◄•───✧ உ ✧───•►
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam 🙏 ஶ்ரீ மார்க்கண்டேய புராணம் 🙏
பாகம்_30
பலவந்தன் மகன் வத்சந்திரன் ..!!
குகையில் புகை
வத்சந்திரன் இளவரசனாய் இருந்த போது ஒரு சமயம் காட்டிற்கு வேட்டை ஆடச் சென்றான்.
அங்கு ஆள்நடமாட்டமில்லா ஒரு குகையிலிருந்து புகை வருவதைக் கண்டு அதன் காரணத்தை அறிய அருகிலிருந்த சுவீரன் என்னும் ஆசிரமத்தை அடைந்து அங்கிருந்த முனிவரிடம் அதுபற்றி விசாரித்தான்.
முனிவர் அவனிடம் நாட்டு நடப்புகளைச் சாரணர்கள் மூலம் அறிந்திருக்க வேண்டும் மன்னன்.
அந்தக் கடமை சரியாக நடைபெறவில்லை. எனினும், உலக நலன் குறித்து இந்தப் புகை பற்றிக் கூறுகிறேன் என்றார்.
முனிவர் கூறிய செய்தி
அந்தக் குகை குசும்மன் என்னும் அரக்கன் பாதாள லோகத்தில் வசிக்கும் இடத்திற்குச் செல்வதற்கான வழி.
அவன் துவஷ்டா என்ற சிற்பி செய்து கொடுத்த பயங்கரமான இரும்புலக்கை ஒன்றை வைத்திருந்தான்.
அதைக்கொண்டு பல அக்கிரமங்களைச் செய்து தொல்லைகளைத் தேவர்களுக்கும் அளித்து வந்தான்.
இவன் விதூரதன் என்னும் அரசனின் மகள் முதாவதியை பலவந்தமாய்த் தூக்கிச் சென்றுவிட்டான்.
விதூரதன் தன் மக்கள் சுனீதி, சுமதி என்ற இருவரையும் அந்த அரக்கனை அழிக்க அனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள் அரக்கனால் தோற்கடிக்கப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இனி தன்னால் அரக்கனை வெல்ல முடியாது என்றறிந்த மன்னன் அரக்கனை வென்று தன் மக்களை மீட்டுத் தருவோர்க்கு பாதி நாட்டைத் தருவதாகப் பறை அறைவித்தான்.
அசுரனும் உலக்கையும்
அதுகேட்ட வத்சந்திரன் விதூரதனிடம் சென்று அரக்கனைப் பற்றி அவனறிந்த விஷயங்களைக் கேட்டுக் கொண்டதுடன், பாதாள உலகத்திற்குச் செல்லும் வழியையும், இரும்புலக்கையின் சிறப்பையும், அதனை ஒரு பெண் தொட்டுவிட்டால் அது தன் சக்தியை இழந்துவிடும் என்றும் அறிந்து கொண்டான்.
வத்சந்திரன் பெரும்படையுடன் குசும்மனை எதிர்த்துப் போர் மேற்கொண்டான்.
தேவர்களும் அவனுக்கு உதவிபுரிய குசும்மனால் வத்சந்திரனை வெல்ல முடியவில்லை. அவன் அரண்மனைக்குச் சென்று இரும்புலக்கைக்குப் பூசை செய்தான்.
பெண்கள் தொட்டால் இரும்பு உலக்கை தனது சக்தியை இழந்து விடும் என்று இரகசியத்தை அறிந்திருந்த முதாவதி அதைத் தொட்டுக் கும்பிடுவது போல் பலமுறை தொட்டாள். இதனால் சக்தி இழந்த உலக்கையுடன் போரிட்ட குசும்மன் வத்சந்திரனால் கொல்லப்பட்டான்.
வெற்றியும் விடுதலையும்
வத்சந்திரன் முதாவதியை, அவனது மூத்த சகோதரர்கள் சுனீதி, சுமதி ஆகியோரை விடுவித்துக் கொண்டு வந்து விதூரதனிடம் ஒப்புவித்தான்.
விதூரதன், முதாவதியை வத்சந்திரனுக்கு மணம் செய்வித்து பாதி நாட்டையும் கொடுத்தான்.
பாதாள உலகிலிருந்து வந்திருந்த ஆதிசேஷன், முதாவதியை இரும்புலக்கையைப் பலமிழக்கச் செய்ததால், அவளுக்குச் சுனந்தை என்ற பெயரையும் இட்டு ஆசீர்வதித்தார்.
தொடரும்...✍
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🔥சிவ சிவ 🌙
🙏 ஓம் சிவய நம ஓம் 🌷


