வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்லும் நமது கழக வீரர்களே..!
தபால் ஓட்டு எண்ணும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான நடைமுறைகள்
தபால் ஓட்டு பொதுவாக இரண்டு கவர்களில் இருக்கும்.
பெரிய கவர் (Cover) ஒன்று
சின்ன கவர் (Cover) ஒன்று
பெரிய கவரின் உள்ளே சின்ன கவர் வைக்கப்பட்டு, பெரிய கவர் ஒட்டப்பட்டு இருக்கும்.
சின்ன கவரில் தான் postal ballot paper எனும் அந்த வாக்காளர் அல்லது அந்த அரசு ஊழியர் வாக்கு செலுத்திய வாக்கு சீட்டு இருக்கும்.
பெரிய கவரில் அந்த வாக்கு சீட்டை( postal ballot paper) வைத்தால் அது செல்லாத ஓட்டாகும்.
சின்ன கவரில் அவர்கள் வைத்தால் மட்டுமே அந்த வாக்கு செல்லுபடியாகும்.
அது போன்று, postal ballot paper எனும் வாக்குச்சீட்டில் தான் விரும்பிய ஒரு சின்னத்துக்கு மட்டுமே டிக் அடிக்க வேண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட சின்னங்களில் டிக் அடித்தால் அந்த ஓட்டு செல்லா ஓட்டாகும்
அதுபோலவே பெரிய கவரில் declaration form (13A) ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் அந்த வாக்காளரின் கையொப்பம் கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.
மேலும் அந்த வாக்காளர் குறித்து சான்றளிப்பு செய்யப்பட்ட உயர் அலுவலரின் கையொப்பம் (attestation form) கட்டாயம் போட்டுருக்க வேண்டும். கூடவே postal ballot paper - இன் Serial Number அவசியம் குறிப்பிட்டு இருக்க வேண்டும்
இவற்றில் எது (இரண்டு கையெழுத்து, Serial Number) இல்லையென்றாலும் அந்த வாக்கு செல்லாத வாக்கு தான்.
அதுபோன்று தகுதியான வாக்கு, தகுதியில்லாத வாக்கு என வாக்குகளை முதலில் இரண்டு வகையாக பிரித்து தனித்தனியாக இரண்டு பெட்டிகளில் (Tray) போடுவார்கள்.
அப்படிப் போடும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது இரட்டைஇலை சின்னத்திற்கு டிக் செய்யப்பட்ட படிவத்தை சரியாக செல்லுபடியாகும் அந்த பெட்டியில் போடுகிறார்களா என நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.
அதுபோலவே தபால் வாக்குகள் எண்ணப்பட்டாலும் முடிவுகளை உடனே அறிவிக்க மாட்டார்கள். EVM வாக்குகளை எண்ணிய பிறகு கடைசியில் தான் அறிவிப்பார்கள்.
ஆதலால் தயவுசெய்து தபால் ஓட்டுகளை எண்ணிக்கை விபரங்களை நீங்கள் குறித்துக் கொள்வதோடு இறுதி வரை இருந்து அதைக் கண்காணிக்க வேண்டும்.
நான்கு முனைப்போட்டி இருப்பதால், வெற்றி வித்யாசம் 50 - 100 ஓட்டுக்களாய்க் கூட இருக்கலாம். ஆதலால் தயவு செய்து பொறுமையாகக் கடைசிவரை இருந்து கண்காணிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதியில் வந்துவிடாதீர்கள்.
நீங்க விழிப்பா இருக்கற அளவு தான், அதிகாரிகள் சரியாகச் செயல்படுவாங்க. நீங்க தேமேன்னு ஒக்கார்ந்திருந்தால், அவனுக இஸ்ட்டத்துக்கு திமுகவிற்கு சாதகமா நடந்துக்குவாங்க.
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் அதிகாரிகளில் 90% பேர் வாத்தியார்கள் தான். மொத்த வாத்தியார்களில் 90% பேர் திமுகவினர் தான். ஆகவே மிகக் கவனமாய்ச் செயல்படுங்கள்.
வெற்றி உறுதியாகிவிட்டது நம் அண்ணாதிமுகவிற்கு. தைரியமுடனும் விழிப்போடும், வாக்கு எண்ணிக்கையின் போது செயல்படுங்கள்.
ஓரிரு நாட்களில், நமது கழகப் பொதுச் செயலாளர், அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்பது உறுதியாகி விட்டது.
வெற்றி நமதே..!
#✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார்✌ #✌எடப்பாடியார் பேரவை🌱