அந்த நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியால் பூரிப்படைந்திருக்கும்.
தம் இறைவனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் எனும் அல்குர்ஆனின் (75:22, 23) ஆகிய வசனங்கள்.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் மறுமையில் காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் உறக்கம் போன்ற எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் உங்களுடைய இறைவனை நீங்கள் காண்பீர்கள்’ என்றார்கள்.
(புகாரி: 7434)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


