saravanan.
#azagaana ulaviyal sinthanay. நண்பர்கள்*_
_*ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக்*_ _*கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.*_
_*உடனே சாக்ரட்டீஸ் அவரிடம்*_ ,
_"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்._
_*மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.*_
_*சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்*_
_"அவர் செய்த செயலை_ _நேரடியாகப் பார்த்துவிட்டு_ _தான்_ _அவரைப் பற்றி_ ,கூறுகிறாயா...???"
_என்று கேட்டார்._
*_இல்லை என பதில் சொன்னார்._*
_"அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? "_ _என்று இரண்டாவது_ _கேள்வியைக் கேட்டார்._
*_இல்லை என பதில் சொன்னார்._*
_"அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???"_ _என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்._
*_இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது._*
*_"யாருக்கும் பயனில்லாத,_*
*_நல்ல விஷயமுமில்லாத,_*
*_நேரடியாக நீங்கள் பார்க்காத,_*
*_என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்._*
_நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்._
_*நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.*_
_உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை._
*_மேலும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!_*
_எனவே,_
_வார்த்தைகளால் பழிக்காதீர்கள்......!!!_
_*வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!*_
_நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!_
*_உண்மையான நண்பர்கள்_* _ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப் பட்டவர்கள்._