#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை.*.( 17..06.2026 )..
…………………………………………….....
*'’முழு ஈடுபாடு இல்லாமல் "...*
..................................................................
எந்தச் செயலை செய்தாலும், அதை இதயப்பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் செய்வதால் தான் அது அழகு பெறும்.
நாம் என்ன வேலை செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல. துப்புரவுப்பணி செய்பவரா..? வாடகை வாகனம் ஓட்டுபவரா? செருப்பு தைக்கும் தொழில் செய்பவரா? முடி திருத்தும் பணி செய்பவரா? ஆக எந்தச் செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
செய்யும் அந்தச் செயலை இதயப்பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் செய்தால், வேலை செய்வதே மிக அழகான ஒரு அனுபவமாக இருக்கும்.
உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு போதுமான ஈடுபாட்டை நீங்கள் காட்டவில்லை என்றால், அது வெறும் வேலையாகத் தான் இருக்கும்.
ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்த பிறகு கிடைக்கும் திருப்தி அலாதியானது.
வேலையை அனுபவித்து,, ஈடுபாட்டுடன், செய்யாமல், கடமைக்கு என ஈடுபாடின்றி செய்தால், அந்தத் திருப்தியை என்றைக்குமே உங்களால் உணர முடியாது.
ஆகவே, உயர்ந்த அளவுகோல்களை நிர்ணையுங்கள். முடிந்த அளவுக்கு நீங்கள் பார்க்கும் வேலையை,, அது எந்த வேலையாக இருந்தாலும் அதை சிறப்பாக, தரமாக, இதயப்பூர்வமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
மற்றவர்கள் அப்படித் தான் செய்கிறார்கள் என்று நீங்களும் ஏனோதானோவென்று வேலை செய்யதீர்கள்.
நீங்கள் செய்யும் வேலையின் தரமானது உங்கள் மதிப்பை வெளிப்படுத்துகிறது.
ஈடுபாட்டுடன் ஒரு செயலில் இறங்கி விட்டால் நீங்கள் கவலைப்பட நேரம் இருக்காது..
வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடி கொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார்.... நீர் பாய்ச்சினார்.. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு செடிகள் பெரிதாக வளரவில்லை..
என்ன செய்வது என்று அவருக்கு புலப்படவில்லை. மற்றவர்களின் யோசனையின்படி, பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் வயதான முதியவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து நன்றாக வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.அதே தண்ணீர்.
அதே உரம். அதே இடம். இது எப்படி சாத்தியமாயிற்று இவருக்கு? என்று எண்ணி,இதைப் பற்றி அந்த முதியவரிடம் கேட்டார்..
முதியவர் சொன்னார்: "அய்யா! நீங்கள் அலுவலகம் செல்லும் அவசரத்தில் நீர் பாய்ச்சுகிறீர்கள்..
நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர் பாய்ச்சுகிறேன் என்றார்.
அப்பொழுது தான் உரிமையாளருக்கு புரிந்தது.முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்தச் செயலும்.. முழுப்பயன் தராது என்று..
*ஆம்.,நண்பர்களே..,*
எந்தச் செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
வேண்டா வெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல்.
எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையைக் காதலியுங்கள்.
ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.
( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..)💐💐💐💐💐💐💐💐💐*


