🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.2K views
1 months ago
அஜாமிளன் என்னும் விஷ்ணு பக்தர்.... அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர். ஒரு முறை யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி அஜாமிளன் காட்டுக்கு சென்றார். அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார். அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள். முன்வினைப் பயனால் தனது கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயரிட்டார். அந்த கடைசி பிள்ளையின் மேல் மிகுந்த பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா நாராயணா என்று பல முறை கூறுகிறார். கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள். யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைத்தார். நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள். யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்துக் கூறினார்கள். அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காத்தார். இதைக் கேட்ட அஜாமிளன், பகவான் நாமத்தின் மகிமையை உணர்ந்து, தனது மீதி நாட்களை ஹரித்வாரில் பகவன் நாம சங்கீர்த்தனத்தில் கழித்து பிறகு வைகுண்ட பதவி அடைந்தார். விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் "பகவான் விஷ்ணுவிற்கு தான் கட்டுபட்டவர் என்றும், பகவானின் பக்தர்களையும் பகவானின் நாமத்தை கூறுபவர்களையும் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று தனது யம தூதர்களுக்கு உரைக்கிறார். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில் "சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து" என்று வருகிறது. இதன் பொருள், அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார். "குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" நாராயணாவென்னும் நாமம்!! திருமங்கையாழ்வார் கண்டு கொண்டது!! இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது. இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார். இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார். அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும். அதற்கு இந்த அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது. நித்தியம் நாராயண நாமம் சொல்வோம்! நமது துன்பம் நீங்கி இன்பமும் வீடும் அடைவோம்!! ஓம் நமோ நாராயணாய நமக 🙏🏻 . . #postviralシ #bhakti #trend #PostViral #trendingpost #viralpost #krishnabhakti #narayan #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.4K views
1 months ago
ஸுதர்சன ஜெயந்தி ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻 || ஸுதர்சன ஜெயந்தி ஸ்பெஷல் || அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் முக்கியமாக திருப்பதி குணசீலம் ஸ்ரீரங்கம், திருமோகூர், திருக்கோவிலூர், திருவல்லிகேணி திருநெல்வேலி, காஞ்சிபுரம் மதுரை போன்ற அனைத்து ஸ்தலங்களிலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும். கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் தான், பிரம்மதேவர் நீராடி யாகம் செய்தார். உடனே பாதாளத்தில் இருந்து சக்கரம் வெளிக் கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் இருந்து, பிரம்மனுக்கு காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன் தான், இன்று நாம் வணங்கும் சக்கரபாணி ஆவார். சாளக்கிராமங்களில் சுதர்சன சாளக்கிராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்கிராமம் சுதர்சனம் ஆகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு. சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் வணங்கி வலம் வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லக்ஷ்மிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர். சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், காண்பதற்கு இனியவர் என்றும் பொருள். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள். பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர். ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. சில சமயங்களில் பகவான் கண்ணசைத்தாலே போதும் காற்றின் வேகத்தை கிழித்துக் கொண்டு அசுரர்களை சம்ஹாரம் செய்து மீண்டும் பகவான் கையில் பவ்யமாக வந்து விடும். ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் 'நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் பெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய ஸ்வாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார். மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார். சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். ஸ்ரீநரசிம்ஹ அவதாரத்தில் ஹிரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது ஸ்ரீநரஸிம்ம புராணம். வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார். அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். காசிநகரில் கண்ணனைப் போன்று போலி சங்கு, சக்கரம் தரித்து, "நானே உண்மையான வாசுதேவன்' என்று பௌண்டரங்க வாசுதேவன் என்ற வலிமை மிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் சுதர்சனத்தால் அவனைக் வென்றார். சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள். கஜேந்திர மோட்ச வைபவத்தில் சுதர்சன சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனைக் கவ்விப் பிடித்திழுத்த முதலையை அழித்து, யானையைக் காப்பாற்றுகிறார் பரமாத்மா. சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்: சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன. ஜோதிடத்தில் சக்கரத்தாழ்வார்: ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றை குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள், புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும். கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றி குறிக்குமிடம் ஆகும். மேலும் கன்னி ராசி கால புருஷ பத்தாமிடமான கர்ம ஸ்தானத்திற்க்கு ஒன்பதாமிடமாக வருவதால் ஒருவரின் கர்மாவை தெரிவிக்கும் இடமாகவும் கன்னி ராசி அமைந்த்துள்ளது. சுதர்சன உபாசனை வீரம் வெற்றி அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர். பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் அபிசார தோஷங்கள் எனப்படும் பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகளை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார். ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவது, சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும். சுதர்ஸனாஷ்டகம் சுதர்சன காயத்ரி போன்ற ஸ்லோகங்கள் பலராலும் ஜபிக்கப்பட்டு வருகிறது இவற்றைப் பாராயணம் செய்வதும், சுதர்சனர் சன்னதியில் நெய் விளக்கேற்றியும், பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம். சுதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரை யந்த்ர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது. சுதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ஹ மூர்த்தியைக் காணலாம். இவரை ஸ்ரீசுதர்ஸன நரசிம்மம் என்பர். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தாரித்ரியத்தை போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம். பல யுகங்களிலும் மன்னர்கள் போருக்கு முன்னர் சுதர்சன ஹோமம் செய்த பிறகு வெற்றியுடன் நாடு திரும்புவார்கள். அம்பரீஷ மஹா ராஜாவின் பக்தியில் மயங்கிய பெருமாள் எதிர்காலத்தில் நடக்க விருப்பதை அறிந்து அவரிடம் ஸ்ரீஸுதர்சனத்தை கொடுத்து விட்டார். துர்வாசரால் பரீஷிக்கப்பட்டடு யுகயுகத்திற்கும் அழியாப் புகழ் பெற்றான் அம்பரீசன். சுதர்சன காயத்ரி மந்திரம் ஓம் ஜ்வாலசக்ராய வித்மஹே விஷ்ணுப்ரியாய தீமஹி தந்நோ சக்ர ப்ரசோதயாத் இதை தினமும் காலையிலும் மாலையிலும் 108 முறை அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபித்து வந்தால் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் அழிந்து போவார்கள்.அஷ்ட லக்ஷ்மி கடாஷம் பெருகும். மஹா விஷ்ணுவின் பரிபூர்ண அருளும் கிடைக்கும். ஜெய் ஸ்ரீராம் சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து. #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.9K views
2 months ago
விஷ்ணு எப்படி இருப்பார் ? ராமன் எப்படி இருப்பான் ? ஸ்ரீ மான் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருளியது. விஷ்ணு விஷ்ணு என்று சொல்கிறாயே. அந்த விஷ்ணு எப்படி இருப்பார் என்று கொஞ்சம் சொல்லு” என்று கேட்டான் ஹிரண்யன். இவ்வளவு நேரம் ஆனந்தமாக விவரித்துக் கொண்டு வந்து பிரஹ்லாதனுக்கு வருத்தம் வந்துவிட்டது. ஐயோ நான் எதை வைத்துக்கொண்டு அவனை விளக்கப்போகிறேன் என்று எனக்குப் புரியவில்லையே. ஒரு சப்தத்தை வைத்துக் கொண்டு விஷ்ணுவை விளக்கலாம் என்று பார்த்தால், மற்ற சப்தங்கள் எல்லாம் கோபித்துக் கொள்கின்றன. ஏன்? என்னை வைத்துச் சொல்லக்கூடாதா” என்று அவை கேட்கின்றன. இன்னொன்றைத் தொடப்போனால் அதைத்தவிர மற்றதெல்லாம் கோபித்துக் கொள்கின்றன. அதே போல் மற்றொன்றைத் தொடப்போனால் அதைத் தவிர மற்றதெல்லாம் கோபித்துக் கொள்கின்றன” என்று தவிக்கிறான் பிரகலாதன். ராமாயணத்தில் ஒரு காட்சி. ஹனுமன் சீதையைத் தேடிக் கொண்டு அசோக வனத்துக்குப் போய்ச் சேர்ந்தான். சீதை முன்னால் நின்றான். நான்தான் ராமனுக்கு தூதனாக வந்தேன் என்று சொன்னான். ராம தூதோஹம்” என்று சொல்லி மோதிரத்தை சீதையின் கையில் கொடுத்தான். சீதைக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ‘என் ராமன் எப்படி இருப்பான் என்று உன்னாலே விளக்க முடியுமா?’ என்று கேட்டாள். படியெடுத்துரைத்துக் காட்டும்படிக் கல்ல அவன் படிவம். சீதையே நீ கேள்வி கேட்டுவிட்டாய். எந்த சப்தத்தை வைத்து என் ராமனின் உருவத்தை நான் விளக்குவேன்? படியெடுத்துரைத்துக் காட்டும்- அதாவது ஒரு வடிவத்தை எடுத்துக் காட்டி, தாமரையைப் போன்ற கண்கள் என்று சொன்னால், ஊரில் இருக்கும் மற்ற எல்லா புஷ்பங்களும் என்னுடன் சண்டைக்கு வருகின்றன. ஏன்? என்னைப்போல இருக்காதா ராமருடைய கண்கள்? என்னை உதாரணமாக சொல்லக் கூடாதா?” என்று கேட்கின்றன. பகவானுடைய தோள்கள் பெருத்த உலக்கையைப் போல இருக்கின்றன என்று சொன்னால் மலை சண்டைக்கு வருகிறது. ஏன் என்னைப் போல இல்லையா ராமருடைய தோள்கள்” என்று கேட்கின்றன. எதை நான் உதாரணமாகச் சொன்னாலும் மற்றது கோபித்துக் கொள்கிறது. எந்த சப்தத்தையும் கொண்டு பகவான் இது போல் இருப்பான் என்று உரைக்க முடியாது. ‘ந சப்தகோசரம் யஸ்ய’ – ஒரு சப்தத்தாலே அவனை உரைக்க முடியாது. நம்மாழ்வார் அழகாக அவருடைய பாசுரத்தில் குறிப்பிட்டார்: ‘புகழுநல் ஒருவன் என்கோ, பொருவில் சீர் பூமி என்கோ’ என்றார். அவனை பூமி என்று சொல்வதா், ஆகாசம் என்று சொல்வதா அக்னி என்று சொல்வதா, அல்லது நீர் என்று சொல்வதா, எதைச் சொன்னாலும் அது அவனைத்தான் குறிக்கப் போகிறதே தவிர மற்றவர்களைக் குறிக்கப் போவதில்லை. அவ்வளவு பெருமைகள் அவருக்கு இருக்கின்றபடியால் – வாசாம் அகோசரம், அதாவது வாக்குக்கு எட்டாதவன். அதைத்தான் குழந்தை சொன்னான்: நான் எதை வைத்து விளக்கப் போகிறேன் விஷ்ணு யார் என்பதை?” ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஒரு சின்ன குண்டூசி விழுந்துவிட்டது. குண்டூசியைக் காணோம் என்று சொன்னார் தொலைத்தவர். உடனே, என் கண்ணில் அது தென்பட்டுவிட்டது. இதோ இருக்கிறது என்று எடுத்துக் கொடுக்கிறேன். கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு யானை வந்து நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். யானையைக் காணோமே காணோமே என்று தொலைத்தவன் தேடுவானா? குண்டூசியைத் தொலைத்துவிட்டுத் தேடுவதில் நியாயம் இருக்கிறது. யானையைத் தொலைத்துவிட்டுத் தேடுவது நியாயமா? யானையைத் தேடி எடுத்துக் கொடுக்க வேண்டியது அவசியமா? உலகத்தில் விஷ்ணு யார் என்று விளக்க முடியுமா? அப்படிக் கேட்ட உன்னை நொந்து கொள்வதா? என்னை நொந்து கொள்வதா? அறிந்த விஷயத்தைப் பற்றிச் சொல் என்றால், என்னால் ஒருநாளும் முடியாது. எதைப் பற்றிச் சொன்னாலும் பேசியிருப்பேன். விஷ்ணு யார் என்று கேட்டு விவரிக்கச் சொன்னால், தலையில் இடித்துக் கொள்வது தவிர, வேறு என்ன செய்ய முடியும்?” என்று நொந்து கொண்டானாம் பிரகலாதன்.tks nalini gopalan #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
3.9K views
2 months ago
ஜீவன் இருக்கும்போதே உன்னை அடைய வேண்டுகிறேன் குருராயா.. நிச்சயம் எனக்கு இதை அருள வேண்டுகிறேன் குருராயா.. சகல ஞானங்களையும் தர வேண்டுகிறேன் குருராயா.. உனை பக்தி செய்யும் புத்தியை வேண்டுகிறேன் குருராயா.. நோயற்றவாழ்வு எனக்கருள வேண்டுகிறேன் குருராயா.. ஏற்றத்தை வாழ்வில் தந்திட வேண்டுகிறேன் குருராயா.. நல்லவனாக யாவரும் போற்றும்படி வேண்டுகிறேன் குருராயா.. யாவருக்கும் ப்ரியமானவனாக இருக்க வேண்டுகிறேன் குருராயா.. பரிசுத்தமான உள்ளம் எனக்கு தந்திட வேண்டுகிறேன் குருராயா.. அருள்மழை சதா பொழிய வேண்டுகிறேன் என் குருராயா... ❇️🙏குரு ராகவேந்திரர் திருவடி சரணம்🙏❇️ 04.06.2024... நேசமுடன் விஜயராகவன்.... #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
Devarajan Rajagopalan
1.3K views
2 months ago
🌾 Rice Bag & Grocery Support for Small Temples - A min of ₹5,000 per small temple per month is required to provide rice bags and essential groceries for the daily needs of the temple (prasadam) or the temple priest family. Since October 2022, we have been supporting three temples but are unable to continue regularly due to shortage of funds, and with your contribution we can sustain this service without interruption and extend it to more small temples — A humble appeal from Devarajan N.R. (NRD) — leading the Brahmin (GC) Political Party since 2017, with 10,000+ volunteers across India, which contested 5 MP seats from Tamil Nadu in the 2024 elections and Sai Sudha Deva Trust (SSDT), which has supported 150+ students and impacted 1000+ lives 🌾 We welcome monthly donors of ₹500 / ₹5k / ₹10k to help us sustain and expand our work. Together, we can uplift lives with dignity and purpose. A/C Name: SAI SUDHA DEVA TRUST A/C No: 23280200005800 IFSC: FDRL0002328 Bank: Federal Bank Upi id: Saisudha5800@fbl GPay: 9362439124 Let your monthly support become someone’s lifeline. Thanks & Regards, Devarajan N.R (NRD) President – Brahmin (GC) Political Party - DevaPoliticalParty.org Chairman – SaiDevGroup.com President – SaiSudhaDevaTrust.org 📱 +91 93624 39124 (Note: The attached content is for broader outreach and not directly related to this post.) #SaiSudhaDevaTrust #HelpingHelps #TransformLives #SocialImpact #IndiaCares #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #ஶ்ரீ குரு ராகவேந்திர. #குரு ராகவேந்திர சுவாமிகள் #ராகவேந்திர #ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.1K views
2 months ago
ராகவேந்திரரின் கருணை: ஒரு சிறு கதை முன்னொரு காலத்தில், துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள மந்திராலயத்திற்கு மிக அருகில் ஒரு ஏழைத் தொழிலாளி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ராகவேந்திரர் என்றால் உயிர். தினமும் குருவின் பிருந்தாவனத்தை தரிசனம் செய்யாமல் அவன் வேலைக்குச் செல்ல மாட்டான். ஒருமுறை அவனது ஒரே மகனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பல வைத்தியர்கள் பார்த்தும் பலனில்லை. குழந்தையின் நிலைமை மோசமானதைக் கண்டு அந்தத் தந்தை கதறி அழுதான். "இனி ராகவேந்திரரே கதி!" என்று ஓடி வந்து பிருந்தாவனத்தின் முன் விழுந்து அழுதான். "குருதேவா! நீயே உலகைக் காப்பவர் என்பார்களே... என் மகனைக் காக்க மாட்டாயா? உன் மீது நான் வைத்த பக்தி உண்மையென்றால் என் பிள்ளையை எழுப்பித் தா!" இரவு முழுவதும் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தபடியே அங்கேயே உறங்கிவிட்டான். அப்போது அவனது கனவில் ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் கையில் துளசி மாலை இருந்தது. அவர் புன்னகையுடன், "மகனே, அழுவதை நிறுத்து. உன் இல்லத்திற்குப் போய் பார், அங்கே ஒரு அதிசயம் காத்திருக்கிறது," என்று கூறி மறைந்தார். அவன் திடுக்கிட்டு எழுந்து வீட்டிற்கு ஓடினான். அங்கே அவனது மகன் ஆரோக்கியமாக எழுந்து அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அவன் மனைவி ஆச்சரியத்துடன் சொன்னாள்: "நேற்று நள்ளிரவில் ஒரு பெரியவர் வந்திருந்தார். அவர் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தக் ரகஷை அவன் நெற்றியில் வைத்தார். வைத்த அடுத்த நிமிடம் காய்ச்சல் காணாமல் போய்விட்டது!" பக்தன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். தன் பக்தனின் அழுகுரலைக் கேட்டு, அந்த மகா குருவே நேரில் வந்து அருள் புரிந்ததை எண்ணி மெய்சிலிர்த்தான். கதையின் நீதி தூய்மையான பக்திக்குத் தெய்வம் எப்போதும் செவிசாய்க்கும். நம்பிக்கையோடு அழைத்தால், ராகவேந்திரர் இன்றும் சூட்சும வடிவில் வந்து பக்தர்களைக் காப்பார்.. ஸ்ரீமன் மூலராமோ விஜயதே... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #✨கடவுள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.3K views
2 months ago
கன்றைக் காத்த ராகவேந்திரர் மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (ராயர்) ஜீவ சமாதி அடைவதற்கு முன்னால், மடத்தில் அமர்ந்து சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டும், பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டும் இருந்த காலகட்டம் அது. ஒரு நாள் மதிய வேளை, ராயர் மடத்தில் பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதம் வழங்கிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மடத்தின் வாசலில் ஒரு பசு மாடு கத்தும் சத்தம் கேட்டது. அது சாதாரணக் குரல் அல்ல; ஏதோ ஒரு ஆபத்தில் தன் குழந்தையைக் காப்பாற்றக் கோரும் ஒரு தாயின் தீனமான கதறல் போல இருந்தது. மடத்திற்குள் வந்த பசு யாராலும் தடுக்க முடியாதபடி, அந்தப் பசு நேராக ராயர் அமர்ந்திருந்த சந்நிதிக்குள்ளேயே ஓடி வந்தது. அங்கிருந்த சீடர்கள் அதை விரட்ட முயன்றனர். ஆனால், ராயர் அவர்களைத் தடுத்து, "விட்டுவிடுங்கள், அந்தத் தாய்க்கு ஏதோ பெரும் குறை இருக்கிறது. அதைச் சொல்லவே என்னிடம் வந்திருக்கிறது" என்றார் அன்போடு. பசு ராயரின் அருகில் வந்து நின்று, தன் கண்களில் கண்ணீர் வழிய, கன்றைக் காணாத ஏக்கத்தில் ஓவென்று கத்தியது. பின்னர், ராயரின் காவி உடையை மெதுவாகத் தன் வாயால் கவ்வி இழுத்து, வெளியே வருமாறு சைகை காட்டியது. ஆபத்தான தருணம் ராயர் உடனே எழுந்து அந்தப் பசுவின் பின்னாலேயே சென்றார். சீடர்களும் பதற்றத்துடன் பின்தொடர்ந்தனர். மடத்திற்கு வெளியே சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றின் அருகே பசு ஓடிச் சென்று நின்றது. அங்கே போய் பார்த்தபோதுதான் உண்மை புரிந்தது! அந்தப் பசுவின் சிறிய கன்றுக்குட்டி, புற்களை மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்தக் ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. கிணற்றில் சிறிதளவு தண்ணீரும், நிறைய சேறும் இருந்தன. கன்றுக்குட்டி சேற்றுக்குள் சிக்கி, மேலே வர முடியாமல், மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. ராயரின் அருள்வாக்கு கிணறு மிகவும் ஆழமாக இருந்ததாலும், சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருந்ததாலும், சீடர்கள் கீழே இறங்கத் தயங்கினர். நேரம் செல்லச் செல்ல கன்றுக்குட்டியின் பலம் குறைந்து கொண்டே வந்தது. பசு மாடோ கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கதறியது. ராயர் தன் கையில் இருந்த கமண்டலத் தீர்த்தத்தை கைகளில் எடுத்து, ஸ்ரீ மூலராமரை மனமுருக வேண்டி, அந்தக் கிணற்றுக்குள் தெளித்தார். பின்னர் தன் கையை உயர்த்தி கன்றுக்குட்டியை நோக்கி ஆசி வழங்கினார். ​"அஞ்சாதே... ஸ்ரீ ராமனின் அருளால் உனக்கு ஆயுள் கூடும். மேலே வா!" என்று ராயர் கம்பீரமான குரலில் கூறினார். ​நடந்த அதிசயம்! ​என்ன ஆச்சரியம்! அடுத்த சில நொடிகளில், சேற்றில் மூழ்கிக் கொண்டிருந்த கன்றுக்குட்டிக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ தெரியவில்லை, அது சட்டென்று துள்ளிக் குதித்து எழுந்தது. ​அதே நேரத்தில், அங்கிருந்த சீடர்களுக்கும் ஊர் மக்களுக்கும் ஒருமித்த தைரியம் பிறந்தது. அவர்கள் வேகமாக ஒரு பெரிய கயிற்றைக் கொண்டு வந்து, மிகவும் சாதுரியமாகக் கிணற்றுக்குள் இறக்கி, கன்றுக்குட்டியின் உடலில் கட்டி, அதை பத்திரமாக மேலே தூக்கினர். ​தாயும் சேயும் ​கிணற்றை விட்டு வெளியே வந்த கன்றுக்குட்டி, எந்தக் காயமும் இன்றி துள்ளிக் குதித்து ஓடித் தன் தாயிடம் சென்றது. பசு மாடு தன் கன்றை ஆசையோடு நக்கிக் கொடுத்து மகிழ்ந்தது. ​பின்னர், அந்தப் பசுவும் கன்றுக்குட்டியும் ராயரின் பாதங்களுக்கு அருகில் வந்து, தங்கள் தலைகளை அவர் காலடியில் சாய்த்து நன்றி தெரிவிப்பது போல வணங்கின. ராயர் புன்னகையுடன் இரண்டின் தலைகளிலும் கை வைத்து, "எல்லா உயிர்களிலும் அந்தப் பரமாத்மா இருக்கிறான். நலமாய் இருங்கள்" என்று மந்திரித்த அட்சதையைத் தூவி ஆசிர்வதித்தார்.. ஸ்ரீமன் மூலராமோ விஜயதே... #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✨கடவுள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள்