D Muthu Prakash, Kanchipuram 💐
828 views • 16 days ago
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.07.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
சுசீந்திரத்தில் அய்யா
======================
கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன்
விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான்
.
விளக்கம்:
=========
பாவிகளாகிய நீசக் குலக் காவலர்கள் வைகுண்டரை மிகவும் விரைவாகச் சுசீந்திரம் ஊரை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றனர். இவ்வாறு போகின்ற போது கொடும் பாவியாகிய நீசன் வெளியே சொல்ல முடியாத பல துன்பங்களைச் செய்து வைகுண்டரை வேதனையுறச் செய்தான்.
.
.
அகிலம்:
========
அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி
செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே
கொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னே
கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து
.
விளக்கம்:
=========
அய்யய்போ, அந்த மாபாவி கௌடன் செய்த கொடுமையான செயல்களெல்லாம் எடுத்துச் சொல்ல முடியாதவை. இப்படியாக வைகுண்டருக்குக் கொடுமைகள் செய்து, அவரை அரசக் குழுவோடு இருந்த கலியரசன் முன் கொண்டு விட்டான். வைகுண்டரைக் கலியரசன் கண்டு விரைவாக ஒரு சோதனை செய்ய நினைத்தான்.
.
.
அகிலம்:
========
பார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனே
தாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக்
கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச்
சழத்தி வருவது தானறியா நீசன்வன்
ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும்
ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே
.
விளக்கம்:
=========
இந்தப் பயித்தியக்காரனோடு ஒரு சோதனை பார்ப்போமே என்று தந்திரமாகத் தன் விரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றி அங்கிருந்த யாருடைய கண்களிலும் படாதவண்ணமும் யாரும் அறியாத வண்ணமும் கையினுள் வைத்துக் கொண்டு தனக்குக் கேடு வரப்போவதை அறியாத அந்த நீசன் சுவாமியை நோக்கி, என் கைக்குள் இருக்கும் பொருளை உன் சக்தியினால் சொல்லடா? பார்ப்போம் என்றான்..
.
.
அகிலம்:
========
அப்போது மாயன் அடக்க மிக அறிந்து
இப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள்
கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே
தொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது
நாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால்
ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கி
எல்லாம் படைத்த ஏகன் கிருபையென
அல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார்
.
விளக்கம்:
=========
வைகுண்டர் அதை அறிந்த பிறகும், இப்பொழுது இதை நாம் வெளிப் படுத்தினால் நமது சக்தியைப் பற்றி இந்தப் பாவிகள் புரிந்து நம்மையும் அவர்களோடு இணைத்துவிடப் பார்ப்பர். அதனால் இறைத்தொண்டு செய்து வருகின்ற சான்றோர் இனத் துயரம் சிறிதளவுகூட மாறாது நாம் நினைத்த காரியங்களும் முடிவடையாது போய்விடும். எனவே, இதை ஏன் சொல்லப் போகின்றோம்? என்று எண்ணித் தம் உணர்ச்சிகளை உள்ளடக்கி, அந்த நீச மன்னனைப் பார்த்து எல்லாவற்றையும் படைத்த ஒப்பற்றவன் கிருபையாலும், கடவுள் நினைத்தபடியும் எது இருக்குமோ அது இருக்கும் என்று கூறினார்.
.
.
அகிலம்:
========
அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான்
இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்று
மருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டு
கொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலே
என்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும்
நடத்தி யிழுத்து நாரா யணரையுமோ
கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார்
.
விளக்கம்:
=========
இதைக் கேட்ட நீசன் சிரித்துக் கொண்டு சற்றுப் பயமுறுத்தலுடன், இவனையா சாமி என்று சொன்னார்கள்? என்று கூறிக் கோபத்துடன் சேவகர்களை நோக்கி, இவனை இழுத்துச் சென்று சரடன் இருக்கும் எல்கையின் முன்னால் நிறுத்துங்கள் என்று கட்டளை இட்டான். இந்த உத்தரவுக்குக் கீழ்ப் படிந்து ஏவல் வேரை புரியும் சீவாய்கள் வைகுண்ட சுவாமியை நடத்தி இழுத்துக் கொண்டு கலியரசன் இடத்தை விட்டுக் கடத்திச் சறடன் பார்க்கும் படியாக அவன் முன்னால் கொண்டு நிறுத்தினர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
11 likes
8 shares