S.ANTHONY✝️YESUMARY
1K views 5 hours ago
*📖நற்செய்தி✝️சிந்தனை🕊️* 🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹 *⚜️🌸''மரியா... 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்... வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்' என்றார்''🌸⚜️* (லூக்கா 1:49,52) அன்பார்ந்த நண்பர்களே..! *🇮🇳உங்கள் அனைவருக்கும் அன்னையின் விண்ணேற்ப்பு பெருவிழா மற்றும் இந்திய சுதந்திர தினவிழா வாழ்த்துக்கள்.🇮🇳* மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கை. இந்த உண்மையை ஒரு பெருவிழாவாக நாம் கொண்டாடுகின்ற ஆகஸ்டு 15 நம் இந்திய நாட்டின் விடுதலை நாள் கூட. மரியாவின் மண்ணக வாழ்வின் இறுதியில் கடவுள் அவரை மகிமைப்படுத்தினார். மரியா விண்ணேற்பு அடைந்தார் என்னும் வெளிப்படையான கூற்று விவிலியத்தில் இல்லையெனினும், மரியா பற்றி விவிலியம் கூறுகின்றவற்றையும் வரலாற்றில் திருச்சபை மரியாவைப் புரிந்துகொண்ட முறையையும் கருதும்போது நாம் மரியாவுக்குக் கடவுள் அளித்த தனிச் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது. மரியா தம் வயிற்றில் கடவுளின் மகனாகிய இயேசுவைக் கருத்தாங்கி அவரை உலகின் மீட்பராக நமக்கு அளித்தார். எனவே நாம் மரியாவைக் ''கடவுளின் தாய்'' எனப் போற்றுகிறோம். மரியாவுக்குக் கடவுள் இப்பெரும் சிறப்பை அளித்தது கடவுளின் அருள் பெருக்கின் விளைவே. மரியாவுக்குக் கடவுள் ''அரும்பெரும் செயல்கள்'' செய்தார். கடவுளின் திருவுளத்தை முழுமையாக ஏற்று அதன்படி நடந்த மரியாவைக் கடவுள் உயர்த்தினார். -- மேலும் மரியா திருச்சபைக்கும் அன்னையாக இருக்கின்றார். அதாவது கடவுளின் வார்த்தையை அவர் தம் இதயத்தில் தாங்கி அதையே தம் வாழ்வுக்கு ஒளியாகக் கொண்டார். மரியா கடவுளின் வார்த்தையைத் தம் உதரத்தில் கருவாக ஏற்று அவரை உலகுக்கு அளித்தார். இப்பெரும் சிறப்பில் பங்குபெற்ற மரியா நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார். கடவுளை நம்பி, அவருடைய வழியில் நடப்போருக்கு எத்தகு உயர்நிலை காத்திருக்கிறது என மரியா நமக்குத் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருக்கிறார். மரியா தம் உறவினராகிய எலிசபெத்தைச் சந்தித்தபோது பாடிய மகிழ்ச்சிக் கீதத்தில் கடவுள் ''தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனக் கூறியது நமக்கும் பொருந்தும். கடவுளின் முன்னிலையில் நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்தால் கடவுள் தம் அரசில் நம்மை ஏற்று நமக்கு மாட்சி அளிப்பார். *🙏🏻மன்றாட்டு :🙏🏻* இறைவா, உம்மைத் தாழ்ச்சியோடு அணுகிவர எங்களுக்கு அருள்தாரும். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
22 likes
21 shares

More like this