி அடையும். வாழ்க்கையில் ஒருபோதும் தன் புகழ்ச்சிக்காக வாழாதீர்கள். ஏனென்றால், அப்படி வளர்ந்துக் கொண்டால், அடுத்தவன் நம்பிக்கையை நாட வேண்டி வரும். தன்னுடைய போராட்டத்தில் வாழும் யவருக்கும் தன்னுடைய நம்பிக்கை ஒருபோதும் கைவிடாது. அதேபோல் சில சமயங்களில் சோகப்படுவது தவறில்லை. அப்போதுதான் ஆனந்தத்தின் அருமை உங்களுக்கு புரியும். அதேபோல் நம்மோடு பழகியவர்கள் யாருக்காவது கவலைபடும் சூழ்நிலை வரும்போது கண்ணீர் விடுங்கள். அப்போதுதான் புன்னகையின் மகிமையை உணர முடியும். அதேபோல் மொழி புரியாத தேசம் செல்லுங்கள். அப்போதுதான் பலமொழிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் புரியும். அதேபோல் அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள். தனிமையில் வேதனை அறிய முடியும். அதேபோல் குற்றவாளிகளின் கதறல்களை கேட்டுப்பாருங்கள். முன் கோபத்தின் பின்விளைவுகள் எப்படிப்பட்டது என்று தெரியும். ஒருபோதும் நீங்கள் யாருக்கும் ஞானியாக இருக்க நினைக்காதீர்கள். மனம் தலைக்கனத்தை தூண்டில் போட்டு உள்ளே இழுக்கும். ஆகவே எப்போதும் மனிதனாக இருக்க பயற்சி செய்யுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட உயரத்தில் இருந்தாலும், ஒரு நாளாவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றிப் பாருங்கள். வறுமையின் கொடுமை தெரியும். மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள். அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும். இதுதான் மனித வாழ்க்கை என்பது புரியும் போது, தானாக உங்களுக்குள் தன்நலமற்ற சிந்தனையும், மனிநேயம் என்கிற மனபக்குவமும் வரும். வாழ்க்கையில் எதையும் உழைத்து பெறவேண்டும் என்ற நிலையே மிகப்பெரிய நமக்கான வரம். அதேபோல் எல்லாம் நமக்கு இருக்கிறது என்று மனம் நிறைவாக இருக்கும் மனநிலையே மிகப்பெரிய நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து வாழ்வதே சாலச் சிறந்தது. வாழ்க்கையில் நெல்முனை அளவுகூட பிணக்கு இல்லாமல் வாழ நினைக்கும் மனோ நிலையே மிகச்சிறந்த பண்பின் வெளிப்பாடு. யாரைப் பற்றி நினைக்கிறபோதும், உங்களை அறியாமல் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான தருணம். பேசுவதை விட செயலில் துடிப்பாக இருங்கள். உங்கள் வெற்றி மற்றவர்களைப் பேச வைப்பதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். வாழ்க்கைப் பாதையை சரியாக அமைத்தூக் கொண்டால், வேகமாக அல்ல, நிதானமாக சென்றாலும் இலக்கின் முடிவில் வெற்றிதான் என்பது எழுதப்படாத உண்மை! 🌹🌹🌹
saravanan
666 views
12 days ago
#sinthanay thulirgal *சிந்தனை துளிகள்* 🤔 *மரணம் எங்கும் இருப்பது!* ஆனால், அது தனக்கில்லை என்று தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்... மனித மனதின் மாபெரும் ஆழமான மோசடி இதுதான்... *மரணம் பற்றிய உண்மையை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதவரை, அந்த மோசடியில் தான் அகப்பட்டுக் கொள்வோம்..!!* *--ஓஷோ* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
saravanan
568 views
1 months ago
#sinthanay thulirgal தெரியாதவனும்.*_ _*சிந்திக்கத் தெரியாதவனும்.*_ _*வாழ்வில்*_ _*சிறப்பு பெறுவதே இல்லை.*_ _உண்மையைப் பேசி_ _வாழ்வதே_ _சிறந்ததொரு தர்மம்._ _பொருத்தமாகப் பொய் பேசக் கூடியவர்கள் தான் கடைசி வரை யோக்கியவராகவே‌ இருந்து வருகிறார்கள்._ _*நீங்கள் கோபமாக இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் அம்புகளாகின்றன.*_ _*நீங்கள் கவனத்துடன் இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் பாலங்களாகின்றன.*_ _பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை பொறுமையாக தான் கற்றுத் தருகிறது இந்த வாழ்க்கை._ _*ஒவ்வொரு அமைதியான வாழ்க்கைக்குப் பின்னாலும் ஏராளமான தியாகங்கள் உள்ளன.*_ _உங்கள் மன அமைதிக்கான திறவுகோலை மற்றவர்கள் பிடித்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்._
saravanan
609 views
1 months ago
#sinthanay thulirgal எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும் உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்...!!! வாழ்க்கை ஒரு போராட்டம் அல்ல — ஒரு இயக்கம். நீ நகர்ந்தால் பாதை உருவாகும். நீ நின்றால் தடைகள் பெரிதாகும். முயற்சி செய்யும் மனிதனுக்கு மலை கூட வழி விடும். ஆனால் செயலற்ற மனிதனுக்கு சிறிய தடையும் பெரிய சிறையாக மாறும். --- 1️⃣ செயல் தான் வாழ்க்கையை நகர்த்தும் சக்தி நீ எவ்வளவு கனவு கண்டாலும், எவ்வளவு திட்டமிட்டாலும், அது செயலாக மாறவில்லை என்றால் வாழ்க்கை முன்னேறாது. எழுந்து ஒரு சிறிய அடியை எடுக்கும் தருணமே மாற்றத்தின் ஆரம்பம். --- 2️⃣ முதல் அடி எடுத்தால் பயம் குறையும் தொடங்கும் முன் எல்லாம் கடினமாக தோன்றும். ஆனால் நீ ஒரு முயற்சி எடுத்தவுடன், அந்த பயம் மெதுவாக குறையும். செயலே பயத்தை உடைக்கும். --- 3️⃣ முயற்சி செய்தால் பாதை தெளிவாகும் நீ ஆரம்பிக்கும் முன் முழு பாதையும் தெரியாது. ஆனால் நடக்கத் தொடங்கினால், அடுத்த அடி தானாக தெரியும். வாழ்க்கை அப்படித்தான் — அது நடக்கிறவர்களுக்கு மட்டுமே திசை காட்டும். --- 4️⃣ செயலற்ற நிலை மனதை சிறைபிடிக்கும் நீ எதையும் செய்யாமல் இருந்தால், உன் மனம் பயம், சந்தேகம், சோம்பல் ஆகியவற்றால் நிரம்பிவிடும். அந்த நிலை தான் உண்மையான சிறை. --- 5️⃣ சிறிய முயற்சி பெரிய தடைகளை உடைக்கும் மலை பெரியதாக தோன்றலாம். ஆனால் அதை ஏறும் மனிதன் அதை துண்டுகளாகப் பார்க்கிறான் — ஒரு அடி, ஒரு மூச்சு, ஒரு முயற்சி. அந்த சிறிய முயற்சிகள் சேர்ந்து மலை கூட தாண்டப்படலாம். --- 6️⃣ சோம்பல் மெதுவாக வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சிலந்தி வலை முதலில் பலவீனமாக தோன்றும். ஆனால் அது மெதுவாக பிடிக்கும். அதுபோல் சோம்பல், தாமதம், அலட்சியம் — இவை மெதுவாக உன் வாழ்க்கையை கட்டுப்படுத்தும். --- 7️⃣ செயலில் இருக்கும் மனிதன் வாய்ப்புகளை காண்பான் நடக்கிற மனிதன் சுற்றி இருக்கும் வாய்ப்புகளை கவனிப்பான். நின்று கொண்டிருப்பவன் பிரச்சனைகளையே அதிகமாக காண்பான். --- 8️⃣ முயற்சி தன்னம்பிக்கையை உருவாக்கும் நீ முயற்சி செய்யும் ஒவ்வொரு தருணமும் உன் மனதில் “நான் செயலில் இருக்கிறேன்” என்ற நம்பிக்கையை உருவாக்கும். அந்த நம்பிக்கை உன்னை தொடர்ந்து நகர்த்தும். --- 9️⃣ வாழ்க்கை இயக்கத்தில் தான் உயிருடன் இருக்கும் நீர் ஓடினால் தான் சுத்தமாக இருக்கும். நின்றால் துர்நாற்றம் வரும். அதுபோல மனிதனும் செயல்பட்டால் தான் வளர்ச்சி அடையும். --- 🔟 எழும் மனிதனுக்கு உலகம் உதவும் நீ உண்மையாக முயற்சி செய்ய ஆரம்பித்தால், சூழ்நிலைகள் கூட மெதுவாக உனக்கு சாதகமாக மாறும். உலகம் முயற்சி செய்பவர்களுக்கு வழி கொடுக்கும். --- 🌄 முடிவுரை நிற்காதே. சோம்பிக்காதே. தொடங்கு. எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்...!!! ஒரு அடி போதும். பாதை உருவாகும். நீ நகர்ந்தால் — உலகம் உன்னுடன் நகரும். 🔥🚀✨ 🌹🌹🌹
saravanan.
781 views
1 months ago
#sinthanay thulirgal *சிந்தனை துளிகள்* 🤔 பள்ளிக்கூடம் போன பின்பு தான், *விளையாட்டின் அருமை தெரிகிறது...* கல்லூரிக்குப் போன பின்பு தான், *பள்ளிக்கூடத்தின் அருமை தெரிகிறது...* வேலைக்குப் போன பின்பு தான், *படிப்பின் அருமை தெரிகிறது...* ஓய்வு பெற்ற பின்பு தான், *வேலையின் அருமை தெரிகிறது...* மரணப் படுக்கையில் தான், *வாழ்க்கையின் அருமை தெரிகிறது..!!* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
saravanan.
565 views
1 months ago
#sinthanay thulirgal போன பாதையில் செல்ல மனிதர்கள் விரும்புகின்றனர். உயர விரும்பினால் அறிவு காட்டும் பாதையைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க வளமுடன் என வாழ்த்தும் போதும் நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும். பகை உணர்வுடன் யாராலும் வாழ்த்த முடியாது. வாழ்த்தப் பழகினால் மனதில் பகைமை நிற்காது. எந்த சூழ்நிலையிலும் கோபம் வராமல் யார் இருக்கிறாரோ அவர் ஞானம் அடைந்து விட்டார் என அர்த்தம். எல்லா உயிரும் கடவுளின் வடிவமே என்று கருதிச் செய்யும் ஒவ்வொரு செயலும் அன்பின் செயலே. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும். ஆசையை அடியோடு ஒழிக்க வேண்டாம்; அதை சீர்படுத்தினால் போதும். தீர்க்க முடியாத பிரச்னை என ஏதுமில்லை; தீர்க்கும் வழியை அறிவது தான் எல்லோருக்கும் பிரச்னை. அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு. திறமையின்மை, அச்சம் இரண்டும் கவலையை பெருக்கும் கருவிகள்.. 😊😊😊