ஆன்மீக

PEN TV TAMIL
1.5K views
7 days ago
இன்றைய ( 01.08.2026 ) சனிக்கிழமை, ஷிர்டி சாய்பாபா காலை தரிசனம் 🙏ஓம் சாய்ராம் 🕉️ சாய்பாபாவின் அருளால், உங்களின் பிராத்தனைகள் நிறைவேறட்டும்🙏 #பக்தி #ஆன்மீகம் #சீரடி சாய்பாபா #devotionalcontents #சாய்பாபா 🙏
Nethaji
522 views
18 days ago
#ஆன்மிகம் #🙏கோவில் #👏Inspirational videos #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏 22, 2026 *திருச்சிற்றம்பலம்* *திருநாவுக்கரசர் அருளிய ஐந்தாம் திருமுறை - தேவாரம்* *திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்* *பாடல்*: *பரப்பு ஒப்பானைப்* *பகல்இருள் நன்னிலா* *இரப்பு ஒப்பானை* *இளமதி சூடிய* *அரப்பு ஒப்பானை* *அரத்துறை மேவிய* *சுரப்பு ஒப்பானைக்* *கண்டீர்நாம் தொழுவதே.* - 5.002.04 *பொருள்* : *எங்கும் பரந்து விரிந்திருக்கும் ஆகாயம் போன்றவனும், பகல் பொழுது, இருள் நிறைந்த இரவுப் பொழுது, குளிர்ந்த நல்ல நிலவொளி ஆகிய அனைத்துமாய் விளங்குபவனும் தன்னிடம் வந்து இரந்து நிற்கும் அடியார்களின் வறுமையையும், அறியாமையையும் நீக்கி அருள்வதில் நிகரற்றவனும், தன் சடாமகுடத்தில் இளம்பிறைச் சந்திரனைச் சூடியவனும் நஞ்சுடைய பாம்பை ஆபரணமாகத் தன் உடலில் தரித்தவனும், திருஅரத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி வாழ்பவனும், கறவைப்பசு தன் கன்றை நினைத்துத் தானாகவே பாலைச் சுரப்பது போல, அடியவர்கள் மீது எல்லையற்ற கருணையோடு அருளைச் சுரக்கும் வள்ளலுமான சிவபெருமானைக் கண்டு நாம் நாளும் தொழுது உய்ய வேண்டும்.* *திருச்சிற்றம்பலம்* *அருள்தரும் ஆனந்தநாயகியம்மை உடனாகிய அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!!*
Nethaji
727 views
25 days ago
Jul 14, 2026 *திருச்சிற்றம்பலம்* *திருமூல நாயனார் அருளிய பத்தாம் திருமுறை* *முதல் தந்திரம் - உபதேசம்* *பாடல்* : *மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்* *மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்* *ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்* *பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.* - 10.01.04.19 *பொருள்* : *சிவந்த ஒளியையுடைய மாணிக்கக் கல்லின் உள்ளே, பச்சை நிறமுடைய மரகதத்தின் ஒளி கலந்து வீசுவதைப் போல, மாணிக்கக் கற்களால் கட்டப்பட்ட ஒரு பெரும் மாளிகையின் உள்ளே, மரகதக் கற்களால் செதுக்கப்பட்ட அழகிய மாடம் அமைந்திருப்பதைப் போல, மாற்றுக் குறையாத சுத்தமான ஆணிப்பொன்னால் ஆன தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற அழகிய பிரபஞ்ச நடனத்தை, அந்த நடனத்தை மனதாரப் போற்றி, விரும்பி, அன்போடு வணங்கித் துதித்த சிவயோகியர்கள் எத்தகைய அளப்பரிய பெரும்பாக்கியத்தைப் பெற்றார்கள்!* *சிவப்பும் (சிவன்) பசுமையும் (சக்தி) ஒளியாகவும், மாளிகையாகவும் இணைந்து ஆணிப்பொன் அம்பலத்தில் ஆடும் பேரின்ப நடனத்தை, மனமுருகி வணங்குபவர்கள் மறுபிறப்பற்ற முக்தி என்னும் பெரும்பேற்றினை அடைவார்கள் என்பதே இப்பாடலின் முழுமையான சாரமாகும்.* *திருச்சிற்றம்பலம்* #ஆன்மிகம் #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #👏Inspirational videos