Arunachalam
641 views • 2 days ago
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா வில்
உள்ள அதானிக்கு சொந்தமான கோடா அனல்மின் நிலையத்தில் (Godda Thermal Power Station) மின் உற்பத்தி செய்து அதை வங்க தேசத்திற்கு ‘அதீத’ விலைக்கு விற்க திட்டம் தீட்டப்பட்டு அதில் வெற்றியும் கண்டார் அதானி. இதற்கு உற்ற துணையாக இருந்தது மோடி அரசு என்பதை மறுப்பதற்கில்லை.
இதனால் வங்க தேசத்தின் நிதி நிலை மோசமாகி, தொழில்கள் நசுங்கி , வேலையின்மையும் அடக்குமுறையும் தலை விரித்தாடியதை மறுக்க முடியுமா? இன்று வங்க மக்களின் வெறுப்பை இந்திய நாடே சம்பாதித்து இருப்பது விரும்பக் கூடிய நிகழ்வா?
பூட்டானிலும் இதே நிலைமைதான்!
மாலத் தீவுகளிலும் அதானியை நுழைத்தது மோடி அரசு, இதற்காக உள்நாட்டு அரசியலில் தலையிட்டு மோடி அரசு “ கட்ட பஞ்சாயத்து” செய்ததன் விளைவாக இன்று மாலத்தீவுகளில் இருந்து இந்திய ராணுவ அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட வெட்ககரமான நிகழ்வு நடந்துள்ளது.
நேபாள நாட்டிலும் , திரிபுவன் ஏர்போர்ட் அதானிக்கு போதாது என்று அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும்,நேபாள அரசிற்கும் நிர்ப்பந்தம் கொடுத்து, பைரஹாவா விமான நிலையத்தையும், பொகாரா விமான நிலையத்தையும் அதானி வசம் ஒப்படைக்க இந்திய அரசு முயல்வதை நேபாளிய பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றனவே , இந்த போக்கு எதைக் காட்டுகிறது?
இந்திய மக்களின் நலனையோ, அல்லது அண்டை நாட்டு மக்களின் நலன்களையோ கணக்கில் கொள்ளாமல், தனியார் நிறுவனமான அதானி குழுமத்தின் நலன்களை மட்டுமே கணக்கில் கொண்டு நாட்டின் அயலுறவுக் கொள்கைகள் தீர்மானிக்கப்படுவதை மோடி விரும்புகிறார் என்பதற்கு மேற் கூறிய நிகழ்வுகள் சாட்சி!
Jayaraman TP 31.08.24 பதிவு. #👨மோடி அரசாங்கம்
18 shares