திருமணமான முதல் நாளே காத்திருந்த அதிர்ச்சி:
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது 23 வயது மகளைக் கர்நாடக அமைச்சர் ஒருவரின் அண்ணன் மகனான ஷேக் அப்ரான் (வயது 28) என்பவருக்குக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் போது மணமகள் வீட்டினர் தங்கம், வைரம், ஆடம்பரக் கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த முதல் நாளிலேயே ஷேக் அப்ரான் தனது மனைவியிடம், "எனக்கு உன்னை பிடிக்கவில்லை; நான் உன்னைத் தலாக் செய்கிறேன்" எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், கணவரின் குடும்பத்தாரிடம் முறையிட்டபோது அவர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை. மேலும், தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அவளுடனே வாழ்ந்து வருவதாகவும் கூறி ஷேக் அப்ரான் மனைவியை மிரட்டியுள்ளார்.
இந்தியாவில் 'முத்தலாக்' நடைமுறை சட்டப்படி செல்லாது என்று அந்தப் பெண் எடுத்துக்கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.....
வெந்நீர் ஊற்றிக் கொடூரக் கொடுமை:
கணவர் வீட்டிலேயே தொடர்ந்து தங்கி வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை, மசாஜ் செய்யச் சொல்லி அவரின் கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவர் மீது வெந்நீரை ஊற்றிக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளதாக அப்பெண் புகார் கூறியுள்ளார்.
"உன்னை வீட்டிற்கு அழைத்து வந்ததே வீட்டு வேலைகளைச் செய்வதற்காகத் தான். விருப்பம் இல்லை என்றால் இப்போதே வீட்டை விட்டு வெளியேறிவிடு' எனக் கூறி ஷேக் அப்ரான் அப்பெண்ணை மிரட்டி வெளியேற்றியுள்ளார்.
புகார் பதிவு செய்ய லஞ்சம் கேட்ட மகளிர் போலீஸ்:
காயங்களுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற இளம் பெண், இது குறித்துப் பெங்களூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்து 8 மாதங்களாகியும், ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர் என்பதால் ஷேக் அப்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
வெந்நீர் ஊற்றிக் கொடூரக் கொடுமை:
கணவர் வீட்டிலேயே தொடர்ந்து தங்கி வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை, மசாஜ் செய்யச் சொல்லி அவரின் கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவர் மீது வெந்நீரை ஊற்றிக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளதாக அப்பெண் புகார் கூறியுள்ளார்.
"உன்னை வீட்டிற்கு அழைத்து வந்ததே வீட்டு வேலைகளைச் செய்வதற்காகத் தான். விருப்பம் இல்லை என்றால் இப்போதே வீட்டை விட்டு வெளியேறிவிடு' எனக் கூறி ஷேக் அப்ரான் அப்பெண்ணை மிரட்டி வெளியேற்றியுள்ளார்.
புகார் பதிவு செய்ய லஞ்சம் கேட்ட மகளிர் போலீஸ்:
காயங்களுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற இளம் பெண், இது குறித்துப் பெங்களூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்து 8 மாதங்களாகியும், ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர் என்பதால் ஷேக் அப்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்....
மேலும், இந்த வழக்கில் அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய ரூ.3 லட்சம் லஞ்சம் தருமாறு காவல் துறையினர் வற்புறுத்தியுள்ளனர். கான்ஸ்டபிள் ஒருவர் மூலம் பணத்தைத் தருமாறு வலியுறுத்தப்பட்டதால், மகளின் எதிர்காலத்தைக் கருதி அப்பெண்ணின் தந்தை ரூ.1.20 லட்சத்தைக் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது...
நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
காவல் துறையின் இந்தச் செயலால் மனமுடைந்த அப்பெண்ணும் அவரது பெற்றோரும் பெங்களூரு நீதிமன்றத்தை அணுகி முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது ஷேக் அப்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர் மீதான இந்த முத்தலாக் வழக்கு மற்றும் காவல் துறையின் லஞ்ச விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
பெண்ணின் குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும். அவை உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும், லஞ்சமாகப் பெறப்பட்ட முழுத் தொகையும் வட்டியுடன் அவர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் குறித்து பேசப்படுகிறது.
#இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴