SHEIK 🌺KSN🌺
657 views • 2 days ago
உங்கள் வீட்டு கடிகாரம் அதுபாட்டுக்கு நேரத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்.
சூரியனுக்கு நீங்கள் இல்லாததை யாரும் சொல்ல போவதில்லை அதுபாட்டுக்கு விடிந்துகொண்டு இருக்கும்.
விரும்பியவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் விரும்பாதவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
பலபேர் விடுமுறை போட முடியாமல் செத்ததுதான் செத்தான் ஞாயிற்றுகிழமை செத்திருக்கலாம் என்று கூட புலம்புவார்கள்.
அழுகைகளுக்கு மத்தியில் சில நமட்டு சிரிப்புகளும் உதிரும்.
அவசர அவசரமாக வந்தவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஜனாஸாவை "எப்ப எடுக்க போறாங்க".
உங்களுடைய நிறை குறை எல்லாமே ஒருவருக்கொருவர் கூறி மற்றவர்கள் காதில் விழும்.
உங்களோடு கூடி கொலாவியவர்கள் மையவாடிக்கு இவ்வளவு தூரம் போக வேண்டுமா? என்று கூட உங்கள் ஜனாஸாவை தவிர்த்திருப்பார்கள்.
யார் வந்தாலும் வரவிட்டாலும் குறித்த நேரத்தில் நீங்கள் மையவாடியை அடந்திருப்பீர்கள்.
அதிகபட்சம் உங்கள் குடும்பத்தின் கண்ணீர் மட்டுமே உங்களை பின் தொடர்ந்திருக்கும்.
பார்க்க வேண்டியவர்கள் பார்த்து கொள்ளுங்கள் என்ற குரலோடு நீங்கள் நிறைவடைந்திருப்பீர்கள்.
இனியாவது பார்க்க வேண்டியவர்கள் பார்த்து கொள்ளுங்கள்.
"பார்க்க வேண்டியவர்கள்" - அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, உறவினர்கள், நண்பர்கள்.
கோபத்துல, ஈகோல பிரிஞ்சு இருக்குறது நியாயமே இல்லை.
ஒரு நாள் "கடைசியா பார்க்க கூட முடியலையே"னு வருத்தப்பட போறோம்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
18 likes
14 shares