irav sinthanay.

saravanan.
564 views
18 hours ago
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam. ஹரி நாம மஹிமை 🌼🌼🌼🌼🌼🌼 நைகாந்திகம் தத் தி க்ருதே ‘பி நிஷ்க்ருதே மன: புனர் தாவதி சேத் அஸத் - பதே தத் கர்ம - நிர்ஹாரம் அபீப்ஸதாம் ஹ ரேர் குணானுவாத: கலு ஸத்வ - பாவன: மொழிபெயர்ப்பு: சமய சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிராயச்சித்த சடங்கு முறையில் இதயத்தை தூய்மைப்படுத்துவதற்குப் போதுமானவையல்ல. ஏனெனில் பிராயச்சித்தம் செய்த பிறகும், மனம் மீண்டும் பௌதிகச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால்தான், பௌதிக செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஜபிப்பது அல்லது பகவானின் நாமம், புகழ், மற்றும் லீலைகளைத் துதித்துப் போற்றுவது, பரிபூரண பிராயச்சித்த முறையாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய நாம ஜபமும், துதியும் ஒருவனது இதயத்திலுள்ள அழுக்கை முழுமையாகப் போக்கிவிடுகிறது. பொருளுரை: இச்சுலோகத்திலுள்ள கூற்றுகள், ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.17) ஏற்கனவே பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளன: ஸ்ருண்வதாம் ஸ்வ கதா: க்ருஷ்ண: புண்ய ஸ்ரவண கீர்தன: ஹ்ருதி அந்த: ஸ்தோ ஹி அபத்ராணி விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம் “எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், பரமபுருஷருமாகிய ஸ்ரீ கிருஷ்ணர், முறையாகக் கேட்பதாலும், பாடுவதாலுமே புண்ணியம் தரக்கூடிய அவரது செய்திகளைக் கேட்பதிலும், பாடுவதிலும் உள்ள ஆவலை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அகற்றிவிடுகிறார்.” ஒருவன் தமது நாம், புகழ், இயல்வுகள் ஆகியவற்றைத் துதித்துப் போற்றுவதை பகவான் அறிந்த உடனேயே, அவர் அவனது இதயத்திலிருந்து அழுக்கை அகற்ற தானாக முன்வந்து உதவி செய்கிறார். இது அவரது தனிப்பெருங் கருணையாகும். எனவே இவ்வாறு அவரது புகழைப் பாடுவதாலாயே ஒருவன் தூய்மையடைவது மட்டுமின்றி, புண்ணிய செயல்களின் பலன்களையும் அடைகிறான் (புன்ய - ஸ்ரவண - கீர்த்தன). புன்ய - ஸ்ரவண - கீர்த்தன என்பது பக்தித் தொண்டு முறையைக் குறிக்கிறது. ஒருவன் பகவானின் நாமம், லீலைகள் அல்லது இயல்புகளின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அவைகளைப் பற்றி கேட்பதால் அல்லது பாடுவதாலேயே அவன் தூய்மையடைகிறான். இத்தகைய தூய்மை ஸத்வ - பாவனம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவன் தனது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொண்டு, முக்தியடைவதுதான் மனித வாழ்வின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஜட உடலைப் பெற்றுள்ளவரை, தூய்மையற்றவனாகவே ஒருவன் கருதப்படவேண்டும். அனைவரும் உண்மையான ஆனந்த வாழ்வைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றாலும், தூய்மையற்ற இத்தகைய ஒரு பௌதிக நிலையில் அவர்களால் அதை அனுபவிக்க முடியாது. எனவே ஸ்ரீமத் பாகவதம் (5.5.1) கூறுகிறது, தபோ திவ்யம் புத்ரா யேன ஸத்வம் கத்யேத்: தன் வாழ்வை தூய்மையுடையதாக்கி, ஆன்மீக படித்தரத்திற்கு வர ஒருவன் தவம் செய்ய வேண்டும். பகவானின் நாமம், புகழ், இயல்புகள் ஆகியவற்றைத் துதிப்பதும், பாடுவதுமான இந்த தவம், தூய்மையடைவதற்குரிய மிகச்சுலபமான வழிமுறையாகும். இதனால் எல்லோரும் மகிழ்ச்சியடைய முடியும். எனவே தங்கள் இதய சக்தியை விரும்பும் அனைவரும் இந்த வழி முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்ம, ஞான, யோக போன்ற பிற முறைகளால் இதயத்தை முழுமையாக சுத்தம் செய்ய முடியாது. (ஶ்ரீமத் பாகவதம் / 06.12.12 / பொருளுரை வழங்கியவர்: ஶ்ரீல பிரபுபாதர்)
saravanan.
624 views
3 days ago
*மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி உத்திர ஆராதனை* ( *கடை ஆராதனை* ) *மஹா தரிசனம்* 🙏🎉🎊🙏🙏🙇‍♂️🙇‍♂️ ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமோ நமஹ. Mantralayam. Mk..31.8.26 (Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam.
saravanan.
684 views
5 days ago
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam. #irav vanakkam.
saravanan.
747 views
13 days ago
*(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam. அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில்,* *மூலவர் : சிவலோகத்தியாகர், சிவலோக தியாகேசர்.* *உற்சவர் : திருஞான சம்பந்தர்.* *அம்மன்/தாயார் : திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி.* *தல விருட்சம் : மாமரம்.* *தீர்த்தம் : பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்.* *புராண பெயர் : சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண : நல்லூர், திருமணவை.* *ஊர் : ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101.* *மாவட்டம் : நாகப்பட்டினம்.* *மாநிலம். : தமிழ்நாடு.* *காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4364-278 272, 277 800.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் பிரகாரத்தில் ருணலிங்கேஸ்வரர் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 5 வது தேவாரத்தலம் ஆகும்.* *பொது தகவல் : இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்து ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது.* *நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தப்பெருமான், ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும், திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.* *திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.* *பிரார்த்தனை : இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.* *நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.* *தலபெருமை : சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.* *ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.* *வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.* *காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.* *திருநீறு பிரசாதம் : இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.* *தல வரலாறு : சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் "இறைவனின் விளையாட்டு தான் இது' என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார்.* *இதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது "இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே. இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்" என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,""நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக"என்று அருள்புரிந்தார். இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து 'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே" எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார். இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.* *ஆண்டு தோறும் வைகாசி மூல விழாவில் இந்த காட்சி திருவிழாவாக நடக்கிறது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : மகா சிவராத்திரி.* *சிறப்பம்சம் : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.* *இருப்பிடம் : சீர்காழியிலிருந்து வடகிழக்கில் 13 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கில் 12 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து மஹேந்திரபள்ளி செல்லும் பஸ்சில் ஏறி ஆச்சாள்புரத்தில் இறங்க வேண்டும்.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி.* *அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை, திருச்சி.* *தங்கும் வசதி : சீர்காழி.*
saravanan.
1.9K views
14 days ago
🌙 இரவு சிந்தனை 🌙 🌹 20.08.2026🌹 🏵️வாழ்க்கையில் உங்களைச் சுற்றி #irav sinthanay. எப்போதும் நல்ல மனிதர்களை வைத்துக் கொள்ளுங்கள்🏵️ 🏵️சில சமயம் சிலருடைய தீய எண்ணம் கூட உங்களைத் தோல்வியில் கொண்டுப் போய்ச் சேர்த்து விடும்🏵️ 🏵️அவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள்🏵️ 🏵️நாம் துவண்டுப் போகும் நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் கொடுக்கும் உற்சாகமே நம்மை வழி நடத்திச் செல்லும்🏵️ 🏵️எனவே, நமக்கு ஊக்கமளித்து நல்வழிப்படுத்தும் மனிதர்களை நமது சுற்றத்தில் வைத்திருப்பது நல்லது🏵️ 🏵️நமது இலக்கை அடைய இவர்கள் தரும் உற்சாகம், நமக்கான வெற்றியில் பாதியைத் தேடித் தரும்🏵️ 🏵️தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் கையாண்டால் வெற்றி நிச்சயம்👍 🤲முருகா இன்றைய 20-08-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 21-08-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️ 🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌 🌺நாளையபொழுதுநல்லபடி முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏ஓம் சரவணா பவ 🙏
saravanan.
722 views
16 days ago
#ulaviyal sinthanay எளிய உளவியல் உண்மைகள்_* _➤ *மக்கள் உணர்வுகளை நினைவில் வைத்திருப்பார்கள்.*_ ➤ _இசை உணர்ச்சிகளை பாதிக்கும்._ ➤ *_தூக்கம் உங்கள் மனநிலையை பாதிக்கும்._* ➤ _அதிகமாக யோசிப்பது பெரும்பாலும் பயத்திலிருந்து வரும்._ ➤ *_சிரிப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்தும்._* ➤ _மன அழுத்தம் உங்கள் நினைவாற்றலை பாதிக்கலாம்._ ➤ *_மக்கள் கவனிக்கப்படுவதை விரும்புவார்கள்._* ➤ _திரும்பத் திரும்ப வரும் எண்ணங்கள் வலிமையாக உணரும்._ ➤ *_நினைவுகள் காலப்போக்கில் மாறலாம்._* ➤ _அன்பும் கருணையும் மக்களை நன்றாக உணர வைக்கும்._
saravanan.
1.4K views
19 days ago
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam. #irav vanakkam
saravanan.
1.4K views
22 days ago
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam, #irav vanakkam.
saravanan.
6.5K views
1 months ago
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam. #irav vanakkam.