sinthanay kalam.

saravanan
1.5K views
9 days ago
#sinthanay kalam. களம். உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது. முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்! 'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவுபடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் எனக் குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும். பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது. 😊😊😊
saravanan
1.4K views
12 days ago
#sinthanay kalam. தயங்கி கொண்டே நிற்காதே… ஒரு முறை முயற்சி செய்து விடு… வெற்றியானால் அடுத்த கட்டத்திற்கு செல்… தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்… முயன்றால் எதுவும் முடியும்! 🌱வாழ்க்கையில் மிகப்பெரிய தடைகள் வெளியில் இல்லை. 👉 அவை நம் மனதில். “என்ன ஆகும்?” “தவறிவிட்டால்?” “நான் முடியாவிட்டால்?” இந்த தயக்கமே பல கனவுகளை பிறக்காமலே அழித்துவிடுகிறது. --- 🔥 1. தயக்கம் முன்னேற்றத்தின் எதிரி நீ நிற்கும் ஒவ்வொரு நொடியும் நேரம் நகர்கிறது. 👉 முயற்சி செய்யாமல் இருப்பது முன்னேற்றத்தை தள்ளிவைப்பது. --- 🔥 2. முயற்சி ஒரு கதவு நீ முயற்சி செய்தவுடன் ஒரு கதவு திறக்கும். 👉 அது வெற்றியின் கதவாக இருக்கலாம். அல்லது அனுபவத்தின் கதவாக இருக்கலாம். இரண்டும் லாபம் தான். --- 🔥 3. வெற்றி = அடுத்த நிலை நீ சாதித்தால் அங்கேயே நின்றுவிடாதே. 👉 அடுத்த இலக்கை நோக்கு. வளர்ச்சி தொடர வேண்டும். --- 🔥 4. தோல்வி = ஆசிரியர் தோல்வி வந்தால் அது முடிவு அல்ல. 👉 அது “இன்னும் என்ன கற்றுக்கொள்ளலாம்?” என்ற பாடம். --- 🔥 5. கற்றுக்கொள்ளும் மனம் வெல்லும் தோல்வியில் உடைந்தவன் அங்கேயே முடிவடைகிறான். 👉 தோல்வியில் கற்றவன் ஒருநாள் வெற்றி பெறுவான். --- 🔥 6. பயம் ஒரு மாயை நீ முயற்சி செய்யாமல் இருக்கும்போது பயம் பெரிதாக தெரியும். 👉 முயற்சி செய்தவுடன் அது சுருங்கும். --- 🔥 7. சிறிய முயற்சி பெரிய மாற்றம் ஒரு நாள். ஒரு செயல். ஒரு தைரியம். 👉 இதுவே பெரிய பயணத்தின் தொடக்கம். --- 🔥 8. செயல்தான் நம்பிக்கை நம்பிக்கை பேசுவதில் இல்லை. 👉 அது செயலில். நீ செயல் படும்போது உன் மனமும் வலிமை பெறும். --- 🔥 9. வெற்றியும் தோல்வியும் இரண்டும் முன்னேற்றம் ஒரு பாதை நேரடியாக உயரத்திற்கு. மற்றொரு பாதை வழி திருத்தத்துக்கு. 👉 இரண்டும் உன்னை முன்னேற்றும். --- 🔥 10. முயற்சி = சாத்தியம் முயற்சி இல்லாத கனவு கனவாகவே இருக்கும். 👉 முயற்சி சேர்ந்தால் அது இலக்காக மாறும். --- 🌟 முடிவுரை நீ இப்போது தயக்கத்தில் இருக்கிறாயா? நினைவில் கொள்: தயங்கி கொண்டே நிற்காதே… ஒரு முறை முயற்சி செய்து விடு… வெற்றியானால் அடுத்த கட்டத்திற்கு செல்… தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்… முயன்றால் எதுவும் முடியும்! இன்று ஒரு முயற்சி செய். அது உன் வாழ்க்கையை மாற்றும் முதல் அடி ஆகலாம். 🚀🔥✨ 🌹🌹🌹
saravanan
1.7K views
15 days ago
#sinthanay kalam. களம். சிறு சிறு விஷயங்களில் கூட சில கருத்து முரண்பாடுகள் எழும் போது, அதை எதிர்கொள்வது என்பது ரொம்பக் கடினமான விஷயம் தான். சில நேரங்களில் நாம் செய்யக் கூடிய செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக விமர்சனங்கள் எழும் போது, அதை எதிர்கொள்வது தான் இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, யுவதிகளுக்கும் தேவைப்படுகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும். இன்றைய இளைஞர்களிடம் ஏதோவொரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், சிந்தனைகளும் இருக்கின்றது. அதை நோக்கிய உடல் உழைப்புகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், ஒன்றைத் தவிர. அது தான், ‘விமர்சனம்’. விமர்சனங்கள் என்பது மனிதனுக்கு எதிரானதா? நிச்சயமாக இல்லை. விமர்சனங்கள் என்பது முன்னேற்றத்தின் தூண்டுகோல். நம்மை ஒருவர் ஒரு விஷயத்தில் விமர்சனம் செய்யும் பொழுது, நம்மிடம் உள்ள குறைகளில் நின்று அணுக முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான், நம்மிடம் உள்ள பிரச்னைகள் தீரும். சொல்லப்படக் கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் நாம் தவறாகக் எண்ணக் கூடாது. ஆரோக்கியமான விமர்சனங்கள் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தும். அதனால், அது எந்த இடத்தில் கிடைத்தாலும் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். தரங்கெட்ட விமர்சனங்கள் நமக்கு இழிவாகும். அதற்கு எதிராக எல்லா நேரத்திலும் துணிந்து போராடுங்கள். அது, நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆரோக்கியமாகும். 😊😊😊
saravanan.
4.4K views
2 months ago
#sinthanay kalam. களம். பொறாமை என்பது நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு தடைக்கல். பொறாமை என்பது என்ன? பொறாமை என்றால் உங்களுக்குப் பிடித்த ஆனால் உங்களிடம் இல்லாத ஒரு பொருள் மற்றவரிடம் இருக்கும் போது ஏற்படும் உணர்வு. உங்களிடம் இருப்பதை விட அதிகமாக மற்றொருவரிடம் இருக்கும் போது ஏற்படுவது அல்லது உங்களுக்குள் இருக்கும் ஒருவிதக் குறைபாட்டினால், இன்னொருவரைப் பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு மேலோங்குவது தான் எரிச்சல் அல்லது பொறாமை. நீங்கள் ஆனந்தமான உணர்வில் இருந்தால் யாரையும் பார்த்து பொறாமைப்பட மாட்டீர்கள். உங்களை விட இன்னொருவரிடம் ஏதோ ஒன்று அதிகம் உள்ளது போலவும் நீங்கள் ஏதோ ஒருவிதத்தில் குறைந்தவர் போலவும் உணர்வதால் தான் இந்தப் பொறாமை உணர்வு வருகிறது. உங்களை விட உயர்ந்தவர் ஒருவர் இருக்கும் இடத்தில் தான் உங்களிடம் பொறாமை இருக்கும். இங்கு நீங்கள் மட்டும் இருந்தால் உங்களுக்கு பொறாமை உணர்வு இருக்காது. நல்ல குணம் பொருந்தியவராக இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருப்பதால் இப்புவியில் சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் எப்போதும் இல்லை. நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்றே எப்போதும் இந்த சமூகம் ஊக்குவிக்கிறது. ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்மை நல்லவன் என்று நம்பிக் கொண்டிருப்பவருடன் வாழ்வது மிகவும் கடினம். அவர் நல்லவர் தான், ஆனால் கடினமான மனநிலையுடன் இருப்பார். நல்லகுணம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பரிதாபம், அனுதாபம், ஏன்... பொறாமை போன்ற தேவையற்ற விஷயங்களை மனிதனிடம் ஊக்குவிக்கின்றது. உங்களால் முடிந்தால் அடுத்தவருக்கு அன்பு ஒன்றையே அர்ப்பணியுங்கள். அப்படி முடியாவிட்டால் அடுத்தவரை சிறிது கண்ணியத்துடனாவது நடத்துங்கள். அதுவே மிகச் சிறந்தது. 😊😊😊
saravanan.
8.3K views
3 months ago
#sinthanay sitharal. சமுதாயத்தில் உள்ள அனைவருமே தனக்கு ஏதோ அடைய வேண்டிய லட்சியம் அல்லது தான் சாதிக்க வேண்டியது ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்கள் ஆற்றலை எல்லாம் அதில் செலவழித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும் வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. இயற்கை (இறைவன்) ஒருவரைப் போல அது இன்னொருவரை உருவாக்கவில்லை. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொண்டிருக்களாம் நீங்கள் மற்றவரை போல வாழ வந்தவர் இல்லை என்று. அனைவருமே இளையராஜாவாகவோ, டோனியாகவோ ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர்.சினிமா வாழ்வில் புகழ் பெற வேண்டும் என்று தங்களுடைய வாழ்வை தொலைத்தவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவரின் வாழ்வே உங்களுக்குத் தெரிகிறது. தோற்றவர்களின் வாழ்க்கை மறைந்தே இருக்கிறது. யார்யார் எந்த வேலைக்காக இங்கு வந்தார்களோ அதை மட்டுமே அவர்களால் செய்ய முடியும்.அதேபோல் நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று நீங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தாலும் உங்களை வைத்து இயற்கை என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்தே தீரும். உங்கள் இயக்கசக்தியும், இந்த பிரபஞ்சத்தை இயக்கும் இயக்க சக்தியும் வேறுவேறல்ல ஒன்றே. அதை உணர்ந்து அதனிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். அது உங்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகவே செய்து விடும். நீங்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அது உங்களை ஒரு குடியரசுத் தலைவராக உயர்த்தினாலும் சரி. அடையாளமே தெரியாத சாதாரணமான குடிமகனாக வைத்திருந்தாலும் சரி. அதில் இயற்கையில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. குடியரசு தலைவருக்கும், குடிமகனுக்கும் வித்தியாசம் பார்ப்பதெல்லாம் உங்கள் அறியாமையே. அனைவரும் வாழப்பிறந்தவர்களே வாழ்க்கையை இயற்கையிடம் கொடுத்து வாழ்வை மட்டும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள் குடியரசுதலைவர் மட்டும் அல்ல வேறு எவ்வளவு பெரியவராக இருந்தாலும் உங்களுக்கு போட்டியாகவே தெரிய மாட்டார்.ஏனென்றால் நீங்கள் பிரபஞ்சத்திற்கே ராஜாவாக இருப்பீர்கள். இது வாழ்க்கையில் போராடி சில அனுபவங்களைப் பெற்றவர்களுக்கே. இன்னும் போராடவே ஆரம்பிக்காதவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாது 😊😊😊