N Murugesan
543 views • 6 days ago
அருணை பாலறாவாயன் ஐயா அவர்களின் இந்த சைவ சித்தாந்த பேச்சுகள் சிறப்பாக உள்ளன. சிவஞான போதம் சூத்திரங்கள் மற்றும் வெண்பாக்களை ஏற்கனவே படித்தவர்கள் இவருடைய பேச்சுகளை கேட்டு மேலும் பயன்பெறலாம். https://youtu.be/6gXIneQ3rRE?si=qBxFVTjS4M3AzgVb #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
***************†******************************* என்னுடைய சைவ சித்தாந்தம் சற்று வேறு; ஆகையால் எனக்கு பலவற்றிலும் மாற்றுக் கருத்து உண்டு. (உதாரணமாக: மெய்கண்டார் - அவையடக்கம் - என் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!! - " தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்" - தன் ஆத்மனை உணர்ந்து (Self Realization) , மட்டுல்லாமல் ஆத்மனை அடைந்து, அந்த ஆத்ம உணர்வில் தன்னை உணர்வார் என்னை இகழ மாட்டார்கள்!, "தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில் புணராமை கேளாம் புறன்". - தன்னையே உணராதவர்கள் மெய்யுணர்வு பெறாதவர்கள்; அவர்கள் தம்மிலேயே நிலைபெறாதவர்கள்; தம்மில் இயைந்து இல்லாத அவர்கள் பேச்சைப் பற்றி எனக்கு கவலை இல்லை!!". இவ்வாறாக அத்வைத ஆத்ம தத்துவத்தை பேசுவதாக நான் நினைப்பதுண்டு!!😀. ஆனால், "தன்" என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் இறைவனை குறிக்கும் என்று இவர் உரை கூறுகிறார். இவ்வாறு பல.). ஆன்மீக தத்துவங்களை பொறுத்தவரை முதலில் சரியான கேள்வி கேட்க தெரிந்திருக்க வேண்டும். பதில் அப்போது தான் புரியும். (உதாரணமாக: அடிப்படையில் ஆன்மா அறிவுப் பொருளா? அன்புப் பொருளா?! அறிவுப் பொருள் என்றால் அத்வைதம்; அன்புப் பொருள் என்றால் சைவ சித்தாந்தம்!!). அந்த வகையில் பல சித்தாந்த கேள்விகளை சரியாகவே எழுப்புகிறார். சைவ சித்தாந்த சமய கருத்துக்களில் நாட்டம் உள்ளவர்கள் அவசியம் கேட்க வேண்டிய பேச்சுக்கள்!! ***************"""""""""""""""""""""""""*******************
11 likes
16 shares