அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
701 views
10 days ago
உதயநிதியை தூக்குங்க.. வருவது வரட்டும் பார்த்து கொள்ளலாம்.. அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி முடிவெடுத்த முதல்வர் விஜய்.. இன்னைக்கு என்னை எல்லை மீறி பேசுறவஎ, நாளைக்கு என் அமைச்சரவையில் இருக்கும் பெண்களை தப்ப பேசுவார்! இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியலைன்னா என் அரசாங்கத்துக்கு அர்த்தமே இல்லை. பின்விளைவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்... எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன்! தமிழக அரசியலில் இப்ப ரொம்பவே பரபரப்பா போயிட்டு இருக்கிற விஷயம் என்னன்னா, திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிற உதயநிதி ஸ்டாலின் மேல பாய்ஞ்சிருக்க கடுமையான வழக்குகள் தான். நேத்து தஞ்சாவூர்ல நடந்த ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துல கலந்துகிட்டு பேசும்போது, ஆளுங்கட்சியையும் அவங்களோட நிர்வாக முறையையும் ரொம்ப கடுமையா விமர்சிச்சு பேசினாரு.... இந்த பேச்சுதான் இப்போ அரசியல் வட்டாரத்துல பெரிய விவாதமா மாறி, அவர் மேல ஆறு பிரிவுகளின் கீழ போலீஸ் கேஸ் பதிவு பண்ணிட்டாங்க. வழக்கு போட்டதோட நில்லாம, இன்னைக்கு விடியற்காலையிலேயே சென்னையில் இருக்கிற அவரோட வீட்ல இருந்து போலீசார் ரொம்ப பாதுகாப்பா தஞ்சைக்கு விசாரணைக்காக கூட்டிட்டு போயிருக்காங்க. இந்த அதிரடி நடவடிக்கையால தமிழ்நாட்டு அரசியல் களம் முழுசா சூடு பிடிச்சிருக்கு. போலீஸ் வண்டில அவரை கூட்டிட்டு போற தகவல் வெளிவந்ததும், தஞ்சையிலும் சென்னையிலும் இருக்கிற திமுக தொண்டர்கள் குவிய ஆரம்பிச்சிட்டாங்க. இதனால அந்த இடங்கள்ல கடுமையான பதட்டமான சூழல் நிலவுது. இந்த நேரத்துல, உளவுத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரா முதல்வர் விஜய்யை சந்திச்சு ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்காங்க. "சார், உதயநிதியை இப்ப கைது பண்ணா கண்டிப்பா மாநிலம் முழுவதும் பெரிய அளவுல போராட்டங்கள் வெடிக்கும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும்"னு சொல்லி இருக்காங்க. இதைக் கேட்டதும் முதல்வர் விஜய் கொஞ்சம் கூட யோசிக்காம ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு பதிலை வெளிப்படுத்தினாரு.... இன்னைக்கு அவன் என்னை பேசுறான், நாளைக்கு என் அமைச்சரவையில் இருக்கிற பெண்களைத் தப்பா பேசுவான். ஜனநாயக முறைப்படி இல்லாம இப்படி பேசுறவங்களை உடனே கைது பண்ணுங்க; இதனால வரப்போற பின்விளைவுகளை நான் பாத்துக்கிறேன், எதற்கும் தயாராதான் வந்திருக்கேன்"னு அதிகாரிகள்ட்ட காட்டமா சொல்லிட்டாராம். முதல்வரின் இந்த அதிரடியான உத்தரவு போலீஸ் அதிகாரிகளையே ஆச்சரியப்பட வச்சிருக்குன்னு அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்றாங்க. இந்தச் சம்பவத்தால ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் நடுவுல இருக்கிற மோதல் இப்போ உச்சத்துக்கே போயிருக்கு. எதிர்க்கட்சித் தலைவர் மேல இவ்வளவு தீவிரமான நடவடிக்கை எடுத்திருக்கிறது அரசியல் அரங்கத்துல ஒரு பெரிய திருப்பம்னு தான் சொல்லணும். திமுக தரப்புல இருந்து பலத்த சட்டப் போராட்டங்களும், வீதி இறங்கிப் போராடும் அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்பிருக்கு.... தஞ்சை நோக்கிப் போயிட்டு இருக்கிற இந்த விசாரணை தமிழ்நாட்டுல அடுத்த சில நாட்களுக்கு கடுமையான புயலைக் கிளப்புவது உறுதி. முதல்வரின் இந்த அசைக்க முடியாத உறுதியும், அதிகாரிகளின் எச்சரிக்கையும் இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டைத் தெளிவா காட்டுது. இதோட இறுதி முடிவு என்னவாகப் போகுதுன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்! #அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் #🙏தமிழக வெற்றிக் கழகம் TVK💯👍 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #😊Positive Stories📰
Muthuraju
946 views
29 days ago
5 லட்சம் லஞ்சம் 😯#cmvijay #tvk#tnpolitics #newsfeed #shorts #அரசியல் மாற்றம் #POLITICAL