aanmeega thagavul.

saravanan
585 views
15 days ago
#aanmeega thagavul. நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ?* *இன்று மே மாதம் 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும்.* *ஜோதிட ரீதியாக சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி பயணிப்பார். அந்த வகையில், பரணி மூன்றாம் பாதத்தில் ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரத்தில் முழுவதுமாக சூரியன் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலம் ஆகும்.* *கிருத்திகை நட்சத்திரம் என்பது அக்னி பிழம்பான நட்சத்திரமாகும். முருகன் கிருத்திகை நட்சத்திரத்தில் தான் அவதரித்தார்.* *கிருத்திகை என்பதே அக்னி நட்சத்திரம். அந்த நட்சத்திரத்திற்குள் சூரியன் பிரவேசிப்பது தான் அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.* *அறிவியல் ரீதியாக சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும் காலமே இந்த அக்னி நட்சத்திர காலமாகும்.* *இந்த காலகட்டத்தில் சூரியனின் கதிர்கள் மிக பக்கமாக இருப்பதால் அதீத தாக்குதலை ஏற்படுத்துகிறது.* *சூரியன் மிகவும் தீவிரமாக கதிர்வீச்சு தரும். வெப்பநிலை அதிகபட்சமாக உயரும். நிலம், காற்று, நீர் அனைத்தும் சூடாக இருக்கும்.* *இந்த காலகட்டத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய வெயிலில் வெளியே போகாமல் இருப்பது நல்லது.* *இலகுவான, குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவது நன்மை பயக்கும். நீர் காய்கறிகள், இளநீர், கம்பங்கூழ், பழைய சாதம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.* *அக்னி நட்சத்திரம் என்பது ஜோதிட ரீதியிலும், இயற்கை ரீதியிலும் வெயில் உச்சத்தை அடையும் காலம். இந்த காலத்தில் உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.* *அக்னி நட்சத்திரத்தில் சுப காரியங்கள் செய்யலாமா ?* *அக்னி நட்சத்திர காலத்தில் வாடகை வீட்டுக்கு குடி போகலாம். திருமணத்திற்கான வேலைகளை எல்லாமே செய்யலாம்.* *திருமணத்திற்கு பூ வைப்பது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம் செய்வது போன்றவர்றை செய்யலாம்.* *வளைகாப்பு இந்த காலத்தில செய்யலாம். 5,7,9 மாதத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக வளைகாப்பு செய்து கொள்ளலாம்.* *மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம்.* *கடை கட்டுவது, மண்டபம் கட்டுவது போன்றவற்றை செய்யலாம்.* *குலதெய்வ வழிபாடுகளைச் செய்யலாம்.* *அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடாதவை என்ன ?* *அக்னி நட்சத்திர காலத்தில் புதிதாக கட்டிய சொந்த வீடுகளுக்கு குடி போவதை தவிர்ப்பது நல்லது.* *மொட்டை அடிப்பது, காது குத்துவதைத் தவிர்ப்பது நல்லது.* *மரங்களை வெட்டக் கூடாது. கூரை வேய்வது, ஓடு மாற்றும் வேலைகளை தவிர்ப்பது நல்லது.* *விதை விதைப்பதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.* *வழிபாடு முறைகள் :* *அக்னி நட்சத்திர காலத்தில் ஏதேனும் சுப விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாக செய்யலாம்.* *அதற்கு முன்பாக குலதெய்வத்துக்கு அல்லது இஷ்ட தெய்வத்துக்கு குளிரான அபிஷேகம் செய்வது நல்லது.* *குறிப்பாக, சிவன் கோயில்களுக்கு அபிஷேக பொருள்களை வாங்கித் தருவது நன்மை பயக்கும்.* *சிவலிங்கத்திற்கு மேல் இருக்கும் தாரா பாத்திரத்திற்கு பன்னீர், இளநீர் வாங்கி கொடுக்கலாம்.* *தயிர், பால் போன்றவற்றை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுப்பது நன்மை பயக்கும்.* *விலங்குகள், பறவைக்கு தண்ணீர் வைப்பது நல்லது.*
saravanan
625 views
17 days ago
#AANMEEGA thagavul.. வாஸ்து சக்திகள் மற்றும் குசா சக்திகள் பெருக.* *நம்முடைய இல்லத்தில் வாஸ்து சக்திகள் பெருகவும், தீய சக்திகள் அண்டாது விலகவும், குசா சக்திகள் இல்லத்தில் குடி கொள்ளவும் சித்த பிரான்கள் எண்ணற்ற நடைமுறைப் பழக்க வழக்கங்களை அளித்துள்ளனர்.* *எந்த அளவிற்கு அந்த நற்பழக்கங்களை நமது வாழ்க்கையில் மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நற்சக்திகள் நமது இல்லத்தில் குடியேறி அமைதியான ஆனந்தமயமான வாழ்க்கையை வாழலாம் என்பது உறுதி.* *அவை* 1. மாலையில் விளக்கு வைத்த பின் தலை வாரக் கூடாது. 2. தலை வாரிய முடியை குப்பையில் சேர்க்கக் கூடாது, முடியைச் சுற்றி வீட்டு மூலை முடுக்குகளில் எறியக் கூடாது. வெளியே எறிதலும் தவறு. உதிரும் முடிகளை தனியே எடுத்து வைத்து அவ்வப்போது ஓடும் நதிகள், கடல்களில் சேர்த்தலே முறை. இதுவே இலட்சுமி கடாட்சம் பெறும் அடிப்படை பூஜையாகும். 3. மாலையில் விளக்கு ஏற்றும்போது கொல்லைக் கதவை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதலே உத்தமம்.ப்ளாட்டுகளில் குடி இருப்போர் கொல்லைப் பக்கம் இருக்கும் ஜன்னல், கதவுகளை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதல் நலம். 4. வீட்டில் அழுக்குத் துணிகள், தேவையில்லாத குப்பைகளை சேர விடக் கூடாது. வீட்டில் எந்தத் திசையில் அழுக்குத் துணிகள், குப்பைகள் சேருகின்றனவோ அந்தத் திசையில் தோஷங்கள் பெருகும்.அதனால் அந்தத் திசையிலிருந்து நமக்கு வர வேண்டிய நற்பலன்கள் வராது என்பதை நினைவில் கொள்ளவும். 5. கீழ்க்கண்ட வாஸ்து துதிகள் சிறப்பான எண் கணித சூத்திரத்தின் அடிப்படையில் சித்தர்களால் அருளப்பட்டவை.தரிசன சகாய க்ஷேம க்ருபா மூர்த்தி      ஸ்ரீவாஸ்து தேவாய நமஹ நீள்நெடுங்கால் கொண்டு புவியோடு வானமும்      தலையோடு அளந்த பெருமாள் அவதார வாஸ்து தேவா நமஹ முதல் துதி 26 அட்சரங்களைக் கொண்டு (2+6) எட்டு திக்குகளையும், இரண்டாம் துதி 42 அட்சரங்களைக் கொண்டு (4+2) சுக்கிர சக்திகளையும் குறிக்கும். 6. திருக்கோயில்களில் செவ்வாய்க் கிழமைகளில் நான்கு தீபங்களையும், வெள்ளிக் கிழமைகளில் ஆறு தீபங்களையும் ஏற்றி வந்தால் திக்கு தோஷங்கள் நீங்கும். 7. தலை முடி மட்டும் அல்லாது உடலில் உள்ள சிறு முடிகள், நகத் துண்டுகள் போன்றவை தரையில் விழுந்தாலும், குப்பையில் சேர்ந்தாலும் வாஸ்து தோஷங்கள் ஏற்படும். 8. தினமும் சுவாமி படங்களைத் துடைத்து சுத்தம் செய்தலால் இத்தகைய தோஷங்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம். 9. பட்டை லிங்கம் எழுந்தருளிய கோயில்களில் அந்தக் குறிப்பிட்ட லிங்கத்தில் அமைந்துள்ள பட்டைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் திக்கு தோஷங்கள் தீர வழி பிறக்கும். *பொதுவாக, எட்டு அல்லது 16 தீபங்களை, எட்டு, பதினாறு திசைகளில் பட்டை லிங்கக் கோயில்களில் ஏற்றி வழிபடுதல் நலம். சிறப்பாக* *சமயபுரத்தில் உள்ள ஸ்ரீபோஜேஸ்வரர் ஆலயம், ஐயர்மலை திருத்தலம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருக்கோயில் (திருவானைக் கோவில், திருச்சி) போன்ற திருத்தலங்கள் திக்கு வழிபாடுகளுக்கு உகந்தவை.* *நன்றி : அகஸ்திய விஜயம் இதழ்.*
saravanan.
887 views
2 months ago
#AANMEEGA thagavul.. புடவை சாத்தி வழிபடும் அதிசயம் சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?_* * 🛕🛕🛕வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நீரில் இருந்து வெளிப்படும் சிவலிங்கம், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் சிவன் கோவில், கிரகண நேரத்திலும் திறக்கப்படும் சிவன் கோவில், இரவு நேரத்தில் திறந்திருக்கும் சிவன் கோவில் என எத்தனையோ வித்தியாசமான விசித்திரமான சிவன் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல் சிவலிங்கத்திற்கு புடவை சாத்தி வழிபாடு நடத்தப்படும் ஒரு அதிசய சிவன் கோவில் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். > பல ஆச்சரியப்பட வைக்கும், விநோத வழிபாடுகள், மர்மங்கள் கொண்ட பல கோவில்கள் இந்தியாவில் பல உள்ளன. அதிலும் வட இந்தியாவில் இது போன்ற கோவில்கள் பல உள்ளது. பிருந்தாவனத்தின் புனித மண்ணில் ஒவ்வொரு மண்துகளிலும் பகவான் கிருஷ்ணரின் லீலைகள் இன்னும் உயிருடன் ஒலிக்கின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். அந்த மண்ணில் உள்ள புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குவது வம்சிவட் பகுதியில் அமைந்துள்ள கோபேஷ்வர் மகாதேவ் மந்திர். இங்கு உள்ள சிவலிங்கத்திற்கு ஆடையாக புடவை சாத்தி வழிபடும் விநோத நடைமுறை உள்ளது. இதற்கு பின்னால் ஒரு ஆழ்ந்த தெய்வீக நிகழ்வு உள்ளது என புராண கதைகளில் சொல்லப்படுகிறது. > சிவனுக்கு ஏற்பட்ட ஆசை : ஒரு பெளர்ணமி இரவில், யமுனை நதிக்கரையில் பகவான் கிருஷ்ணர், கோபியர்களுடன் ராஸ லீலா நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அந்த லீலை என்பது சாதாரண நடனம் அல்ல; அது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றிணையும் ஆன்மிகத் திருவிழா ஆகும். இந்த தெய்வீக ராஸ லீலையின் மகிமையை அறிந்த சிவபெருமான், அதைப் பார்க்கவும் அதில் பங்கேற்கவும் ஆசை கொண்டார். "கிருஷ்ணரின் பரமானந்த லீலையை நான் நேரில் காண வேண்டும்" என்ற ஏக்கம் அவருள் எழுந்தது. இந்த நிகழ்வை காணவும், அதில் கலந்து கொள்ளவும் சிவபெருமான் வம்சிவட்டிற்கு வந்த போது, அங்கு பிருந்தாவனத்திற்கு காவல் பொறுப்பில் இருந்த பிருந்தாதேவி அவரைத் தடுத்து நிறுத்தினார். "இது ராஸ லீலை. இங்கு கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்கள் பங்கேற்க முடியாது" என்றார். > அந்த வார்த்தைகள் சிவபெருமானின் மனதை உருக்கியது. பரமசிவனே ஆனாலும், பக்தியின் லீலையில் விதிகள் உள்ளன. அவர் நுழைவாயிலில் அமைதியாக அமர்ந்து விட்டார். அந்த ஏக்கம், அந்த வருத்தம், அந்த ஆழ்ந்த பக்தி அனைத்தும் பிருந்தாதேவியின் உள்ளத்தைத் தொட்டது. பிருந்தாதேவி சிவபெருமானிடம், "குசும் சரோவரில் நீராடி வாருங்கள்" என்று கூறினார். சிவபெருமான் அந்த புனிதத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும், அவர் அழகிய கோபியர் ரூபத்தை பெற்ற அதிசயம் நிகழ்ந்தது.இப்போது அவர் ஆண் ரூபத்தில் இல்லை. பரிபூரண பக்தி நிறைந்த கோபியர்களில் ஒருவராக மாறி இருந்தார். அந்த மாற்றம் வெறும் புற தோற்றம் அல்ல; அது ஆன்மாவின் லய நிலை. அந்த கோபியர் ரூபத்தில் சிவபெருமான் ராஸ லீலையில் கலந்து கொண்டார். கிருஷ்ணருடன் நடனமாடி பரமானந்தத்தில் மூழ்கினார். அந்த நேரத்தில் கிருஷ்ணர் அவரை அன்போடு "கோபேஷ்வர்" என்று அழைத்தார். கோபியர்களின் ஈசன் என்று இதற்கு பொருள். இதனால் சிவன் "கோபேஷ்வர் மகாதேவ்" என்ற திருநாமம் பெற்றார். *ஏன் புடவை அணிவிக்கப்படுகிறது?* இந்த தெய்வீக நிகழ்வின் நினைவாக, அந்தத் தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு இன்றும் புடவை அணிவிக்கப்படுகிறது. சிவன் கோபியர் ரூபத்தில் ராஸ லீலையில் கலந்து கொண்டதை நினைவூட்டும் மரபாக இது தொடர்கிறது. மேலும், இக்கோவிலில் சிவபெருமானுக்கு நைவேத்யம் செய்யப்படுவது கிடையாது என்பது ஐதீகம். சிவபெருமான் தினமும் கைலாயத்திற்கு சென்று உணவருந்தி விட்டு வருகிறார் என்ற பக்தி நம்பிக்கை இங்குள்ள மக்களிடம் நிலவுகிறது. வம்சிவட்டில் கோபியர் ரூபத்தில் சிவன் தரிசனமளிக்கும் அழகிய உருவத்தை இன்றும் தரிசிக்க முடியும். பரம்பொருளை அடைய ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையாது, பதவி, பெருமை எதுவும் தடையல்ல. பக்தி மட்டுமே தகுதி. சிவனும் கிருஷ்ணரும் வேறு அல்ல; ஒரே பரம்பொருளின் இரு பரிமாணங்கள்.பக்தியின் முன் பரமசிவனே தன்னை மாற்றிக் கொண்டார் என்றால், பக்தியின் மகிமை எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்த்தவே இந்த ஆலயத்தில் இன்றும் சிவனுக்கு புடவை சாத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. 🍁🍁🍁