Dr.Ganapathi - siddha doctor
540 views 2 days ago
ஆண்களை் *#இரைப்பைஏற்றம்* (*#Hiatal_Hernia*) ஆண்களுக்கு இரைப்பை ஏற்றம் என்னும் பாதிப்பு ஏற்படுவது மிகவும் பொதுவானது. இரைப்பை ஏற்றம் என்பது ஒரு வகையான குடலிறக்கம். ஆனால் இதனை புறக்கணிப்பதன் காரணமாக இது தீவிர விளைவுகளை உண்டாக்கும் நோயாக மாறுகிறது. பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் இந்த பாதிப்பு, சில நேரங்களில் பெண்களையும் தாக்கக்கூடும்.பெண்களுக்கு இந்த பாதிப்பு பிரசவத்திற்கு பின் ஏற்படலாம். உடலில் வயிற்றையும் நெஞ்சையும் இரண்டாகப் பிரிப்பது ‘உதரவிதானம்’ (Diaphragm) என்னும் தடிமனான சவ்வு. உதரவிதானம் என்பது நெஞ்சறையையும் (thoracic cavity) வயிற்றறையையும் (abdominal cavity) பிரிக்கும் ஒரு குவிமாட வடிவ தசை ஆகும். இது சுவாசத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, மார்புக்கூடு விரிவடைந்து, சுவாசம் எளிதாக்க உதவுகிறது. இதன் ஆங்கிலப் பெயர் Diaphragm. நாம் சாப்பிடும் உணவு, உணவுக்குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இந்த உணவுக்குழாய் உதரவிதானத்தில் உள்ள ஒரு சிறு துளை (Hiatus) வழியாகச் செல்கிறது. உதரவிதானத்தில், இந்தத் துளையைச் சுற்றி, உணவுக் குழாயை ஒட்டி, வட்டமான ரப்பர் பேண்டைப் போட்டது போல ஒரு சிறிய சவ்வுப்படலம் அமைந்துள்ளது. இது, இந்தத் துளை பெரிதாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் பகுதி உதரவிதானத்துக்குக் கீழே வயிற்றில் இருக்கிறது. இந்தச் சவ்வுக்கு விரிந்து சுருங்கும் தன்மை இருப்பதால், உணவுக்குழாயில் உணவு வரும்போது, விரிந்து கொடுத்து, உணவு இரைப்பைக்குச் செல்ல வழி கொடுக்கிறது. இந்த இயல்பான அமைப்பில் பிழை உண்டாகும்போது பிரச்சனை ஆகிறது. வயதாக ஆக இந்தச் சவ்வு பலவீனமாகிறது. அல்லது வேறு சில காரணங்களால் இது வயதான சல்லடைபோல் தொங்கிவிடுகிறது. அப்போது மேற்சொன்ன இடைத்துளை பெரிதாகிவிடுகிறது. இதன் விளைவால், இரைப்பையின் மேற்பகுதியில் கொஞ்சம் இந்தத் துளை வழியாக நெஞ்சுக்குள் புகுந்து கொள்கிறது. இந்த நிலைமையைத் தான் ‘இரைப்பை ஏற்றம்’ (*#Hiatal_hernia*) என்கிறார்கள். இது வருவதற்கு முதுமை ஒரு காரணம் என்றாலும், இன்னும் சில காரணிகள் இதற்குத் துணை போகின்றன. இடைச்சவ்வான உதரவிதானம்’ (Diaphragm) பிறவியிலேயே பலவீனமாக இருந்தால், இது குழந்தைக்கும் ஏற்படுவது உண்டு. அடுத்து, அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிப்பதால், இந்த இடைச்சவ்வு பலவீனமடைந்து, இந்தப் பாதிப்பு ஏற்பட வழிவிடும். மலச்சிக்கல் கடுமையாக இருப்பவர்களுக்கும், விபத்து போன்றவற்றால் வயிற்றில் கடுமையாக அடிபட்டவர்களுக்கும் இது ஏற்படுவதுண்டு. உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (*#Heartburn*) ஏற்படும். மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிட்டால், உடனே நெஞ்சு முழுவதும் எரியும். வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, *#நெஞ்செரிச்சலை* உண்டாக்கிவிடும். இவற்றோடு *#ஏப்பம்*, *#குமட்டல்*, வாந்தி போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
10 likes
15 shares

More like this