ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message) அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
இச்சம்பவம் தொடர்பாகத் த.வெ.க பிரமுகர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.குலசேகரம் அருகே உள்ள மூலைப்பாகம் திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சித்திரை. இவரது மகன் மகேஷ், துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிஷா (33). பட்டதாரியான இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி அனிஷா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கணவருக்கு வந்த உருக்கமான குறுந்தகவல்
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அனிஷா, துபாயில் உள்ள தனது கணவர் மகேஷின் செல்போனுக்கு ஒரு உருக்கமான குறுந்தகவலை அனுப்பியுள்ளார். "அவன் என்னை வாழவிடமாட்டான். இனி நான் வாழ விரும்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்; நமது மகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்." என அனிஷா அனுப்பிய குறுந்தகவல். இந்த மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ், உடனடியாக மனைவியைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அழைப்பை எடுக்காததால், உடனே தனது தந்தை சித்திரைக்குத் தகவல் தெரிவித்தார். பதறிப்போன சித்திரை, மருமகளின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அனிஷா தூக்கில் தொங்கிய நிலையிலிருப்பதைக் கண்டு உறைந்துபோனார். போலீஸ் வழக்கு மற்றும் த.வெ.க பிரமுகர் கைது
இச்சம்பவம் குறித்துச் சித்திரை குலசேகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனது மருமகளின் சாவுக்கு மரம் வெட்டும் தொழிலாளியான சங்கர் என்பவர்தான் காரணம் எனப் புகாரில் தெரிவித்திருந்தார். சங்கர், தமிழக வெற்றிழகம் (த.வெ.க) கட்சியின் பிரமுகராகச் செயல்பட்டு வருபவர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று அனிஷாவிடம் சங்கர் தகராறில் ஈடுபட்டதும், அதன் பிறகே அனிஷா இந்த விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரைப் பிடிக்கச் சென்றபோது, அவர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியிருந்தார். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த சங்கரை நேற்றிரவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....
குழந்தையுடன் கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்
இதனிடையே, துபாயில் இருக்கும் கணவர் மகேஷ் தனது கைக்குழந்தையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது மனைவியின் சாவுக்குக் காரணமான சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்