இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
543 views
11 hours ago
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு தடையாக உள்ள கணவரை இரண்டு முறை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்ததால் ரூ 5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்து எரித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பரகலா டவுனில் உள்ள சிஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த மடிகொண்ட சுமனுக்கும் (36), ரெகொண்டாவைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுமன் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார், அதே சமயம் லாவண்யா நகராட்சியில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்தார். லாவண்யா பணியிடத்தில் சந்தித்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இது அவரது கணவர் சுமனுக்கு தெரியவந்ததால் ​​இருவருக்கும் இடையே சண்டைகள் மூண்டன. தனது காதலனுடன் இருப்பதற்குத் தன் கணவர் தடையாக இருப்பதாக லாவண்யா உணர்ந்தார். இதனால் எப்படியாவது தன் கணவரைக் கொல்ல லாவண்யா தனது திட்டம் தீட்டினார். இதற்கிடையில் சுமனும் லாவண்யாவும் இந்த மாதம் 3 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றனர். 4 ஆம் தேதி முதல் சுமன் காணாமல் போனதாக லாவண்யா தன் கணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். 6 ஆம் தேதி, லாவண்யா பரகலாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றபோது சுமனின் பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாவண்யா கூறியதால், சுமனின் தந்தை சாம்பய்யா 8 ஆம் தேதி பரகலா காவல் நிலையத்தில் சுமன் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காணாமல் போனவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தநிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சுமனின் செல்போனின் கடைசி சிக்னல் முலுகு மாவட்டம், கோவிந்தராவ்பேட் மண்டலத்தில் கிடைத்தது. இதையடுத்து, பரகலா மற்றும் பாசரா போலீசார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது சுமன் சடலம் தான் என்பதை உறுதி செய்த போலீசார், இதில் சிலர் சுமனை வாரங்கலில் இருந்து அழைத்துச் வந்து கோவிந்தராவ்பேட் புறநகர்ப் பகுதியில் மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றிக் கொன்றதை கண்டறிந்தனர்... இதனிடையே லாவண்யா நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரிடம் பிடித்து விசாரித்ததில் தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன், கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் லாவண்யா இரண்டு முறை சுமனைக் கொல்ல முயன்றதாகவும் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து லாவண்யாவை கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். லாவண்யா தான் சுமனை கொலை செய்ததை பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், புதன்கிழமை இரவு பரகலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
707 views
2 days ago
திருமணமான முதல் நாளே காத்திருந்த அதிர்ச்சி: பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது 23 வயது மகளைக் கர்நாடக அமைச்சர் ஒருவரின் அண்ணன் மகனான ஷேக் அப்ரான் (வயது 28) என்பவருக்குக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் போது மணமகள் வீட்டினர் தங்கம், வைரம், ஆடம்பரக் கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், திருமணம் முடிந்த முதல் நாளிலேயே ஷேக் அப்ரான் தனது மனைவியிடம், "எனக்கு உன்னை பிடிக்கவில்லை; நான் உன்னைத் தலாக் செய்கிறேன்" எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், கணவரின் குடும்பத்தாரிடம் முறையிட்டபோது அவர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை. மேலும், தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அவளுடனே வாழ்ந்து வருவதாகவும் கூறி ஷேக் அப்ரான் மனைவியை மிரட்டியுள்ளார். இந்தியாவில் 'முத்தலாக்' நடைமுறை சட்டப்படி செல்லாது என்று அந்தப் பெண் எடுத்துக்கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்..... வெந்நீர் ஊற்றிக் கொடூரக் கொடுமை: கணவர் வீட்டிலேயே தொடர்ந்து தங்கி வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை, மசாஜ் செய்யச் சொல்லி அவரின் கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவர் மீது வெந்நீரை ஊற்றிக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளதாக அப்பெண் புகார் கூறியுள்ளார். "உன்னை வீட்டிற்கு அழைத்து வந்ததே வீட்டு வேலைகளைச் செய்வதற்காகத் தான். விருப்பம் இல்லை என்றால் இப்போதே வீட்டை விட்டு வெளியேறிவிடு' எனக் கூறி ஷேக் அப்ரான் அப்பெண்ணை மிரட்டி வெளியேற்றியுள்ளார். புகார் பதிவு செய்ய லஞ்சம் கேட்ட மகளிர் போலீஸ்: காயங்களுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற இளம் பெண், இது குறித்துப் பெங்களூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்து 8 மாதங்களாகியும், ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர் என்பதால் ஷேக் அப்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். வெந்நீர் ஊற்றிக் கொடூரக் கொடுமை: கணவர் வீட்டிலேயே தொடர்ந்து தங்கி வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை, மசாஜ் செய்யச் சொல்லி அவரின் கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவர் மீது வெந்நீரை ஊற்றிக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளதாக அப்பெண் புகார் கூறியுள்ளார். "உன்னை வீட்டிற்கு அழைத்து வந்ததே வீட்டு வேலைகளைச் செய்வதற்காகத் தான். விருப்பம் இல்லை என்றால் இப்போதே வீட்டை விட்டு வெளியேறிவிடு' எனக் கூறி ஷேக் அப்ரான் அப்பெண்ணை மிரட்டி வெளியேற்றியுள்ளார். புகார் பதிவு செய்ய லஞ்சம் கேட்ட மகளிர் போலீஸ்: காயங்களுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற இளம் பெண், இது குறித்துப் பெங்களூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்து 8 மாதங்களாகியும், ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர் என்பதால் ஷேக் அப்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.... மேலும், இந்த வழக்கில் அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய ரூ.3 லட்சம் லஞ்சம் தருமாறு காவல் துறையினர் வற்புறுத்தியுள்ளனர். கான்ஸ்டபிள் ஒருவர் மூலம் பணத்தைத் தருமாறு வலியுறுத்தப்பட்டதால், மகளின் எதிர்காலத்தைக் கருதி அப்பெண்ணின் தந்தை ரூ.1.20 லட்சத்தைக் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது... நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காவல் துறையின் இந்தச் செயலால் மனமுடைந்த அப்பெண்ணும் அவரது பெற்றோரும் பெங்களூரு நீதிமன்றத்தை அணுகி முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது ஷேக் அப்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர் மீதான இந்த முத்தலாக் வழக்கு மற்றும் காவல் துறையின் லஞ்ச விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பெண்ணின் குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும். அவை உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும், லஞ்சமாகப் பெறப்பட்ட முழுத் தொகையும் வட்டியுடன் அவர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் குறித்து பேசப்படுகிறது. #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
35.1K views
3 days ago
மீனவருக்கு பாராட்டுக்கள் 🙏👏💐.. தனுஷ்கோடி கடல் வந்து மிகவும் ஆபத்தானது அதை அறியாமல் சென்று மாட்டிக்கொள்ளாதீர்..! #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥Trending வீடியோஸ்📺 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
23.4K views
26 days ago
| தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், விசிக தலைவர் தொல்..திருமாவளவன் தனது பேச்சில், “கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தோழமைக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளைத் தந்திருந்தால், அவர்கள் இவ்வளவு வேகமாக கூட்டணியை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள் என்றும், அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.விசிகவின் இந்த அரசியல் நகர்வை “துரோகம்” என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், இதில் துரோகம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
0 view
26 days ago
| தமிழக அரசியலில் தற்போது நிலவும் அதிரடி மாற்றங்கள் மற்றும் கட்சித் தாவல்கள், வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல்கள் மற்றும் தவெக போன்ற புதிய சக்திகளின் வருகை, பல எம்எல்ஏக்களைத் தங்கள் கட்சிப் பதவிகளைத் துறந்து மற்ற கட்சிகளில் இணையத் தூண்டியுள்ளது. இப்படியே அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால், வரும் நாட்களில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2026-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஒரு அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழலே தற்போது நிலவுகிறது. #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴