N Murugesan
683 views 10 days ago
திருவாசகம் முற்றோதல் - 3 ************************************************** திருவாசகத்தை எந்த வரிசையில் முற்றோதல் செய்ய வேண்டும்?! என்னை கேட்டால் வரிசை அவ்வளவு முக்கியம் அல்ல. ஆனால், பதிகங்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் ஏன் சில பதிகங்களை பாடினார் போன்ற செய்தி நாம் பதிகங்களை மேலும் புரிந்து அனுபவ ரீதியாக பாட வழி செய்யும். உதாரணத்திற்கு ஆறாவது பதிகமாக நீத்தல் விண்ணப்பம் அமைந்தது ஏன்? அப்படி பார்க்கையில் அடுத்த கேள்வி - அதை "வரலாற்று முறையில்" வரிசைப் படுத்தலாமா? வரலாற்று முறை மேற்கூறிய சில கேள்விகளுக்கு விடை தரும். ஆனால், அவர் பாடிய அதே கால வரலாற்று வரிசையில் நாமும் பாட வேண்டும் என்பது தேவையற்ற ஒன்று. உதாரணமாக திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பதிகங்களை நாம் முதலில் பாடுவது தான் சரியாக இருக்கும். ஆகையால், இப்போது இருக்கும் வரிசை அல்லது "அர்த்த வரிசையில்" பாடுவது தான் சிறந்தது என்பது என் கருத்து. ************************************************* ஆனால், வரலாற்று முறை சில முக்கிய விஷயங்களை புரிந்து கொள்ள உதவும். எதற்காக இந்த அளவுக்கு "விட்டுடுதி கண்டாய்", "செத்திடப் பணியாய்" என்றெல்லாம் பாடுகிறார்?! நாம் போன பதிவில் பார்த்த பக்திக்கான இலக்கணம் பிறிவாற்றாமை, சீவன் முக்தர்களின் இயல்பு போன்றவை அடிப்படை காரணங்கள். ஆனால், அவற்றை மேலும் வலுவாக்கிய சில காரணங்கள் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் உண்டு. ஆகையால், வரலாற்றை பற்றி வெகு சுருக்கமாக பார்ப்போம். **********""*************************************** நான் போன பதிவில் கூறிய பண்டிதமணி கதிரேசச் செட்டியார் எழுதிய "நீத்தல் விண்ணப்பம்" புத்தகத்திற்கு முகவுரையாக "கோயம்புத்தூர் R K சண்முகம் செட்டியார்" என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் "சிவபெருமானே ஞானகுருவாய் 999 மாணவர்களுடன் திருப்பெருந்துறையில் தங்கினார்.. மாணிக்கவாசகர் பின்தங்கி விட மீதி 999 மாணவர்களும் நெருப்பில் குதித்தனர்..." என்று உத்தரகோசமங்கை திருத்தல புராணத்தை மாணிக்கவாசகர் கால வரலாறாக எழுதி உள்ளார்!! அட்லீஸ்ட் உத்தரகோச மங்கையில் நடந்ததாக எழுதி இருக்கலாம்! 😀 ஏனெனில் உத்தரகோசமங்கை கோவில் பெயர் மட்டும் திருவாசகத்தில் 38 தடவை பல பதிகங்களில் வருகிறது. தேவாரம் போன்று வெவ்வேறு தலங்களுக்கான பாடல்களை அவர் பாடவில்லை. ஏன் உத்தரகோச மங்கை அவருக்கு ஸ்பெஷல்?! அந்த கோவிலில் அவருக்கு ஒரு சன்னதியும் கூட இருக்கிறது. ஆகையால், உத்தரகோச மங்கை தலவரலாறு உண்மையாக இருக்கலாம்!! அது உண்மையாக இல்லா விட்டாலும், மாணிக்கவாசகர் அதை உண்மை என்றே நம்பியிருக்கிறார் என்பது தெளிவு!! ஆனால், முழுமையாக நம்பினாரா? என்று கேட்டால் உறுதியாக சொல்ல முடியாது; யார் தான் பழைய பிறவி குறித்து உறுதியாக கூற முடியும்?! அது ஊகமாக மட்டுமே இருக்கும். சொந்த ஊகத்தை பதிகங்களில் நுழைப்பது சரியாக இருக்காது என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் பாடலில் இருந்து நாம் புரிந்து கொள்ள கூடியது: "சிவபெருமான் உத்தரகோச மங்கையில் காட்சி தந்தான். 999 சிவனடியார்கள் சிவபெருமான் சொற்படி நெருப்பில் குதித்தனர். ஆனால், சிவபெருமான் சித்தப்படி தாம் குதிக்கவில்லை. ஆகையால், நமக்கு இன்னொரு பிறவி ஏற்பட்டு விட்டது" - இப்படி ஒரு எண்ண ஓட்டம் தான் பல பதிகங்களில் வெளிப்படுகிறது. ஆகையால், வரலாற்று முறை வகுப்பவர்கள் மாணிக்கவாசகரின் உத்தரகோசமங்கை முற்பிறவி வரலாற்றை தவிர்க்க முடியாது. செந்தமிழரசு கி. சிவக்குமார் ஐயா ஒரு வரலாற்று முறையை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அதை நான் இன்னும் படிக்கவில்லை. அதில் உத்தரகோசமங்கை வரலாற்றின் அடிப்படையில் விளக்குகிறாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை உத்தரகோசமங்கை தல வரலாறு தவறு என்பதற்காக அவர் புதிய வரலாற்று முறையை உருவாக்கி உள்ளாரோ என்னவோ?! ஏனெனில் உத்தரகோச மங்கை வரலாறை அப்படியேவும் நாம் ஏற்றுக் கொள்ள இயலாது. அது தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது அதில் வரும் சிவபெருமான் ever existent eternal அல்ல என்று கூட கூறலாம்!!😀😂 ஆனால், ஒன்று உறுதி: மாணிக்கவாசகர் அதை உண்மையாக இருக்கலாம் என்று நம்பியிருக்க வாய்ப்பு அதிகம்!! ************************************************ இப்போது முதல் ஆறு பதிகங்களின் வரிசை தெளிவாக புரியும். முதலில் சிவபுராணம் பாடுகிறார். சுந்தரரை "பித்தா" என்று தொடங்கி பாட ஆணையிட்டது போல், "சிவபுராணம்" பாட கட்டளை என்பது என் யூகம்!! ஆனால், நமது மாணிக்கவாசகருக்கு வடமொழி கதைகளை பாட விருப்பமில்லை. ஆகையால், இப்போது சிவபெருமானின் புராணம் பாடப் போகிறேன் ("சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை...") என்று சொன்னவர், "பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்" என்று கூறி, சிவபெருமான் புகழை மட்டும் பாடுகிறார்!! ஏனென்றால் சைவ சமயத்தில் சிவபெருமானுக்கு அவதாரமோ பிறப்போ கிடையாது. தொண்டர் புராணம் தான் சிவபுராணம். அந்த பதிகத்தை பாடி முடித்தவர் - மீண்டும் யோசிக்கிறார்!! சிவபுராணம் கதை ஏதாவது பாடியிருக்க வேண்டுமோ?! தவறு செய்து விட்டோமோ?! ஏன் திருவிளையாடல் புராண கதைகள் பாண்டி நாட்டில் நடந்தவை தானே? மேலும் ஒவ்வொரு கோவில் தோன்றியதற்கும் ஒரு கதை உண்டே?! அவை சிவபெருமானின் பெருமையை கூறுவன தானே?! என்றெல்லாம் எண்ணுகிறார். கடைசியில் சிவபுராணம் மீண்டும் பாடுகிறார். அந்த சிவபுராண பதிகம் தான் "கீர்த்தி திருவகவல்"!!😀. அவை வடமொழி சிவபுராணம் அல்ல. மாறாக ஒவ்வொரு கோவிலையும் குறிப்பிட்டு அங்குள்ள சிவபெருமானின் கீர்த்தியை பாடுகிறார். ஆக, இவை இரண்டு பதிகங்களும் ஒன்றையொன்று ஒட்டியன!! அடுத்து சிவபெருமான் தமக்கு அருள் செய்த விதத்தை நினைத்து மகிழ்கிறார்!! சிவபெருமான் தனக்கு குருந்த மரத்தின் கீழ் காட்சி கொடுத்தது எவ்வளவு பெரிய பேறு!! தமக்கு சிவபெருமான் காட்சி அளித்ததை பாட வேண்டும்!! ஏனென்றால் சிவபெருமான் பூமிக்கு வருவானா?! அப்படி வந்தால் அது உண்மையிலேயே உலகத்தை படைத்து ஐந்தொழில் செய்யும் சிவபெருமான் தான் என்று உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விகள் எழும். ஆணித்தரமாக "ஆம், அவன் வந்தான்; அவன் சிவபெருமான் தான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை" என்று பாட வேண்டும். ஆகையால் சிவபெருமான் தனக்கு அருள் புரிந்த அற்புதத்தை "புவனியில் சேவடி தீண்டினன் காண்க! சிவன் என யானும் தேறினேன் காண்க!!" என்று பாட வேண்டும். அப்படி பாடுவது சிவபெருமானின் அண்டமளாவிய எல்லா புகழ்களையும் உள்ளடக்கி மத்தியில் மேற்கண்ட உண்மையை வைத்து பாட வேண்டும். (ஆகவே, "சிவனது தூல சூக்குமத்தை வியந்தது" என்று தலைப்பிட்டார்!). அந்த பதிகம் மூன்றாவது பதிகமான திரு அண்டப் பகுதி. அது போதாது - மேலும், ஒரு பதிகம் - முந்தையதில் உலகத் தோற்றம் குறிப்பிட்டார்; இப்போது மனித நாகரிகம் தமிழ் நாகரிகம் எவ்வளவு கஷ்டப்பட்டு இறைவன் உண்டு, அவனை வழிபாட்டால் உய்வு அடையலாம் என்ற கருத்தை வலியுறுத்தி அவனது பல்வேறு இயற்கை தன்மைகளை போற்றி பாட வேண்டும். அது "போற்றி திருவகவல்". இந்த சமயத்தில் தான் அவர் தன் முற்பிறவி குறித்த உத்தரகோச மங்கை செய்தியை அறிகிறார்!! என்ன சிவபெருமான் வந்தும் நாம் முக்தியடையாமல் தங்கி விட்டோமா?! அப்போது தான் உரைக்கிறது - "போன பிறவியில் மட்டுமல்ல; இந்த பிறவியிலும் சிவபெருமான் குருவாக வந்தும் நாம் விட்டு விட்டோம்" என்று அதிர்ச்சி அடைகிறார்!! 😀😀😂 அப்போது பாடியது தான் - திருச்சதகம். (முதல் பதிகம் - மெய்யுணர்தல்!!). அடுத்து உத்தரகோச மங்கை சிவபெருமானை நினைத்து கண்ணீர் விட வேண்டும். "999 பேர் உன்னை அடைந்தனரே!! நான் எவ்வளவு பெரிய முட்டாள்!! நான் ஒன்றும் உனக்கு புறம் அல்லவே?! என்னை மட்டும் ஏன் விட்டுடுதி கண்டாய்?!" என்று "சடையவனே தளர்ந்தேன்; எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளேன்!" என்று உடலை "நீத்தல் விண்ணப்பம்" செய்கிறார். ஆகையால் , ஆறாவது பதிகமே (அதாவது புகழை போற்றி பாடிய உடனே) நீத்தல் விண்ணப்பமாக வருவதற்கான காரணம் புலப்படுகிறது!! ************************************************* இவ்வாறாக ஒவ்வொரு பதிகமாக "அர்த்த வரிசை முறை" செய்ய முடியும். இப்போதைய வரிசை பெரும்பாலும் ஒரு தத்துவ முறைப்படி தான் உள்ளது. நான் இன்னமும் மற்ற பதிகங்களை முழுமையாக ஆய்ந்து படிக்கவில்லை. ஆனால், இன்னமும் பல insights உள்ளன. அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்!! ************************************************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
10 likes
18 shares

More like this