D Muthu Prakash, Kanchipuram 💐
703 views • 3 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.07.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
அன்றிரச் சென்று அடுத்தநாள் சென்றதற்பின்
இன்றுகடு வாய்திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்று
வந்தானே யந்த மாநீசப் பாதகனும்
.
விளக்கம்:
=========
இரவு கழித்து அடுத்த நாள் விடிந்தது அரசவை கூடியது. அரசன் சபையோரை நோக்கி, இன்றைக்குக் கடுவாய்க் கூட்டைத் திறந்து அக்கடுவாய் சாணாச் சுவாமியைக் கொல்லும் காட்சியினை நாம் பார்த்து வருவோம் என்றான்.
.
.
அகிலம்:
========
தந்தாய்ச் சறடன் சௌனி கௌடனுமே
கவுடன் வெகுடன் கீர்த்திதுரை சானிகளும்
மகுடவர்த்தனர் முதலாய் மந்திரி மார்களுமே
துலுப்பர் சலுப்பருடன் சிப்பாயி மார்களுமாய்
அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரி காலாளும்
காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும்
சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடை யாளர்களும்
ஒக்கத் திரண்டு ஒருமித்தாங் காரமுடன்
மிக்கத் திரண்டு வெடியாயு தத்துடனே
ஆனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
சேனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
இந்தப் படையோடும் எச்சாதி தன்னோடும்
வந்து வளைந்தார் மாகடுவாய்க் கூட்டையுமே
.
விளக்கம்:
=========
உடனே, சரடன், செவுளி, கரடன், கௌடன், வெகுடன், புகழ் மிக்க மேன்மகளிரும், மகுடவர்த்தனர்கள், மந்திரிகள், துலுக்கர்கள், சலுப்பர்கள், சீவாய்கள், அலுப்பர்கள், பட்டாணிகள், ஆனைப்படைகள், காலாட்படைகள், நடந்து வரும் வீரர்கள், கரியநிற மறவர்கள் கூட்டம், சூலாயுதம் ஏந்தியவர்கள், அரசனுக்கு உதிவி செய்பவர்கள், அங்கே சூழ்ந்து நின்ற படைகள், வெடி ஆயுதத்துடன் நின்ற ஆனைக்காரர் கோடி, அம்புக்காரர் கோடி, சேனைக்காரர் கோடி இப்படியாக எல்லாரும் ஒன்றாகத் திரண்டு வந்தனர். இத்தகைய படைகளோடும் எல்லாச் சாதி மக்களோடும், ஒன்றாகத் திரண்டு அரசனோடு கடுவாய்க்கூடு இருந்த இடத்தை அடைந்தனர்.
.
.
அகிலம்:
========
அப்போது ராசன் அருகில்தலை யாடகளை
இப்போது இந்த ஏற்றகாடு வாய்தனையும்
குண்டியிலே கம்புகொண்டு குத்துவது கோபம்வரக்
.
விளக்கம்:
==========
அப்பொழுது கலியரசன், அருகிலிருந்த தலையாரிகளை நோக்கி, தலையாரிகளே, இப்பொழுது இந்தச் சாணாச் சுவாமியைக் கொல்லுவதற்குத் தகுதியோடு இருக்கும் இந்தக் கடுவாயைக் கோபம் கொண்டு பாயும் வகையில் கம்பு கொண்டு அதன் குண்டியில் குத்தி எழுப்புங்கள்.
.
.
அகிலம்:
========
பண்டு நாம் அடைத்த பயித்தியக் காரனையும்
இக்கூட்டுக்குள்ளே இப்போது தள்ளுமென்றான்
அக்கூட்டுக்குள்ளே அய்யா இருந்தனரே
உலையில் மெழுகது போல் உள்ளம் மிகஉருகி
பண்டு படைத்த பகவானதனை அறிந்து
கண்டுகடு வாயதுவும் கம்பதுக் கேபதறி
அதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்துப்
பதறி யதுகிடந்து படுக்கை யிளகாமல்
.
விளக்கம்:
=========
நாம் ஏற்கெனவே அடைத்து வைத்திருக்கின்ற வைத்தியக்காரச் சுவாமியை உடனே இக்கூட்டின் உள்ளே தள்ளிவிடுங்கள் என்று உத்தரவிட்டான். அரசனின் உத்தரவை அறிந்த சுவாமி தம்மைக் கூட்டினுள் சேவகர்கள் தள்ளுவதற்குரிய நிலையை வைக்காமல் தாமே அக்கூட்டிற்குள்ளே சென்று அமர்ந்து கொண்டார். அவரைக் கண்ட கடுவாய் உலையில் இட்ட மெழுகு போல் உள்ளம் உருகி, ஏற்கெனவே, தன்னைப் படைத்த பகவானை அறிந்து கொண்டது. அக்கடுவாய் தன்னைக் குத்திய வேல் கம்புக்குப் பயந்து பதுங்கி ஒதுங்கி முழங்கியதே அல்லாமல் சுவாமியை எதுவும் செய்யாமல் அமைதியுடன் கவிழ்ந்து படுத்துக் கொண்டது.
.
.
அகிலம்:
========
நீச னவன்குத்த நெடுஞ்சற டன்காமல்
வாசப் பொடிவருத்தி வன்னப் பொடிநிறைத்து
மட்டாய்க் கடுவாய் மாறி யிளகாமல்
கிடந்ததுகா ணாய கிருபை யதினாலே
தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்க
.
விளக்கம்:
==========
இவ்வாறு கடுவாய் படுத்த படுக்கையை விட்டுச் சிறிதும் அசையாமல் கிடந்ததைக் கண்ட நீசத் தலையாரிகள் மீண்டும் வேல் கம்பால் குத்தினார்கள். பக்கத்திலிருந்த நெடிய சரடன் தன் கையில் வைத்திருந்த வெடியினுள் வாசப்பொடிகளும், பல வண்ணப்பொடிகளும் வைத்து கடுவாய்க்கு மேல் பகுதியில் விட்டு எறிந்தான். அதனால் கடுவாய் கதறி எழும்பிச் சுவாமியைத் தாக்கும் என்று எண்ணினான் அதுவும் பாழாகி விட்டது. இச்செயல்களுக்குப் பிறகும் கடுவாய் எழும்பாமல் அய்யாவின் கருணையால் அப்படியே படுத்துக் கிடந்தது.
.
.
அகிலம்:
=======
ஈட்டி யெடுத்து இனிக்குத்த வேணுமென்று
மேட்டி யொருவன் விசையாகக் குத்திடவே
எட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்து
விட்டிடவே யருகில் நின்றதொரு வேதியனைக்
குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானை
.
விளக்கம்:
===========
எங்கும் நிசப்தம், அச்சமயம் இனி ஈட்டி எடுத்து குத்தி எழுப்ப வேண்டும் என்று கூறி ஒரு தலையாரி விரைவாக ஈட்டியினால் அதைக் குத்தினான். கடுவாய் அந்த ஈட்டியை எட்டிப் பிடித்தது. தலையாரி பலமாக இழுக்கவும், கடுவாய் ஈட்டியை விட்டு விட்டது. அந்த ஈட்டி அங்கே அருகில் நின்ற பிராமணன் ஒருவனை குத்தி அவன் குடல் பீறிட்டு விழுந்து இறந்தான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
17 likes
2 shares