D Muthu Prakash, Kanchipuram 💐
1K views 23 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.07.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ======== வேக மடக்கி விளியிட்டு வண்டுறுக்கி ஆகமத்தின் தேதி அடுத்தாலா கட்டெனவே சொல்லுவேன் வெள்ளித் தோன்றி வருகையிலே வெல்லுவே னென்று விசையடக்கி எம்பெருமாள் தொட்டிலி லிருந்து சுவாமி விளியுமிட்டு மட்டி லிருந்த வளர்தா மரைப்பதியில் வந்து பதிகண்டு வட்டமிட்டுத் தானாடி விந்து வழிகளுக்கு மேற்கெதிக ளாகுதென்று இன்றுமே லெனக்கு ஏற்றவெகு சந்தோசம் பண்டு எனக்குப் பகர்ந்த மொழிபோலே . விளக்கம்: ========== வேகமாகச் செல்லாமல் வெற்றி முழக்கம் இட்டு, வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டு, ஆகமத்தின்படி தேதி வந்ததும் நாள் புறப்படுங்கள் என்று சொல்லுவேன், வெள்ளி தோன்றி வரும்போது நான் கலியை வெற்றிக் கொள்வேன் என்று சொல்லிச் சுவாமி தொட்டிலில் இருந்து சத்தமாக உபதேசித்தார். கடைசியில் தம் பிரிவால் துன்பமுற்றுக் குழம்பி இருந்த தமது மக்கள் வாழும் சிறப்பான தாமரைப்பதிக்கு வந்தடைந்தார். அங்குள்ள பதியைக் கண்டு வைகுண்டர் வட்டமிட்டு ஆடினார். என் விந்து விழிச் சந்ததியார்க்கு நல்ல நிலை உருவாகி வருகிறது. என் குருநாதர் கூறிய உபதேச மொழியைப் போல் இன்றையிலிருந்து எனக்கு ஒப்பற்ற நல்ல தேவகிருபை கிடைக்கும். என்று கூறி ஆடி உபதேசித்தார். . . அகிலம்: ========= தாமரைப்பதியில் சான்றோர்களுக்கு துவையல் தவசு பயிற்சி: ======================================================== சான்றோரை நல்ல தவத்துக் கனுப்பிடவும் பண்டோர் நமக்குப் பகர்ந்தபடி மாதர்களை நாடு மணங்கள் நல்லகலி யாணமுதல் வீடுவகை சொத்து விருதுவே டிக்கையுடன் தேரு திருநாள் திருக்கல்யாணக் கொலுவும் பாரு புகழப் பாவாணர் கீதமுடன் . விளக்கம்: ========== சான்றோர்களை நல்ல துவையல் தவத்துக்கு அனுப்பவும், நாராயணர் முன்னர்க் கடலில் உபதேசித்தபடி விதியால் அமைந்த மாதர்களை நாடி நல்ல திருமணங்கள் செய்யவும், வீடு, சொத்துவகை வெற்றிக்கொடி வேடிக்கை, தேர்த்திருநாள், கல்யாண உல்லாசம் ஆகியவற்றை அணுபவிக்கவும், உலகம் புகழும் பாவாணர்களின் பாடல்களை இரசிக்கவும் எண்ணினார். . . அகிலம்: ======== நாட்டில் மனுக்கள் நல்லோர்கள் வாழ்வதிலும் மேட்டிமைக ளாக மிகுவாழ்வு சேர்கையுடன் வேண்டும் பவிசு மிகுவாய்ப் பவிசுகளும் தாண்டும் பெரிய சனங்கள் மிகக்குழைவும் கொடியுமிகக் கட்டிக் கொக்கரித் திகனையுடன் வெடியெக் காளமுடன் வெற்றியி டம்மானமிட்டு . விளக்கம்: ========== மேலும் நாட்டில் நல்ல மனித வாழ்க்கை உண்டாகவும் முன்னேற்ற வாழ்க்கைக்கு வேண்டிய செழிப்புகள் உண்டாகவும், பெரியவர்களாக உயர்ந்திருக்கும் மனிதர்கள் தம்மைப் பணிந்து நடக்கவும், நல்ல விருதுக் கொடி கட்டி மகிழ்ச்சியுடன் முன் விதிப்படி உள்ள நிகழ்ச்சிகளை வெடிச்சத்தம், எக்காளச்சத்தம், வெற்றி இடம்மான மேளம் ஆகியவற்றுடன் முடிக்கவும், . . அகிலம்: ======== நாட்டில் சிறப்பதிகம் நாமினிமேல் செய்யவென்று தாட்டிமையாய் நாதன் சான்றோர் தமக்குப்போ அறிவில் வினோதம் அதிகநே ருத்தமமாய்க் குறியாய் மனதில் குறிக்கும் படியருள அருளான விஞ்சை அருள்கொடுக்கு மாலோனும் மருளாமல் சாணார் மனதி லுருவாக . விளக்கம்: ========== நாட்டில் நல்ல சிறப்பான வாழ்வினை நாம் இனிமேல் உருவாக்க வேண்டும் என்றும் மிகுந்த சக்தியுள்ள வைகுண்டர் எண்ணினார். எனவே, அதற்கு முன்னர், சாணார்கள் மனதில் அற்புதமான சக்திகளைக் கொடுக்கும் மிகவும் முக்கியமான எண்ணங்களைப் பதிய செய்து அருளவும், இறை அருளாகிய விஞ்சையருள் கொடுக்கும் திருமாலை, எந்த மயக்கமும் இல்லாமல் அவர்களின் மனதில் உருவாக்கவும் வேண்டும் என எண்ணினார். . . அகிலம்: ========= மூணுநேரத் துவைத்து உச்சி யொருநேரமதாய் வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும் வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டுத் தாக மில்லாமல் தவசிருக்க வேணுமென்று . விளக்கம்: ========= திருமாலை அவர்கள் மனதில் உருவாக்க மூன்று நேரம் துணிகளைத் துவைத்து, உச்சிப்பொழுது மட்டும் வேண்டிய அளவு பச்சரிசியும், வெற்றிச் சிறு மணியும் வேக வைத்து நல்ல முறையில் மணலில் இட்டு உண்டு குடும்ப எண்ணம் இல்லாமல் தவமிருக்க வேண்டும் என்றும் . . அகிலம்: ========= பெண்ணுடனே ஆணும் பிறந்தபிள்ளை தன்னோடும் கண்ணான கட்டில் கலருங் கிழவிவரை சூலி யிளம்பிள்ளை திரண்ட மடமாதும் மாலி னருளால் வஸ்துவகை தான்மறந்து வீடு மனைமறந்து விற்று விலைகள்செய்து . விளக்கம்: ========== அப்படி தவம் இருப்பதற்காகப் பெண்களும், ஆண்களும், பிறந்து குழந்தைகளோடும், கட்டிலிலே தஞ்சம் என்று கிடைக்கும் கிழவிகளும், சூலிகளும், இளம், பிள்ளைகளும், பூப்பு ஏய்திய பெண்களும், திருமாலின் அருளினால் தாமரைப்பதியில் பயிற்றுவிக்கப்பட்ட தவசில் கலந்து கொண்டனர். . . தொடரும்... அய்யா உண்டு.
15 shares

More like this