D Muthu Prakash, Kanchipuram 💐
602 views 5 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.08.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ------------ அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும் துரிதமுடன் மாமுனிகள் சுவாமி யெனத்தொழுதார் இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே . விளக்கம்: =========== ஞானமுனி, கலைமுனி ஆகிய இருவரையும் சாட்சிகளாக விசாரிக்க எண்ணிச் சாட்சிமொழி கூற நாராயணர் அவர்களை அழைத்தார். முனிவர்கள் விரைவாக நாராயணரின் அருகில் வந்து, சுவாமி அடியார்களை அழைத்தத காரணம் என்ன என்று வினவினர். உடனே திருமால், முனிவர்களே, இந்த நாள்வரையும் வைகுணடர் இருந்து நல்ல தவம் நிரந்தரம் ஆனதா? வீணானதா? என்பது பற்றி விளக்கி கூறுங்கள் என்றார். . . அகிலம் ======== அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து தப்பெருநா ளில்லை தவத்துக் குறுதியுண்டு நூலொழுக்க மல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை மாலொழுக்க மல்லாமல் மனதுவே றில்லையையா தப்பாத தவத்தில் சண்டித் தடிநீசன் சிப்பாயி விட்டுச் சுவாமி தனைப்பிடித்து முடித்தலையைப் பின்னி முழுநீசப் பாவியவன் அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால் மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை என்று முனிமார் இசையத் திருமாலும் கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த ஞாயமெல்லாமல் இருக்கட்டு மந்த இழிநீசன் செய்ததெல்லாம் குருக்கட்டு முறையின் குணத்தைமிகச் சொல்லுமென்றார் . விளக்கம் ========= அப்போது முனிவர்கள் திருமாலின் பாதங்களைத் தொழுது வணங்கி, சுவாமி வைகுண்டர் தவத்தில் எந்தத் தவறும் இல்லை. அத்தவத்தினால் மன உறுதி பெற்றார். முன் ஆகமங்கள் சொல்லும் நல்ல ஒழுக்கங்களைப் பின் பற்றயது அல்லாமல் அவர் சிறுபொழுதுகூட தவறு இழைக்கவில்லை. திருமாலின் ஒழுக்கங்களைப் பின் பற்றியது தவிர வேறு எங்கும் மனம் செல்லவில்லை. தவறு வராத தவத்தின்போது சண்டித் தடி நீச அரசன் தனது சிப்பாயியை விட்டுச் சுவாமியைப் பிடித்துத் தலை முடியைப் பின்னின, அடித்து விலங்கில் பிணைத்துச் சிறையில் வைத்துவிட்டான். இவ்வாறு சிறையில் வைத்துப் பல வேதனைகளை மாநீசன் செய்தான். இருப்பினும் அதற்கு மாறாக இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறினர். . அப்பொழுது திருமால், முனிவர்களே, வைகுண்டரை நீசன் கொண்டு போய்ச் செய்த துன்ப நியாயங்கள் சொல்லியது போதும். இனி, குருவாகிய இவரின் கட்டுப்பாடான தவ ஒழுக்கங்களைப் பற்றித் தெளிவாகச் சொல்லுவீர்களாக என்று கூறினார். . . அகிலம் ======== உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து படபடென நின்று பணிந்து மிகப்போற்றித் தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய் அன்று உரைக்க அதகத் திருநெடுமால் . விளக்கம்: ========== உடனே, முனிவர்கள் விரைவாக நிமிர்ந்து நின்று, அவரைப் பணிந்து துதித்து, அய்யா, இவர் தவத்தில் எந்தத் தவறும் குறையும் இல்லை. நல்லவை உருவாகியதே அல்லாமல் நியாயக் கேடாக எதுவும் இல்லை என்று இந்த யுகத்துக்கும் பரலோக வாழ்வுக்கும் உத்தமத் தன்மை உள்ளதாக அவர் தவத்தைச் சிறப்பித்துக் கூறினர். . . அகிலம்: ------------ வைகுண்டருக்கு திருமால் உபதேசித்தல் ====================================== நல்ல தெனவே நன்மகனைத் தானாவி செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத் தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட நாவாணர் போற்ற நாரா யணர்மகனை . . விளக்கம்: ========== வைகுண்டரின் தவச்சிறப்பை முனிகள் கூறியதும் திருமால், மிகவும் நல்லது என்று கூறி தம் மகன் வைகுண்டரைக் கட்டிப் பிடித்து அணைத்து, என் அன்பு மகனே, நீ என்னுடன் கடலுக்குள் வருவாயாக என்று அழைத்தார். பிறகு வைகுண்டரைத் தன்னோடு கூட்டிக் கொண்டு கடலினுள் நடந்து சென்றார். அப்போது தவமுனிவர்களும், பாவாணர்களும் பரமுனிவர்களும் சங்கீதம் பாடி வந்தனர். நாவாணர்கள் துதித்தனர். . . அகிலம்: ======== பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து . விளக்கம்: ========== அச்சமயம் திருமால் பால் கடலில் உள்ள பாலமிர்த்த்தை வருத்தி மிகவும் பேறு பெற்ற தம் அருமை மகனை அதனுள் மூழ்கச் செய்தார். தம் மகன் மேலிருந்த அழுக்கைத் துடைத்து, சிவாய நம என்னும் சூட்சம பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்து அருளினார். உடம்பெல்லாம் உதறி, முந்தைய துன்பம் எல்லாம் போக்கி, மகிழ்ச்சியான தம் முகத்தோடு அணைத்துக் கொண்டார். . . அகிலம்: ======== வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில் தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும் சத்தி யுமையும் சரசு பதிமாதும் முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும் எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க வல்ல திருமால் மகனை முகம்நோக்கி . விளக்கம்: ========= அப்பொழுது வேதம் ஓதும் புரோகிதர்கள் அங்கே தோன்றி வாழ்த்திக் கொண்டிருக்க, சரியான பரிமாணத்துடன் செய்யப்பட்ட நீல நிறமான மண்டபத்தில், தங்கத்தாலான மணியால் ஆகிய அரங்கில், எல்லாரும் அமர உருவாக்கப்பட்ட உல்லாச மண்டபத்தில், எப்போதும் அழிவில்லா ஈசுரரும், மாதவனும், தேவர்களும், சக்தி உமையும், சரசுவதியும், முனிவர்களும் ரிஷிகளும் எல்லாரும் இறைஞ்சி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். நல்லோர்கள் எல்லாரும் அவரை நாடி அருகிலிருந்த அச்சமயம் எல்லாமை பொருந்திய திருமால் வைகுண்டருடைய முகத்தை நோக்கி கூறலானார். . . அகிலம்: ======== முட்டப்பதி விஞ்சை: ------------------------------ செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால் திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும் . விளக்கம்: ========= அன்பு மகனே, இப்பொழுது நீ தவம் முடித்துச் சரியான நாள் வந்த காரணத்தால், இனி நீ திருநாள் நடத்தி தெரு வீதிகளில் உலா வா. . . அகிலம்: ======== ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல் நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே . விளக்கம்: ========== இனி, ஒரு வாரம் இடைவெளி இல்லாமல் தினந்தோறும் திருவிழா நடத்து என் மகனே. . . தொடரும்... அய்யா உண்டு.
15 likes
9 shares

More like this